Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Sunday, June 5, 2016

"செய்யாத குற்றத்திற்கு தண்டனை"

(பெரியவாளின் இளமை வாழ்க்கையில் ஒரு
சம்பவம்-(ஒரு கண்ணீர் கட்டுரை)


கட்
டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்


சிறுவயது முதற்கொண்டே மகானுக்கு அனுஷ்டான
பலம் இருந்துகொண்டே இருந்தது.நூறு வருடம் வரை
இதை அனுஷ்டித்துக் கொண்டே இருந்தார்.இந்த
அனுஷ்டான பலத்தைச் சிறுவயதில் எப்படிக் 
கடைப்பிடித்தார் என்பதை இந்த நிகழ்ச்சி சொல்கிறது.

மகான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம்.
ஒருநாள் மாலையில்,பள்ளி விட்டபின் 'பேட்மின்டன்'
விளையாடிவிட்டு பெரியவர் வீடு திரும்பினார்.அருகே
நதிதீரம், அதைத் தாண்டித்தான் வீட்டுக்கு வரவேண்டும்.

மாலைப்பொழுது கழிந்து, இரவு ஏழு மணி ஆகிவிட்டது.
பெரியவர் கையில்,'பேட்டோடு' வீட்டுக்குள் நுழைந்தார்.
வீட்டில் அவரை எதிர்கொண்டவர் அவரது அண்ணன்,
கணபதி சாஸ்திரி,நுழைந்தவரிடம் ஒரு கேள்வி........

"ஏண்டா, நீ இப்படிப் பண்ணலாமா?" என்று கேட்டுவிட்டு,
மகான் பதில் சொல்லும் முன், அவரது கன்னத்தில்
ஓங்கி அறைந்துவிட்டார்.

"அண்ணன் எதற்காகத் தன்னை அடித்தார்?" என்கிற
காரணம் தெரியாமல் தடுமாறிய மகான்,அடுத்த நிமிடம்
"எதற்காக என்னை அடித்தீர்கள்" என்று கோபமாகக்
கேட்டுவிட்டார்.கன்னத்தில் விழுந்த அடி நன்றாகவே
உறைத்தது.

"எதற்கென்றா கேட்கிறாய்? நீ என்ன குலத்தில்
பிறந்திருக்கிறாய்? அதற்கேற்ற தர்மங்களைக் கடைப்
பிடிக்க வேண்டாமா? மாலை வேளை கடந்து விட்டதே..
சந்தியாவந்தனம் செய்ய வேண்டாமா? நீ இப்படி
அலட்சியமாகப் போய் விளையாடிவிட்டு
வந்திருக்கிறாயே!" என்றார் அண்ணன்.

அதற்குக் கோபமாக மகான்,

"தண்டனை கொடுப்பதற்கு முன், விசாரணை நடத்தி
விட்டுத்தான் அடுத்தபடியாகத் தொடர வேண்டும்.
நீங்கள் என்னை அடித்தது எதற்காக? நான் மாலை
நேரத்து சந்தியாவந்தனம் செய்யவில்லை என்றுதானே?
முதலில் அதைக் கேட்டிருக்க வேண்டும்...........
என் நெற்றியைப் பாருங்கள்...."என்றார்.

நெற்றியில் விபூதிப் பட்டையின் சாயல் தெரிந்தது.
மகான் தொடர்ந்தார் -

"விளையாடி முடித்தவுடன் கை-கால்களை சுத்தம்
செய்து கொண்டபின், அங்கேயே ஒரு நண்பர் வீட்டில்
சந்தியாவந்தனம் செய்துவிட்டுத்தான் இங்கே வருகிறேன்.
குல தர்மத்தைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கும்
இருக்கிறது..." என்று சற்றுக் கோபமாகவே சொல்லி
முடித்தார். அண்ணன் விக்கித்துப் போனார்.

"குழந்தை, நீ வயசுல சின்னவன்.அதனால் உன்னண்டே
மன்னிப்புக் கேட்க முடியாது!" என்று கண்கலங்கச்
சொன்ன அவர், நேராகப் பூஜை அறைக்குப் போய்,
பகவான் படத்தின் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து
வணங்கி,தன் தம்பியைத் தெரியாமல் அடித்து
விட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

எவ்வளவு பெரிய மனது அவருக்கு? செய்த தப்புக்கு
வருத்தம் தெரிவிப்பது மிகப்பெரிய விஷயமில்லையா?

இந்த சம்பவத்தைப் பற்றி பின்னால் ஓர் இடத்தில் மகான்
குறிப்பிடுகிறார் - அதாவது அண்ணன் கணபதி சாஸ்திரி
இறந்தபிறகு (இறக்கும்போது அவருக்கு அறுபத்தேழு
இருக்கலாம்!)

"எனக்கு அப்போது சிறுவயது. மாலையில் நான்
எனக்குரிய கடமைகளைச் செய்யவில்லை என்பதற்காக
என்னை அவர் அடித்துவிட்டார். ஆனால்,அது தவறு
 என்று தெரிந்தபிறகு, அவருக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி,
இன்னொரு பக்கம் வருத்தம்.

மகிழ்ச்சி - குலதர்மத்தைக் காப்பாற்றி விட்டதற்காக,
வருத்தம் - என்னை அடித்து விட்டதற்காக.
இதற்கு பரிகாரமாகத்தான் அவர் தெய்வ சந்நிதியில் 
நின்று வேண்டி நமஸ்காரம் செய்த்தது......
அவருக்கு எவ்வளவு பெரிய மனது?" என்று மகான்
சொல்லும்போது, அவரது கண்களில் லேசாக நீர்
துளிர்த்தது.இது பாசத்தினால் அல்ல! இதனாலேயே
இறந்துபோன அவரது அண்ணனுக்கு மோட்சம்
கிடைக்கும் இல்லையா?

No comments:

Post a Comment

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top