Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Saturday, June 30, 2012

ஏன் நாம் வேதத்தை ரக்ஷிக்க வேண்டும் ?

மனித அறிவின் எல்லையை மீறி அகண்டமாக(எல்லையற்றவர்களாக) ஆனவர்களே மஹரிஷிகள். உலகத்திற்கு அவர்கள் மூலமே வேதமந்திரங்கள் வந்திருக்கின்றன.
நல்ல எண்ணங்கள் மக்களுக்கு உண்டாகிறது என்றால், அதை உண்டாக்குகின்ற சலனங்கள் (நுன்செயல்கள்) இருக்க வேண்டும். அவற்றிற்கான சப்தங்களும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சப்தங்களை நாம் உண்டாக்க முடியுமானால் உலகத்தில் உள்ள மக்களுக்கு நல்ல எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். அதன் மூலமாக சாதனைகளும், வெற்றிகளும், மனசாந்திகளும் பெருகிக்கொண்டே இருக்கும். இதைவிட உலகத்திற்கு பெரிய க்ஷேமம் என்ன இருக்கிறது? அப்படி எண்ணுவதற்கு அவர்களை தூண்டுகிற சக்தியை பெற்ற சப்தங்கள் தான் வேதமந்திரங்கள்.
இந்த வேத மந்திரங்களில் விசேஷம் என்னவென்றால், அர்த்தம் இல்லாமல், வெறும் சப்தரூபத்திலேயே அவை உலகத்திற்கு க்ஷேமத்தைச் செய்கின்றன. இது மட்டுமில்லை, அவற்றிற்கு உயர்ந்த அர்த்தமும் இருக்கிறது. சகல வேதங்களும், பரம தாத்பர்யமாக, “ஒரே சத்யம் தான் இத்தனையாகவும் தோன்றியிருக்கிறது” என்று சொல்கின்றன. இது தவிர, அவை சப்தங்களாக இருக்கும்போதே அந்தந்த சப்தத்திற்குறிய தேவதா ரூபங்களாகவும் இருந்து அந்தந்த தேவதையின் சாக்ஷாத்க்காரத்தையும் அநுக்ரஹத்தையும் நமக்கு ஏற்படுத்தி வைக்கின்றன.
அப்படிப்பட்ட வேதங்களை (மந்திரங்களை) உலகத்தில் நிலைத்திருக்கும்படியாகச் செய்வதில் எல்லோரும் இதயபூர்வமாக முனைந்து செயலில் இறங்க வேண்டும். இது இப்போதுள்ள ஜன சமூகம் முழுவதற்கும், பிராம்மண ஜாதிக்கு மட்டுமல்ல, சமஸ்த லோகத்திலும் உள்ள அதனை கோடி ஜீவராசிகளுக்கும் க்ஷேமம் உண்டாவதற்காக நீங்கள் செய்ய வேண்டிய கடமை. தெய்வத்தால் விதிக்கப்பட்ட கடமை. அதுவே தெய்வீகமான கடமையும் (Divine Duty) ஆகும்.
அப்படிப்பட்ட வேதத்தை அழிய விடக் கூடாது என்று சொல்லி, தொடர்ந்து வேத ரக்ஷணத்திற்கு எதாவது ஏற்பாடு பண்ணுமாறு செய்ய வேண்டும் என்று தான் உங்களைக் கேட்க வந்திருக்கின்றேன். எனக்காக, உங்களுக்காக என்று வித்யாசம் எதற்கு? நான், நீங்கள் எல்லாம் ஒன்றுதான். என் கார்யம் உங்கள் கார்யம். “வேதத்தை ரக்ஷித்து விட்டால்” அதுதான் எல்லோருக்கும் பரம ஸ்ரேயஸ்ஸை தருகிற ஒரே கார்யம். இதை செய்வதால் க்ஷேமம் உங்களுக்கு. பெயர் எனக்கு.
–காஞ்சி ஸ்ரீ ஸ்ரீ பரமாச்சார்ய ஸ்வாமிகள்

Friday, June 29, 2012

Seetha Kannan from Chennai went to Kanchipuram to see Paramacharya and to get HIS blessings with her family. At the entrance of the Matam, they stopped to buy some fruits to offer to his Holiness. They brought some apples, bananas and oranges. Her son crying asking for an apple and they pacified him saying he would get it after worship and went in.
Heavy rush was there. After a while, they offered namaskarams and the fruits to Paramacharya. After giving them prasadhams, HE wanted to give her son a fruit. There were many fruits kept on a plate near him. His hands first lingered on an orange, then a pomegranate and finally came to rest on an apple. He gave the apple for which her son cried, as prasadham to him.
They were wound-struck as to how the Paramacharya could have known the incident that happened outside the madam.They were fortunate to have seen him in their first time.
Periyava knows each and every movement. Right???????

Wednesday, June 27, 2012

Dr R Balakrishnan Nair, Nephrologist in SKS Hospitals Salem, He had his medical studies in England and in the thirst of having a religious and spiritual life, he returned to India. He is highly devoted to Sri Guuruvayurapppan. He has been doing Srimad Bhagavata Parayanam Daily.
One Early morning, when the doctor was fast asleep, he had a dream in which Sri Mahaperiyaval appeared, and asked the doctor to offer ‘archana’ to Sri Krishna, reciting Sri Krishna Ashtothram. The doctor and his wife searched for the book. Unable to locate the book, in some days, they forgot the matter.
Again in the early hours, in his deep sleep, the doctor has a dream of Sri Maha Periyaval, who reminded him about the Sri Krishnan Ashtothram. The doctor replied that he could not find the book although he remembered to have bought it a few years ago. Sri Acharyal told the doctor that a book titled “Bruhatstotra Ratnakaram” was kept on top of the refrigerator, in their house in Salem. The “Sri Krishna Ashtothram” could be found in it.
Immediately cutting short their planned stay at Alleppy, they returned to Salem to find the “Bruhatstotra Ratnakaram” book exactly on top of the fridge in their house. From that day onwards, the doctor has been offering tulasi archana to Sri Guruvaayurappan, while reciting Sri Krishna Ashtothram. The first archana is being offered to Sri Maha Periyaval.
HOW PERIYAVA KNOWS ABOUT THE BOOK KEPT IN TOP OF REFRIGERATOR???????

 

Monday, June 25, 2012

 

சின்ன குழந்தைகளுக்கு கவடு-சூது தெரியாது. நெஞ்சில் தோன்றுவதை, அப்படியே வெளியில் சொல்லி விடும். அதனால்தான் - நெஞ்சில் கள்ளம் இல்லாததால்தான்- குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறோம்.
பக்தர்கள் மூங்கில் தட்டுகளில் பழங்கள், கற்கண்டு, புஷ்பம் என்று பலவகை பொருள்களை கொண்டு வந்து சமர்பித்தார்கள்.
ஒரு தட்டில் பெரிய பெரிய தாமரை மலர்கள் இருந்தன. ஒரு மலரை எடுத்து கையில் வைத்து கொண்டு, பொதுவாக, 'இந்த புஷ்பம் ரொம்ப நன்றாக இருக்கு, இல்லையா?' என்று சற்றே மகிழ்ச்சியுடன் கூறினார்கள், பெரியவாள்.
பெரியவாளின் விமர்சனத்தில் பக்தர்களும் ஆனந்தப்பட்டு கொண்டிருந்தார்கள்.
சிறு பெண் குழந்தை, ஓர் அடி முன்னால் வந்தது. 'ஆமாம்.... பெரியவா முகம் மாதிரி இருக்கு' என்றது. எல்லோரையும் பேரின்ப அதிர்ச்சி உலுக்கி எடுத்தது. பெரியவா டக்கென்று பேச்சின் போக்கை மாற்றி விட்டார்கள். 'எண்டா அந்த சாத்தனூர் சாஸ்திரிகள் வந்திருந்தாரே.... இன்னும் பிரசாதம் வாங்கிகொள்ளல்லே... அப்போ இன்னும் ஊருக்கு போகலேன்னு அர்த்தம்...'
(பி.கு அன்றைக்கு சாத்தனுரிலிருந்து எந்த சாஸ்திரிகளும் தரிசனத்துக்கு வரவேயில்லை)
பெரியவாளுக்கு குறுக்கு வழிகள் நிறைய தெரியும்!

 

Saturday, June 23, 2012

 
எனது ஆசான் சுப்ரமணியன் ராமபிரான் மீது அழ்ந்த பக்தி உடையவர். பள்ளி செல்லும் நாட்களில் தொடங்கி இன்றும் (வயது92) தினமும் 1008 முறை "ஸ்ரீராமஜெயம்" எழுதாமல் தூங்கமாட்டார்.
அவரிடம் டியூசன் படித்துகொண்டிருந்த மாணவர் ஒருவர் எப்போதும் சோகத்துடன் இருந்ததை பார்த்து அவர் காரணம் கேட்க, "தன் சகோதரியின் திருமணம் நீண்ட நாட்களாக தள்ளி போய் கொண்டிருப்பதால் வீட்டில் உள்ள அனைவரும் கவலையுடன் இருக்கிறோம். மேலும் கோயில், பரிகாரபூஜை என வேண்டாததெய்வங்கள் இல்லை" என்றான் மாணவன்.
உடனே ஆசிரியர், "நாம் இருவரும் காஞ்சிபுரம் சென்று மகாபெரியவரை பார்த்து ஆசிபெற்று வருவோம். நிச்சயம் ஒரு தீர்வு கிட்டும்" என்றார் .
புறப்படும்போது ஆசான் கிட்டதட்ட இரண்டு லட்சம் தடவைக்கு மேல் ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டு புத்தகங்களை கட்டி தன்னுடன் எடுத்துகொண்டார்.
இருவரும் காஞ்சி சங்கர மடத்தை அடைந்தனர். அவர்கள் போன சமயம் பெரியவாள் பக்தர்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருந்தார். மகாசுவாமிகளை பார்க்கும்போது என்னென்ன அவரிடம் கேட்க வேண்டும் என்பதை தயார் செய்து வைத்திருந்தனர்.
தங்களை அழைத்தவுடன் ராமஜெயம் எழுதிய நோட்டு புத்தகங்களை அவர் முன் வைத்தனர். பரமாச்சாரியார், "என்ன இது" என வினவினார். இரண்டு லட்சம் ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டுகள் என்றவுடன் ஆச்சாரியார் முகத்தில் புன்னகையுடன் கலந்த மகிழ்ச்சி அரும்பியது. அருகில் இருந்த மாலையை அந்த புத்தகங்கள் மீது போட்டார். பின் இருவருக்கும் ஆரஞ்சு மற்றும் பூ மாலையை கொடுத்து ஆசீர்வதித்தார்.
எதிர்பாராமல் கிடைத்த இப்பேறு வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். எனவே, இருவரும் திக்குமுக்காடி போய்விட்டனர்.
வெளியே வந்ததும் மாணவர், "ஒன்றுமே கேட்காமல் வந்து விட்டோமே? எனப் பதற்றமாக கேட்டார். அதற்கு ஆசான், "நாம் எதற்கு வந்திருக்கின்றோம், என்ன கோரிக்கை என்பதெலாம் பெரியவாளுக்கு தெரிந்திருக்கும். கவலைபடாமல் திரும்பி செல்வோம். எல்லாம் நல்லதே நடக்கும்," என்றார் .
என்ன ஆச்சரியம்! அடுத்த வாரமே அந்த மாணவனின் அக்காளுக்கு ஒரு நல்ல வரன் அமைந்து விரைவிலேயே திருமணமும் சிறப்புற நிறைவேறியது. தம்பதியினர் ஆச்சாரியாளிடம் நேரில் சென்று ஆசி பெற்று புது வாழ்வைத் தொடங்கி இன்று குழந்தை செல்வங்களுடன் இனிதே வாழ்ந்து வருகின்றனர்.
சொல்லாமல் உணர்த்தும் தட்சிணாமூர்த்தியைப் போல தன்னிடம் வருவோர் சொல்லாமலே உணர்ந்து அவர்களின் குறைகளை தீர்த்து வைத்திட்ட பெரியவாளின் ஆசிக்கும் கருணைக்கும் எல்லையை இல்லை

 

Friday, June 22, 2012

 
சிவாஸ்தானத்தில் பெரியவா தங்கியிருந்தபோது, காட்டுப்புத்தூரை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் தர்சனம் பண்ண வந்தார். அவர் கொண்டு வந்த காணிக்கை என்ன தெரியுமா? ரெண்டு ரஸ்தாளி வாழைப்பழத்தார்கள். ஒவ்வொன்றிலும் பத்து,பன்னெண்டு சீப்புகள் இருக்கும். ஒரு தாரையே ரெண்டு பேர் சுமக்க வேண்டியிருந்தது. அத்தனை பெரிய பழங்கள்! சீப்பு...... கனம் என்பதால் மட்டும் இல்லை, பெரியவாளுக்கு
சமர்ப்பிக்கும்போது பழங்கள் நசுங்காமல் இருக்கவே ரெண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர்.
அன்போடு தன்னைக் காண வந்த பக்தருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டு, சிஷ்யரைக் கூப்பிட்டார்.
"டேய்! அந்த ரெண்டு தார்களையும் ஜாக்ரதையா எடுத்து உள்ள வை! பழத்த பாத்தியோ! எவ்வளவு மொழு மொழுன்னு இருக்கு! ஒரு பழம் சாப்ட்டாலே போறும் போலருக்கு. சாப்பாடே தேவையில்லே! நாலு நாளைக்கு ஒங்களுக்கெல்லாம் கவலையே இல்லே!"ம்ஹும்! இது வெறும் சிஷ்யாளோட கல்பனை. ஏனென்றால் பெரியவா இந்த மாதிரி உத்தரவிடவில்லை..........மாறாக,
"டேய்! இந்தா.......இந்த ரெண்டு தாரையும் கொண்டு போய், வாசல்ல ஒரு பெரிய புளியமரம் இருக்கோல்லியோ?..அதோட கெளைல [கிளை] கைக்கு எட்டறாப்ல கட்டி தொங்க விடுங்கோடா!" என்று சொன்னார்.
அந்யாயம்! அக்ரமம்!...பெரியவா இப்பிடி எல்லாம் எங்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது! நாங்கள் இதை பலமாக கண்டிக்கிறோம்......என்றெல்லாம் வாயால் சொல்லவே முடியாது என்பது மட்டுமில்லை...........மனசால கூட நினைக்க முடியாது.
சிவாஸ்தானம்-தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாடுபவர்கள். பொறுப்பில்லாத ஆண் 'குடி' மக்கள் நன்றாக குடித்து விட்டு, பசியோடு வீட்டுக்கு போய் அங்குள்ள பெண்கள், குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள். இது அன்றாடம் வாடிக்கையாக நடப்பது! நம்முடைய கருணைக்கடலுக்கு இது தெரியாதா? ஏழை பங்காளன் இல்லையா?
வாழைத்தார் கட்டின அன்று இரவு அவ்வழியாக குடித்துவிட்டு வீட்டுக்கு போனவர்கள், வாழைதாரிலிருந்து பழத்தை பிய்த்து சாப்பிட்டுவிட்டு போனார்கள். பெரியவா 'ப்ளான்' படி, பசி வெகுவாக அடங்கியதால், வீட்டில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அடியிலிருந்து தப்பித்தனர். [பெரியவாளுக்கு தெரியாத சூக்ஷ்மமா?]
மறுநாள், நிரந்தர உத்தரவு வந்தது............."மடத்துக்கு; வர்றவா குடுக்கற பழத்தையெல்லாம் புளியமரத்ல தொங்க விடுங்கோ!" அதிலிருந்து புளிய மரத்தில் தினமும் வாழைப்பழம் !!
சுமார் பதினைந்து நாட்களுக்குப்பின், அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர் வந்தார்........."ஸாமி, இப்போ ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. 'தண்ணி' போடறதையே நிறுத்திட்டாங்க ஸாமி! குடிசைல பொம்பளைங்க, கொளந்தைங்க எல்லாம் இப்போ
சந்தோஷமா இருக்காங்க ஸாமி!..." வணங்கினார். மாற்றத்துக்கு காரணம்............வாழைப்பழம்? இல்லை. ஞானப்பழமாக பூமியில் உதித்த பெரியவாளின் பெரும் கருணை மட்டுமே இது!

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top