tag:blogger.com,1999:blog-519527069755475334.post1217920595611329416..comments2024-03-04T20:25:25.190+04:00Comments on Kanchi Maha Periavaa- My Guru:
Subbuhttp://www.blogger.com/profile/12901470619834679008noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-519527069755475334.post-15457420536825644102014-01-03T18:50:39.720+04:002014-01-03T18:50:39.720+04:00வேற்று சமயம் சார்ந்த
வேதியர் ஒருவர்
தாம் சார்ந்...வேற்று சமயம் சார்ந்த <br />வேதியர் ஒருவர் <br />தாம் சார்ந்திருக்கும் <br />சமயத்தின் கொள்கைகளே <br />உலகில் உயர்ந்ததென <br />உயர்த்தி கொடிபிடிக்க <br />வேண்டுமென்ற நினைப்போடு <br />மாற்று குறையா நம்<br />மஹாபெரியவா முன்நின்று <br />வாது செய்து இவரை <br />வென்று வாகை சூட வேண்டுமென்w<br />சூது மனத்தில் கொண்டு <br />கரன்யாசாம் செய்வது போல் <br />கூட்டல் கூறிதானுமிட்டு<br />"அன்பே பிரதானம்"எனும் <br />கொள்கையே எங்கள் <br />உயிர் மூச்சு..உலகில் <br />வேறெங்கும் இதுபோன்ற<br />சமயநெறி உண்டோ?<br />உண்டானால் உணர்த்துங்கள்...<br />அடக்கத்தை பறக்கவிட்டு <br />அடாவடியாய் கேட்ட அந்த <br />வேற்றுமதகாரருக்கு வேதமே <br />வடிவாய் வந்த வேதநாயகன் <br />சற்றே சிரித்துப் பின் <br />சாந்தமாய் பதிலுரைத்தார்...<br />"அன்பேசிவம்"என்போம் <br />நாங்கள்..அன்னயின் <br />அன்புக்கு ஈடில்லை<br />அதனால்தான்...சிவ <br />வைணவ நெறி இரண்டிலுமே <br />அம்பாள்,தாயார் <br />அடிதொழல் முதலில், மேலும் <br />திருமூலர்என்ற சித்தர்ஒருவர் <br />'அன்பை பற்றி"நம்மீதே உள்ள <br />'அன்பினால் பற்றி'<br />இருபது பாடல் இயற்றினார் தானே <br />இருபதில் ஒன்றை <br />சொல்கிறேன் கேட்பீர்...<br />"அன்பு சிவன் இரண்டு என்பர் அறிவிலார் <br />அன்பே சிவாமாவததை யாரும் அறிகிலார் <br />அன்பே சிவம் ஆவதை அறிந்தபின் <br />அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே"<br />எல்லா சமய கொள்கைகளுக்கும் <br />தாய்தான் எங்கள் <br />சனாதன தர்மம் <br />அதனடிப் பற்றி <br />கிளைத்தது தானே <br />உலகில் உள்ள <br />எல்லா சமயமும்..<br />"துஷ்டன் ஆயினும் <br />துர்மார்க்கன் ஆயினும் <br />கஷ்டம் நஷ்டம் <br />அனைத்தயும் தாங்கி <br />இஷ்டமுடனே இன்முகதோடே <br />என்றும் ஏற்பவள் <br />நம் அன்னை அன்றோ..<br />அதைதான் சொன்னேன் <br />"அம்பாள் தாயார் <br />அடித்தொழல் எங்கள் <br />தனிச் சிறப்பென்று.<br />ஞாலத்தில் உள்ள <br />எல்லா சமயமும் <br />தோன்றியதெப்படி <br />தொல்வரலாற்றினை <br />தேதிப்படியே திறம்பட <br />உரைத்திட தோன்றிய <br />வரலாற்று அறிஞருமுண்டு <br />ஆனால் இதுவரை <br />இம்மதம் எப்படி <br />தோன்றியதென்பதை<br />துல்லியமாக சொல்பவர் இல்லை <br />தோராயமாக சொல்பவர் கூட <br />பல லட்சம் ஆண்டுக்கு <br />முன்னால் என்பர்<br />காலமனைத்தயும் கடந்து நிற்பதால் <br />ஞாலத்தில் இதுவே முதலிது <br />என்பதை உணர்வீர்..<br />இன்னும் இனிப்பாய் <br />ஒன்றை சொல்கிறேன் <br />கசப்பை மறந்து <br />காதை கொடுப்பீர்..<br />உங்கள் மதத்து<br />கடவுள் தன்னை <br />"கர்த்தர்" என்றே <br />காதலால் அழைப்பீர் <br />அதற்கும் முன்பே <br />இவ்வன்டம் தோன்ற <br />காரணமான பரிபூரனன் தன்னை <br />"கரணம் காரணம் <br />கர்த்தா விகர்த்தா" என <br />விஷ்ணு சகஸ்ரநாமத்திலே உண்டு<br />'வின்டு வின்டு'சொன்ன <br />இந்த விடயை கேட்டபின்னாலே <br />நண்டு வலயிலே<br />காலை நுழைய்திட்ட <br />உண்டு கொழுத்த நரி <br />விழித்த கதை போல <br />பேந்த விழித்த பாதிரியார் <br />தனை நோக்கி <br />சாந்த முகத்தோடு <br />நோக்கி அதன் பின்னர் <br />பாந்தமாக பழங்களையும் <br />கொடுத்து விட்டு <br />"சென்று வாருங்கள்"<br />என விilயும் தந்தார்...<br />தளர்ந்த நடையோடு சில <br />தப்படிகள் நடந்த பின்னர் <br />திரும்பிப் பார்க்கயீலே<br />"பெரியவா அங்கில்லை "<br />கருணை பொழிகின்ற <br />கண்களோடு ஆங்கே <br />"கர்த்தர்"தாமே <br />இருப்பதைக் கண்டார்.<br /><br /><br />Venugopal Khttps://www.blogger.com/profile/17386556508532281886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-519527069755475334.post-43972774666680756172014-01-03T18:48:53.007+04:002014-01-03T18:48:53.007+04:00 பர்மாவைச் சேர்ந்த கோடீஸ்வருருக்கு
புத்தராகக் காட... பர்மாவைச் சேர்ந்த கோடீஸ்வருருக்கு <br />புத்தராகக் காட்சியளித்த மஹாபெரியவா<br /><br />1907 இல் பெரியவா பீடாதிபத்தியம் ஏற்ற போதிலும் காஞ்சியிலுள்ள ஸ்ரீ மடத்தில் முதல் வ்யாஸபூஜை செய்தது 1953 இல்தான் . அதனை சேர்ந்து வந்த சாதுர்மாஸ்ய மாதத்தின் போதும் அது முடிந்த பிற்பாடும்கூட பல மாதங்கள் மௌனம் பூண்டிருந்தார் . அதில் பெரும்பாகம் காஷ்ட மௌனம்.அதாவது சிறிய அசைவும் இல்லாமல் கட்டையை போல் சமைந்திருப்பார். <br />இச் சமயம் பார்த்து பர்மாவைச் சேர்ந்த ஒரு கோடிஸ்வரர் தரிஸனத்திற்கு வந்தார். பௌத்த மதத்தில் தீவிர அனுஷ்டானமுள்ள அவருக்கு ஆன்மிக விஷயமாக ஒரு சந்தேகம். அது பெரியவாளாலேயே தீரும் என்று சமிக்ஞை பெற்று தான் காஞ்சிக்கு வந்திருக்கிறார். பெரியவாளானால் கண் கொட்டாமல், மூச்சு விடுகிறாரா என்று கூட தெரியாமல், சிலையாக இருக்கிறார்.<br />பர்மியர் கூறியதை அவர் காதில் வாங்கியதாகவே குறிப்பு காணோம்.<br />பர்மியரும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். <br />அந்நாள் ஸ்ரீமடத்தின் மேனேஜர் C.S. விஸ்வநாத ஐயர் ... அவர் வெள்ளை மனதுடன் சொல்லுவார் : ” என்னால் தான் பொறுத்து கொள்ள முடியவில்லை. விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் அந்த பர்மாகாரன் எத்தனை ஏக்கமும் துக்கமுமாயிருக்கிறான் என்று ஒரு பக்கம். இன்னொரு பக்கம், கோடீஸ்வரனாய் இருக்கிறானே, வந்த காரியம் அனுகூலமானால் நம்ம கஜானாவை ரொப்பி விடுவானே. இந்த எஜமானரானால் இப்படி பண்ணுகிறாரே என்று எத்தனையோ முட்டி கொண்டு பார்த்தேன். ஒன்றும் அந்த காஷ்டத்திடம் பலிக்கவில்லை !”<br />தவியாய்த் தவித்துப்போய், வேண்டிய சந்தேக நிவாரணத்தைப் பெறாமலேயே பர்மியர் ஊருக்கு திரும்ப வேண்டிய நேரமும் வந்தது. <br /><br />பெரியவாள் சந்நிதியில் இருந்த அளவும் தம்மை அவர் கவனித்ததாகத் தெரியாவிட்டாலும், அந்த சாநித்யமே தமக்கு ஒரு பெரும் சாந்தியூட்டியதாக ஸ்ரீ மடத்தினரிடம் அந்த பர்மியர் கூறிக்கடைசியாக ஒரு தரிஸனம் செய்யச் சென்றார் – மடத்தின் கஜானாவையும் ஓரளவு நிரப்பிவிட்டு .<br />பெரியவாள் நேராக அவரை நோக்கினார். பல காலமாகப் புறப்பொருள் எதையும் உற்று நோக்காதிருந்த திருநயனங்களில் சூரியனின் ஒளியும் சந்திரனின் குளுமையும் கலந்து நர்த்தனமிட்டன .<br />பர்மியர் பரவசமானார். அழுதார் , சிரித்தார் ! ஆடினார் , பாடினார் ! பன்முறை பணிந்தெழுந்தார் .<br />சரேலென பெரியவாளை மிகவும் சமீபித்து, அவருடைய காதோடு காதாக ஏதோ விம்மி விம்மிக் கூறினார்.<br />பல காலமாக நெகிழாதிருந்த திரு அதரங்கள் தாமரை மலர்வதைப்போலத் திருநகை புரிந்தன .<br />பூமியில் கால் பாவாமலே பர்மியர் ஆனந்தமாக அகன்றார். அவருடைய இதய கஜானா நிரம்பிவிட்ட இறுமாப்பு இது !<br />மாதங்கள் கடந்து பெரியவாள் பேச்சுலகுக்குத் திரும்பினார்.<br />ஸ்வாதீன பக்தர்கள் சிலர் அன்று பர்மியர் அழுது சிரித்து ஆடி பாடும் படி என்ன நேர்ந்தது என்று அவர் சொல்லித்தானாக வேண்டுமென்று அடம் பிடித்தனர் .<br />அவரும் அதற்கும் மேல் அடம் பிடித்தார். அது பற்றி சொல்லவதில்லை என்று.<br />“அவனுக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு எப்படித் தெரியும் ? அவனையே போய் கேட்டுக்கோங்கோ !” என்றார்.<br />”சரி, பெரியவா காதுலே அவர் என்னமோ சொல்லி, பெரியவா அதை அங்கீகாரம் பண்ணிண்டு சிரிச்சேளே ! அதுவாவது என்னன்னு பெரியவா சொல்லலாமே !” என்றார் அவர்களில் ஓர் அதி ஸ்வாதீன அடியார்.<br />”அதுவா?” என்று பெரியவாள் சட்டென்று விஷயத்தைக் கொட்டி விட்டார். குறும்பு கொப்பளிக்க ”பொழுது விடிஞ்சு பொழுது போனா நான் யாரைக் கண்டனம் பண்றேனோ அந்த புத்தரைச் சொல்லி “அவர் நீதான்!” ன்னுட்டுப் போய்ட்டான் !”<br /><br /><br /> This is the post I received yesterday...from Sri VAI.GOPALAKRISHNAN.<br />I gave the comments...which will follow next. Thanking you.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />Venugopal Khttps://www.blogger.com/profile/17386556508532281886noreply@blogger.com