Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Tuesday, September 22, 2020

"சஹஸ்ர புருஷ போஜனுமும்,ஆசார அனுஷ்டானமும்"

விதியை மீறாத பெரியவா)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
​நன்றி-28-12-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (ஒரு பகுதி)
 
ஒரு சமயம் ஸ்ரீமடத்துல சஹஸ்ர புருஷ போஜனம்
நடத்தலாம்னு மகாபெரியவா ஒரு திட்டத்தைச் சொன்னார்.

வேத மந்திரங்களை முறைப்படி கத்துண்டவாளும்,
கொஞ்சமும் வழுவாம ஆசார அனுஷ்டானங்களைக்
கடைப்பிடிக்கறவாளுமான ஆயிரம் வேதவித்துகளுக்கு
ஒரே நாள்ல போஜனம் செஞ்சுவைக்கறதைத்தான் சஹஸ்ர
புருஷ போஜனம்னு சொல்வா.இதை நடத்தி வைச்சா,நாடும்
மக்களும் க்ஷேமமா இருப்பா. அப்படிங்கறது ஐதிகம்.

இது என்ன பெரிய விஷயம்? ஒரே நாள்ல ஆயிரம்பேருக்கு
அன்னதானம் பண்ணணும் அவ்வளவுதானே? அப்படின்னு
தோணலாம்.

ஆனா, இதை செஞ்சுவைக்கறது ரொம்பவே கஷ்டம்.
ஏன்னா, ஒரே சமயத்துல ஆயிரம் வேதவிற்பன்னர்கள்
கிடைக்கறது அபூர்வம். அப்படியே தேடித்தேடி
கண்டுபிடிச்சாலும் அவா எல்லாரும் சந்தியாவந்தனம்
மாதிரியான ஆசார அனுஷ்டானங்களை ஒரு போதும்
தவறவிடாம கடைப்பிடிக்கறவாளங்கறதைத் தெரிஞ்சுண்டு
அதுக்கப்புறம்தான் அவாளை போஜனத்துக்கு தேர்வு
செய்ய முடியும்.

சரி, ஆள் கிடைச்சுட்டா மட்டும் போதுமா? பந்தியில்
உட்கார்ந்து சாப்பிடறவா, என்ன கேட்டாலும் குடுக்கணும்.
அதாவது ரெடிமேட் மெனு தயார் பண்ணிவைச்சுட்டு
இதுதான் லிஸ்ட்.இதுல இருக்கற ஐட்டமெல்லாம்
கிடைக்கும்னு மட்டும் சொல்ல முடியாது. போஜனத்துக்கு
உட்கார்ந்துட்டு ஒருத்தர் திடீர்னு எனக்கு இந்தப் பச்சடி
வேண்டாம்.அதுதான் வேணும்னு வேற எதையாவது
கேட்டுட்டார்னா, அதைக் குடுத்தாகணும் அப்போதான்
அது பூர்த்தியாகும்.

சஹஸ்ர போஜனம் செய்யறதுக்காகத் தீர்மானிச்ச நாள்
 நெருங்கிண்டே இருந்தது.வேத  பாட சாலைகள் அங்கே
இங்கேனெல்லாம் சொல்லி வைச்சும் ஆயிரம் பேர்
கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருந்தது.விஷயத்தை
மெதுவா மகாபெரியவாகிட்டே சொன்னா மடத்துல
இருக்கறவா.

மடத்தோட ஸ்ரீகார்யத்தை (செயலாளர்) கூப்டார்
மகாபெரியவா.பவ்யமா வந்து முன்னால நின்னார் அவர்.

"இது வேதம் படிச்சவாளுக்கு நடத்தற சஹஸ்ர புருஷ
போஜனம்.அப்படின்னா,போஜனத்துல ஸ்ரீமடத்துல
உள்ள வேதம் படிச்சவாளும் கலந்துக்கலாம் இல்லையா?
விதிமுறைகள் எல்லாம் தெரிஞ்சும் தெரியாதவர் மாதிரி
கேட்டார் பரமாசார்யா.

"கலந்துக்கலாம் பெரியவா.மடத்துல இருக்கறவா ஆசார
அனுஷ்டானத்தையும் கடைப்பிடிக்கறவாதானே,அதனால
கலந்துக்கலாம்!" மென்மையாகச் சொன்னார் ஸ்ரீகார்யம்.

நீ ஒண்ணு பண்ணு...வேத வித்துக்கள் எத்தனை பேர் 
வராளோ, அத்தனைபேரோட ஸ்ரீமடத்துல உள்ள வேத
பண்டிதர்களையும் போஜனத்துல பங்கெடுத்துக்கச்
சொல்லு.அப்படியும் எண்ணிக்கை சரிவரலைன்னா, ஒரே
நாள்ல நடத்தறதுக்கு பதிலா என்னிக்கு சஹஸ்ரம் பூர்த்தி
ஆறதோ,அன்னிக்கு வரைக்கும் நடத்தறதுக்கு ஏற்பாடு
பண்ணிடு. உத்தரவிட்டார் ஆசார்யா.

போஜனத்தன்னைக்கு கார்த்தால, மகாபெரியவா 
நித்யப்படியான சந்த்ர மௌளீஸ்வர பூஜையை
முடிச்சுட்டு ,தீர்த்தப் பிரசாதத்தை விநியோகம் 
பண்ணினதும், போஜனத்தை ஆரம்பிக்கலாம்னு
தீர்மானமாச்சு.

மகாபெரியவா திடீர்னு ஒரு உத்தரவைப் போட்டார்.
"தான் பூஜை பண்ணி முடிச்சதும் தனக்கு முன்னால ஒரு
திரை விரிக்கணும்னும்.போஜனத்துக்கு வந்திருக்கறவா
அந்தத் திரைக்குப் பின்னால வரிசையா வந்து அவாளோட
நாமதேயத்தைச் சொல்லிட்டு, தீர்த்தம் வாங்கிண்டு
போஜனத்துக்குப் போகலாம். இதுல அல
ஸ்ரீமடத்துக்காராளுக்கும் விலக்கு கிடையாது. அவாளும் 
வரணும்!" அதாவது மகாபெரியவா அவாளைப்
பார்க்காமலே பேரை மட்டும் கேட்டுட்டு தீர்த்தம் குடுப்பார்.

ஆசார்யா கட்டளைக்கு அப்பீல் ஏது?
வந்திருந்தவா எல்லாரும் அதே மாதிரி தீர்த்தம் வங்கிண்டா
ஸ்ரீமடத்துக்காராளும் வரிசையா வந்தா. அப்போ ஒருத்தர்
தன்னோடபேரைச் சொல்லி தீர்த்தத்துக்காக கையை
நீட்டினதும், " நீ போஜனத்துல கலந்துக்க வேண்டாம்.
அதுக்குப் பதிலா,அங்கே எல்லாருக்கும் பரிமாறற 
வேலையைப் பாரு!" சொல்லிட்டு தீர்த்தத்தைக் குடுத்தார்.

அந்தப் பண்டிதருக்கு அப்படியே கண் கலங்கித்து. " நாம
என்ன தப்பு செஞ்சோம்? எதனால பந்தியில உட்காரக்
கூடாதுன்னு பெரியவா கட்டளையிட்டா?" இந்த மன
வருத்தத்தோடேயே எல்லாருக்கும் பரிமாறி
முடிச்சுட்டு சோர்வா வந்து மடத்துல உட்கார்ந்தார்.

வழக்கப்படி ஸ்ரீமடத்துலயும் ஆஹாரம் பண்ணாம
பட்டினியாவே உட்கார்ந்து கவலையா யோசிச்சுண்டே
இருந்த அவர், "என்ன உபவாசம் இருக்கறதுன்னு
தீர்மானிச்சுட்டியா?" அப்படின்னு மகாபெரியவாளோட
குரல் கேட்கவும் சட்டுன்னு நிமிர்ந்தார்.

பக்கத்துல நின்னுண்டிருந்த பெரியவாளைப் பார்த்ததும்
அதுவரைக்கும் அடக்கி வைச்சுண்டு இருந்த துக்கம்
அப்படியே பீறிட ஓன்னு அழுதார்.

"பெரியவா நானும் முறைப்படி வேதமெல்லாம்
படிச்சுட்டுதானே ஸ்ரீமடத்துல இருக்கேன். மத்த
எல்லாரையும் போஜனத்துல கலந்துக்கச் சொல்லிட்டு
என்னை மட்டும் விலக்கினா, எல்லாரும் என்னை இழிவா
பார்க்கமாட்டாளா? உங்க உத்தரவுப்படிதானே என்னையும்
போஜனுத்துக்குத் தேர்ந்தெடுத்தா? அப்புறம் ஏன் என்னை
போஜனம் பண்ண வேண்டாம்னு சொன்னேள்?"
தாயார்கிட்டே உரிமையோட கேட்கற குழந்தை மாதிரி
கேவிக்கேவி அழுதுண்டே கேட்டார்.

வாத்சல்யமா அவரைப்பார்த்தார் ஆசார்யா.
"இப்போ நீ வேதனைப்படற அளவுக்கு என்ன ஆயிடுத்து?
சஹஸ்ர புருஷ போஜனத்துல உட்கார்ந்து போஜனம்
பண்ணறது ஒரு பெருமைதான். ஆனா...அதை பண்ணி
வைக்கறது எத்தனை புண்ணியம் தெரியுமோ? நீ அதுல
உட்கார்ந்து போஜனம் பண்ணியிருந்தா ஒனக்கு பெருமை
கிடைச்சிருக்கும்கறது வாஸ்தவம்தான். ஆனா, ஒனக்குப்
புண்ணியம் கிடைக்கணும்னுதான் உன்னை எல்லாருக்கும்
பரிமாறுன்னு சொன்னேன்.

சஹஸ்ர போஜனம் செஞ்சு வைக்கறதுக்கான வசதி ஒனக்கு
கிடையாது. ஆனா, பரிமாறினதால ஒனக்கு புண்ணியம்
கிடைச்சுடுத்து!" மகாபெரியவர் கொஞ்சம் நிறுத்தினார்.

அந்த நபரோட கண்ணுல இப்போ சோகத்துக்கு பதிலா
பிரகாசம் தெரிஞ்சுது.ஒரு மாதிரி நெகிழ்ச்சியோட
பரமாசார்யாளைப் பார்த்தார்.

"என்ன கொஞ்சம் தெளிவடைஞ்சியா? இன்னொரு
விஷயமும் சொல்றேன் கேளு!" சொன்ன மகாபெரியவா
தொடர்ந்தார். "ஸ்ரீமடத்துக் கார்யங்களுக்காக நேரம் காலம்
இல்லாம நினைச்சப்ப எல்லாம் உன்னை, அங்கே போ,
இங்கே போ,இதை வாங்கிண்டு வா!அதைக் குடுத்துட்டு வா
என்று அனுப்பறது வழக்கம்தானே? அதெல்லாம் நீ
யாருக்காகப் பண்ணறே? ஸ்ரீமடத்துக்காகா அதாவது
எனக்காகன்னு வைச்சுப்போமே.

அந்த மாதிரி சமயங்கள்ல நீ நித்ய கர்மாவை சரியா செய்ய
முடியறதில்லைன்னு நீயே வருத்தமா சொல்லி இருக்கே.
அது சூழ்நிலையால ஏற்பட்டதுன்னாலும் பிசகினது
பிசகினதுதானே?

சஹஸ்ர புருஷ போஜனத்துல கலந்துக்கறவா
வேதமந்திரங்களைப் படிச்சவாளா இருந்தா மட்டும் 
போதாது. நித்யகர்மா அனுஷ்டானங்களை பிசகாம
அனுஷ்டிக்கறவாளாவும் இருக்கணும்கறதுதானே விதி?
உன்னைக் கலந்துக்க நான் அனுமதிச்சா அந்த விதியை
மீறினதா ஆகும். கலந்துண்டா உனக்கு பாவம் வரும்.

என்னால ஒனக்கு எதுக்குப் பாவம் வரணும்னுதான்,
ஒன்னை கலந்துக்க வேண்டாம்னு சொன்னேன்.
பாவம் சேரலை. புண்ணியமும் கிடைச்சுது. என்ன
புரிஞ்சுதா? போ, போய் உபவாசத்தை முடிச்சுண்டு
மடத்துல போஜனம் பண்ணு!"

விளக்கம் சொல்லி பரிவோட சாப்பிடச் சொன்ன
பரமாசார்யாளை சாஷ்டாங்கமா நமஸ்காரம்
செஞ்சுட்டு, சந்தோஷமா போஜனம் பண்ணப் போனார்.
அந்த நபர்.

No comments:

Post a Comment

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top