Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Monday, September 24, 2012

Source: Shri. Varagooran Narayanan
அந்த அன்பருக்கு திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணி, இரண்டு பையன்கள்,ஒரு பெண்.
மகா சுவாமிகளிடம் அபார பக்தி. பெரியவாள் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறைகள், குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார். மின்னல் வேக தரிசனம் இல்லை.ஓரிரு நாள்கள் தங்கி பெரியவாளின் நெருக்கத்தை நிதானமாக அனுபவித்து விட்டுத்தான் போவார்.
"இந்தப் பையனுக்கு ஒன்பது வயதாயிடுத்து, உபநயனம் நடத்தணும்" என்று பெரியவாளிடம் விக்ஞாபித்துக் கொண்டார், ஒரு முறை. "செய்யேன்..."
"பையனின் கோத்திரம்...சூத்திரம் தெரியல்லே..." பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள். "உன்னோட....பையன்தானே?" இல்லை! பையனின் கர்ப்பவாச காலத்திலேயே தகப்பனார் சிவலோகம் போய்ச் சேர்ந்தார். இரண்டு மாதக் குழந்தையை விட்டு விட்டு தாயாரும் போய்ச் சேர்ந்து விட்டாள்.கிராமத்தில் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள்?" "நாங்கள் குழந்தையை எடுதுண்டு வந்தோம்.ஊர்,பெயர்,பந்து, ஜனங்கள் தெரியலை,திருநெல்வேலி பக்கம் ஏதோ அக்ரஹாரம் என்று மட்டும் கேள்வி..."
பெரியவாள் முகத்தில் அசாதாரணமான புன்னகை. அருகிலிருந்த தொண்டர் கண்ணனிடம், "பாரு....ஓர் அநாதைக் குழந்தையை எடுத்துண்டு வந்து,வளர்த்து, பூணூல் போடப் போறார்! என்ன மனஸ் இவருக்கு.." கண்ணன் சொன்னார்: "அவரோட..சொந்தப் பிள்ளைனுதான் நாங்களும் நினைத்துக் கொண்டிருன்ந்தோம்!"
பெரியவாள் மனசுக்குள்ளே ஆனந்தப்பட்டுக் கொண்டு சொன்னார்கள்"
"கோத்திரம் தெரியாவதர்களுக்கு,காசியப கோத்திரம்;
ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம்
என்று கேள்விப்பட்டிருக்கேன்.
அது மாதிரி சொல்லி, பூணூல் போடு,ஆனா,குழந்தையை அந்நியமா நினைச்சுடாதே.உன் பையன்தான்." பிரசாதம் பெற்றுக்கொண்டு மன நிறைவுடன் நகர்ந்தார்கள்.

Saturday, September 22, 2012

Source: Shri Varagooran Narayanan

திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள், எல்லாவற்றுக்கும் மேலே பெரியவாளிடம் அப்படி ஒரு ஆத்மார்த்தமான பக்தி! திருவையாறு வரும்போதெல்லாம் பெரியவா இவருடைய க்ருஹத்துக்கு கட்டாயம் வருவார்.
சின்னஸ்வாமி ஐயர் நித்யம் வீட்டில் சிவபூஜை, அப்புறம் உள்ளூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பரமேஸ்வரனை மனமுருகி வழிபடுவார். சாயங்கால வேளைகளில் இராமாயண உபன்யாசம் செய்வார். இவருடைய பிள்ளை நாட்டுப்பெண் பெயர் பொருத்தம் வெகு அழகாக ராமச்சந்திரன்,ஸீதாலக்ஷ்மி என்று அமைந்தது. மனமொத்த குடும்பமாக இருந்தாலும், கல்யாணமாகி 13 வர்ஷங்கள் ஆகியும் ஸந்தானப்ராப்தி இல்லையே என்ற குறை எல்லார் மனசையும் அரித்துக்கொண்டிருந்தது.
முதலில் பிறந்த குழந்தை தங்கவில்லை. நிச்சயம் பெரியவா அனுக்ரகத்தால் தங்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களுக்கு துளியும் குறையவில்லை.
அப்போது பெரியவா நடுக்காவேரிக்கு விஜயம் செய்தார். அங்கு வேறொரு பக்தர் க்ருஹத்தில் பெரியவா தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேதகோஷம் முழங்க பூர்ணகும்பங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைக்கப்பட்டு பெரியவா ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தார். ஸீதாலக்ஷ்மி வீட்டு வாசலில் அழகாக கோலமிட்டுக் கொண்டிருந்தாள். இவர்கள் வீட்டைத் தாண்டித்தான் பெரியவா தங்கப்போகும் வீட்டுக்கு செல்ல வேண்டும்.
ஸீதாலக்ஷ்மியை பார்த்ததும், ஊர்வலத்திலிருந்து விலகி விறுவிறுவென்று அவள் போட்டிருந்த மாக் கோலத்தின் மேல் திருப்பாதங்கள் பதிந்தும் பதியாமலும் நின்றார்.
திடீரென்று தன் எதிரில் வந்து நின்ற கண்கண்ட தெய்வத்தை கண்டதும், சந்தோஷம், பக்தி, குழந்தை இல்லா ஏக்கம் எல்லாம் சேர்ந்து அப்படியே அவர் பாதங்களில் விழுந்து கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.
"எந்திரு..சீதே...ஒன்னோட ராமன் எங்க? கூப்டு அவனை.." என்றவர் யாரும் எதிர்பாராத நேரத்தில், சின்னஸ்வாமி ஐயரின் க்ருஹத்துக்குள் ப்ரவேசித்தார். ஸீதாலக்ஷ்மி தன் அகத்துக்காரர் ராமச்சந்த்ரனை தேடிக்கொண்டு ஓடினாள். முன்னறிவிப்பு ஏதுமின்றி தனது வீட்டுக்குள் சாக்ஷாத் பரமேஸ்வரனே வந்து நின்றதைக்கண்டு சின்னஸ்வாமி ஐயர் ப்ரமித்தார்! அவ்வளவுதான்! தெருவே அவர் க்ருஹத்துக்குள் கூடிவிட்டது!
பெரியவா தனக்கு ரொம்ப ஸ்வாதீனமான இடம்போல விறுவிறுவென்று நுழைந்து அங்குமிங்கும் பார்வையால் துழாவினார். பிறகு தாழ்ப்பாள் போட்டிருந்த ஒரு அறையை தானே திறந்து அதற்குள் சென்றார். அது ஜாஸ்தி பயன்படுத்தாததால், தட்டுமுட்டு சாமான்கள் நிறைய காணப்பட்டது. அதோடு ஒரு வண்டி தூசி! பெரியவா கதவைத் திறந்ததும் ஒரே புழுதிப்படலம் மேலே கிளம்பியது! தன்னுடைய ஒத்தை வஸ்த்ரத்தின் ஒரு முனையால் கீழே தூசியைத் தட்டிவிட்டு, அதையே லேசாக விரித்துக்கொண்டு தரையிலேயே அமர்ந்துவிட்டார் கருணைவள்ளல் !
"பெரியவா......இந்த ரூம் ஒரே புழுதியா இருக்கு.....கூடத்ல ஒக்காந்துக்கோங்கோளேன்!" என்றார் ஐயர். இதற்குள் ஸீதாலக்ஷ்மி கணவனுடன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினாள்.
"ராமா!.....ஒடனே போயி ஒங்காத்து பசுமாட்டுலேர்ந்து பால் கறந்து ஒரு சொம்புல எடுத்துண்டு வா...போ!"
"உத்தரவு பெரியவா......" அடுத்த க்ஷணம் ஒரு சொம்பு பசும்பாலோடு பெரியவா முன் நின்றார். பெரியவா கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தார்.
பிறகு, "ராமா.....இந்தப்பாலை கொண்டுபோயி கொடமுருட்டி ஆத்துல ஊத்திடு! அப்றம் சொச்சம் இருக்கற கொஞ்சூண்டு பாலை அந்த ஆத்தோட கரைல ஊத்திடு! அந்த ஊத்தின எடத்ல இருக்கற மணலை கொஞ்சம் தோண்டு......அதுல ஒரு அஸ்திவாரம் தெரியும்.....அதுக்கு மேல பிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டு. க்ஷேமமா இருப்பேள்" என்று சொல்லிவிட்டு, வஸ்த்ரத்தை எடுத்து உதறிவிட்டு வெளியே வந்து, தான் தங்க வேண்டிய க்ருஹத்தை நோக்கி நடந்தார்.
பெரியவா சொன்னபடி உடனே குடமுருட்டி ஆற்றுக்கு சென்று பாலை விட்டுவிட்டு, அதன் கரையில் மீதிப்பாலை ஊற்றி மண்ணை தோண்டினால்.....அஸ்திவாரம் தெரிந்தது! உடனேயே விநாயகருக்கு ஒரு அழகான சிறிய ஆலயம் எழும்பியது! அதற்கு அடுத்த வருஷமே ஸீதாலக்ஷ்மி ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள்! "கணேசன்" என்ற நாமகரணம் சூட்டப்பட்டான் அந்தக் குழந்தை.
இப்போதும் நடுக்காவிரியில் "காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி" கோவிலில் உள்ள விநாயகப் பெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

Thursday, September 20, 2012

Vedic Language!

 

When I went to the Mutt to have His darshan for the first time there were four foreigners there, an Israeli, an Italian, a German and a Britisher. They had come to do their PhD in Philology on the topic of 'the most ancient languages in the Occidental and the Oriental world'. They were studying Latin, Hebrew and Greek languages in the Occidental part and Sanskrit and Tamil in the Oriental part.
He went inside to do His Anushtanas; they had wanted to a photo of Him but His kaingaryams refused.They were heartbroken that they could not take a picture. All the four of them were standing near a tree since morning. They asked His Sevakas when He will be done with the poojas but get an unconvincing reply.
I told the foreigners that we Indians are used to the way of life at the Mutt, but how come you all have been standing for the past 6 hours? One of them looks at his watch and exclaims, 'oh my God, has it been 6 hours? He is a Man of Certainty and is Beyond Time!'
Periyavaa came in after 10 minutes and we all went and prostrated to Him. Looking at the man (who had the camera hanging on his neck) who had wanted to take the photos, He gestures with His hands that he can take the pictures now. He posed for three photos and stops him before the fourth and enquires as to why they have come.
They tell him their purpose.
He asks, "So, did you arrive at a conclusion as to which is the most ancient language?"
The Israeli replied, "Hebrew is the most ancient in the Occident; but in the Oriental, people say that both Sanskrit and Tamil are the oldest, we are confused and that is why we are here for Your opinion".
He said, "There is another language which is the most ancient than all these, it is the Vedic Language. It is the Source of even Sanskrit and Hebrew."
"There is a verse about Rebirth in Hebrew, can you recite it completely?", asked Him to the Israeli by giving the man the first two words.
The Israeli recited it for 3 to 4 minutes. Swamigal looked around and asked some boys, have you studied Rig Veda, can you recite this particular verse?"
Those boys recited it for 5 minutes.
He asked me, "can you ask them if they understood what these boys recited now?"
The four men remain quiet.
Swamigal turns to the boys and says smilingly, "you all will definitely not understand what this man had recited in Hebrew!"
He turns to me and says, "tell that Israeli that what he had chanted before is the same as what these boys chanted!"
I told him, "Swamiji says that what is you had chanted is 'verbatically' same as the what the boys had chanted".
Swamigal corrects me, "What? Do not use the word 'verbatically', tell him that both the chants are 'alphabetically' the SAME!!!"
He said He will prove it and asked if we have a paper and a pen.
"In Vedas it is mentioned that the world has been classified into 32 portions/regions. And in each of the 32 geographic regions, Vedas say how the Veda Aksharas have changed/pronounced in those places!"
He asks each of them which region they come from and then explains to them how a particular Veda Aksharam is changed in their individual places! He asks the boys to recite verse from Rig Veda again and tells the men how each Aksharam in Rig Veda in that verse will sound in their Regions!
The Sarveshwaran tells me, "I will now say this verse with some difficulty as it has been a long time since I had Abhyasam, ask that Israeli if he understands my recital!"
To the boys He says, "I will now say it in a slightly different form based on how each Aksharam will sound in Hebrew. Please do not think it is wrong; there is this injunction in the Vedas that it can be recited this way also."
And The Sarveshwaran starts to say it, slowly. Wonder of Wonders, the Israeli starts to recite it Together with Him!!!
(Sarveshwaraa, I am unable to type now due to a flood of emotions...)
We were all Stunned!
"I told you earlier, the same verse in Rig Veda is present ditto in Hebrew, but the Aksharas have changed slightly. (like we say Yamuna but in the North it is Jamuna , Va in the south is Ba in West Bengal , Paa in Tamil is Haa in Kannada etc) Therefore, the most ancient language in the world is the Vedic language!"
Swamigal asked the four men to prepare a table and fill it with how the Rig Veda Aksharams sounded in their language. This was completed in 15 minutes.
The Israeli was shocked and exclaimed, "this is something unimaginable!"
He asks him, "what do you think now, do you now agree that everything has sprung from Vedas?"
The look on the Israeli was not convincing.
He says, "what, is he thinking that why, could not have Vedas originated from Hebrew?"
The man says, "yes, it could have been the reverse also, the Vedas could have come from Hebrew".
Periyavaa replies, "you have only the lock, whereas we have both the key and the lock! It is even mentioned in the Vedas as to which Maharishi from here in India went to your region and spread/taught Vedas in Israel !"
The man seemed to be convinced in the end.
Resource:<< Thiruvannamalai Shri Gowrishankar >>

Tuesday, September 18, 2012

 
1983 இல் காஞ்சி ஸ்ரீ மடத்தின் மூன்று சுவாமிகளும் ஒன்று சேர்ந்து கர்நூலில் மாபெரும் விழாவாக வியாச பூஜை நடத்தியது நினைவிருக்கலாம். அச்சமயம் சேர, அப்பகுதிகளில் ஸ்ரீ பெரியவாள் பாதயாத்திரை செய்து கொண்டிருக்க அவர் சென்ற வழியே ஸ்ரீ மடத்தின் யானை ஒரு லாரியில் அகஸ்மாத்தாக செல்ல நேரிட்டது.
இம்மெலிந்த சிறு மேனியரை கண்டதுதான் தாமதம். மாபெரும் யானைக்கு இருப்பு கொள்ளவேயில்லை.
ஒரே பிளிறலாக பிளிற தொடங்கிவிட்டது. டிரைவர் லாரியை நிறுத்தினார். யானை அதிலிருந்தவாறே ஸ்ரீ சரணரிடம் தும்பிக்கையை நீட்டியது.
துதிக்கையில் அவர் பேரன்புடன் பழங்கள் ஊட்டி, அருளுடன் தட்டி கொடுக்க யானை சாந்தமாயிற்று. லாரியிலேயே மண்டியிட்டு துதிக்கையை தூக்கி தனது பக்தி துதியாக கர்ஜித்தது.

பெரியவாள் டிரைவரிடம் ஜாக்கிரதையாக அதை ஓட்டி செல்ல பணித்தார். லாரி கிளம்பியது.
பார்வை மறையும் வரை யதீந்த்ரர், கஜேந்திரன் இருவரும் சாந்த அன்பில் பரஸ்பரம் ஒருவர் மீது மற்றவர் பார்வையை புதைத்து இருந்தனர்.

Sunday, September 16, 2012

ஒருமுறை காசியிலிருந்து திரும்பும் வழியில் பெர்ஹாம்பூரில் சாதுர்மாஸ்ய அனுஷ்டிக்கும்போது நெடுநாட்கள் சுத்த உபவாசமிருந்தார் பெரியவா. அதையும் மடத்தினருக்கே தெரியாமல் ரொம்ப ரகசியமாக செய்தார். மடத்து கஜானாவை நிர்வகித்து வந்த ராமச்சந்திர ஐயருக்கு எப்படியோ ரகசியம் தெரிந்து விட்டது. பெரியவாளிடம் சென்று உபவாசத்தை விடுமாறு வேண்டினார்.
அவரும் உடனே பிக்ஷை தயாரித்து கொண்டிருந்த பணியாளரை கூப்பிட்டு, மறுதினம் தம் உணவில் இன்ன இன்ன சேர்க்கும்படி கூறினார். "கஜானா" சந்தோஷம் தாங்காமல் திரும்பினார். திரும்பியபின் அவருக்கு சந்தேகம் எழுந்தது. "ஆனானப்பட்ட அன்னதான சிவன் போன்றவர்களின் வேண்டுகோளுக்கும் மசியாத பெரியவாளா நம் கோரிக்கைக்கு இத்தனை சுலபமாக மசிந்து விட்டார்?" என்ற சந்தேகம்.
பிக்ஷை தயாரிக்கும் பாரிஷதரிடம் போய் குடைந்தார். அவருடைய சந்தேகம் சரியானதே என்று நிரூபணமாயிற்று. "நீங்க அந்தண்டை போனதுமே பெரியவா, "அவர் மனசு சமாதானமாறதுகக்காகத்தான் அப்படி சொன்னேன். அதை அடியோட மறந்துடுன்னார்" என்று அந்த பாரிஷதர் நிஜத்தை கக்கி விட்டார்.
"கஜானா" மறுபடி பெரியவாளிடம் போனார். பல முறை போனார். அனால் அவர் வாயை திறக்கவே பெரியவா இடம் கொடுக்காமல் அடியார்கள், சிப்பந்திகள், பண்டிதர்கள் என்று எவரையேனும் சுற்றிலும் வைத்து கொண்டு ரொம்பவும் சீரியசாக ஏதாவது அலசி கொண்டிருந்தார். இப்படி பல நாட்கள் ஓடின. கடும் உபவாசமும் தொடர்ந்தது. கடைசியாக ஒருநாள் இரவு 10 மணிக்கு மேல் "கஜானா"விடம் பெரியவா பிடிபட்டார். சுக்ரவார பூஜை சற்று தள்ளாட்டத்துடனேயே முடித்துவிட்டு, ஓய்வுக்கு பெரியவா சாய்ந்த சமயத்தில் கஜானா அவரை பிடித்து விட்டார்.
"நாளைக்கு பெரியவா வயிறார பிக்ஷை பண்ணலேன்னா நான் மடத்தை விட்டே போய்டறேன்" என்று முரண்டு செய்து பார்த்தார் கஜானா.
அதுவும் பலிக்கவில்லை. முகமெல்லாம் சிரிப்பாக பெரியவா "நீ இல்லாட்டா மடம் நடக்காதோ?" என்றார்.
"அப்போ இந்த லோகத்தை விட்டே போய்டறேன்" என்று தம்மை மீறிய ஆவேசத்துடன் சொல்லி அழுதே விட்டார் கஜானா.
"சரி! பிக்ஷை பண்ணறேன். நாளைக்கு என்ன? இப்பவே பண்றேன். வயிறார பண்ணனும்னியே பண்றேன், பண்ணி வைக்கறையா?" என்றார் பெரியவா
"காத்துண்டு இருக்கேன்" என்று கஜானா நமஸ்காரம் செய்தார். அந்த இரவு வேளையில் பெரியவா பாலும் பழமும் தவிர எதுவும் உட்க்கொள்ளமாட்டார் என்று நினைத்தார். பெரியவா உட்கொள்ளும் அளவு தெரிந்த பிக்ஷை பாரிஷதரை கூப்பிட்டார்.
"அவனை ஏன் கூப்பிடறே? ஒன்னையேதானே பிக்ஷை பண்ணி வெக்க சொன்னேன்? நீயும் ஒப்புத்துண்டையே!""அளவு தெரியாததால அவனை கேட்டுக்கலாம்னு....." கஜானா இழுத்தார்.
"அளவு தெரியாட்டா என்ன? இருக்கறதை ஜாடா கொண்டா"
"சரி நாம் பழக்கூடைகள், தட்டுகள் யாவும் கொண்டு வந்து வைப்போம். பெரியவாளே வேண்டியதை எடுத்து கொள்ளட்டும்" என்று கஜானா நினைத்து அவ்வாறே செய்தார்.
அதியாச்சரியமான கட்டளை பெரியவாளிடமிருந்து பிறந்தது "சுக்ரவார நைவேத்யம் சொஜ்ஜி, சுண்டல் எங்கே? கொண்டா சட்னு" கஜான ஓடோடிபோய் பெரிய பெரிய பத்திரங்களில் நிறையவே இருந்த சொஜ்ஜியையும், சுண்டலையும் சமர்ப்பித்தார்.
"அதி"க்கும் மேற்பட்ட ஆச்சரியம் நிகழ்ந்தது. பெரியவா அவ்வளவையும் வெகு விரைவில் உட்கொண்டு பாத்திரங்களை காலி செய்தார். "இவ்வளவுதானா?" என்று வேறு கேட்டார்.
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்;
"இன்னம் உவப்பன் நான்" என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்!............என்று ஆய்ச்சி மொழியாக ஆழ்வார் பாடியது உண்மையாயிற்று.
பழக்கூடையும் சடுதியில் காலியாயிற்று "இன்னும் என்ன இருக்கு" என்று கேள்வி கஜான வெலவெலத்து போனார்.
"வயிறார பண்ணறேன்னு ஒப்புண்டு பசியை கிளறிட்டியே! உசிர் போறதே!" என்ற பெரியவாளின் வார்த்தையை தாங்காமல் ஒரு பெரிய கூஜா பாலை திருமுன் வைத்தார். கடகடவென்று அதையும் பெரியவா காலி பண்ண, தடதடவென கஜானா கன்னத்தில் போட்டுகொண்டு அவரது பாதத்தில் தடாலென விழுந்தார்.
"பெரியவா க்ஷமிக்கணும். இனிமே ஒருநாளும் பெரியவாளை தொந்திரவு பண்ண மாட்டேன்" என்று விக்கினார்.
குழந்தையாக சிரித்த பெரியவா, "இனிமே என் வம்புக்கு வரமாட்டியோல்யோ?" என்று கை தூக்கி ஆசிர்வதித்தார்.

Friday, September 14, 2012

சிவனடியார்களின் சந்தோஷம்

 

சிவனடியார் குழு ஒன்று, பல சிவத்தலங்களுக்கு சென்றுவிட்டு காஞ்சிபுரம் வந்தது. காஞ்சிபுரத்தில் பல கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு, நிறைவாக, ஸ்ரீ மடம் வந்தார்கள், அடியார்கள்.
பெரியவா முன்னிலையில் 'தோடுடைய செவியன், பொன்னார் மேனியனே' போன்ற சில தேவார பதிகங்களை பாடினார்கள். பெரியவா 'காஞ்சிபுரத்தில் என்ன என்ன கோவில்களுக்கெல்லாம் சென்று தரிசனம் செய்தீர்கள்?' என்று கேட்டார்கள்.
'ஏகாம்பரேஸ்வரர், கைலாசநாதர், கச்சபேஸ்வரர், மணிகண்டேஸ்வரர், வழக்கு அறுத்த ஈஸ்வரர், திக்காளிமேடு, ஒணக்காந்தேஸ்வரர் கோவில்களுக்கு போனோம்' என்று பெருமை தொனிக்க சொன்னார்கள்.
'இன்னும் முக்தீஸ்வரர், இறவா ஸ்தாநேஸ்வரர், பிறவா ஸ்தாநேஸ்வரர், ஸ்மசான ஈஸ்வரர், காயா ஆரோகநேஸ்வரர் கோவில்களெல்லாம் பாக்கி இருக்கோ? அங்கேயும் போகணும்...' என்றார் பெரியவா.
சிவனடியார்களுக்கு பரம சந்தோஷம்.
பழமையான இவ்வளவு சிவன் கோவில்களை பற்றி பெரியவா தங்களிடம் தெரிவித்ததை வெகுவாக கொண்டாடினார்கள்.
நன்றி: கச்சிமூதூர் கருணாமூர்த்தி புத்தகத்தில்

Wednesday, September 12, 2012

சட்டம் என்ன சொல்கிறது?

 

தேனம்பாக்கம் பிரும்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பூஜை செய்யும் விசுவநாத சிவாச்சாரியாருக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பூஜை முறை உண்டு. தேனம்பாக்கத்தில் தங்கியிருந்த பெரியவா ஒரு நாள், ஏகாம்பரேஸ்வரர் தரிசனத்துக்கு சென்றார்கள். அன்றைக்கு விஸ்வநாத சிவாச்சாரியார் முறை.
சிவாச்சாரியாருக்கு கொள்ளை சந்தோஷம். தான் பூஜை முறையில் இருக்கும்போது பெரியவா தரிசனத்துக்கு வந்திருக்கிறார்கள். தற்செயலான வருகை. முன்கூட்டி சொல்லி விட்டு வரவில்லை.
ஏகம்பன் அருளால் பெரியவாளுக்கு தரிசனம் பண்ணி வைக்கும் மகத்தான பேறு கிடைத்திருக்கிறது. உள்ளம் நெகிழ்ந்தார், சிவாசாரியார்.
"பெரியவா உள்ளே வந்து தரிசனம் பண்ணிக்கலாம்." "அது கர்ப்ப க்ருஹம். ஆகம சாஸ்திரப்படி சிவாச்சாரியார்கள் தான் கர்பக்ருஹத்துக்குள் போகலாம்... சில கோவில்களில் கர்பக்ருஹத்துக்குள் போவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கு. ரொம்ப காலமாக. இந்த கோவிலில் அந்த உரிமை இல்லை. இங்கிருந்தே ஆனந்தமாக தரிசனம் கிடைக்கிறது. "
பெரியவா சட்டத்தை மீறியதாக ஒரு சான்று கூட இல்லை.

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top