Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Friday, November 22, 2013

அரைகுறை-கர்வம் முழுமை-பணிவு! காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் [தினமணி 05-04-2013]

Courtesy: Sri.Mayavaram Guru

அரைகுறைப் படிப்பாளிகள்தான் வித்யா கர்வம் கொள்வர். முழுதாகக் கற்றறிந்தவர்கள் கர்வம் என்னவென்றே தெரியாமல் எளிமையாகவும் பணிவாகவும்தான் இருப்பார்கள். நிறைகுடம் தளும்பாது என்று பர்த்ருஹரி சொன்ன சுலோகம் ஒன்று உள்ளது.
ஏதோ கொஞ்சம் தெரிந்து கொண்டிருந்த காலத்தில் சிற்றறிவினனாக இருந்த நான், மதம் பிடித்த யானை மாதிரி நானே ஸர்வக்ஞன் (அனைத்து அறிவினன்) என்று கர்வப் பட்டுக் கொண்டிருந்தேன். அப்புறம் நல்ல அறிவாளிகளுடைய ஸத்ஸங்கம் கிடைத்து, கொஞ்சம் கொஞ்சமாக மேலும் மேலும் தெரிந்து கொண்ட பிறகுதான் நான் ஒன்றும் தெரியாத மூர்க்கன் என்ற நல்லறிவு உண்டானது. ஜுரமாக என்னைப் பிடித்திருந்த மதமும் - கர்வமும் - போச்சு என்கிறார்.
அந்த ஜுரம் போய், வித்யாகர்வம் போனதோடு, தனது குல கர்வமும் போய், தான் ஒரு பிராமணன், ராஜா} க்ஷத்ரியன் என்பதையும் பொருட்படுத்தாமல் ராஜா அஜாதசத்ருவிடம் உபதேசிக்கும்படி கேட்டுக் கொண்டார் பர்த்ருஹரி.
"இப்படி வழக்கமே இல்லையே'' என்று நடைமுறையை ஒட்டி முதலில் மறுத்த அஜாதசத்ரு, பின்னர், அவருக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து உபதேசம் கொடுக்கிறார், வாய் வார்த்தையாய் மட்டும் இல்லாமல் ஒரு நாடகம் போலவே செய்து காட்டினார். இது போல் இன்னொரு கதை உள்ளது. ப்ரவாஹணர் என்ற ராஜரிஷி. அவரிடம் போய் கர்வபங்கம் பெற்ற ச்வேதகேது தன் தந்தையிடம் திரும்பி வந்து குமுறினான். அதற்கு அவன் அப்பா, சிறிதும் கோபப்படாமல், ""ராஜாவுக்குத் தெரிந்தது தனக்குத் தெரியவில்லை என்றால், உடனே அவனிடம் ஓடிப்போய் அதை தானம்பெற்று கற்றுக் கொள்வதுதானே'' என்றார். ஒரு பிராம்மணர் க்ஷத்ரியனிடம் சீடனாவதற்கு தயாராக இருக்கிறார். மகனிடம் "சரி, நாம் அங்கே போய் சிஷ்யராக இருந்து கற்போமே. வா' என்கிறார்.
ஸத்வித்யையில் இருந்த ஆர்வத்தால், தனக்குத் தெரியாததை தெரிந்தவரிடம் போய்க் கற்றுக் கொள்பவன்தான் அந்தப் பிள்ளையும். இருந்தாலும் இள ரத்தம் இல்லையா? அதனால் இங்கே, தான் யாரிடம் மான பங்கப்பட்டோமோ அவரிடமே போய் எப்படி கற்றுக் கொள்வது என்ற ரோஷம் அவனுக்கு வந்துவிட்டது. தந்தையிடம், ""நீங்களே போய்க் கொள்ளுங்கள்'' என்று சொல்லி, தான் போகாமல் நின்றுவிடுகிறான். தந்தையும் மான அவமானம் பார்க்காமல் தான் மட்டும் போகிறார்.
பொதுவாக, வித்யார்த்தி என்று மாணவனுக்குப் பெயர் சொல்ல ஒரு காரணம் உண்டு. கல்வியையே செல்வமாக நினைத்து, அவன் மேலும் மேலும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு அந்தச் சொத்தினைச் சேர்த்துக் கொள்ள வேண்டியவன் என்பதுதான் அது. அதுபோல் அவன்தான் கர்வ குணம் இல்லாத பணிவுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்திச் சொல்வது. விநயன் என்பதால், விநீதன் என்றே அவனுக்கு ஒரு பெயர். ஆனால் இங்கோ சீடனின் வயதில் உள்ள ச்வேதகேது ஒரு முறைப்பாகவும், அந்த முறைப்பில் வித்யை கற்பதில் அலட்சியமாகவும் இருக்க, குரு ஸ்தானம் வகிக்கும் அவனுடைய தந்தையோ விநிதராகவும் வித்யார்த்தியாகவும் இருக்கிறார்.
மேல்நாட்டில் சொல்கிறார்கள், ல்ழ்ங்ஹஸ்ரீட்ங்ழ் பிரயோஜனமில்லை, ற்ங்ஹஸ்ரீட்ங்ழ் தான் வேண்டும் என்று. ப்ரீச்சர் என்றால் மற்றவருக்குப் பிரகடனப்படுத்துகிறவர். அப்படிப் பண்ணுவதையே நோக்கமாகக் கொண்டவர். டீச்சர் என்றால் தம்முடைய வாழ்க்கையிலேயே பாடத்தைப் பின்பற்றி ஒழுகிப் பிறருக்கும் எடுத்துக் காட்டுகிறவர். ப்ரசார என்ற வார்த்தையை வைத்தே ல்ழ்ங்ஹஸ்ரீட்-ட் ஏற்பட்டது, காட்டுவது என்பதற்கான க்ரீக் வார்த்தையின் அடியாக ற்ங்ஹஸ்ரீட் ஏற்பட்டது என்கிறார்கள். ["Preacher பிரயோஜனமில்லை Teacher தான் வேண்டும்"............" ப்ரசார என்ற வார்த்தையை வைத்தே preach -ம் ஏற்பட்டது, காட்டுவது என்பதற்கான க்ரீக் வார்த்தையின் அடியாக teach ஏற்பட்டது என்கிறார்கள்." ....... ]

காட்டுவது என்றால் வழிகாட்டுவதுதான், தாமே நடந்துகாட்டி ஒரு பிரத்யட்ச உதாரணமாக இருந்து காட்டுவதுதான்!

No comments:

Post a Comment

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top