Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Saturday, January 31, 2015

இது என்ன கருணையா, கிண்டலா?'

 

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரை.

ஒரு சிறிய ஊரில் பெரிய கட்டடத்தில் ஸ்ரீமடம் முகாம்.

ஓர் இரவு, பெரியவாள் தங்கியிருந்த அறையை
ஒட்டியிருந்த அறையில் முகாம் அலுவலகம்.
அங்கே மரப் பெட்டிகளில் புதிய வேஷ்டி-புடவைகள்,
சால்வைகள், வெள்ளிக்காசு - தங்கக் காசு போன்ற
சாமான்கள் வைக்கப்பட்டிருந்தன.

பகல் முழுவதும் ஏகப்பட்ட வேலைகள்,உட்காரக்கூட
நேரம் கிடைக்காமல் உள்ளேயும், வெளியேயும்
நடந்து கொண்டேயிருக்க வேண்டியிருந்தது,
மெய்த்தொண்டர்களுக்கு. எனவே இரவில் அயர்ந்த தூக்கம்

நள்ளிரவில் ஒரு திருடன் அலுவலக அறைக்குள் புகுந்து
ஒரு பெட்டியைத் தூக்க முயன்றான்.கனமாக இருந்ததால்
சட்டென்று தூக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பெரியவா, திருடன்
வந்திருப்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஆனால்.
உடனே "திருடன்,திருடன்" என்று கூப்பாடு போடவில்லை.
எப்போதும் போன்ற மிருதுவான குரலில் ஓரிரு
சிஷ்யர்களை எழுப்பினார்கள்.

"பக்கத்து ரூம்லே மரப்பொட்டியைத் தூக்க முடியாமே
ஒருத்தன் சிரமப்பட்டுண்டிருக்கான். நீங்க போய்
ஒத்தாசை பண்ணுங்கோ..."

பாணாம்பட்டு கண்ணன் என்ற தொண்டருக்கு உடனே
விஷயம் விளங்கி விட்டது. அவரும் சத்தம் போடாமல்
மின்விளக்குகளின் ஸ்விச்சைப் போட்டார்.ஒரே வெளிச்சம்!

திருட வந்தவன் தலைதெறிக்க ஓடிப் போனான்.

"அடாடா... சொல்லாமல்,கொள்ளாமல் ஓடிப் போயிட்டானே!..
பொட்டியிலேர்ந்து வேணும்கிறதை எடுத்துண்டு போகச்
சொல்லியிருக்கலாமே?" என்றார்கள் பெரியவா.

'இது என்ன கருணையா, கிண்டலா?'
என்று சீடர்களுக்குப் புரியவில்லை.

ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே
கைவந்த கலை.

இது என்ன கருணையா, கிண்டலா?'<br /><br />தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா<br />தட்டச்சு;வரகூரான் நாராயணன்<br /><br />ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரை.<br /><br />ஒரு சிறிய ஊரில் பெரிய கட்டடத்தில் ஸ்ரீமடம் முகாம்.<br /><br />ஓர் இரவு, பெரியவாள் தங்கியிருந்த அறையை<br />ஒட்டியிருந்த அறையில் முகாம் அலுவலகம்.<br />அங்கே மரப் பெட்டிகளில் புதிய வேஷ்டி-புடவைகள்,<br />சால்வைகள், வெள்ளிக்காசு - தங்கக் காசு போன்ற<br />சாமான்கள் வைக்கப்பட்டிருந்தன.<br /><br />பகல் முழுவதும் ஏகப்பட்ட வேலைகள்,உட்காரக்கூட<br />நேரம் கிடைக்காமல் உள்ளேயும், வெளியேயும்<br />நடந்து கொண்டேயிருக்க வேண்டியிருந்தது,<br />மெய்த்தொண்டர்களுக்கு. எனவே இரவில் அயர்ந்த தூக்கம்<br /><br />நள்ளிரவில் ஒரு திருடன் அலுவலக அறைக்குள் புகுந்து<br />ஒரு பெட்டியைத் தூக்க முயன்றான்.கனமாக இருந்ததால்<br />சட்டென்று தூக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.<br /><br />சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பெரியவா, திருடன்<br />வந்திருப்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஆனால்.<br />உடனே "திருடன்,திருடன்" என்று கூப்பாடு போடவில்லை.<br />எப்போதும் போன்ற மிருதுவான குரலில் ஓரிரு<br />சிஷ்யர்களை எழுப்பினார்கள்.<br /><br />"பக்கத்து ரூம்லே மரப்பொட்டியைத் தூக்க முடியாமே<br />ஒருத்தன் சிரமப்பட்டுண்டிருக்கான். நீங்க போய்<br />ஒத்தாசை பண்ணுங்கோ..."<br /><br />பாணாம்பட்டு கண்ணன் என்ற தொண்டருக்கு உடனே<br />விஷயம் விளங்கி விட்டது. அவரும் சத்தம் போடாமல்<br />மின்விளக்குகளின் ஸ்விச்சைப் போட்டார்.ஒரே வெளிச்சம்!<br /><br />திருட வந்தவன் தலைதெறிக்க ஓடிப் போனான்.<br /><br />"அடாடா... சொல்லாமல்,கொள்ளாமல் ஓடிப் போயிட்டானே!..<br />பொட்டியிலேர்ந்து வேணும்கிறதை எடுத்துண்டு போகச்<br />சொல்லியிருக்கலாமே?" என்றார்கள் பெரியவா.<br /><br />'இது என்ன கருணையா, கிண்டலா?'<br />என்று சீடர்களுக்குப் புரியவில்லை.<br /><br />ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே<br />கைவந்த கலை.

Thursday, January 29, 2015

"மேக ராகக் குறிஞ்சி"

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

மழையே பெய்யவில்லை.தண்ணிர்ப் பஞ்சம்.
நகராட்சிக் குழாய்களில் சொட்டுத் தண்ணீர் கூட
வரவில்லை;மக்களின் கண்களிலிருந்து வெள்ளமாய்
வழிந்தது கண்ணீர்.

சென்னை வர்த்தகப் பிரமுகர்,பெரியவாளை தரிசனம்
செய்யக் காஞ்சிபுரம் வந்தார். அத்யந்த பக்தர். தொழில்
வர்த்தகமேயானாலும், நெஞ்சில் ஈரப்பசை இருந்தது.

"என்னுடைய வியாபாரம் நன்றாக நடக்கணும்"
என்று கேட்கவில்லை; ;எசமானே! மழை இல்லாமல்
சனங்கள் கஷ்டப்படறாங்க. பெரியவங்க அனுக்ரகம்
பண்ணணும்' என்று மனமுருகப் பிரார்த்தித்தார்.

பெரியவாள் கனிவுடன் பார்த்தார்கள்.

"அகண்ட காவேரிக் கரையில், திருப்பராய்த்துறை என்று
ஒரு சிவக்ஷேத்திரம் இருக்கு.பாடல் பெற்ற ஸ்தலம்.
தேவாரப் பதிகங்களில்,திருப்பராய்த்துறை ஸ்வாமி பேரில்
ஒரு பதிகம் இருக்கு.ஓதுவார்களுக்குத் தெரியும்
அந்தப் பதிகத்தை, மேக ராகக் குறிஞ்சிப் பண்ணில்
சில நாட்கள் பாடி வரச்சொல்லலாம்.மழை பெய்யும்.
ஜனங்கள் சௌக்கியமா இருப்பா...."

பெரியவாளின் வாக்கு,நிரந்தரமான பலன்
கொடுக்கக்கூடிய தெய்வக் கட்டளை.

தேவைப்பட்டால், இன்றைக்கும்,திருப்பராய்த்துறை
பதிகத்தை மேகராகக் குறிஞ்சியில் பாடி மழையைக்
கொண்டுவரலாமே?

பக்தர்களுக்கு நினைவிருந்தால் சரி.

மெம்பர்களுக்காக அந்தப் பதிகம். கீழே.

திருப்பராய்த்துறை

பண் - மேகராகக்குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

1448
நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை அண்ணலே.

1.135.1
1449
கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல அடிகளே.

1.135.2
1450
வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
தோதநின்ற ஒருவனார்
பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
ஆதியாய அடிகளே.

1.135.3
1451
தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர்
பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
ஆலநீழல் அடிகளே.

1.135.4
1452
விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
இரவில்நின்றெரி யாடுவர்
பரவினாரவர் வேதம்பராய்த்துறை
அரவமார்த்த அடிகளே.

1.135.5
1453
மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்ட முடையவர்
பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
அறையநின்ற அடிகளே.

1.135.6
1454
விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற அடிகளே.

1.135.7
1455
தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார்விர லொன்றினால்
பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
அருக்கன்றன்னை அடிகளே.

1.135.8
1456
நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
தோற்றமும் மறியாதவர்
பாற்றினார்வினை யானபராய்த்துறை
ஆற்றல்மிக்க அடிகளே.

1.135.9
1457
திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலாலெயில் எய்துபராய்த்துறை
மருவினான்றனை வாழ்த்துமே.

1.135.10
1458
செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற் சிதையாதன
செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்
செல்வமாமிவை செப்பவே.

1.135.11

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பராய்த்துறைநாதவீசுவரர், தேவியார் - பொன்மயிலாம்பிகையம்மை

"மேக ராகக் குறிஞ்சி"<br /><br />தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா<br />தட்டச்சு-வரகூரான் நாராயணன்.<br /><br />மழையே பெய்யவில்லை.தண்ணிர்ப் பஞ்சம்.<br />நகராட்சிக் குழாய்களில் சொட்டுத் தண்ணீர் கூட<br />வரவில்லை;மக்களின் கண்களிலிருந்து வெள்ளமாய்<br />வழிந்தது கண்ணீர்.<br /><br />சென்னை வர்த்தகப் பிரமுகர்,பெரியவாளை தரிசனம்<br />செய்யக் காஞ்சிபுரம் வந்தார். அத்யந்த பக்தர். தொழில்<br />வர்த்தகமேயானாலும், நெஞ்சில் ஈரப்பசை இருந்தது.<br /><br />"என்னுடைய வியாபாரம் நன்றாக நடக்கணும்"<br />என்று கேட்கவில்லை; ;எசமானே! மழை இல்லாமல்<br />சனங்கள் கஷ்டப்படறாங்க. பெரியவங்க அனுக்ரகம்<br />பண்ணணும்' என்று மனமுருகப் பிரார்த்தித்தார்.<br /><br />பெரியவாள் கனிவுடன் பார்த்தார்கள்.<br /><br />"அகண்ட காவேரிக் கரையில், திருப்பராய்த்துறை என்று<br />ஒரு சிவக்ஷேத்திரம் இருக்கு.பாடல் பெற்ற ஸ்தலம்.<br />தேவாரப் பதிகங்களில்,திருப்பராய்த்துறை ஸ்வாமி பேரில்<br />ஒரு பதிகம் இருக்கு.ஓதுவார்களுக்குத் தெரியும்<br />அந்தப் பதிகத்தை, மேக ராகக் குறிஞ்சிப் பண்ணில்<br />சில நாட்கள் பாடி வரச்சொல்லலாம்.மழை பெய்யும்.<br />ஜனங்கள் சௌக்கியமா இருப்பா...."<br /><br />பெரியவாளின் வாக்கு,நிரந்தரமான பலன்<br />கொடுக்கக்கூடிய தெய்வக் கட்டளை.<br /><br />தேவைப்பட்டால், இன்றைக்கும்,திருப்பராய்த்துறை<br />பதிகத்தை மேகராகக் குறிஞ்சியில் பாடி மழையைக்<br />கொண்டுவரலாமே?<br /><br />பக்தர்களுக்கு நினைவிருந்தால் சரி.<br /><br />மெம்பர்களுக்காக அந்தப் பதிகம். கீழே.<br /><br />திருப்பராய்த்துறை<br /><br />பண் - மேகராகக்குறிஞ்சி<br /><br />திருச்சிற்றம்பலம்<br /><br />1448 <br />நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை<br />கூறுசேர்வதொர் கோலமாய்ப்<br />பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை<br />ஆறுசேர்சடை அண்ணலே.<br /><br />1.135.1<br />1449 <br />கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை<br />வந்தபூம்புனல் வைத்தவர்<br />பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை<br />அந்தமில்ல அடிகளே.<br /><br />1.135.2<br />1450 <br />வேதர்வேதமெல் லாமுறையால்விரித்<br />தோதநின்ற ஒருவனார்<br />பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை<br />ஆதியாய அடிகளே.<br /><br />1.135.3<br />1451 <br />தோலுந்தம்மரை யாடைசுடர்விடு<br />நூலுந்தாமணி மார்பினர்<br />பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை<br />ஆலநீழல் அடிகளே.<br /><br />1.135.4<br />1452 <br />விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்<br />இரவில்நின்றெரி யாடுவர்<br />பரவினாரவர் வேதம்பராய்த்துறை<br />அரவமார்த்த அடிகளே.<br /><br />1.135.5<br />1453 <br />மறையுமோதுவர் மான்மறிக்கையினர்<br />கறைகொள்கண்ட முடையவர்<br />பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை<br />அறையநின்ற அடிகளே.<br /><br />1.135.6<br />1454 <br />விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்<br />சடையிற்கங்கை தரித்தவர்<br />படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை<br />அடையநின்ற அடிகளே.<br /><br />1.135.7<br />1455 <br />தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை<br />நெருக்கினார்விர லொன்றினால்<br />பருக்கினாரவர் போலும்பராய்த்துறை<br />அருக்கன்றன்னை அடிகளே.<br /><br />1.135.8<br />1456 <br />நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்<br />தோற்றமும் மறியாதவர்<br />பாற்றினார்வினை யானபராய்த்துறை<br />ஆற்றல்மிக்க அடிகளே.<br /><br />1.135.9<br />1457 <br />திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்<br />உருவிலாவுரை கொள்ளேலும்<br />பருவிலாலெயில் எய்துபராய்த்துறை<br />மருவினான்றனை வாழ்த்துமே.<br /><br />1.135.10<br />1458 <br />செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்<br />செல்வர்மேற் சிதையாதன<br />செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்<br />செல்வமாமிவை செப்பவே.<br /><br />1.135.11<br /><br />இத்தலம் சோழநாட்டிலுள்ளது. <br />சுவாமிபெயர் - பராய்த்துறைநாதவீசுவரர், தேவியார் - பொன்மயிலாம்பிகையம்மை

Tuesday, January 27, 2015

நெல்லிக்காய் வாங்கும்படி என்னைத் தூண்டியது யார்?.

சொன்னவர்; ஸ்ரீமதி சுந்தா சுந்தரம், சதாரா ரோடு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

கார்த்திகை மாத துவாதசி திதி, முதல் நாள்
ஏகாதசியன்று, நிர்ஜலம்--தாகம் தீர்த்துக்கொள்ள
தீர்த்தம் கூடக் குடிப்பதில்லை.

துவாதசியன்று பாரணை. அன்றைக்கு என்று,
வித்தியாசமான பிக்ஷைத் திட்டம்.

பிக்ஷைப் பக்குவ பொறுப்பிலிருந்த தொண்டருக்கு,
'அன்றையதினம் துவாதசி' என்ற நினைவே,
கொஞ்சம் தாமதமாகத் தான் வந்தது.
(நல்லகாலம், திரயோதசி பிறக்கவில்லை!)

துவாதசி பாரணைக்கு 'அது' வேண்டுமே?

பாஷை தெரியாத ஊர். ஆங்கிலமும் தெரியாது;
ஹிந்தியும் தெரியாது; மராத்தி, இவரை
அருகில்விட மறுத்தது.

யாரைப் போய்க் கேட்பேன்? எப்படிக் கேட்பேன்?
இதுவரை காட்டிய கைஜாடைகளைக் கண்ட
மராத்தியர்கள், அதைத்தவிர மற்ற எல்லாவற்றையும்
நறுவிசாகத் தெரிவித்து விட்டார்கள்.

நான் (ஸ்ரீமதி சுந்தா) போய்ச் சேர்ந்தேன். தொண்டரின்
கண்களில் பரவசம்!

"நல்லவேளை, வந்தேள்!...பெரியவாள் பிக்ஷைக்கு
நெல்லிக்காய் கட்டாயம் வேணும்..பாஷையே
புரியல்ல...தவிச்சிண்டிருக்கேன். நீங்க ஓடிப்போய்,
நாலு நெல்லிக்காய் வாங்கிண்டு வந்தா.."

நான் ஓடிப் போகவில்லை.

"ரொம்ப அவசரம், மாமி..."

என் பையிலிருந்து, ஒரு கொத்து நெல்லிக்காய்களை
எடுத்து அவர் முன் கொட்டினேன். அரைமணி முன்னர்
ஏதோ தூண்டுதலால், மார்க்கெட்டில் வாங்கியது;.....
நெல்லிக்காய் வாங்கும்படி என்னைத் தூண்டியது யார்?.

கனகதாரா ஸ்தோத்திரம் செய்து, தங்கம் தங்கமான
நெல்லிக்காய்களை மாரி மாரியாகப் பொழிந்தவர்,
வழித்தோன்றல்--இல்லையா?

மாட்டேன். மறக்க மாட்டேன்.

பச்சை நெல்லிக்காய்கள்....ஓ! ..பச்சை.

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top