Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Tuesday, December 31, 2013

 
Source: Shri Hariharan
கும்பகோணத்தை சேர்ந்த பட்டுப் பாட்டி பெரியவாளிடம் அளவிலாத பக்தி கொண்டவள். வ்யாஸராய அக்ரஹாரத்திலிருந்த தன்னுடைய இரண்டு வீடுகளையும் மடத்துக்கே எழுதி வைத்தாள். பெரியவா சதாராவில் முகாமிட்டிருந்த போது, பாட்டியும் அங்கு வந்திருந்தாள். நல்ல குளிர்காலம். ஒருநாள் காலை தன்னுடைய பாரிஷதரான பாலு அண்ணாவிடம் ஒரு கம்பிளியை குடுத்து "இதக் கொண்டு போய் பட்டுப் பாட்டிட்ட குடு" என்றார்.அன்று நள்ளிரவு, சற்று முன்புதான் கண்ணயர்ந்த பெரியவா, பாலு அண்ணாவை எழுப்பி, "பட்டுப் பாட்டிக்கு போர்வை குடுத்தியோ?" என்றார்.தூக்கிவாரிப் போட்டது! ஆஹா! மறந்தே போய்விட்டோமே! " இல்லே பெரியவா......மறந்தே போயிட்டேன்""சரி.இப்போவே போயி அவ எங்க இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கம்பிளியை அவள்ட்ட குடுத்துட்டு வா"இந்த நடுராத்ரியிலா? குளிரான குளிர்! எங்கே போய் பாட்டியை தேடுவது? "காலம்பற குடுத்துடறேனே"தெய்வக் குழந்தை அடம் பிடித்தது. "இல்லே.....இப்பவே குடுத்தாகணும். ராத்ரிலதானே குளிர் ஜாஸ்தி?" அலைந்து திரிந்து, இருட்டில் முடங்கிக் கிடக்கும் உருவங்களை எல்லாம் உற்று உற்று பார்த்து, கடைசியில் கபிலேஸ்வர் என்ற மராட்டியர் வீட்டில் ஒரு ஓரத்தில் குளிரில் முடக்கிக் கொண்டு கிடந்த பாட்டியைக் கண்டுபிடித்து கம்பிளியை சேர்த்தார் பாலு அண்ணா. பாட்டி அடைந்த சந்தோஷத்துக்கு அளவு இருக்குமா என்ன? பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனுக்கு ஹிதத்தை குடுத்தது. அதே பாலு அண்ணா ஒருநாள் சம்போட்டி என்ற ஊரில் உள்ள கோவிலின் திறந்த வெளியில் மார்கழி மாசக் குளிரில் சுருண்டு படுத்து, எப்படியோ உறங்கிப் போனார். மறுநாள் விடிகாலை எழுந்தபோது, தன் மேல் ஒரு சால்வை போர்த்தியிருப்பதைக் கண்டார். சக பாரிஷதர்கள் யாராவது போர்த்தியிருப்பார்கள் என்று எண்ணி, இது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. நாலு நாள் கழித்து, பெரியவா "ஏதுடா பாலு.....போர்வை நன்னாயிருக்கே! ஏது?" என்று கேட்டார்."தெரியலே பெரியவா.....வேதபுரியோ, ஸ்ரீகண்டனோ போத்தியிருப்பா போல இருக்கு. நான் தூங்கிண்டிருந்தேன்" தன் ஊகத்தை சொன்னார் பெரியவா ஜாடை பாஷையில் "அப்படி இல்லை" என்று காட்டிவிட்டு, தன்னுடைய மார்பில் தட்டிக் காட்டிக் கொண்டார்! முகத்தில் திருட்டு சிரிப்பு!"நல்ல பனி! நீ பாட்டுக்கு தரைலேயும் ஒண்ணும் விரிச்சுக்காம, போத்திக்கவும் போத்திக்காம படுத்துண்டு இருந்தியா.....! ஒங்கம்மா பாத்தா எப்டி நெனைச்சுண்டு இருந்திருப்பா....ன்னு தோணித்து..."தாயினும் சிறந்த தாயான பெரியவாளுடைய இந்த மஹா ப்ரேமையை அனுபவித்த பாலு அண்ணா என்ற பாக்யவான் கண்களில் கண்ணீர் மல்க நமஸ்கரித்தார்.


2 comments:

  1. பர்மாவைச் சேர்ந்த கோடீஸ்வருருக்கு
    புத்தராகக் காட்சியளித்த மஹாபெரியவா

    1907 இல் பெரியவா பீடாதிபத்தியம் ஏற்ற போதிலும் காஞ்சியிலுள்ள ஸ்ரீ மடத்தில் முதல் வ்யாஸபூஜை செய்தது 1953 இல்தான் . அதனை சேர்ந்து வந்த சாதுர்மாஸ்ய மாதத்தின் போதும் அது முடிந்த பிற்பாடும்கூட பல மாதங்கள் மௌனம் பூண்டிருந்தார் . அதில் பெரும்பாகம் காஷ்ட மௌனம்.அதாவது சிறிய அசைவும் இல்லாமல் கட்டையை போல் சமைந்திருப்பார்.
    இச் சமயம் பார்த்து பர்மாவைச் சேர்ந்த ஒரு கோடிஸ்வரர் தரிஸனத்திற்கு வந்தார். பௌத்த மதத்தில் தீவிர அனுஷ்டானமுள்ள அவருக்கு ஆன்மிக விஷயமாக ஒரு சந்தேகம். அது பெரியவாளாலேயே தீரும் என்று சமிக்ஞை பெற்று தான் காஞ்சிக்கு வந்திருக்கிறார். பெரியவாளானால் கண் கொட்டாமல், மூச்சு விடுகிறாரா என்று கூட தெரியாமல், சிலையாக இருக்கிறார்.
    பர்மியர் கூறியதை அவர் காதில் வாங்கியதாகவே குறிப்பு காணோம்.
    பர்மியரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்.
    அந்நாள் ஸ்ரீமடத்தின் மேனேஜர் C.S. விஸ்வநாத ஐயர் ... அவர் வெள்ளை மனதுடன் சொல்லுவார் : ” என்னால் தான் பொறுத்து கொள்ள முடியவில்லை. விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அந்த பர்மாகாரன் எத்தனை ஏக்கமும் துக்கமுமாயிருக்கிறான் என்று ஒரு பக்கம். இன்னொரு பக்கம், கோடீஸ்வரனாய் இருக்கிறானே, வந்த காரியம் அனுகூலமானால் நம்ம கஜானாவை ரொப்பி விடுவானே. இந்த எஜமானரானால் இப்படி பண்ணுகிறாரே என்று எத்தனையோ முட்டி கொண்டு பார்த்தேன். ஒன்றும் அந்த காஷ்டத்திடம் பலிக்கவில்லை !”
    தவியாய்த் தவித்துப்போய், வேண்டிய சந்தேக நிவாரணத்தைப் பெறாமலேயே பர்மியர் ஊருக்கு திரும்ப வேண்டிய நேரமும் வந்தது.

    பெரியவாள் சந்நிதியில் இருந்த அளவும் தம்மை அவர் கவனித்ததாகத் தெரியாவிட்டாலும், அந்த சாநித்யமே தமக்கு ஒரு பெரும் சாந்தியூட்டியதாக ஸ்ரீ மடத்தினரிடம் அந்த பர்மியர் கூறிக்கடைசியாக ஒரு தரிஸனம் செய்யச் சென்றார் – மடத்தின் கஜானாவையும் ஓரளவு நிரப்பிவிட்டு .
    பெரியவாள் நேராக அவரை நோக்கினார். பல காலமாகப் புறப்பொருள் எதையும் உற்று நோக்காதிருந்த திருநயனங்களில் சூரியனின் ஒளியும் சந்திரனின் குளுமையும் கலந்து நர்த்தனமிட்டன .
    பர்மியர் பரவசமானார். அழுதார் , சிரித்தார் ! ஆடினார் , பாடினார் ! பன்முறை பணிந்தெழுந்தார் .
    சரேலென பெரியவாளை மிகவும் சமீபித்து, அவருடைய காதோடு காதாக ஏதோ விம்மி விம்மிக் கூறினார்.
    பல காலமாக நெகிழாதிருந்த திரு அதரங்கள் தாமரை மலர்வதைப்போலத் திருநகை புரிந்தன .
    பூமியில் கால் பாவாமலே பர்மியர் ஆனந்தமாக அகன்றார். அவருடைய இதய கஜானா நிரம்பிவிட்ட இறுமாப்பு இது !
    மாதங்கள் கடந்து பெரியவாள் பேச்சுலகுக்குத் திரும்பினார்.
    ஸ்வாதீன பக்தர்கள் சிலர் அன்று பர்மியர் அழுது சிரித்து ஆடி பாடும் படி என்ன நேர்ந்தது என்று அவர் சொல்லித்தானாக வேண்டுமென்று அடம் பிடித்தனர் .
    அவரும் அதற்கும் மேல் அடம் பிடித்தார். அது பற்றி சொல்லவதில்லை என்று.
    “அவனுக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு எப்படித் தெரியும் ? அவனையே போய் கேட்டுக்கோங்கோ !” என்றார்.
    ”சரி, பெரியவா காதுலே அவர் என்னமோ சொல்லி, பெரியவா அதை அங்கீகாரம் பண்ணிண்டு சிரிச்சேளே ! அதுவாவது என்னன்னு பெரியவா சொல்லலாமே !” என்றார் அவர்களில் ஓர் அதி ஸ்வாதீன அடியார்.
    ”அதுவா?” என்று பெரியவாள் சட்டென்று விஷயத்தைக் கொட்டி விட்டார். குறும்பு கொப்பளிக்க ”பொழுது விடிஞ்சு பொழுது போனா நான் யாரைக் கண்டனம் பண்றேனோ அந்த புத்தரைச் சொல்லி “அவர் நீதான்!” ன்னுட்டுப் போய்ட்டான் !”


    This is the post I received yesterday...from Sri VAI.GOPALAKRISHNAN.
    I gave the comments...which will follow next. Thanking you.








    ReplyDelete
  2. வேற்று சமயம் சார்ந்த
    வேதியர் ஒருவர்
    தாம் சார்ந்திருக்கும்
    சமயத்தின் கொள்கைகளே
    உலகில் உயர்ந்ததென
    உயர்த்தி கொடிபிடிக்க
    வேண்டுமென்ற நினைப்போடு
    மாற்று குறையா நம்
    மஹாபெரியவா முன்நின்று
    வாது செய்து இவரை
    வென்று வாகை சூட வேண்டுமென்w
    சூது மனத்தில் கொண்டு
    கரன்யாசாம் செய்வது போல்
    கூட்டல் கூறிதானுமிட்டு
    "அன்பே பிரதானம்"எனும்
    கொள்கையே எங்கள்
    உயிர் மூச்சு..உலகில்
    வேறெங்கும் இதுபோன்ற
    சமயநெறி உண்டோ?
    உண்டானால் உணர்த்துங்கள்...
    அடக்கத்தை பறக்கவிட்டு
    அடாவடியாய் கேட்ட அந்த
    வேற்றுமதகாரருக்கு வேதமே
    வடிவாய் வந்த வேதநாயகன்
    சற்றே சிரித்துப் பின்
    சாந்தமாய் பதிலுரைத்தார்...
    "அன்பேசிவம்"என்போம்
    நாங்கள்..அன்னயின்
    அன்புக்கு ஈடில்லை
    அதனால்தான்...சிவ
    வைணவ நெறி இரண்டிலுமே
    அம்பாள்,தாயார்
    அடிதொழல் முதலில், மேலும்
    திருமூலர்என்ற சித்தர்ஒருவர்
    'அன்பை பற்றி"நம்மீதே உள்ள
    'அன்பினால் பற்றி'
    இருபது பாடல் இயற்றினார் தானே
    இருபதில் ஒன்றை
    சொல்கிறேன் கேட்பீர்...
    "அன்பு சிவன் இரண்டு என்பர் அறிவிலார்
    அன்பே சிவாமாவததை யாரும் அறிகிலார்
    அன்பே சிவம் ஆவதை அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே"
    எல்லா சமய கொள்கைகளுக்கும்
    தாய்தான் எங்கள்
    சனாதன தர்மம்
    அதனடிப் பற்றி
    கிளைத்தது தானே
    உலகில் உள்ள
    எல்லா சமயமும்..
    "துஷ்டன் ஆயினும்
    துர்மார்க்கன் ஆயினும்
    கஷ்டம் நஷ்டம்
    அனைத்தயும் தாங்கி
    இஷ்டமுடனே இன்முகதோடே
    என்றும் ஏற்பவள்
    நம் அன்னை அன்றோ..
    அதைதான் சொன்னேன்
    "அம்பாள் தாயார்
    அடித்தொழல் எங்கள்
    தனிச் சிறப்பென்று.
    ஞாலத்தில் உள்ள
    எல்லா சமயமும்
    தோன்றியதெப்படி
    தொல்வரலாற்றினை
    தேதிப்படியே திறம்பட
    உரைத்திட தோன்றிய
    வரலாற்று அறிஞருமுண்டு
    ஆனால் இதுவரை
    இம்மதம் எப்படி
    தோன்றியதென்பதை
    துல்லியமாக சொல்பவர் இல்லை
    தோராயமாக சொல்பவர் கூட
    பல லட்சம் ஆண்டுக்கு
    முன்னால் என்பர்
    காலமனைத்தயும் கடந்து நிற்பதால்
    ஞாலத்தில் இதுவே முதலிது
    என்பதை உணர்வீர்..
    இன்னும் இனிப்பாய்
    ஒன்றை சொல்கிறேன்
    கசப்பை மறந்து
    காதை கொடுப்பீர்..
    உங்கள் மதத்து
    கடவுள் தன்னை
    "கர்த்தர்" என்றே
    காதலால் அழைப்பீர்
    அதற்கும் முன்பே
    இவ்வன்டம் தோன்ற
    காரணமான பரிபூரனன் தன்னை
    "கரணம் காரணம்
    கர்த்தா விகர்த்தா" என
    விஷ்ணு சகஸ்ரநாமத்திலே உண்டு
    'வின்டு வின்டு'சொன்ன
    இந்த விடயை கேட்டபின்னாலே
    நண்டு வலயிலே
    காலை நுழைய்திட்ட
    உண்டு கொழுத்த நரி
    விழித்த கதை போல
    பேந்த விழித்த பாதிரியார்
    தனை நோக்கி
    சாந்த முகத்தோடு
    நோக்கி அதன் பின்னர்
    பாந்தமாக பழங்களையும்
    கொடுத்து விட்டு
    "சென்று வாருங்கள்"
    என விilயும் தந்தார்...
    தளர்ந்த நடையோடு சில
    தப்படிகள் நடந்த பின்னர்
    திரும்பிப் பார்க்கயீலே
    "பெரியவா அங்கில்லை "
    கருணை பொழிகின்ற
    கண்களோடு ஆங்கே
    "கர்த்தர்"தாமே
    இருப்பதைக் கண்டார்.


    ReplyDelete

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top