Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Monday, August 31, 2020

"பகவானை விட பாகவதன் உயர்ந்தவன்"- (பெரியவாளுக்குத் தன்னைப் பற்றி யார் நிந்தனை செய்தாலும் கோபம் வராது. ஆனால், தன்னிடம் தொண்டு செய்பவர்களைப் பற்றிக் குறைவாகப் பேசுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள்)

"ஹெக்கண"-என்று விளித்துக் கூறிய கன்னடத்து தாய் மொழிக்காரர்கள்  மடத்து தமிழ்ப் பணியாளர்களைக் கூப்பிடும்போது, கேட்ட பெரியவாளின் கோபம்

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
ஸ்ரீமடத்தில் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட சிலர் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் எல்லோருக்கும், மகாப் பெரியவாளும் கன்னடம் பேசுபவர் என்பதால், உள்ளூர அகங்காரம்.
தமிழ்ப் பணியாளர்களைக் கூப்பிடும்போது, "ஹெக்கண" என்று விளித்து அழைப்பார்கள்.அந்தக் கன்னடச் சொல்லுக்கு, உண்மையான அர்த்தம் என்ன என்று தெரியாத தமிழடியார்கள், ஏதோ சார்,ஐயா,சுவாமி, நண்பா என்று பொருள் கொண்டு பதிலளித்து வந்தார்கள்.
ஒரு நாள் கன்னடம் பேசும் தொண்டர், 'ஹெக்கண' என்று ஒரு தமிழ் சிஷ்யரைக் கூப்பிடுவதை கேட்டுக் கொண்டே வந்து விட்டார்கள் பெரியவா. அதுவரை பெரியாவாளுக்கு அப்படி ஒரு கோபம்வ ந்து யாரும் பார்த்ததேயில்லை.
"இவர்களெல்லாம் ஹெக்கண என்றால்,நீங்களெல்லாம் என்ன?...குரூரமானமிருகங்கள்...இனிமேல் பூஜைக்கட்டுக்கு கன்னடக்காரர்கள் யாரும் வரக்கூடாது" என்று கடுமையான உத்தரவு போட்டு விட்டார்கள்.
பின்னால் தமிழ் சிஷ்யர்கள் விசாரித்த போது,ஹெக்கண என்றால் பெருச்சாளி என்று அர்த்தம் என்பது தெரியவந்தது.
அப்போது ஸ்ரீமடத்தில் பூஜ்ய ஸ்ரீ அனந்தானந்த ஸ்வாமிகளும்இ ருந்தார். அவரிடம் போய் முறையிட்டிருக்கிறார்கள்பா திக்கப்பட்டவர்கள். பெரியவாளிடம் தாராளமாகப் பேசும் உரிமை உடையவர் அவர்.
மறுநாள் வாய்ப்புக் கிடைத்த போது. "யாரோ எதையோ சொன்னதைப் பெரியவா பொருட்படுத்தக்கூடாது. நானும் பெரியவாளும் கூடக் கன்னடக்காரர்கள் தான்.. அவர்களை மன்னித்து, மறுபடியும் கைங்கர்யத்துக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் தான் அவர்கள் பூஜைக்கட்டில் சேவை செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.
பெரியவாளுக்குத் தன்னைப் பற்றி யார் நிந்தனை செய்தாலும் கோபம் வராது. ஆனால், தன்னிடம் தொண்டு செய்பவர்களைப் பற்றிக் குறைவாகப் பேசுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.
"பகவானை விட பாகவதன் உயர்ந்தவன்"
நிதர்சனமான நிஜம் தான்

Sunday, August 30, 2020

"என் பெயர் சந்திரமௌலீ!"

“நான் போயிட்டு வரேன், சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், “ஒங்க நாமதேயம் (பெயர்) ?” என்று கேட்டார். அவர் சொன்ன பதில்: “சந்திரமௌலீ!” இருவரும் பிரமித்து நின்றோம் (“என்ன சந்தானம்! சந்திர மௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ? ”-பெரியவா)


சொன்னவர்-சந்தானம்.
கட்டுரையாளர்; ரமணி அண்ணா
31-12-2012 போஸ்ட்-வரகூரான்.
பல வருடங்களுக்கு முன்… காஞ்சி மஹா ஸ்வாமிகள், தன் பரிவாரங்களுடன் தஞ்சை மாவட்டப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார். அது ஆனி மாதம். ஆடுதுறையில், பெரிய தர்மசத்திரம் ஒன்றில் முகாமிட்டிருந்த மஹா பெரியவாளை, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஜனங்கள், வந்து தரிசித்துச் சென்றபடி இருந்தனர்.


ஆடுதுறையைச் சுற்றியுள்ள நடராஜபுரம், கோவிந்தபுரம், தியாகராஜபுரம், சாத்தனூர், திருமங்கலக்குடி ஆகிய ஊர்களைச் சேர்ந்த பிரமுகர்கள், தங்கள் ஊர் சார்பாக ஆச்சார்யாளுக்கு சமஷ்டி பிக்ஷா வந்தனம் (பல பேர் சேர்ந்து பிக்ஷை அளித்து வழி படுவது) நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.


ஆடுதுறையிலிருந்து தெற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில்தான் அடியேனின் சொந்த ஊரான மருத்துவக்குடி கிராமம் உள்ளது. என் தந்தையார் பிரம்ம சந்தான வாத்தியார், அப்போது அந்தப் பகுதியின் காஞ்சிமட முத்திராதிகாரியாக இருந்தார். எங்களது கிராமத்தின் சார்பாகவும் சமஷ்டி பிக்ஷா வந்தனம் நடத்த வேண்டும் என்று விரும்பினார் அவர். இதை, உள்ளூர் பிரமுகர்களும் ஏற்றுக்கொண்டனர்.


மறுநாள் காலை ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த சத்திரத்துக்குக் கிளம்பினார் என் தகப்பனார். என்னையும் உடன் அழைத்துச் சென்றார். அவரைக் கண்டதும் மடத்துக் காரியஸ்தர், “சாஸ்திரிகளே… நீங்க மருத்துவக்குடி பகுதி மடத்து முத்திராதிகாரிதானே ? ஒரு நாளைக்கு உங்க ஊர் பிக்ஷை வெச்சுக்க வேண்டாமோ ? வர்ற ஞாயித்துக்கிழமை உங்க ஊருல வெச்சுக்கோங்களேன்!” என்றார்.


உடனே என் தந்தையார், “நானும் அதக் கேட்டுண்டு போகத்தான் வந்தேன். ஞாயித்துக்கிழமையே வைச்சுண்டுடறோம். சுமாரா எவ்ளோ ரூவா செலவாகும் ?” என்று அந்த காரியஸ்தரிடம் வினவினார்.


காரியஸ்தர் சிரித்தபடியே, “சொல்றேன்… மடத்துக் காணிக்கையா இருநூத்தம்பது ரூவா கட்டிப்டணும். அப்புறம் தேங்கா, பழம், காய்கறிகள்னு நீங்க வாங்கிண்டு வர செலவு. எல்லாம் முடிஞ்சு ஆச்சார்யாள்ட்ட பிரசாதம் வாங்கிக்கறச்சே… உங்க கிராம வசதிப்படி பாத சமர்ப்பணை (காணிக்கை) அப்டி இப்டினு ஐநூறு, அறுநூறு ரூவா செலவு பிடிக்கும்! உங்கள் ஊர்ல வசூலாயிடுமோல்லியோ?” என்று கேட்டார்.


சற்றும் தயங்காமல், “பேஷா ஆயிடும்” என்ற என் தகப்பனார், “அது சரி… மத்த ஊர்க்காராள்லாம் பாத சமர்ப்பணையா எவ்ளவு பண்றா?” என்று ஆவலுடன் கேட்டார். “ஐநூறுலேர்ந்து ஆயிரம் வரை பண்றா” என்றார் காரியஸ்தர். தகப்பனார் யோசனையில் ஆழ்ந்தார்.


சற்று நேரத்தில் ஆச்சார்யாளை தரிசித்த நாங்கள், அவரை நமஸ்கரித்து எழுந்தோம். என் தந்தையார் பிக்ஷா வந்தன விஷயத்தை ஸ்வாமிகளிடம் தெரிவித்தார்.


“பேஷா நடக்கட்டுமே” என்று அனுக்ரஹித்த ஸ்வாமிகள், “ஏகதேசம் (தனியாக) பண்றாப்ல நம்மூர்ல நிறைய தனிகாள்லாம் (பணக்காரர்கள்) இருக்காளோ ?” என்று வினவினார்.


உடனே என் தகப்பனார் குரலைத் தாழ்த்தி, “மூணு நாலு பேர்வழிகள் இருக்கா. அவாள்ள ரெண்டு மூணு பேர், இப்போ மெட்ராஸ் போயிருக்கா. ஊர்ல எல்லாருமா சேர்ந்துதான் பெரியவாளுக்கு பிக்ஷா வந்தனம் பண்றதா உத்தேசம். ஆச்சார்யாள் அனுக்கிரக்கிக்கணும்” என வேண்டினார். புன்னகைத்தபடியே இரு கரங்களையும் தூக்கி ஆசீர்வதித்தார் ஸ்வாமிகள்.


ஞாயிற்றுக்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன. வசூலை ஆரம்பித்தார் தகப்பனார். மூன்று அக்ரஹாரத்திலும் சேர்த்து சுமார் முப்பது வீடுகள் இருக்கும். வியாழக்கிழமை மாலை வசூல் முடிந்தது. நானூறு ரூபாய் சேர்ந்தது. என் தகப்பனாரும் ஊரிலுள்ள மற்ற வைதீகர்களும் சேர்ந்து நூறு ரூபாய் சமர்ப்பித்தனர். ஆக மொத்த வசூல் ஐநூறு ரூபாய்! பிக்ஷா வந்தன செலவுக்கு இது போதும்.
இனி பெரியவாளின் பாத சமர்ப்பணைக்குத் தான் பணம் வேண்டும். ‘ஐநூறு ரூபாயாவது பாத சமர்ப்பணை பண்ண வேண்டும்’ என்பது என் தந்தையின் ஆசை. ஆனால் பணமில்லை. அன்றிரவு, அவர் சரியாகவே தூங்கவில்லை.
வெள்ளிக்கிழமை! ஆச்சார்யாளைத் தரிசிக்கச் சென்றோம். சத்திரத்து வாயிலில் – கீற்றுக் கொட்டகையில் அமர்ந்து தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார் ஸ்வாமிகள். கூட்டம் அலை மோதியது. நாங்கள் சற்றுத் தள்ளி ஓர் ஓரமாக… ஸ்வாமிகள் இருந்த இடத்தை நோக்கி கைகூப்பி நின்றிருந்தோம். நான் தகப்பனாரை பார்த்தேன். முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. ‘பாத சமர்ப்பணை ஐநூறுக்கு என்ன பண்ணப் போகிறோம் ?’ என்கிற கவலை அவருக்கு.
திடீரென்று ஒரு கருணைக் குரல்: “சந்தானம்! கிட்ட வாயேன்… ஏன் அங்கேயே நின்னுண்டிருக்கே ?” – சிரித்தபடி ஜாடை காண்பித்து, அருகில் அழைத்தார் ஆச்சார்யாள். இருவரும் சென்று, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தோம்.
“என்ன சந்தானம்! நேத்திக்கு நீ கண்ணுல படவே இல்லியே! ஊர்ல ஏதாவது வைதீக ஜோலியா ?” என்று வினவினார் ஸ்வாமிகள். “அதெல்லாம் ஒண்ணுமில்ல பெரியவா. ஞாயித்துக்கிழமை எங்க ஊர் சார்பா பிக்ஷா வந்தனம் பண்றமோல்லியோ… அது விஷயமா ஏற்பாடுகள் பண்ணிண்டிருந்தேன். அதனாலதான்…” என்று என் தகப்பனார் முடிப்பதற்குள் இடைமறித்த ஸ்வாமிகள், “அது சரி சந்தானம்… லௌகீகமெல்லாம் (வசூல்) எதிர்பார்த்தபடி பூர்த்தி ஆச்சோல்லியோ?!” என் சிரித்தபடியே வினவினார். இதற்கு பதில் சொல்லத் தயங்கினார் என் தகப்பனார்.
அவர் சொல்ல வாயெடுப்பதற்குள்… ஸ்வாமிகள் எதையோ புரிந்து கொண்டவர் போல், “ஒண்ணும் கவலைப்படாதே! சந்திரமௌலீஸ்வரர் கிருபையால எல்லாம் நீ நெனைச்சுண்டு இருக்கிற மாதிரியே நடக்கும்!” என வார்த்தைகளால் வருடிக் கொடுத்தார். திடீரென, “ஏன் சந்தானம்… இந்த ஊர் காவிரி நதியிலே இப்போ நிறைய ஜலம் போறதோ… தெரியுமோ ஒனக்கு?” என்று கேட்டார்.”காவிரி ஜலத்தைப் பற்றி பெரியவா ஏன் விசாரிக்கிறார் ?” என்று அனைவரும் குழம்பினர்.
“போயிண்டிருக்கு பெரியவா” என்றார் தகப்பனார்.
பெரியவா விடவில்லை. “அது சரி, நீ எப்ப காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தே ?”
“ஒரு வாரம் முன்னாடி, பெரியவா!” – என் தகப்பனார் பதில் சொன்னார். “அதிருக்கட்டும்… இப்போ ஜலம் போயிண்டிருக்கோ… தெரியுமோ ?” – இது பெரியவா.
உடனே அருகில் இருந்த உள்ளூர் அன்பர் ஒருவர் பவ்வியமாக, “இன்னிக்கிக் கார்த்தால நான் காவிரி ஸ்நானத்துக்குப் போயிருந்தேன். சுமாரா ஜலம் போறது பெரியவா” என்றார்.
ஸ்வாமிகளுக்கு சமாதானம் ஏற்படவில்லை. “சுமாரா போறதுன்னா… புரியலியே! அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல போறதா, இல்லியா எனக்குத் தெரியணும்” என்றவர், என் தகப்பனாரைப் பார்த்து, “சந்தானம், நீ ஒரு காரியம் பண்ணு. நாளைக்கு விடியக் காலம்பற காவிரி ஸ்நானத்துக்குப் போ. நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தீர்த்தம் போறதான்னு பாத்துண்டு வந்து சொல்லு!” என்று கூறி விட்டு, ‘விசுக்’ கென்று எழுந்து உள்ளே சென்று விட்டார்.
‘தான் காவிரியில் ஸ்நானம் பண்ணி விட்டு வருவதற்காகத் தான், இவ்வளவு விவரங்களையும் பெரியவா கேக்கறா போலும்’ என்று எண்ணியபடியே ஊர் திரும்பினோம்.
சனிக்கிழமை. பொழுது விடிந்தது. மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. பெரியவா ஆக்ஞைப்படி காவிரி ஸ்நானத்துக்குப் புறப்பட்டோம். அப்போது காலை ஏழு மணி. கரையில் என்னையும், தகப்பனாரையும் தவிர ஒரு ஈ, காக்கா கூட இல்லை. என் தகப்பனார் ஸ்நானம் பண்ணியபடியே சொன்னார்: “நன்னா முழுகி ஸ்நானம் பண்றாப்ல தான் ஜலம் போறது! பெரியவா கிட்ட போய் சொல்லணும்.”
தொடர்ந்து, உரத்தக் குரலில் காவிரி ஸ்நான சங்கல்பம் சொல்ல ஆரம்பித்தார், என் தந்தையார். திடீரென கரையிலிருந்து, “சாஸ்திரிகளே! கொஞ்சம் இருங்கோ. நானும் வந்துடறேன். எனக்கும் கொஞ்சம் ஸ்நான சங்கல்பம் பண்ணி வையுங்கோ…புண்ணியமுண்டு” என்றொரு கணீர்க் குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தோம். சுமார் 55 வயது மதிக்கத் தக்க ஒருவர் ஜலத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். முன்பின் பார்த்திராத முகம்!
சங்கல்ப ஸ்நானம் முடிந்து கரையேறினோம். உடை மாற்றிக் கொண்ட அந்த நபர், தகப்பனாருக்கு ஸ்நான சங்கல்ப தக்ஷணையாக ஐந்து ரூபாய் கொடுத்தார். அவரைப் பற்றி என் தகப்பனார் விசாரித்தார்.
அவர் சொல்ல ஆரம்பித்தார். “எனக்கும் பூர்வீகம் மருத்துவக்குடிதான். என் அம்மா வழித் தாத்தாவும் இந்த ஊர் தான். அப்பா வழித் தாத்தா வெங்கடாசலம் ஐயருக்கு மருதுவக்குடியிலே சொந்த வீடு இருந்தது. எங்க தாத்தாவுக்கு அப்புறம் இங்க ஒருத்தரும் இல்லே. பம்பாய் போயிட்டோம். திருநீலக்குடிக்கு அருகில் இருக்கிற மேலூர் சந்திர மௌலீச்வர ஸ்வாமி தான் எங்க குலதெய்வம்.”
“நீ எப்ப நம்மூர் பக்கம் போனாலும் ஆடுதுறை காவிரியில ஸ்நானம் பண்ணிட்டு வா”ன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவா. அந்த பாக்கியம் இன்னிக்கு கிடைச்சுது. குடும்ப கேஸ் விஷயமா தஞ்சாவூர் போயிண்டிருக்கேன். இப்போ சங்கல்பத்தோடு காவிரி ஸ்நானம் கிடைச்சுதுல ரொம்ப திருப்தி!” என்றவர், “ஆமா, சாஸ்த்ரிகளே! ரயிலை விட்டு எறங்கி வரச்சே பார்த்தேன். நிறைய பேர் மடிசாரும், பஞ்சகச்சமுமா போயிண்டிருக்காளே… இங்கே என்ன விசேஷம் ? ” என்று கேட்டார்.
ஆச்சார்யாள் விஜயம் பற்றியும், கிராம பிக்ஷா வந்தனம் பற்றியும் தகப்பனார் அவரிடம் விவரித்தார். அவருக்கு பரம சந்தோஷம். “கேக்கவே சந்தோஷமா இருக்கு. நம்ம ஊர் சார்பா லோக குருவுக்கு நடக்கிற பிக்ஷா வந்தனத்துல என்னால கலந்துக்க முடியாத நிர்பந்தம். இருந்தாலும் எங்க குடும்ப காணிக்கையா பிக்ஷா வந்தனத்துல இதையும் சேர்த்துக்கோங்கோ” என்றபடி என் தகப்பனாரை நமஸ்கரித்து, அவரது கையில் ஒரு கவரைக் கொடுத்தார். தகப்பனாருக்கு ஒன்றும் புரியவில்லை. கவரைப் பிரித்துப் பார்த்தார். அதில் ஐநூறு ரூபாய்.
“நான் போயிட்டு வரேன், சாஸ்திரிகளே” என்று கிளம்பியவரைத் தடுத்து நிறுத்திய என் தகப்பனார், “ஒங்க நாமதேயம் (பெயர்) ?” என்று கேட்டார். அவர் சொன்ன பதில்: “சந்திரமௌலீ!” இருவரும் பிரமித்து நின்றோம்.
பின்னர் நேராகச் சத்திரத்துக்குச் சென்றோம். அங்கே பெரியவா இல்லை. கோவிந்தபுரம் போதேந்திராள் மடத்திற்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். என் தகப்பனார், மடத்து காரியஸ்தரிடம் சென்று, “பெரியவா, காவிரியில் அமிழ்ந்து ஸ்நானம் பண்றாப்ல, ஜலம் போறதான்னு பாத்துண்டு வரச் சொன்னா…” என்று முடிப்பதற்குள் அவர், “பெரியவா விடியகாலம் நாலரை மணிக்கே காவேரில ஸ்நானம் பண்ணிட்டு வந்துட்டாளே” என முத்தாய்ப்பு வைத்தார். எங்கள் பிரமிப்பு அதிகரித்தது.
ஞாயிற்றுக்கிழமை. பிக்ஷா வந்தனம் முடிந்தது. கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பெரியவாளை நமஸ்கரித்தோம். தகப்பனார், பழத் தட்டில் பாத காணிக்கையாக, அந்த ஐநூறு ரூபாயை வைத்து சமர்ப்பித்தார். பழத்தட்டையே சற்று நேரம் உற்றுப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்துக் கொண்டே, “என்ன சந்தானம்! சந்திர மௌலீஸ்வரர் கிருபையால உன் மன விருப்பம் பூர்த்தி ஆயிடுத்தோல்லியோ? காவிரி ஸ்நான பலனும் கெடச்சுடுத்தோல்லியோ? ” என்று வினவ, வியப்புடன் நின்ற அனைவரும் சாஷ்டாங்கமாக பெரியவா முன்னே விழுந்தோம்.

Saturday, August 29, 2020

"நீ நாளன்னிக்கு பொறப்பட வேண்டாம். ஒரு வாரத்துக்கு பயணத்தை ஒத்திவைச்சுக்கோ!" -பெரியவா

{விமான விபத்தில் தப்பிய அல்லாடி கிருஷ்ணஸ்வாமி
ஐயரின் மகனும் மருமகளும்)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
​நன்றி-25-01-2018 தேதியிட்ட குமுதம் பக்தி.

ஞானிகள் முக்காலமும் உணர்ந்தவான்னு சொல்லுவா,
ஒருத்தரைப் பார்த்தாலே அவாளுக்கு வந்தது,
வந்திருக்கிறது,வரப்போறதுன்னு எல்லாத்தையும்
ஞானிகளால் தெரிஞ்சுக்க முடியும்.

அதேசமயம் இயற்கைக்கு மாறான எதையும் அவா
செய்ய மாட்டா. உதாரணமா ஒருத்தருக்கு ஏதோ ஒரு
சங்கடம் வரப்போறதுன்னா,அதை அப்படியே அவாகிட்டே
சொல்ல மாட்டா. அதற்கு மாறா,சங்கடம் எதனால
வரப்போறதோ அதைச் செய்ய வேண்டாம்னு சூசகமா
சொல்லுவா. மத்தபடி இதைச் செஞ்சா பாதிப்பு
வரும்னெல்லாம் எச்சரிக்க மாட்டா.

அவா சொல்றதைக் கேட்டுண்டு அதும்படி நடந்தா பிரச்னை
வராம தப்பிக்கலாம். ஒருவேளை வந்தாலும்  அதுலேர்ந்து
தப்பிக்க மார்க்கம் இருக்கும். அதேசமயம் மீறி நடந்தா,
சங்கடத்துல சிக்கிண்டு சஞ்சலப்பட நேரிட்டுடலாம்.

மகாபெரியவா, முக்காலமும் உணர்ந்த ஞானிங்கறதை
நிரூபிக்கறப்புல எத்தனை எத்தனையோ சம்பவங்கள்
நடந்திருக்கு. அதுல ஒண்ணைத்தான் இப்போ 
சொல்லப்போறேன்.

மகாபெரியவாளோட பரம பக்தர்கள்ல அல்லாடி
கிருஷ்ணசாமி ஐயரும் ஒருத்தர். அவர் மட்டுமல்லாம
அவரோட குடும்பமே பரம பக்தர்கள்தான்.

காஞ்சி மடத்துல மகாபெரியவா தங்கியிருந்த காலகட்டம்.
ஒருநாள், ஆசார்யாளை தரிசிக்க வந்த பக்தகோடிகள்ல
இளம் தம்பதிகளும் இருந்தா. வரிசையா தரிசனம்
பண்ணிண்டு இருந்தவாள்ல. அவாளோட முறை வந்ததும்
"அல்லாடி கிருஷ்ணஸ்வாமியோட புத்ரன் தானே நீ?
இவ உன்னோட பார்யாளா?அப்படின்னு கேட்டார்,பெரியவா.

வந்தவர்,"ஆமாம் பெரியவா.இவ என்னோட ஆத்துக்காரி.
ரெண்டு பேருமே டாக்டரா இருக்கோம். நாளன்னைக்கு
அமெரிக்கா பொறப்படறோம். அதான் பெரியவாகிட்டே
ஆசிர்வாதம் வாங்கிண்டு.."

"நீ நாளன்னிக்கு பொறப்பட வேண்டாம். ஒரு வாரத்துக்கு
பயணத்தை ஒத்திவைச்சுக்கோ!" வந்தவர் சொல்லி
முடிக்கறதுக்கு முன்னால குறுக்கிட்டுச் சொன்னார்,
மகாபெரியவா.

அதைக் கேட்டதுதான் தாமதம் வந்தவருக்கு தர்ம
சங்கடமாயிடுத்து. "இல்லை பெரியவா ஃப்ளைட்ல
டிக்கெட்டெல்லாம் கூட ரிசர்வ்.." என்று ஏதோ
தொடங்கினவர், பெரியவாளோட முகத்துல தெரிஞ்ச
கண்டிப்பைப் பார்த்ததும் சொல்லவந்ததை அப்படியே
நிறுத்திட்டு, " சரி பெரியவா நீங்க சொல்றாப்புலயே
செய்கிறேன். ஃப்ளைட் டிக்கெட்டை கேன்சல் செய்துட்டு
அடுத்த வாரத்துக்கு தள்ளிவைச்சுடறேன்!" பணிவாகச்
சொன்னார்.

"க்ஷேமமா இருங்கோ..!" சொன்ன மகாபெரியவா
கல்கண்டும் குங்குமமும் குடுத்து ஆசிர்வதித்தார்.

அதுக்கு அப்புறம் நடந்ததுதான் ரொம்ப பெரிய விஷயம்.
வந்தவர் அமெரிக்காவுக்குப் போறதுக்காக டிக்கெட் புக்
பண்ணியிருக்கறதா சொன்னாரே...அந்த ஃப்ளைட் என்ன
ஆச்சு தெரியுமா? பொறப்பட்ட  கொஞ்ச நேரத்துலயே
ஏதோ இயந்திரக் கோளாறால அப்படியே வெடிச்சு
சிதறிடுத்து. அதுல பயணம் செஞ்சவா ஒருத்தர் கூட
தப்பிக்கலை.

இந்த நியூஸ் அதுக்கு அடுத்த நாள் பேப்பர்ல 
வந்தப்போதான் எல்லாருக்கும் தெரிஞ்சது.அன்னிக்கு
சாயந்தரமே மறுபடியும் அவா ரெண்டுபேரும் வந்து
மகாபெரியவாளை தரிசிச்சு சாஷ்டாங்கமா நமஸ்காரம்
செஞ்சா.அப்போ அவா கண்ணுலேர்ந்து வழிஞ்ச நீர்,
மகா பெரியவாளுக்கு பாதாபிஷேகம் செய்யறாப்புல
பெருகி ஓடித்து.

அங்கே இருந்த எல்லாரும் ஒருசேர 'ஜயஜய சங்கர,
ஹரஹர சங்கர'ன்னு கோஷம் எழுப்பினா.

Friday, August 28, 2020

பெரியவா நடத்திய ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்-(இந்த ஸந்யாஸிக்காக ஒம்பதாவது தடவையா திருக்கல்யாணம் பண்ணிட்டு வாயேன்!"-- பெரியவா )

"பெரியவா எம் பொண்ணு அபர்ணாவோட பதினேழாவது வயசுலேர்ந்து இங்கே வரன் தேடி வர போதெல்லாம்.. வருஷா வருஷம் திருமலை ஸ்ரீ நிவாஸப்பெருமாளுக்கு திருக்கல்யாணம் பண்ணி வெச்சுருக்கேன்.இது வரைக்கும் எட்டு தடவை நடத்தி இருக்கோம் பெரியவா" --விஸ்வநாதன்

""சரி விஸ்வநாதா! அதனாலென்ன கொறஞ்சுடப் போறது.?. இந்த ஸந்யாஸிக்காக ஒம்பதாவது தடவையா திருக்கல்யாணம் பண்ணிட்டு வாயேன்!"-- பெரியவா

(பெரியவா நடத்திய ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்)

கட்டுரை ஆசிரியர்-ரமணி அண்ணா
தட்ட்ச்சு-வரகூரான் நாராயணன்.
 
ஒரு நாள் மாலை வேளை,ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தில் மகா ஸ்வாமிகளை தரிசிக்க ஏகக் கூட்டம்,பெரியவா தன் ஏகாந்த அறையை விட்டு வெளியே வந்தார்.வழக்கமாக உட்காரும் மேடையில் வந்து சுவரில் சாய்ந்தவாறு அமர்ந்துகொண்டார்.

ஒவ்வொருவராகப்பெரியவா முன்வந்தனர், நமஸ்கரித்தனர்,தத்தம்குறைகளைத் தெரிவித்துப் பிரார்த்திதனர். உரிய பதிலைப் பொறுமையுடன் சொல்லி ஆசி வழங்கி, பிரசாதமும் கொடுத்து அனுப்பி வைத்தார் ஸ்வாமிகள்.

இரவு எட்டரை மணி,அனைவரும் தரிசித்துச் சென்றுவிட்டனர். ஸ்வாமிகள்தனது ஏகாந்த அறைக்கு எழுந்த போக இருந்தார்.

வேகமாக ஓடிவந்தனர்ஒரு தம்பதி. அவர்கள் பின்னால் ஓர் இளம் வயதுப் பெண்ணும் விரைந்து வந்தாள். மூவரும் பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். நான்கு பிக் ஷாப்பர்' பைகளில் தாங்கள் வாங்கி வந்திருந்த பண்டங்களை அங்கிருந்த பெரியபெரிய மூங்கில் தட்டுகளில் நிரப்பி, ஸ்வாமிகளுக்கு முன்பாகத் தலைகுனிந்து சமர்ப்பித்துவிட்டு நிமிர்ந்தனர். நிரப்பப்பட்டிருந்த மூங்கில் தட்டுகளைச் சற்று நேரம் உற்று நோட்டம்விட்டாரஆச்சார்யாள்.
ஒவ்வொன்றிலும் கற்கண்டு,முந்திரி,பிஸ்தா,பாதாம்,திராட்சை,அக்ரூட், பேரீச்சை என வகை வகையான பதார்த்தங்கள். கொண்டு வந்தவர்களை ஆச்சர்யத்தோடு நிமிர்ந்து பார்த்தார் ஸ்வாமிகள். அவர் முகத்தில் மகிழ்ச்சி நிரம்பியது.

"அடடே, நம்ம விஸ்வனாதனா? அமெரிக்காலேர்ந்து எப்ப வந்தே? ஆம்படையாளும் வந்திருக்காளா...பேஷ்...பேஷ்! ரொம்ப சந்தோஷம். எல்லாரும் க்ஷேமந்தானே? என்னடாப்பா...நீ பாட்டுக்கு ஏகப்பட்ட முந்திரி,திராட்சை எல்லாம் எதுத்தாப்ல கொண்டு வந்து வெச்சிருக்கே? ஏதாவது கல்யாண விசெஷமா? இதோ ஒம் பக்கத்திலே நிக்கறாளே...அவ ஒம் பொண்ணுதானே? ஓஹோ.. அவளுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கயாக்கும்?ஏண்டா விஸ்வனாதா..ஒரு தட்டுலயும் விவாஹ பத்திரிகையக் காணோமே?" என்று கேட்டார் ஸ்வாமிகள்.

அவ்வளவுதான் எதிரில் நின்றிருந்த மூவரும் மடை திறந்த வெள்ளம் போல் கேவிக்கேவி அழுதபடியே ஆச்சார்யாள் பாதங்களில் விழுந்தனர்.

மகா ஸ்வாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று  நிதானப்படுத்திக்கொண்டு,

"ஏண்டாப்பாவிஸ்வநாதா..ஒன்னநா ஏதாவது பெசகா கேட்டுட்டேனா? இப்டி சின்னக் கொழந்த மாதிரி கேவிக்கேவி அழறேளே" என்று வாஞ்சையுடன் கேட்டார்.

உடனே விஸ்வநாதன் கைகளால் கன்னத்தில் போட்டுக்கொண்டு பதறியபடியே, "சிவ சிவா! அபசாரம்..அபசாரம்...அப்டியெல்லாம்
ஒண்ணும் இல்லே பெரியவா.'பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணிருக்கியா?பத்திரிகை எங்கே?"னு நீங்க கேட்டதும்எங்க மூணு பேராலயும் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியலே.பெரியவா. இவளுக்கு இப்ப இருவத்தஞ்சு வயசாறது.இவளோட பதினேழாவது வயசிலேர்ந்து ஒவ்வொரு வருஷமும் அமெரிக்காவிலேர்ந்து இங்க வந்து ரெண்டு மாசம் தங்கி முயற்சி பண்றோம் பெரியவா. ஒரு வரனும் குதிரலே,தட்டிப் போயிடறது. நன்னா படிச்சிருக்கா,அழகு இருக்கு...பணம் இருக்கு, இதெல்லாம்இருந்தும், அதிர்ஷ்டமில்லே" என்று மேண்டும் அழ ஆரம்பித்தார்.

இப்போது இரவு மணி ஒன்பதரை,நிலைமையைப் புரிந்துகொண்டார்ஆச்சார்யாள். அங்கு நிலவிய இறுக்கத்தைப் போக்க எண்ணினார்.

"சரி...சரி...வருத்தப்படாதீங்கோ, மூணு பேரும் இப்டி ஒக்காருங்கோ" என எதிரில் கை காண்பித்தார்.மூவரும் பவ்யமாக அமர்ந்தனர்.

ஆச்சார்யாள் பேச ஆரம்பித்தார். "விஸ்வநாதா,கோயில் குளங்களுக்கும்ஏழை பாழைகளுக்கெல்லாம் நெறைய தான தர்மம் பண்றேனு நேக்கு நன்னா தெரியும். நோக்கு இப்டி ஒரு மனக்கஷ்டமா? அது சரி...நீ.....அமெரிக்கா போய் செட்டிலாகி எத்தனை வருஷமாகிறது!"

"இருவது வருஷமாகிறது பெரியவா" விஸ்வநாதன்.

ஸ்வாமிகள் அந்தப் பொண்ணை நோக்கிக் கை காண்பித்து

"இவ நோக்கு ஏக புத்ரிதானே,என்ன பேரு?" என்று சிரித்தபடியே கேட்டார். விஸ்வநான் உடனே வாய் பொத்தியபடியே, "இவ பேரு அபர்ணா,ஏக புத்ரிதான் பெரியவா" என்றார்.

"ஜோஸ்யாள்ட்ட இவ ஜாதகத்தைக் காமிச்சியோ?" ஆச்சார்யாள் கேட்டார்.

"ஏகப்பட்ட ஜோஸ்யாளைப் பாத்துட்டேன் பெரியவா, ஒவ்வொர்த்தரும் ஏதேதோ தோஷங்கள் சொல்றா...பரிகாரங்களும் சொல்றா...எல்லாமே பண்ணிட்டேன்."

"என்னென்ன பண்ணினே?" என்றார் ஆவலுடன்.

"ராமேஸ்வரத்திலே தில ஹோமத்துடன் பித்ரு தோஷப் பரிகாரம்,கஞ்சனூரில் சுக்ர ப்ரீதி,திருநாஸ்வரத்தில் ராகு ப்ரீதிஆலங்குடியில் குரு ப்ரீதி, குத்தாலத்துக்குக்கிட்டே திருமணஞ்சேரியிலே விசேஷ பூஜா பரிகாரம், திருநள்ளார்லே நள தீர்த்த ஸ்நானத்தோடு சனி ப்ரீதி.. இப்படி நெறையப் பண்ணிப்டேன்பெரியவா" என்று விஸ்வநாதன் சொல்லி முடிப்பதற்குள்.

"பல ப்ராப்திதான் [பிரயோஜனம்] இல்லேங்றே.." என்று முத்தாய்ப்பு வைத்தார் ஸ்வாமிகள்..தீடீரென்று பெரியவாவிஸ்வநாதனின் மனைவியைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

"பொண் கல்யாணத்துக்கு நகை நட்டெல்லாம் ரெடியா வாங்கி வெச்சுட்டியோ?"

"எல்லாம் ரெடி பெரியவா" என்றாள் அம்மணி.

"பேஷ்...பேஷ் எத்தனை பவுன் போடறே?" என்று கேட்டார் ஸ்வாமிகள். விஸ்வநாதன் பதில் சொன்னார், "எங்க பொண்ணுக்கு முப்பது பவுன் பெரியவா, அதோட சேர்த்து தனித்தனியா ரெண்டு இருபது பவுனுக்கு "செட்டா நகைகள் பண்ணி வெச்சுருக்கு"

பெரியவா கேட்டார், "அது எதுக்குடாப்பா இருவது பவுன்ல தனியா ரெண்டு செட்டு?"

உடனே விஸ்வநாதன், "அது ஒண்ணுமில்லே பெரியவா, அபர்ணவுக்குக் கல்யாணம் நிச்சயமானா, அந்தக் கல்யாணத்தோடு ரெண்டு ஏழைப் பெண்களுக்கும், எல்லாச் செலவும் ஏத்துண்டு விவாஹம் பண்ணி வைக்கிறதா தீர்மானம்.அதுக்காகத்தான் பெரியவா அந்த ரெண்டு செட் நகைகள். ஆனா, அபர்ணாவுக்கே நிச்சயம் ஆக மாட்டேங்கறதே பெரியவா" என்று கண்களில்நீர் துளிர்க்க ஆதங்கப்பட்டார்,

ஸ்வாமிகள் யோசனையில்ஆழ்ந்தார். அப்போது இரவு மணி பத்தரை. ஸ்வாமிகள்விஸ்வநாதனைப் பார்த்துக் கேட்டார், "நீங்கள்ளாம் இன்னும்எத்தனை நாளுக்குள்ள அமெரிக்கா திரும்பியாகணும்?"

"இன்னும் இருபது நாள் இருக்கு பெரியவா."

"பேஷ்...பேஷ்.." என்று குதூகலித்த ஸ்வாமிகள், நீங்கள்லாம் சாப்டாச்சோ?" என்று கேட்டார்

"இன்னும் ஆகலே" என்றார் விஸ்வனாதன்.

உடனே பெரியவா உக்ராணத்திலிருந்த சமையல்காரரை அழைத்து வரச் சொல்லி, "என்ன இருக்கு?" என்று கேட்டார்.

அந்த சமையல்காரர், அரிசி உப்புமாவும்,பூசணிக்காய் சாம்பாரும்இருப்பதாகக் கூறினார். விஸ்வநாதன் குடும்பத்தை உள்ளே போய்சாப்பிட்டுவிட்டு வருமாறு கூறினார் ஸ்வாமிகள். அவர்களும்சாப்பிட்டுவிட்டு வந்தனர். ஸ்வாமிகள் அங்கேயே காத்திருந்தார். இரவு மணி பதினொன்று.ஸ்வாமிகள் விஸ்வநாதனை வாஞ்சையோடு பார்த்தார்.

"விஸ்வநாதா, நோக்கு ஒசந்த மனசுடா.ஒம் பொண் கல்யாணத்தோட இன்னும் இரண்டு ஏழைப் பொண்களுக்கும்தர்மமா விவாஹம் பண்ணி வெக்கணும்கிறதுக்காக நகைநட்டெல்லாம் முன்கூட்டியே பண்ணி வெச்சுக் காத்துண்டிருக்கியே.. என்ன பரந்த மனசுடா நோக்கு! காமாட்சி காப்பாத்துவாடா" என்று ஆதரவோடு வார்த்தைகளால் வருடிக் கொடுத்த ஆச்சார்யாள், "ஒரு கார்யம் பண்ணு,நாளக்கி கார்த்தாலேயேஒங் குடும்பத்தோட திருவானைக்காவல்போ
.அங்குஅம்மாஅகிலாண்டேஸ்வரிக்கும்,ஜம்புலிங்கேஸ்வரருக்கும் அபிஷேகஆராதனையெல்லாம் பண்ணி  வெச்சுப் பிரார்த்தியுங்கோ,

ஒம் பொண்ணு அபர்ணாவை என்ன பண்ணச் சொல்றே....அங்க அம்மா அகிலாண்டேஸ்வரிக்கு பளபளனு காதுல 'தாடங்கம்'சாத்தியிருப்பா,அத வெச்ச கண் வாங்காம கொஞ்ச நாழி தரிசனம்பண்ணிண்டே, 'சீக்கிரம் நேக்கு கல்யாணமாகணும்னு'பிரார்த்திக்கச் சொல்லு. இதப் பண்ணிட்டு..."என்று முடிப்பதற்குள்...

விஸ்வநாதன், "பெரியவா...எங்களுக்குக் குலதெய்வமே திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிதான்" என்று குதுகலத்துடன் கூறினார்.

உடனே பெரியவா, "பேஷ்! ரொம்ப நல்லதா போச்சு.அப்போநாளைக்கே நீ குடும்பத்தோட போய் இதப் பண்ணிடு. இத பண்ணிப்ட்டு நேரா திருப்பதிக்குப் போங்கோ.அங்கேஸ்ரீ நிவாஸப் பெருமாளுக்கு ஒரு திருக்கல்யாண உற்சவம் பண்ணிவெச்சுப் பிரார்த்தனை பண்ணுங்கோ. எல்லாம் க்ஷேமமா நடக்கும்.

இதோ எதுத்தாப்ல தட்டுகள் லே கல்யாண சீர்வரிசை மாதிரிஜமாய்ச்ருக்கியே முந்திரி,திராட்சை,கல்கண்டு எல்லாத்தையும்ப்டியேஎடுத்துண்டுபோய், அகிலாண்டேஸ்வரிக்கு அர்ப்பணம்பண்ணு" என்று கூறியபடி இடத்தை விட்டு எழுந்தார்.பெரியவாளை  நமஸ்காரம் பண்ணியது விஸ்வநாதன் குடும்பம்.

ஸ்வாமிகளைப் பார்த்து விஸ்வநாதன் தயங்கியபடியே,

"பெரியவா எம் பொண்ணு அபர்ணாவோட பதினேழாவது வயசுலேர்ந்து இங்கே வரன் தேடி வர போதெல்லாம்.. வருஷா வருஷம் திருமலை ஸ்ரீ நிவாஸப்பெருமாளுக்கு  திருக்கல்யாணம் பண்ணி வெச்சுருக்கேன்.இது வரைக்கும் எட்டு தடவை நடத்தி இருக்கோம் பெரியவா" என்று கூறியதுதான் தாமதம்.....

"சரி விஸ்வநாதா! அதனாலென்ன கொறஞ்சுடப் போறது.?. இந்த ஸன்யாஸி சொல்றதுக்காக ஒம்பதாவது தடவையா நடத்திவையேன்" என்று சிரித்தவாறு கூறிவிட்டு வேகமாக உள்ளே சென்றுவிட்டார்.

அடுத்த இரண்டு நாட்களில் ஆச்சார்யாள் ஆணையிட்டபடி திருவானைக்காவல் அபிஷேக ஆராதனைகளையும், தாடங்க தரிசனத்தையும் முடித்துக்கொண்டு நேராக திருமலை வந்து  சேர்ந்தது விஸ்வநாதன் குடும்பம்.

அன்று ஸ்ரீ நிவாஸ திருக்கல்யாண வைபவத்துக்கு நிறைய பக்தர்கள் பணம் செலுத்தி இருந்தனர். திருக்கல்யாண மண்டபத்தில்ஏகக் கூட்டம். நடுவில் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தது விஸ்வநாதன் குடும்பம். வைவாஹிக [கல்யாண] மந்திரங்கள் முழங்க எம்பெருமான்ஸ்ரீ நிவாஸனுக்கு திருக்கல்யாணத்தை விமரிசையாக நடத்தி வைத்துக்கொண்டிருந்தனர். வைகானஸ பட்டர்கள்,அவர்களின்குரல்கள் உச்ச ஸ்தாயில் உயர்ந்து ஒலித்தன.

அப்போது விஸ்வநான் தன் மனதுக்குள் இவ்வாறு துக்கப்பட்டார்.: "அப்பா ஸ்ரீ நிவாஸா,இது தர்ம நியாயமா? நீ மாத்திரம் தினம்தினம் கோலாகலமா இப்டி கல்யாணம் பண்ணிக்கறயே! எம் பொண் அபர்ணா என்ன பாவம் செஞ்சா? அவளுக்கு ஏன் ஒரு வரன் பாத்து கல்யாணம் பண்ணி வெக்க மாட்டேங்கறே? சொல்லு.." என்று கேவ,இதைப் பார்த்துவிட்டு அவரது மனைவியும்,மகளும் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தனர்.

விஸ்வநாதனுக்குப் பக்கத்தில் ஒரு குடும்பம் அமர்ந்திருந்தது. குடும்பத் தலைவருக்கு ஐம்பது ஐம்பத்தைந்து வயதிருக்கும். விஸ்வநாதனின் முதுகை பரம ஆதரவுடன் தடவிக் கொடுத்த அவர், "சார் எம் பேரு வைத்யநாதன்,மெட்ராஸ். நானும்  ரொம்ப நாழியா பாத்துண்டு வரேன். சந்தோஷத்தோடு ரசிச்சு தரிசனம் பண்ண வேண்டிய இந்த ஸ்ரீ நிவாஸதிருக்கல்யாணத்துலே இப்படி நீங்க மூணு பேரும் கேவிக்கேவி அழுதுண்டிருக்கேளே இது பார்க்கவே நன்னால்ல" என்று சன்னமான குரலில் நாசூக்காகச் சொன்னார்.

இப்படி ஒருவர் ஆதரவோடு முதுகைத் தடவிக் கொடுத்துப்பேசியதும், நெகிழ்ந்துவிட்டார் விஸ்வநாதன்.உடனே, அந்த வைத்யநாதனிடம் தன் கவலையை எல்லாம்  சுருக்கமாகக் கொட்டித் தீர்த்துவிட்டார். விஸ்வநாதன்.

அபர்ணாவைத் திரும்பிப் பார்த்தார் வைத்யநாதன்.அவர் மனது சொல்லிற்று, "பொண் ரொம்ப லட்சணமா இருக்காளே."

"வைத்யநாதன் கேட்டார், "ஒங்க கோத்ரம்?"

"வாதூலம்" இது விஸ்வநாதன் பதில்.

"நாங்க ஸ்ரீவத்ஸம், அது சரி! பொண்ணுக்கு வயசு..?"

"இருபத்தஞ்சு ஆரது...ஏன் கேக்கறேள்?" விஸ்வநாதன் கவலையுடன் கேட்டார்.உடனே வைத்யநாதன்,

"திருக்கல்யாணம்முடியட்டும்.அழச்சிண்டு போய் விவரமா பேசறேன்" என்றார்.

ஸ்ரீ நிவாஸ கல்யாணம் பூர்த்தி அடைந்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தான் தங்கி இருந்த ஜாகைக்கு விஸ்வநாதன் குரும்பத்தை அழைத்துப் போனார் வைத்யநாதன்.

அங்கே விஸ்வநாதனிடம், "எனக்கு ஒரே பையன், வயசுஇருவத்தாறு ஆறது. பேரு ஸ்ரீ நிவாஸன். நாங்கல்லாம் தஞ்சாவூர்பக்கம். மெலட்டூர். இப்போ மெட்ராஸ். நான்   டிஃபன்ஸ்அக்கவுண்ட்ஸ்ல வேலை பண்றேன். பையன் அமெரிக்காவுலஃபோர்டு மோட்டார் கம்பெனிலே நல்ல சம்பளத்தில் இருக்கான். அவன் நாளக்கி லீவுலே மெட்ராஸ் வரான். அவனுக்கு மூணு வருஷமா கல்யாணத்துக்குப் பொண் பாத்துண்டிருக்கேன். ஒண்ணுமே அமையலே. நாங்கல்லாம் காஞ்சி காமகோடி மடத்து பக்தாள். மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் பெரியவாளை தரிசனம் பண்ணி, பையனுக்குக் கல்யாணம்தட்டிண்டே போற மனக் குறையை நானும் என் மனைவியும்சொல்லிப் பிரார்த்திச்சோம். அவர்தான் " திருமலைலே ஸ்ரீ நிவாஸனை பிரார்த்திச்சுண்டு ஒரு கல்யாணஉற்சவம்பண்ணிவை.ஒடனேஆயிடும்"னார்.

அதை நடத்தி வைக்க இன்னிக்கித்தான் பிராப்தம் வந்தது.அந்த பெரியவா அநுக்ரகம்இ ருந்தா ஒங்காத்துப் பொண்ணே கூட எங்க மாட்டுப் பெண்ணா  வந்துடலாம்"என்று சொல்லி முடித்தார் வைத்யநாதன்

அந்த ஜாகையிலேயே பரஸ்பரம் இருவரும் ஜாதகப் பரிவர்த்தனை செய்துகொண்டு, திருமலையிலேயே ஒரு பெரிய ஜோஸ்யரிடம்கொண்டுபோய் ஜாதகங்களைக் காண்பித்தனர்.

என்ன ஆச்சரியம்! பரிசீலித்த ஜோஸ்யர் பத்துப் பொருத்தங்களும்தீர்க்கமாக அமைந்துள்ளதாகக் கூறினார். இரு குடும்பத்தாருக்கும்பரம சந்தோஷம். அன்றிரவே அனைவரும் சென்னை திரும்பினர். அடுத்த நாள், அமெரிக்காவிலிருந்து ஸ்ரீ நிவாஸன் வந்து சேர்ந்தான். அவனுக்கு அபர்ணாவைப் பிடித்துவிட்டது. அபர்ணாவுக்கும்அவனை ரொம்பப் பிடித்துவிட்டது.

பதினைந்து நாட்களுக்குள் ஒரு சுபமுகூர்த்தம் பார்த்து சென்னை ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தை ஏற்பாடு செய்துவிட்டார்விஸ்வநாதன். இவ்ற்றையெல்லாம் ஏற்பாடு பண்ணி முடித்துவிட்டுஇரு வீட்டாரும் ஒரு நாள் மாலை காஞ்சி மகானை தரிசிக்கப்புறப்பட்டனர்.அன்றும் தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். இரவு ஒன்பது மணி சுமாருக்குத்தான் விஸ்வநாதன் குடும்பமும் வைத்யநாதன் குடும்பமும் மகா ஸ்வாமிகளை நெருங்க முடிந்தது.

பெரியவா தன் புருவங்களுக்கு மேலே இரண்டு கைகளையும்வைத்துக்கொண்டு அவர்களைக் கூர்ந்து நோக்கினார். ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தன இரு குடும்பமும். விஸ்வநாதனுக்குப்பின்னால் நின்றிருந்தார்  வைத்யநாதன். முன் போலவே அபரிமிதமாக வாங்கிச் சென்ன்றிருந்தகல்கண்டு,திராட்சை,முந்திரி இத்யாதிகளை மூங்கில் தட்டுகளில் வைத்து சமர்ப்பித்துவிட்டு கைகட்டி நின்றார் விஸ்வநாதன்.

பெரியவா முகத்தில் அமானுஷ்யமான ஒரு சந்தோஷம், விஸ்வநானையே சற்று நேரம் பார்த்துக்கொண்டு இருந்தவர்திடீரென சற்று உரத்த குரலில்,

"ஏண்டாப்பா விஸ்வநாதா, இந்த ஸந்யாஸிக்காக ஒம்பதாவது தடவையா ஸ்ரீ நிவாஸனுக்கு திருக்கல்யாணத்தை நடத்தி வெச்ச ஒடனேயே  பலப்ராப்தி [கார்ய ஜெயம்] ஏற்பட்டுத்தோல்லியோ? பேஷ்! ஒம்பொண் அபர்ணா குடுத்து வெச்சவதான்!" என்று சொல்லிட்டு இடிஇடியென்று சிரித்தார்..

அப்படியே விக்கித்து நின்றது இருகுடும்பமும். ஒருவருக்கும்பேச நா எழவில்லை/

ஸ்வாமிகளே தொடர்ந்தார், "விஸ்வாநாதா....அன்னிக்குநீ ரொம்பவும் தாபப்பட்டு அப்டி அழுதிட்டே.ஒம் பொண்ணுக்கு ஜன்மாந்த்ரியமான  [பூர்வ ஜன்ம] விவாஹ ப்ரதிபந்தக [விவாஹம் நடைபெறுவதைத் தடுக்கக்கூடிய தோஷம்] இருக்குன்னு மனசுலே பட்டது. அந்த தோஷ நிவர்த்திக்காகத்தான்  அகிலாண்டேஸ்வரியின் தாடங்க தரிசனத்தையும், ஒம்பதாவது தடவையா ஸ்ரீ நிவாஸ திருக்கல்யாணத்தையும்ப ண்ணச் சொன்னேன்.இப்பப் புரியறதா நோக்கு!" சொல்லிவிட்டு வாய்விட்டுச் சிரித்தார் ஸ்வாமிகள். அங்கு அமைதி நிலவியது.

ஸ்வாமிகளே தொடர்ந்து, "ஒன் சம்பந்தியா வரப்போறது யாரு? அவருக்கு எந்த ஊரு? என்று கேட்டார்.

விஸ்வனாதனுக்குப்பின்னால் நின்றிருந்த வைத்யநாதன் முன்னால் வந்து ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்து, "நான்தான் பெரியவா அவருக்கு சம்பந்தியா  வரப் போறவன்...எல்லாம் ஒங்க அநுக்கிரகம்" என்று குழைந்தார்.

உடனே பெரியவா மூக்கின் மேல் விரலை வைத்து,  "யாரு? மெலட்டூர் வைத்யநாதனா? ஏண்டா வைத்யநாதா...மூணு மாசத்துக்கு முன்னாடி, "அமெரிக்காவுல வேலை பாக்கற எம் பையனுக்கு ஒரு பொண் ஜாதகமும் சரியா பொருந்த மாட்டேங்கறது'னு குறைப்பட்டுண்டு வந்து சொன்னே. ஒன்னையும் "திருமலை ஸ்ரீ நிவாஸனுக்குத் திருக்கல்யாண பண்ணி வெச்சு பிரார்த்தி"னு சொன்ன ஞாபகம். அது சரி நீ எப்ப திருக்கல்யாண உற்சவம் பண்ணினே?" என்று கேட்டார்.

உடனே வைத்யநாதன், "ரெண்டு பேரும் ஒரே நாள்லதான் திருக்கல்யாணம் பண்ணினோம் பெரியவா.  திருமலைலேயே பேசி முடிவு பண்ணிட்டோம்.எல்லாம் ஒங்க ஆசீர்வாதம்" என்றார் நா தழுதழுக்க.

"க்ஷேமமா இருங்கோ" என மனதார ஆசீர்வதித்தார் ஆச்சார்யாள். அப்போது இரவு மணி பத்து. ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே

"மணியாயிடுத்து விஸ்வநாதா,இன்னிக்கு நம்ம மடத்துலே அரிசி உப்புமாவும், பூசணிக்கா சாம்பாரும்னு பேசிண்டா. அவசியம் இருந்து பலகாரம் பண்ணிட்டுப் போங்கோ" என்று ஒரு தாயின் கருணையோடு விடை கொடுத்தார்.

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top