Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Saturday, June 11, 2016

"எனக்கு எந்த வாசனையும் தெரியாது என்பதுதான் நிஜம்"-பெரியவா (வெளிப்படையாகச் சொன்ன அபூர்வ தகவல்)

கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.


உலகுக்கு அனுக்கிரகம் செய்யும் அந்த மாபெரும்
தெய்வத்தின் உயரிய நிலையைப்  பற்றி,கருப்பத்தூர்
சந்திரசேகர கனபாடிகள் சொல்லும் சம்பவம் நம்மை,
மெய்சிலிர்க்க வைக்கிறது.

காளஹஸ்தியில் மகான் முகாமிட்டிருந்தபோது,
மகானின் முன்னிலையில் நடந்த சதஸ் ஒன்றில்
கலந்து கொள்ளச் சென்றார் கனபாடிகள்.மகானை
தரிசித்த கனபாடிகள் மடத்தினுள்ளே வலம்வந்து
கொண்டிருந்தார்.

ஆங்காங்கே எரியும் எண்ணெய் விளக்குகளின்
மங்கலான வெளிச்சம். திடீரெனக் கை தட்டும் ஓசை
கேட்டது.சத்தம் வந்த திசைப்பக்கம் கனபாடிகள்
திரும்பிப் பார்த்தார்.மையிருட்டில் அவர் கண்களுக்கு
ஒன்றும் புலப்படவில்லை. அதனால், அவர் தன்
நடையைத் தொடர்ந்தார்.

மீண்டும் கைதட்டல் ஓசை! சத்தம் வந்த பக்கம்
கனபாடிகள் நடந்துபோனபோது, அங்கே மகான் ஒரு
தூணின் மறைவில் அமர்ந்திருந்தார்.

"இங்கே வா!" என்று கனபாடிகளை அழைத்தார்.
அதற்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் நடந்த
சம்பாஷனை.

மகான்; சிலருக்கு உடம்பில் சில இடங்களில் அடித்தாலோ,
...............கிள்ளினாலோ சொரணை இருக்காது. மரத்துப்
...............போயிருக்கும்.அதை நீ கேள்விப்பட்டிருக்கியோ?

கனபாடிகள்; கேள்விப்பட்டிருக்கேன் பெரியவா சொன்னது
.........................வாஸ்தவம்தான்!.

மகான்; சிலருக்கு சில சமயம் நாக்கு ருசிக்காது.சிலர்
...............பிறவியிலேயோ,நாளடைவிலோ கேட்கும்
...............சக்தியை இழந்திருப்பார்கள்.

கனபாடிகள்; கேள்விப்பட்டிருக்கிறேன்.

மகான்; சிலருக்கு ஜலதோஷம் பிடித்தால்,மூக்கு நுகராது.
...............பிறகு சரியாகும்.

கனபாடிகள்; ஆமாம்! கவனித்திருக்கிறேன்.

மகான்;

என்னை நீ அடிக்கடி கவனிச்சு இருந்தா ஒரு விஷயம் உனக்கு 
நன்னா புரிஞ்சிருக்கும்.என்னைப் பார்க்க வருபவர்கள் எனக்கு
விதவிதமான மாலைகளை அணிவிக்கிறார்கள்.அந்த
மாலைகளில் இருந்து வாசனையுள்ள சில புஷ்பங்களை
எடுத்து நான் நுகர்வதைப் பார்த்திருக்கியோ?

கனபாடிகள்;அடிக்கடி அப்படிப் பார்த்திருக்கிறேனே!.

மகான்;

ஆனால்,எனக்கு எந்த வாசனையும் தெரியாது என்பதுதான்
நிஜம்.சுமார் நாற்பது வருஷமா இதே நிலைதான் நீடிக்கிறது
சரி, துர்நாற்றமாவது தெரிகிறதா என்றால் அதுவும் இல்லை
அதையும் ஒருமாதிரி பரீட்சித்துப் பார்த்து விட்டேன்.
மூக்கைப் பொத்திக் கொள்ளும்படியான எந்த ஒரு சூழலும்
இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. எனக்கு இப்படி என்றால்
என்னைத் தரிசிக்க வருபவர்கள் நிலைமை வேறுமாதிரி
இருக்கிறது.

என் அருகே வருபவர்கள் மூக்கைக் கையாலும்
துணியாலும் பொத்திக்கொண்டு திணறுவார்களே.....
பார்த்திருக்கிறாயா?   (பெரும் சிரிப்பு)

அதாவது,எனக்கு எந்த துர்நாற்றமும் தெரியாது. வாசனையும்
தெரியாது! நான் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன்.

இப்படி மகா ஸ்வாமிகள் வெளிப்படையாகச் சொன்னதை
கேட்ட கனபாடிகள் பிரமித்து நின்றார்.சகல போகங்களையும்
தன்னுள் அடக்கிய பெருந்தெய்வம் உலகுக்கு அப்பாற்பட்டவராக
எளிமையாகத் தன்னைக் காட்டிக்கொண்டு, உலகுக்கு
அனுக்கிரகம் செய்து கொண்டிருக்கும் கருணையைச்
சொல்லிச் சொல்லி மனம் கசிந்துருகிறார் கருப்பத்தூர்
சந்திரசேகர கனபாடிகள்.

No comments:

Post a Comment

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top