Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Tuesday, October 30, 2012

ஈச்சங்குடியில் வேதபாடசாலை — காஞ்சி மகானின் விருப்பம்

 

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம்.
காவிரி வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை உண்டு. நடமாடும் தெய்வம் என அனைவராலும் போற்றப்படுகிற காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் மகாலட்சுமி அம்மாள் பிறந்த புண்ணிய பூமி இது!
மகா பெரியவா ஒருமுறை ஆந்திர மாநிலம் நகரியில் முகாமிட்டிருந்தபோது, ‘தாயார் சிவபதம் அடைந்துவிட்டார்’ எனும் தகவல் பெரியவாளுக்கு வந்தது என்பார்கள். வருடங்கள் பல கடந்த வேளையில், காஞ்சி மகானுக்குச் சட்டென்று உதித்தது அந்த எண்ணம்… ‘ஈச்சங்குடியில் தாம் பிறந்த இல்லத்தில், வேதபாடசாலை அமைக்கவேண்டும். அங்கே சதா சர்வ காலமும் வேதங்கள் முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்!’ - இதை ஒரு எண்ணமாக, விருப்பமாக பெரியவா சொல்ல… அன்பர்களின் முயற்சியால், உடனே அந்த
வீடு வாங்கப்பட்டது.
அடுத்து, பெரியவாளின் அனுக்கிரகத்தால் திருப்பணிக் கமிட்டி ஒன்றும் உருவானது.
இதோ… இப்போது அந்த வீட்டைச் சீரமைக்கும் பணிகள் அனைத்தும் நிறைவுற்று, வருகிற 26.10.12 அன்று ஈச்சங்குடி கிராமத்தில் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது, வேதபாட சாலை துவக்கவிழா. மகா பெரியவாளின் விக்கிரகம் மற்றும் அவரின் பாதுகைகளும் அங்கே வைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் வேதபாடசாலையை திறந்து வைத்து, காஞ்சி மகானின் வேத கோஷ விருப்பத்தை ஈடேற்றித் தரவுள்ளனர். வேதம் மட்டுமல்ல ஜோதிடம், தர்மசாஸ்திரம் மற்றும் பள்ளிக் கல்வியும் இங்கே கற்றுத் தரப்படும். விருப்பமும் தகுதியும் கொண்ட மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம்.
ஈச்சங்குடி வேதபாடசாலை துவக்க விழாவுக்கு வந்து, வேத கோஷத்தை காதாரக் கேளுங்கள். காஞ்சி மகானின் பேரருளைப் பெறுங்கள்.
– நன்றி: "சக்தி விகடன்"

Sunday, October 28, 2012

சேகரம் என்றொரு சாகரம்

 

ஞானமின்றி செய்தாலும் அம்பாள் ஏற்கிறாள் என்பது விசித்திரமாக படலாம். இங்கு ஞானம் என்று சொல்வது மூல நூலின் சொற்பொருளை அறிந்திருப்பதையே குறிக்கும் எனலாம். வேறொரு சந்தர்ப்பத்திலும் ஸ்ரீ காஞ்சி பெரியவர்கள் கூறியது இங்கு மிகவும் பொருந்தும்.
'வேத மந்திரங்களுக்கு அர்த்தம் தெரிந்து சொன்னாலே பூரண பலன் உண்டு என்கிறார்கள். எனக்கென்னவோ அர்த்தம் தெரியாமல் சொன்னால் கூட அதே பலன், ஒருகால் அதிக பலன் கூட உண்டு என்றே தோன்றுகிறது. பக்தி சிரத்தை, நம்பிக்கை தான் முக்கியம். 'ரிஷிகள் கொடுத்த மந்திரம் இது, இதை சொன்னாலே போதும், பரமாத்மா அனுக்கிரகம் பண்ணிவிடுவார்' என்ற நம்பிக்கை இருந்து விட்டால் போதும். அர்த்தமே தெரியாமல் சொன்னால் கூட பரமாத்மா அனுக்கிரகம் பண்ணிவிடுவார்.
கலெக்டரிடம் ஒரு எழுத படிக்க தெரியாத விவசாயிக்கு மனு கொடுக்க வேண்டியிருக்கிறது. அவனுக்காக யாரோ படித்தவர்கள் எழுதி தந்திருக்கிறார்கள். அவர்கள் நமக்கு நல்லதை தான் செய்திருப்பார்கள் என்று பூரணமாக நம்பி விவசாயி அதை துரையிடம் கொடுக்கிறான். இவனுடைய எளிமையையும், விநயத்தையும் பார்த்த கலெக்டருக்கு இவனிடம் ரொம்பவும் பரிவு உண்டாகி காரியத்தை முடித்து தந்து விடுகிறார். தாங்களாகவே மனு எழுதி வந்து 'தாட்பூட்' என்று பேசுகிறவர்களை விட இந்த எழுத படிக்க தெரியாத விவசாயிக்கே துரை, அதிக சலுகை கொடுத்தாலும் கொடுப்பார்' என்பார் ஸ்ரீ பெரியவர்கள்.
ஒரு சாகரமே இதன் உட்பொருளாக உள்ளது.
நன்றி: அண்ணா ஸ்ரீ ரா. கணபதி அவர்கள், நவராத்திரி நாயகி.

Friday, October 26, 2012

 

சந்திர சேகரரும் சூரியகுல சேகரரும் - II ஸ்ரீ. ரா. கணபதி அவர்கள் (நன்றி: யோகி ராம் சுரத் குமார் கும்பாபிஷேக சிறப்பு மலர்).
அப்படி ஒருவரை நான் கேள்விப்பட்டதேயில்லை. என் தோற்றத்திலிருந்தே என்னுடைய தெரியாமையை புரிந்து கொண்ட ஸ்ரீ சரணர், 'ஒட்டிக்கு ரெட்டியா விசிறி, அதோட கொட்டாங்கச்சியும் வெச்சுண்டு திருவண்ணாமலையிலே' என்று பலமாகவே 'க்ளூ' கொடுத்தார்.
'ஸுரத்குமார்' என்றேன்.
ஒப்புதலை தலையாட்டலால் தெரிவித்த ஸ்ரீ சரணர், 'அங்கே உனக்கொன்றும் 'டச்' இல்லையாக்கும்' என்றார்.
என் ரக்ஷிப்புக்கென்றே ஏற்பட்டவர்கள் என நான் நம்புபவர்களை தவிர மற்ற பெரியார்களுடன் தொடர்பு கொள்வதில்லை என்பது அவர் அறியாததில்லை.
நான் இந்த அருணாச்சல யோகியாரிடம் 'டச்' வைத்து கொள்ளாவிடினும் அவர் என்னை இருமுறை 'டச்' செய்திருக்கிறார். என்னுடைய இரண்டு கட்டுரைகளை படித்து திருப்தி பெற்ற இரண்டு சமயங்களில் தமது இரண்டு சென்னை அடியார்களை என் வீட்டிற்கு அனுப்பி வைத்து தம்முடைய மகிழ்ச்சியையும், 'தந்தை' என்று தாம் கூறும் இறைவனின் ஆசியையும் தெரிவித்திருக்கிறார்.
நான் அவரிடம் தொடர்பு கொள்ளாத போதிலும் உயர் ஸ்தானத்திலுள்ள அவர் மெனக்கிட்டு என் முகவரி கேட்டறிந்து மகிழ்ச்சி தெரிவித்து வர ஆள் அனுப்பிய உத்தம பண்பு அந்த இருமுறையும் என் இதயத்தை 'டச்' செய்தது. ஆயினும் என் வழக்கபடியே அதற்காக நான் அவரிடம் தொடர்பை வலுப்படுத்தி கொள்ளவில்லை.
இதை ஒருவாறு பெரியவாளிடம் கூறினேன்.
அதற்கு அவர், 'ஒரு தரம் பாராட்டி சொல்லியனுப்பினார். அப்படியும் நீ அங்கே போகலை. ஆனாலும், ரெண்டாந்தரமும் சொல்லி அனுப்பினாராக்கும்!' என்றார். தம்மை மற்றவர் கௌரவிக்க வேண்டும் என்பதை கருதாமல் தாம் மற்றவரிடம் நல்லதாக ஒன்று கண்டால் அதை பாராட்ட வேண்டும் என்று மட்டுமே கருதிய அருணாச்சல யோகியின் உத்தம பாங்கில் பெரியவாளுக்கு இருந்த ரசிப்பு அவரது குரலில் ததும்பியது.
தொடரும்….

Thursday, October 25, 2012

ரவாதோசையும் மகா பெரியவாளும்

 
ஒரு நாள் இரவு பதினோரு மணி இருக்கும்.பொள்ளாச்சி ஜெயம் என்ற அம்மா அவரிடம் வந்தார்.உடனே பெரியவா மடத்தில் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு வந்த ராமமூர்த்தி

என்பவரைக் கூப்பிட்டு,"எனக்கு ரவாதோசை வேண்டும் போல் இருக்கு; செய்து தர்றயா?"என்றார். எல்லோரும் காரியங்களை முடித்துக் கொண்டு படுக்கப் போகும் நேரம்.

பொதுவாக பிட்சை பண்ணுவதற்கு கெஞ்சினாலும் மசியாத பெரியவா,விபரீதமாக இப்படி ஓர் ஆசையை வெளியிடுகிறாரே! என்ன செய்வது?" என்று யோசித்துக் கொண்டே சமையலறையில்
ரவா இருக்கிறதா! என்று நோட்டம் விடுகிறார். துளியும் இல்லை.

பெரியவாளைப் பார்க்க வந்த அம்மாவுக்கு நிலைமை தெரிந்ததும்"கவலைப்படாதீர்கள்; நான் போய் ஏதாவது கடை திறந்திருந்தால்
ரவை வாங்கி வருகிறேன்!" என்று கிளம்பினார். எல்லா கடையும் மூடியிருந்தது.ஒரே ஒரு கடை மட்டும் மூடப் போகிற தருணம்.ஓடிப் போய் ரவையும் வாங்கி வந்துவிட்டார்.

பெரியவா பிரியப்பட்டுக் கேட்டால் செய்துதராமல் இருக்க முடியுமா? ரவாதோசை தயாரானது. பெரியவாளிடம் கொண்டு வைத்தார்கள்.அதில் ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்.  "நன்னாயிருக்கு...ரொம்ப திருப்தியாச்சு.
போய்ப் படுத்துக்கோ..." என்றார், ஒரு விள்ளல் வாயில் போட்டுக் கொள்ளவா இந்தக் கூத்து!"
என்று எதுவும் புரியாமல் படுத்துக் கொண்டனர்.
அப்போது ஆந்திராவிலிருந்து ஆறு வைதீகர்கள் வந்து இறங்கினார்கள். மற்றவர்கள் பெரியவாளிடம் போய் வைதீகர்கள் வந்திருக்கும் விவரத்தைச் சொன்னார்கள்.

பெரியவா சிரித்தபடியே "அவாள்ளாம் வருவான்னு
தெரிஞ்சதால்தான் ரவா தோசையே வாக்கச் சொன்னேன்!" என்றார்."அப்படியானால் ஏன் எனக்கு வேணும் என்று கேட்டீர்கள்?

அவர்களுக்கு என்றால் பண்ணிப்போடமாட்டோமா?'
என்று ராமமூர்த்தி நினைத்திருப்பார் போலும்.
அதை உணர்ந்தவர் போல் பெரியவா,"வேளை கெட்ட வேளையில் ஆகாரம் செய்து தரச் சொன்னால் சிரமமாகத்தான் இருக்கும்.
எனக்குன்னு கேட்டா ஆசையா செய்வீர்களில்லையா"
என்று சொன்னாராம்.


[எஸ்.கணேச சர்மா புத்தகத்தில் இருந்து வரகூரான்
நாராயணனால் டைப் அடிக்கப்பட்டது.]

Tuesday, October 16, 2012

நானே நாராயணன்!

என் பெண் ஜனா ஒரு ‘ஐஸ்வர்ய கோலம்‘ தயாரித்திருந்தாள். கண்ணாடித் துண்டுகளை ஒட்டி கலர் செய்து நடுவில் மகாலக்ஷ்மி வைத்து கண்ணாடி போட்ட கோலப் படம் அது. அதைப் பெரியவாளிடம் சமர்பித்தோம். அதை எடுத்துப் பார்த்து ரசித்து விட்டு ” இது மகாலக்ஷ்மி, மகாலக்ஷ்மியை நான் எங்கு வைத்துக் கொள்ள வேண்டும் ? மார்பில் தான் இருக்கணும் ” என்று சொல்லி அந்தப் படத்தை தன் மார்பில் வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றிப் பார்த்து எல்லோருக்கும் அனுக்ரஹம் செய்தார். “நாராயணன் அம்சமும் நானே !” என்று பெரியவா உணர்த்துகிறார் என்று, இதிலிருந்து நாங்கள் புரிந்து கொண்டோம்.

திருச்சியை சேர்ந்த சுபலட்சுமி அம்மாள் சொன்னாள்: ” பெரியவா ! இன்று சோமவார அமாவசை, அரச பிரதக்ஷணம் செய்யணும் என்ற நினைவே இல்லாமல் நான் காஞ்சிபுரம் புறப்பட்டு வந்து விட்டேன்” என்று, ஒரு முறை வருத்தம் தொனிக்கப் பெரியவாளிடம் சொன்னாளாம்.

~~~~~

பட்டென்று பதில் வந்தது: ” அதனாலென்ன ? என்னை 108 முறை பிரதக்ஷணம் செய்துவிடு. அதுவே போதும்!“ பெரியவா நாராயணன் மட்டுமில்லை; அசுவத்த நாராயணனும் கூட!

–ராதா ராமமூர்த்தி, புதுக்கோட்டை.

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top