Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Wednesday, June 26, 2013

Varagooran Narayanan யோகி ராம் சுரத்குமாரும் பெரியவாளும் — பி. சுவாமிநாதன்

அது 1980 -களின் துவக்கம்… காஞ்சிபுரம் மடத்தில்இருந்த மஹா பெரியவா, ஓர் உதவியாளரைஅழைத்தார். வெகு பவ்யத்துடன் வந்து நின்றார் அந்தஉதவியாளர். மகானின் உத்தரவைநிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் காத்திருந்தார்.
“திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார்தெரியுமோ உனக்கு ?”
உதவியாளர் மெல்லிய குரலில் சொன்னார்: “தெரியும்பெரியவா. அருணாச்சலேஸ்வரர் தரிசனத்துக்காகதிருவண்ணாமலை போனப்ப ரெண்டு மூணு தடவைஅவரை நான் சேவிச்சிருக்கேன்.”
“ம்ம்… உடனே பொறப்படு. திருவண்ணாமலைக்குப்போ. அவர்கிட்ட, நான் கூப்பிட்டேன்னு சொல்லி,உடனே காஞ்சிபுரத்துக்குக் கூட்டிண்டு வா” என்றார்.
“உத்தரவு பெரியவா” என்று நமஸ்காரம் செய்து விட்டுஅந்த உதவியாளர் அடுத்த நிமிடம் காஞ்சிபுரம்பேருந்து நிலையம் சென்றார். திருவண்ணாமலைசெல்லும் பேருந்தில் ஏறினார்.
திருவண்ணாமலையில் யோகியின் ஆசிரமம் சென்றுஅவரை நமஸ்கரித்த பின் , விஷயத்தைச் சொன்னார். “சரி… புறப்படுவோம்” என்று ஆசீர்வதித்தார் அந்தஉதவியாளரை. அங்கிருந்து ஒரு காரில் இருவரும்பயணமானார்கள்.
அடுத்த ஒரு சில மணி நேரத்துக்குள் மஹாபெரியவாளின் முன்னே இருந்தார் யோகிராம்சுரத்குமார். அதுவரை ஓர் ஆசனத்தில்அமர்ந்திருந்த மஹா பெரியவா, திடீரென்று கீழேதரையில் அமர்ந்தார். யோகியும் சுவாமிகளுக்குமுன்னால் — அதாவது அவரை நேர் பார்வைபார்த்தவாறு தரையில் அமர்ந்தார். இரு மஹான்களும்ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர். நிமிடங்கள் கரைந்தன. ஆனால், இவருடையஅதரங்களில் இருந்தும் ஒரு வார்த்தை கூட வந்துவிழவில்லை.
யோகியைக் கூப்பிட்டுக் கொண்டு வந்த
உதவியாளருக்கு வியப்பு. ‘ஏதோ பெரிய விஷயம்பேசப் போகிறார்கள்’ என்று ஓரமாக நின்று வேடிக்கைபார்த்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஸ்வாமிகளும் பேசக் காணோம். யோகியும் பேசக்காணோம். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் ஊடுருவிப் பார்ப்பது மாதிரி பார்த்துக் கொண்டேஇருக்கிறார்களே என்று குழம்பினார்.
சில நிமிடங்கள் கரைந்தவுடன், மெள்ளப்புன்னகைத்தார் பெரியவா.
‘யப்பா… நீண்ட நேர அமைதி ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இனிதான் இருவரும் மனம் விட்டுப் பேசப்போகிறார்கள் போலிருக்கிறது’ என்று தீர்மானித்தார்உதவியாளர்.
அப்போது உதவியாளரை அருகே வருமாறு அழைத்தார்பெரியவா.
உதவியாளர் அருகே வந்து வாய் பொத்தி பவ்யமாகநின்றார்.
“யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைப் பத்திரமாக திருவண்ணாமலையில் விட்டுவிட்டு வா” என்றார்.
உதவியாளருக்கு ஏகத்துக்கும் அதிர்ச்சி. ‘பேசவேஇல்லை. ஆனால், அதற்குள் வந்த வேலை முடிந்துவிட்டது என்கிறாரே ?’ என்று குழம்பி நின்ற போது,யோகி எழுந்து விட்டார்.
இருவரும் மடத்தை விட்டு வெளியே நடந்தனர்.
பெரியவாளும், யோகியும் பேசாமல் பேசியது என்ன ?
விடை தெரியாமல் விடுவாரா உதவியாளர் ?
மடத்தில் இருந்து வெளியே அந்த உதவியாளர்தவித்துப் போனார்.
‘அப்படி என்னதான் மஹா ஸ்வாமிகளும், யோகிரம்சுரத்குமாரும் உள்ளே சம்பாஷணை நடத்திஇருப்பார்கள். இருவரும் பேசியதாகக் காணோம். மௌனமாகவே நிமிடங்கள் கரைந்தன. ஆனால் யோகி இங்கே வந்த வேலை முடிந்து விட்டது. அவரைத் திருவண்ணாமலையில் விட்டு விட்டு வாஎன்கிறாரே மஹா பெரியவா ?’
உதவியாளரின் முகத்தைப் பார்த்து, அவருக்குள்இருக்கும் ஐயத்தைப் போக்க எண்ணினார்யோகி.”என்னப்பா….உள்ளே நாங்கள் என்ன செய்தோம்என்று யோசிக்கிறாயா ?” என்று மெள்ளக்கேட்டார்.”ஆமாம்ஜி. நீங்கள் இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையே?” என்றார் படபடப்பாகஉதவியாளர்.”ஆம். நாங்கள் இருவரும் பேசாமலேயே பல விஷயங்களைப் பேசினோம்” என்று யோகிசொல்ல…. உதவியாளர் விழித்தார். பிறகு, யோகியேஆரம்பித்தார். அதை அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் பாங்கிலேயே காண்போம்.
பெரியவா: “போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைப்பற்றி உனக்குத் தெரிந்திருக்கும். காஞ்சி காமகோடிபீடத்தின் ஆச்சார்யராக இருந்தார். கோவிந்தபுரத்தில்ஜீவசமாதி ஆகி இருக்கிறார். தன் வாழ்நாளில்கோடிக்கணக்கான ராம நாமத்தை ஜபித்துவந்தார்
”யோகி: “ஆம்….”
பெரியவா: “கலியுகத்தில் ராம நாம ஜபத்தைப் பரப்பும்பணி தனக்குக் காத்திருக்கிறது என்பதற்காக தனக்குஅடுத்து ஒரு ஆச்சார்யரை பீடத்தில் அமர்த்தி விட்டு,கிராமம் கிராமமாகச் சென்று ராம நாம ஜெபத்தின்மகிமைகளைச் சொல்லி, அனைவரையும் ராம நாமஜபம் உச்சரிக்கச் செய்தார்.”
யோகி: “ராம்…. ராம்…”
பெரியவா: “ஜாதி, மதம் என்று எதுவும் பாராமல்பலருக்கும் உபதேசம் செய்தார். கலியுகத்தில் ராம நாமஜபம் ஒன்றுக்கே மகத்தான சக்தி இருக்கிறது என்றுபிரச்சாரம் செய்தார். இறுதியில், அவர் கோவிந்தபுரத்திலேயே ஜீவ சமாதி ஆனார்.”
யோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குப் புரிகிறது.”
பெரியவா: “அங்கே அவர் ஜீவ சமாதி ஆகி இருக்கிறஇடத்தில் இன்றைக்கும் ராம ராம என்று ஜப ஒலி வந்துகொண்டிருப்பதை அனுபவப்பட்டவர்கள்உணர்ந்திருக்கிறார்கள். அந்த மகான் குடிகொண்டிருக்கிற இடமே — கோவிந்தபுரமே ராம நாமபூமியாக இருக்கிறது.”
யோகி: “ராம்…. ராம்…”
பெரியவா: “பேசாமல் நீ அங்கே போய் விடேன். ராமநாம சிந்தனையில் வாழும் நீ அங்கேயே நிரந்தரமாகஇருந்து விடேன்.”
யோகி: “இந்தப் பிச்சைக்காரனுக்குத்திருவண்ணாமலையே போதும். நான் அங்கேயேதங்கி விடுகிறேன்.”
பெரியவா: “உனக்கு அப்படி எண்ணம் இருந்தால் சரி.”
யோகி: “ஆம். இந்தப் பிச்சைக்காரன்திருவண்ணாமலையே போதும் என்று நினைக்கிறான்.
பெரியவா: “ஆஹா… அங்கேயே இருந்து கொள். உனக்கு இதைச் சொல்லலாம் என்றுதான் இங்கு வரச்சொன்னேன். நான் உன்னைக் கூப்பிட்டு அனுப்பியவேலை பூர்த்தி ஆகி விட்டது. நீ புறப்பட்டு.”
இந்த சம்பாஷணையை இப்படி உதவியாளரிடம்சொல்லி முடித்ததும், அவர் திறந்த வாய்மூடவில்லை. மௌனத்தின் மூலமே மிகப் பெரியசம்பாஷணையை யோகிகள் நடத்த முடியும் என்பதுஉதவியாளருக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.
நூலின் தலைப்பு : மஹா பெரியவா
நூலாசிரியர் : பி. சுவாமிநாதன்
TRISAKTHI PUBLICATIONS
56 / 21 ,
FIRST AVENUE
, SASTRI NAGAR ,
ADYAR , CHENNAI – 600 020 .தொலைபேசி : 044 – 4297 –0800

No comments:

Post a Comment

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top