Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Thursday, August 29, 2013

Varagooran Narayanan ஒரு வெள்ளைகாரருக்கு போதித்த "கர்மம்" கட்டுரையாளர்;இந்திரா சௌந்தர்ராஜன் தீபம் இதழில் (கட்டுரை-சுருக்கமான பகுதி

 

ஒரு வெள்ளைக்காரர், பெரியவரைச் சந்திக்கிறார். மனம்விட்டுப் பேசுகிறார்:
‘கடவுள் அன்புமயமானவர். கருணாமூர்த்தி – பரம தயாளன் என்றே எல்லா மதமும் கூறுகிறது. ஆனால், உங்கள் மதம் அப்படிக் கூறினாலும் வாள், திரிசூலம், வேல், சங்கு, சக்கரம் என்று ஆயுத பாணியாக கடவுளை வடிவப்படுத்தியிருப்பது, சொன்ன கருத்துக்கு எதிராக உள்ளதே?’ என்று கேள்வி எழுப்புகிறார்.
‘அந்த ஆயுதங்கள் அன்பு மயத்தை, கருணையை, தயாபரத்தைப் பாதுகாக்கவே உள்ளவை. தேவ சக்திக்கு எதிராக அசுர சக்தி என்பது எல்லா மதத்திலும் தானே உள்ளது? நாங்கள் அசுரர்கள் என்பதை நீங்கள் சைத்தான் என்றோ, கெட்ட சக்தி என்றோ தானே குறிப்பிடுகிறீர்கள்? அந்த கெட்ட சக்திகளை, சைத்தானை, அடக்கவும் எதிர்க்கவுமே அந்த ஆயுதங்கள். அவை நமக்கெதிரானது அல்ல’ – என்கிறார் பெரியவர்.
‘எங்கள் கடவுள் தன்னிடம் சரணடைபவர்களை மன்னித்து, அவர்களுக்கு தன் மோட்ச சாம்ராஜ்யத்தில் இடம் கொடுத்து விடுகிறார். ஆனால், உங்கள் கடவுள் சொர்க்கம் நரகம் என்று வைத்து தண்டிப்பதாகத் தெரிகிறது. இது கடவுள் செயல் போலில்லையே! ராஜாக்கள் செயல் போலல்லவா உள்ளது?’ என்கிறார் வெள்ளைக்காரர்.
பதிலுக்கு, பெரியவர் திருப்பிக் கேட்கிறார்.
‘எல்லோரையும் கடவுள் மன்னித்து விடுகிறாரா..? எல்லோருமே மோட்சத்துக்குத்தான் போகிறார்களா? நன்றாகத் தெரியுமா உங்களுக்கு?’ என்று திரும்பக் கேட்கிறார் பெரியவர்.
‘ஆம்… அவரிடம் சரணடைந்து விட்டால் போதும். நமக்கு மோட்சம் உறுதி..!’ என்கிறார் வெள்ளைக்காரர்.
‘சரி… அருகே ஒரு பிரசவ விடுதி உள்ளது. அங்கே போய் இன்று பிறக்கும் குழந்தைகளைப் பார்த்துவிட்டு வாருங்கள். பிறகு, நாம் நம் பேச்சைத் தொடரலாம்’ என்கிறார் பெரியவர்.
அவரும் பிரசவ விடுதி நோக்கிச் செல்கிறார்.
அந்த வெள்ளைக்காரர் சென்று நின்ற பிரசவ விடுதியில் அன்று பல குழந்தைகள் பிறந்திருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஒன்று கருப்பு… ஒன்று சிவப்பு… ஒன்று மாநிறம்… ஒன்று புஷ்டி, ஒன்று சவலை!
இப்படிப் பிறப்பது இயற்கைதானே? நமக்கும் இது நன்றாகத் தெரியுமே! இதைப்போய் எதற்காக மெனக்கெட்டு கவனித்துவிட்டு வரச்சொன்னார் பெரியவர்? அதையும்தான் பார்ப்போமே!
அந்த வெள்ளைக்காரர் பார்த்துவிட்டு திரும்பி வந்தார். திரும்பவும் இருவரிடையே பேச்சு தொடங்கியது.
என்ன… பிரசவ விடுதிக்கு போய்ப் பார்த்தீர்களா?”
பார்த்தேன்… பல குழந்தைகள் பிறந்திருந்தன.”
எல்லாமே பச்சிளம் குழந்தைகள்தானே?”
ஆமாம்.”
அந்தக் குழந்தைகள் அவ்வளவும் ஒன்றுபோல இருந்தனவா?”
அது எப்படி இருக்க முடியும்? ஒவ்வொரு தாய்க்கும் ஒரு உடல்வாகு. அதற்கேற்பதானே குழந்தைகளும் பிறக்க முடியும்?”
என்றால், ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு விதம்! அப்படித்தானே?”
ஆம்…”
உடல் வாகை விட்டுவிடுவோம். அந்தக் குழந்தைகளின் பெற்றோர் அவ்வளவு பேரும் செல்வந்தரா?”
இல்லை. ஒவ்வொரு பெற்றோர் ஒவ்வொரு விதம். இதில் ஒரு குழந்தை மிகவே சவலை…”
என்றால், இந்தப் பிள்ளைகள் பிறக்கும்போதே ஏற்றத்தாழ்வுடன்தான் பிறந்துள்ளன. அப்படித் தானே?”
ஆம்.”
நாம் வளர வளரத்தான் பாவம் செய்கிறோம். குழந்தைகள் இனிதான் வளரப் போகிறார்கள். பாவம் செய்யாத அவர்களை, அந்தக் கடவுள் படைக்கும் போதே ஏன் சமமாக, ஒரே அழகாக உடல்நலத்தோடு படைக்கவில்லை?”
- பெரியவர் பாயின்ட்டைத் தொடவும், வெள்ளைக்காரரிடம் சிந்தனை.
என்ன யோசிக்கிறீர்கள்? அளவற்ற அருளாளனும், கருணாமூர்த்தியுமான இறைவன், நாம் பாவங்களைச் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டாலே மன்னித்தும் விடுகின்றவன், அதாவது பாவிகளான நம்மையே மன்னிப்பவன், பிள்ளைகளை மட்டும் எதனால் ஏற்றத்தாழ்வுடன் படைக்க வேண்டும்?”
- அவரிடம் சிந்தனை தொடர்ந்தது.
இப்படிப் பிறக்கும்போதே ஏற்றத்தாழ்வுடன் படைக்கும் கடவுள், ஒன்று கடவுளாக இருக்க முடியாது. இல்லாவிட்டால், இந்தப் படைப்புக்குப் பின்னாலே கடவுளாலும் குறுக்கிட முடியாத ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டும் என்றுகூட இருக்கலாம் அல்லவா?”
ஆம்… இங்கே அப்படித்தான் நினைக்க வேண்டியுள்ளது. ஆனால், கடவுளால் கூட குறுக்கிட முடியாத ஒரு சக்தி இருக்க முடியுமா என்கிற கேள்வியையும் புறந்தள்ள முடியவில்லை.”
கடவுள் மீதுள்ள நமது பக்தி அப்படி எண்ண வைக்கிறது. அவரைவிட பெரியவரோ பெரியதோ இல்லைதான். அவர்தான் அண்டசராசரங்களைப் படைத்து, நம்மையும் படைத்து இந்த உலக இயக்கம் நடந்தபடி உள்ளது. அவர் அளவற்ற கருணை உடையவர்தான். அவர் மன்னிக்கிறார், ரட்சிக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஆனால், எப்போது எங்கே எப்படி என்று மூன்று கேள்விகள் அதன் பின்னால் ஒளிந்துள்ளன.
முதலில் ஏற்றத்தாழ்வே இல்லாத சமத்துவமான மனிதகுலம் இருந்து, அவர்களுக்கெல்லாமும் அழகான பிள்ளைகள் பிறந்து, பேதமில்லாத பிறப்பாகத்தான் மனித குலத்தின் தோற்றம் இருந்தது. அதன்பின் யுகங்கள் தோன்றின. அந்தந்த யுகத்திற்கென்று தர்மங்கள் மாறின. ஏற்றத்தாழ்வில்லாத மனித குலமும், இதனால் ஏற்றத்தாழ்வுக்கு ஆளானது. ஒரு தாய் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளே கூட, ஒன்று வீடு வாசலோடு வசதியாக இருக்க, இன்னொன்று பிச்சை எடுக்கும் நிலையை எல்லாம் பார்க்கிறோம். இதற்கெல்லாமும் ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அந்தக் காரணத்துக்குப் பேர்தான் கர்மம்!”- என்கிறார் பெரியவர்.

ஒரு வெள்ளைகாரருக்கு போதித்த "கர்மம்"<br /><br />கட்டுரையாளர்;இந்திரா சௌந்தர்ராஜன் தீபம் இதழில்<br />(கட்டுரை-சுருக்கமான பகுதி)<br /><br />ஒரு வெள்ளைக்காரர், பெரியவரைச் சந்திக்கிறார். மனம்விட்டுப் பேசுகிறார்:<br /><br />‘கடவுள் அன்புமயமானவர். கருணாமூர்த்தி – பரம தயாளன் என்றே எல்லா மதமும் கூறுகிறது. ஆனால், உங்கள் மதம் அப்படிக் கூறினாலும் வாள், திரிசூலம், வேல், சங்கு, சக்கரம் என்று ஆயுத பாணியாக கடவுளை வடிவப்படுத்தியிருப்பது, சொன்ன கருத்துக்கு எதிராக உள்ளதே?’ என்று கேள்வி எழுப்புகிறார்.<br /><br />‘அந்த ஆயுதங்கள் அன்பு மயத்தை, கருணையை, தயாபரத்தைப் பாதுகாக்கவே உள்ளவை. தேவ சக்திக்கு எதிராக அசுர சக்தி என்பது எல்லா மதத்திலும் தானே உள்ளது? நாங்கள் அசுரர்கள் என்பதை நீங்கள் சைத்தான் என்றோ, கெட்ட சக்தி என்றோ தானே குறிப்பிடுகிறீர்கள்? அந்த கெட்ட சக்திகளை, சைத்தானை, அடக்கவும் எதிர்க்கவுமே அந்த ஆயுதங்கள். அவை நமக்கெதிரானது அல்ல’ – என்கிறார் பெரியவர்.<br /><br />‘எங்கள் கடவுள் தன்னிடம் சரணடைபவர்களை மன்னித்து, அவர்களுக்கு தன் மோட்ச சாம்ராஜ்யத்தில் இடம் கொடுத்து விடுகிறார். ஆனால், உங்கள் கடவுள் சொர்க்கம் நரகம் என்று வைத்து தண்டிப்பதாகத் தெரிகிறது. இது கடவுள் செயல் போலில்லையே! ராஜாக்கள் செயல் போலல்லவா உள்ளது?’ என்கிறார் வெள்ளைக்காரர்.<br /><br />பதிலுக்கு, பெரியவர் திருப்பிக் கேட்கிறார்.<br /><br />‘எல்லோரையும் கடவுள் மன்னித்து விடுகிறாரா..? எல்லோருமே மோட்சத்துக்குத்தான் போகிறார்களா? நன்றாகத் தெரியுமா உங்களுக்கு?’ என்று திரும்பக் கேட்கிறார் பெரியவர்.<br /><br />‘ஆம்… அவரிடம் சரணடைந்து விட்டால் போதும். நமக்கு மோட்சம் உறுதி..!’ என்கிறார் வெள்ளைக்காரர்.<br /><br />‘சரி… அருகே ஒரு பிரசவ விடுதி உள்ளது. அங்கே போய் இன்று பிறக்கும் குழந்தைகளைப் பார்த்துவிட்டு வாருங்கள். பிறகு, நாம் நம் பேச்சைத் தொடரலாம்’ என்கிறார் பெரியவர்.<br /><br />அவரும் பிரசவ விடுதி நோக்கிச் செல்கிறார்.<br /><br /><br />அந்த வெள்ளைக்காரர் சென்று நின்ற பிரசவ விடுதியில் அன்று பல குழந்தைகள் பிறந்திருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஒன்று கருப்பு… ஒன்று சிவப்பு… ஒன்று மாநிறம்… ஒன்று புஷ்டி, ஒன்று சவலை!<br /><br />இப்படிப் பிறப்பது இயற்கைதானே? நமக்கும் இது நன்றாகத் தெரியுமே! இதைப்போய் எதற்காக மெனக்கெட்டு கவனித்துவிட்டு வரச்சொன்னார் பெரியவர்? அதையும்தான் பார்ப்போமே!<br /><br />அந்த வெள்ளைக்காரர் பார்த்துவிட்டு திரும்பி வந்தார். திரும்பவும் இருவரிடையே பேச்சு தொடங்கியது.<br /><br />என்ன… பிரசவ விடுதிக்கு போய்ப் பார்த்தீர்களா?”<br /><br />பார்த்தேன்… பல குழந்தைகள் பிறந்திருந்தன.”<br /><br />எல்லாமே பச்சிளம் குழந்தைகள்தானே?”<br /><br />ஆமாம்.”<br /><br />அந்தக் குழந்தைகள் அவ்வளவும் ஒன்றுபோல இருந்தனவா?”<br /><br />அது எப்படி இருக்க முடியும்? ஒவ்வொரு தாய்க்கும் ஒரு உடல்வாகு. அதற்கேற்பதானே குழந்தைகளும் பிறக்க முடியும்?”<br /><br />என்றால், ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு விதம்! அப்படித்தானே?”<br /><br />ஆம்…”<br /><br />உடல் வாகை விட்டுவிடுவோம். அந்தக் குழந்தைகளின் பெற்றோர் அவ்வளவு பேரும் செல்வந்தரா?”<br /><br />இல்லை. ஒவ்வொரு பெற்றோர் ஒவ்வொரு விதம். இதில் ஒரு குழந்தை மிகவே சவலை…”<br /><br />என்றால், இந்தப் பிள்ளைகள் பிறக்கும்போதே ஏற்றத்தாழ்வுடன்தான் பிறந்துள்ளன. அப்படித் தானே?”<br /><br />ஆம்.”<br /><br /><br />நாம் வளர வளரத்தான் பாவம் செய்கிறோம். குழந்தைகள் இனிதான் வளரப் போகிறார்கள். பாவம் செய்யாத அவர்களை, அந்தக் கடவுள் படைக்கும் போதே ஏன் சமமாக, ஒரே அழகாக உடல்நலத்தோடு படைக்கவில்லை?”<br /><br />- பெரியவர் பாயின்ட்டைத் தொடவும், வெள்ளைக்காரரிடம் சிந்தனை.<br /><br />என்ன யோசிக்கிறீர்கள்? அளவற்ற அருளாளனும், கருணாமூர்த்தியுமான இறைவன், நாம் பாவங்களைச் செய்துவிட்டு மன்னிப்பு கேட்டாலே மன்னித்தும் விடுகின்றவன், அதாவது பாவிகளான நம்மையே மன்னிப்பவன், பிள்ளைகளை மட்டும் எதனால் ஏற்றத்தாழ்வுடன் படைக்க வேண்டும்?”<br /><br />- அவரிடம் சிந்தனை தொடர்ந்தது.<br /><br />இப்படிப் பிறக்கும்போதே ஏற்றத்தாழ்வுடன் படைக்கும் கடவுள், ஒன்று கடவுளாக இருக்க முடியாது. இல்லாவிட்டால், இந்தப் படைப்புக்குப் பின்னாலே கடவுளாலும் குறுக்கிட முடியாத ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டும் என்றுகூட இருக்கலாம் அல்லவா?”<br /><br />ஆம்… இங்கே அப்படித்தான் நினைக்க வேண்டியுள்ளது. ஆனால், கடவுளால் கூட குறுக்கிட முடியாத ஒரு சக்தி இருக்க முடியுமா என்கிற கேள்வியையும் புறந்தள்ள முடியவில்லை.”<br /><br />கடவுள் மீதுள்ள நமது பக்தி அப்படி எண்ண வைக்கிறது. அவரைவிட பெரியவரோ பெரியதோ இல்லைதான். அவர்தான் அண்டசராசரங்களைப் படைத்து, நம்மையும் படைத்து இந்த உலக இயக்கம் நடந்தபடி உள்ளது. அவர் அளவற்ற கருணை உடையவர்தான். அவர் மன்னிக்கிறார், ரட்சிக்கிறார் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஆனால், எப்போது எங்கே எப்படி என்று மூன்று கேள்விகள் அதன் பின்னால் ஒளிந்துள்ளன.<br /><br />முதலில் ஏற்றத்தாழ்வே இல்லாத சமத்துவமான மனிதகுலம் இருந்து, அவர்களுக்கெல்லாமும் அழகான பிள்ளைகள் பிறந்து, பேதமில்லாத பிறப்பாகத்தான் மனித குலத்தின் தோற்றம் இருந்தது. அதன்பின் யுகங்கள் தோன்றின. அந்தந்த யுகத்திற்கென்று தர்மங்கள் மாறின. ஏற்றத்தாழ்வில்லாத மனித குலமும், இதனால் ஏற்றத்தாழ்வுக்கு ஆளானது. ஒரு தாய் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளே கூட, ஒன்று வீடு வாசலோடு வசதியாக இருக்க, இன்னொன்று பிச்சை எடுக்கும் நிலையை எல்லாம் பார்க்கிறோம். இதற்கெல்லாமும் ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா? அந்தக் காரணத்துக்குப் பேர்தான் கர்மம்!”- என்கிறார் பெரியவர்.

No comments:

Post a Comment

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top