Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Wednesday, June 1, 2016

"மகான் அனுக்கிரகத்தில் நமக்கு ஏதாவது ஐயம் ஏற்படலாமா?

(அற்புத ஸ்வாரஸ்ய கட்டுரை நீளம் கருதி
மூன்றாகப் பிரித்துள்ளேன்)
கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்


மகா பெரியவாளின் பக்தர் திரு.வி.என்.வைத்தியநாதன்
என்பவருக்கு ஏற்பட்ட மகத்தான அனுபவம் இது.
மகானின் அருள் எப்படிக் கிடைத்தது என்பதே
சுவாரஸ்யமான சம்பவம்.

நிகழ்வு-1

மத்திய அரசு அலுவலகத்தில் வேலை பார்த்த அவர்,
தினமும் 14 மைல்கள் தனது சைக்கிளில் செல்வது
வழக்கம். இது 1974ம் வருடம் நடந்த விஷயம்.
காரியாலயத்திற்கு வந்தவுடன் அட்டெண்டன்ஸ்
புத்தகத்தில் அவர் கையெழுத்துப் போட முயன்றபோது
திடீரென அவரது பார்வை மங்கி, எழுத்தே தெரியாத 
அளவுக்குப் போய்விட்டதை அவர் உணர்ந்தார்.

தன் கண்களில் ஏதோ கோளாறு என்று நினைத்த அவர்,
உடனே டெல்லி சப்தர்ஜங் ஹாஸ்பிடலுக்கு
பரிசோதனைக்காகச் சென்று இருக்கிறார்.டாக்டர்கள்
பரிசோதித்துப் பார்த்துவிட்டு தங்களால் ஏதும் செய்ய
இயலாது என்றும்,கண்ணாடி போட்டால் கூட பார்வை
திரும்பக் கிடைக்காது என்றும் முடிவாகச் சொல்லி
விட்டார்கள்.

வைத்தியநாதன் உடனே சென்னைக்கு வந்து டாக்டர்
கர்னல் அண்ணாசாமி என்பவரிடமும் தன் கண்களைப்
பரிசோதிக்க,அவரும் தன்னால் ஏதும் செய்ய இயலாது
என்று சொல்லிவிட்டார்.

அப்போது மிகவும் பிரபலமாகிக் கொண்டிருந்த டாக்டர்
பத்ரிநாத் அவர்களை,சில நண்பர்களுடன் சென்று
 பார்த்தார். அவர் நன்றாகப் பரிசோதித்தபின் சொன்னார்.

"இது ஃபோட்டோ கொபாகுலேஷன்" என்னும் நோய்,
ரெடினாவை ஒரு திராவகம் மறைப்பதால் ஏற்படுவது.
ஆறுமாத சிகிச்சைக்குப் பிறகு தேவைப்பட்டால்
ஆபரேஷன் மூலம் திரவத்தை வற்றச் செய்யலாம்"என்று
சொல்லி சாலேஸ்வர கண்ணாடியை சிபாரிசு செய்தார்.

டாக்டர் சொன்னபடி தனக்குத் தேவையான கண்ணாடிக்கு
ஆர்டர் கொடுத்துவிட்டு அடுத்த நாள், தேனம்பாக்கம்
சென்று அங்கே முகாமிட்டிருந்த மகாபெரியவாளைத்
தரிசிக்கச் செல்லும் பாக்யம் அடைந்தார்.

நிகழ்வு-2

அங்கே போனவுடன் இவர் மனதில் ஒரு சங்கல்பம்.
மகானாக இவரைக் கூப்பிட்டுக் கேட்டால் ஒழிய,
அவரிடம் தான் ஏதும் கேட்கப் போவதில்லை என்று
முரட்டுத்தனமாக முடிவுக்கு வந்தார்.

தேனம்பாக்கம் கிணற்றடியில் அமர்ந்தபடி மகான்
பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டு இருந்தார்.
சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் 
ஒவ்வொருவராக மகானிடம் ஆசி பெற்றுக் கொண்டு
இருந்தனர்.வைத்தியநாதன்,அவரது மனைவி மற்றும்
உறவினர்கள் 12-30 வரை அமர்ந்திருந்தனர். மற்ற
பக்தர்கள் மனமார பேசி விடை பெற்றுச் சென்றபின்,
இவர்களும் வணங்கி உத்தரவைப் பெற்று 
திரும்பினார்கள்.

இந்தக் கண்கண்ட தெய்வத்தின் பார்வை எத்தனை
வலிமையானது என்று வைத்தியநாதனுக்கு
மறுநாளே புலப்பட்டது.

மறுநாள் கண்ணாடியுடன் டாக்டரிடம் சென்று டெஸ்டிங்
போர்டில் இருந்த ஆங்கில தமிழ் எழுத்துக்களை,அவர்
படிக்கச் சொன்னபோது,கடைசி பொடி எழுத்துக்கள் வரை
படித்துக் காண்பித்தார் வைத்தியநாதன். டாக்டர் 
வியப்புடன் அவரைப் படுக்க வைத்து,பரீட்சை செய்து
பார்த்து விட்டு வியப்பில் ஆழ்ந்தார்.பிறகு சொன்னார்.

"மிஸ்டர் வைத்தியநாதன், இது என் மருத்துவ அறிவைத்
தாண்டி நடந்துள்ள அற்புதம்.ரெடினா பிம்பத்தில்
கசிந்திருக்கிற திரவம் எப்படியோ உங்கள் 
சிஸ்டத்துக்குள்ளேயே 'அப்சார்ப்' ஆகிவிட்டது" என்றார்.

இதைக் கேட்ட வைத்தியநாதன்,மகானின் கருணையை
நினைத்து உருகி நின்றார்.

"கண்ணப்பருக்குக் கண் கொடுத்த காளத்திநாதரைப் போல்
எனக்கும் காமகோடி பீடாதிபதி பார்வை அளித்து விட்டார்"
என்று சொல்லி மகிழ்ந்தார்.

ஸ்வாரஸ்யமான மூன்றாம் நிகழ்வு.

சரி....இந்தக் கருணைக் கடலில் அனுக்கிரகத்தில் நமக்கு
ஏதாவது ஐயம் ஏற்படலாமா? அப்படி ஓர் ஐயம் எழுந்து
அதை அந்த ஐயத்தை எப்படி சுட்டிக்காட்டி உணர்த்தினார்
என்பதை இன்னொரு சம்பவத்தின் மூலம்
வைத்தியநாதன் அவர்களே விளக்கியிருக்கிறார்.

வைத்தியநாதன் அனுபவம்- 'கல்கி' வார இதழில்
மகானின் அருளைப் பற்றி வந்த தொடரில் வெளிவந்தது.

முதன் முதலாக தன் அனுபவம் அச்சில் வெளிவந்தது
குறித்து அவருக்கு மெத்த மகிழ்ச்சி.

இவரும் சராசரி மனிதர்தானே....அதனால் அவரது
உள்ளத்தில் ஓர் ஐயம் எழுந்தது.

"ஒரு வேளை நம் பார்வை சில நாட்கள் மங்கி மீண்டும்
சரியானது, சாதாரண இயற்கையை மீறாத நிகழ்ச்சிதானே?
இதில் பெரியவாளின் கருணையை கொலுவிருக்கச் செய்து
மிகைப்படுத்தி விட்டோமோ" என்று ஒரு கணம் நினைத்தார்.

அந்த எண்ணம் அவரது மனத்தில் தோன்றியதும் 'கல்கி'
இதழில் அவர் கட்டுரையை அவரால் படிக்க இயலாமல்
போய்விட்டது. அதாவது பார்வை மங்கி விட்டது.

இப்படி ஒரு சந்தேகம் அவரது மனத்தில் எழலாமா?
சாட்சாத் சந்திரமௌலீஸ்வரரின் கருணையில் சந்தேகம்
வரலாமா?

"மகாப்பிரபோ என்னை மன்னித்து விடுங்கள்.அருள் கூர்ந்து
என் பார்வையைத் திருப்பித் தாருங்கள்" என்று கண்ணீர்
மல்க மகானை சரண் அடைந்தார்.

மந்தகாச சிரிப்புடன், கருணை பொழியும் பார்வையுடன்
மானசீகமாக, வைத்தியநாதனைப் பார்க்க அவருக்கு
பெரியவாளின் படமும், அவர் தன்னைப் பற்றி எழுதிய
கட்டுரையும் மீண்டும் பளிச்சென கண்களில் பட்டன.
மெய்சிலிர்த்தது அவருக்கு.

வைத்தியநாதன் அனுபவம் மகானின் 
பரமபக்தருக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்
என்று அந்த மகான் நினைத்தாரோ என்னவோ?

அவர் தன் பக்தர்களுக்கு காட்டும் கருணை
உள்ளத்தில் மாசு மருவே இருக்காது என்பது மட்டும்
திண்ணம்.

No comments:

Post a Comment

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top