Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Thursday, January 18, 2018

Last meeting - Periyavaa


*“இதுதான் என்னை சந்திக்கும் கடைசி சந்திப்பு.*
*நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன் ஆசை நிறைவேற்றப் படும்.”*
 
காஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்
இப்படியும் நடக்குமா ? நடந்ததே...
அவருக்கு வயது ஐம்பத்தைந்து ஆனது. வழக்கம் போல மஹாபெரியவரை தரிசிக்க வந்தார்.
சிறு வயது முதல் பெரியவாளையே தாயாக தந்தையாக உறவாக அண்டிக் கொண்டவரின் உள்
மனதில் ஒரு ஆசை ஒளிந்து கொண்டிருந்தது. அந்த ஆசை பெரியவாளுக்குத் தெரியும்
என்றாலும் அதை அவர் வாயின் மூலம் வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டதால்,
உரையாடலை பெரியவாளேத் துவக்கினார். பெரியவா அவரிடம் “என்னப்பா பூரணத்துவம்
இல்லையே ?” என்றார். அவர் வார்த்தையின் உள் அர்த்தம் அவருக்குப் புரிந்தது.
 
தன் முடிவு நெருங்கி விட்டது என்று. அவர் கலங்கவில்லை. “நைனாஜி, என் பூரணமே
நீங்கதான். என் சொந்தம் உரிமை எல்லாம் நீங்க மட்டும் தான் நைனாஜி. எனக்கு வேற
எதுவும் சொந்தமில்லை, எதன் மீதும் உரிமையுமில்லை. என் அனைத்து மற்றும் ஒரே
உறவும் நீங்க தான் நைனாஜி, நீங்க மட்டும் தான். நீங்க தானே என் நைனா. இல்லையா?
“ என்றார் ஏக்கத்துடன் ஆணித்தரமாக. அந்த 55 வயதுக்காரர் பெரியவாளின்
பார்வையில் என்றுமே 8 வயது சிறுவன் தான். ஏனெனில் சிறு வயது பக்தி பாசம் இன்று
வரை அவரிடத்தில் மாறவில்லை. “சரிப்பா நான்தான் உன் நைனா” என்றார் பிள்ளையின்
பரிதவிப்பு புரிந்து. அனைத்தையும் தன் நைனாவிடம் ஒப்புவிப்பவர் தன் ஆசையை
வெளிப்படுத்த இதுவே தருணம் என அறிந்து வாயைத் திறந்து விட்டார்.
 
“ நைனாஜி எனக்கு ஒரு ஆசை. நான் பிறந்தது தமிழ் நாட்டுல. பல வருடங்கள் இங்க
கழிந்தன. ஆனால் என் உயிர் இந்த மாநிலத்துல பிரியக் கூடாது. வெளி மாநிலத்துல
பிரியணும். என் உயிர் பிரிந்த பின் என் உடல் மண்ணுக்குள் புதைக்கப்படக்
கூடாது. தீக்கும் இரையாகக் கூடாது. அந்தரத்தில் எறியப்பட்டு பறவைகளுக்கு
இரையாக வேண்டும் நைனாஜி “ என்றார்.
 
“இதுதான் என்னை சந்திக்கும் கடைசி சந்திப்பு. நீ பூரணத்துவம் அடைஞ்சுட்ட. உன்
ஆசை நிறைவேற்றப் படும்.” என ஆசியுடன் அனுப்பினார்.
 
தன் முடிவு நெருங்கி விட்டது தெரிந்து அவர் அஞ்சவில்லை. என் இறுதி ஆசையையும்
என் நைனாஜியிடம் சொல்லி விட்டேன். இனி எனக்கு என ஒன்றும் இல்லை. என் உடல்
பொருள் ஆவி அவருக்கு சொந்தம் என இலகுவானார். பெரியவாளிடம் சரண்
அடைந்தவர்களின் மனதில் பயம் இருக்காது. எப்பொழுது மனம் பஞ்சு போல் இருக்கும்.
நாட்கள் நகர்ந்தன. பம்பாயில் வசிக்கும் தன் தங்கையைக் காண பம்பாய் சென்றார்.
தங்கைக்கோ அண்ணன் மீது அளவிட முடியா பாசம். தங்கை அடைந்த சந்தோஷத்திற்கு
அளவில்லை. அண்ணனோடு நேரத்தை செலவிட்டு மகிழ்ந்தாள்.
 
தன் தங்கையிடம் விடை பெற்றுக் கொண்டு பம்பாயில் வசிக்கும் தன் மிக நெருங்கிய
நண்பரைக் காண சென்றார். இந்த நண்பர் அவரின் பணி பயிற்சியின் போது
அறிமுகமானவர். அவருடன் பழக பழக தன் நண்பர் பெரியவாளின் மீது வைத்திருந்த
பக்தியும் பாசமும் பம்பாய் நண்பருக்கு வியப்பைத் தந்தது. பம்பாய் நண்பரும்,
தன் நண்பரின் மூலம் மஹாபெரியவாளின் அதிசயம் மகிமைகளைக் கேட்டு பெரியவா மீது
மிகுந்த பக்தி வைத்திருந்தார். நண்பருடன் அவரும் மஹாபெரியவாளை பல முறை
தரிசித்து, குருவின் நல்லுரைகளை தன் வாழ்வில் செயல் படுத்தியும் வந்துள்ளார்.
 
பம்பாய் நண்பரின் இல்லம் சென்று அவர் வாயில் கதவைத் தட்டும் பொழுது, பக்தரின்
உயிர் ஊசலாடியது. கதவைத் திறந்த பம்பாய் நண்பர், தன் உயிர் நண்பரைக் கண்டு
மிகுந்த சந்தோஷத்துடன் அணைத்தார். அவர் மீதே பக்தர் சரிந்து விழுந்தார்.
நண்பரின் நிலைக் கண்டு துடி துடித்தார். தன் காரில் ஏற்றிக் கொண்டு
மருத்துவமனை விரைந்தார். மடியில் படுத்திருந்த நண்பரின் கைகளை இறுக்கிப்
பிடித்துக் கொண்டார். பக்தரின் முகம் ப்ரகாசித்தது. கண்களில் ஒளி மின்னியது.
உதடுகளில் புன்னகை வழிந்தது. நைனாஜி என்று வாய் முணுமுணுக்க அவரின் கடைசி
மூச்சும் நின்றது.
 
எதிர்பாராத இச் சம்பவத்தால் நண்பர் நிலை குலைந்தார். இறுதி மூச்சு தன்
மடியில் முடிந்த அதிர்ச்சி விலகவில்லை. ஆனாலும் அடுத்த செயலில் இறங்க வேண்டிய
நிர்பந்தம். அவரின் குடும்பம் பற்றி தெரிந்தாலும் முகவரி எதுவும் தெரியாது.
தொலைபேசி அதிகம் உபயோகத்தில் இல்லாத காலம். அவர் வேலை செய்த அலுவலகத்திக்கு
தெரியப் படுத்தினார். அவர்களிடம் அவர் குடும்பத்திற்கு தெரியப் படுத்தக்
கேட்டுக் கொண்டார்.
 
இறந்த உடலை பல மணி நேரம் பாதுகாத்து வைக்க முடியாத நிலை. உடலை அப்புறப்படுத்த
வேன்டிய நிர்பந்தம் இறுதி சடங்கை எப்படி செய்வது என குழம்பினார். நண்பரோ
பார்ஸிக்காரர். அவருக்கு இவரின் மத வழக்கம் தெரியாது. கால நேரம் ஓடிக்
கொண்டிருக்க அக்கம் பக்கத்தினர் கொடுத்த நெருக்கடியால் தன் மத வழக்ப் படியே
இறுதி சடங்கை செய்வது என முடிவு செய்தார். ஆனாலும் மனதில் சிறு தயக்கம்.
செய்வது சரிதானா என மனம் கேள்வி எழுப்பியது. அவருக்கு தன் நண்பர் மொழிந்த
நைனாஜி என்ற கடைசி வார்த்தையே மனதில் ரீங்காரமிட்டிக் கொண்டிருந்தது.
 
தன் குரு, நண்பரின் நைனாஜியிடமே ப்ரார்த்தனை செய்தார். “குருவே, தங்களை
மட்டுமே தன் உறவாக நினைத்த என் நண்பனின் இறுதிச் சடங்கை செய்யும்
நிர்பந்தத்தில் இருக்கிறேன். என் முடிவு சரிதானா எனத் தெரியவில்லை. என்
பாரத்தை உங்களிடம் இறக்குகிறேன். என் முடிவுக்கு உங்களின் பூரண ஆசியும்
அனுக்ரஹமும் வேண்டும். இந்த காரியத்தை செய்து முடிக்க சக்தி கொடுங்கள்” என
உள்ளம் உருகிப் பிரார்தித்தார். மனம் லகுவானது. இறுதி ஏற்பாடுகளை முழு
வீச்சில் செய்தார்.
 
இச் சம்பவம் கேள்விப்பட்டு அவருக்குத் துணை நிற்க அவர் அனைத்து அக்கம் பக்க
உறவினர்களும் கூடிவிட்டனர். அவரின் உடல் Malabar hills ல் உள்ள Hanging
gardensக்கு எடுத்துச் செல்லப்பட்டது.அவர் தங்கை கடைசி நிமிடத்தில் வந்து
சேர்ந்தார். சுற்றிலும் பார்ஸி மக்கள் சூழ்ந்திருக்க தன் அண்ணன் தானா என்ற
சந்தேகம் வந்தது. துணியை விலக்கியவர் கதறி ஓலமிட்டார். நண்பர் அவரைத்
தேற்றினார். உடல் கிடத்தப் பட்டிருந்தது. உடலுடன் கயிறு இணைக்கப்பட்டு மலைப்
பகுதியில் தூக்கி எறியப் பட சடங்குகள் செய்யப் பட்டுக் கொண்டிருந்தன. இறுதி
பிரார்த்தனை எல்லாம் முடிந்தது.
 
இந்த நேரத்தில் ஒரு வயதான முதியவர் வெண் உடையில் தலைக்கு முக்காடு இட்டு
நண்பர் அருகில் வந்து நின்றார். நண்பரிடம், “யார் பெத்தப் பிள்ளப்பா?” என்று
கேட்டார். நண்பர், “உங்க பிள்ளை தான் ஜி” என்றார். நண்பருள் ஒரு இயக்கம் அந்த
வார்த்தைகளை சொல்ல வைத்தது. இந்த வார்த்தைகளுக்காகவே காத்திருந்தவர் போல்
அந்தப் பெரியவர் “சரிப்பா, என் பிள்ளை தானே” என்று முன் வந்து நின்றார்.
மகுடிக்கு கட்டுண்ட பாம்பாக கூட்டமே பெரியவரைப் பார்த்துக் கொண்டு அமைதியாக
நின்றது. அனைத்தும் முடிக்கப்பட்டு, உடலை தூக்கி எறியப் பட வேண்டிய நேரம்.
 
பெரியவரின் உத்தரவுக்காக காத்திருந்தனர். பெரியவரும், தூக்கி எறியும் படி இரு
கைகளையும் உயர்த்தினார். தூக்கி எறியப்பட்ட அந்த சில நொடிகளில் எங்கிருந்தோ
வந்த 50 ராட்சச கழுகுகள் உடலை கவ்விக் கொண்டன. கூட்டம் கலைந்தது. பக்தரின்
பூரணத்துவம் பரிபூரணரின் கருணையால் பூரணம் அடைந்தது.
 
தூக்கி எறிய கைகளை உயர்த்திய அந்தப் பொழுதில் அந்த முதியவரின் கைகளில்
இருந்து ஒரு மின்னல் ஒளி

No comments:

Post a Comment

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top