Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Tuesday, May 31, 2016

"கனவில் சொன்ன வில்வ விபூதி வைத்தியம்" (மெய் சிலிர்க்கும் சம்பவம்)

கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்


வைத்தியநாதன் என்பவர் மகா பெரியவாளின் பக்தர்.
அவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தைச் சொல்கிறார்.

அவரது மனைவிக்கு நெடுநாட்களாகவே உடல்நிலை
சரியாக இல்லை. சாப்பிட்டதெல்லாம் வாந்தியாக
வெளி வந்தது. ஹார்லிக்ஸ் சாப்பிட்டு,அதுவும்
வாந்தியாக வெளிவந்தபோது,வைத்தியநாதன்
மயக்கமடைந்த தனது மனைவியை ஆஸ்பத்திரியில்
சேர்த்தார்.

இரவு முழுவதும் கண்காணிப்பில் வைத்துக் கொண்ட
டாக்டர் விடிந்தவுடன், "அம்மாவுக்கு உடலில்
எந்தவிதமான கோளாறும் தெரியவில்லை....
அந்த டெஸ்ட்,இந்த டெஸ்ட்டுன்னு தொந்தரவு 
கொடுப்பா....அதனாலே இப்போதே டிஸ்சார்ஜ்
வாங்கிக் கொண்டு ஆத்துக்குப் போயிடுங்கோ" என்று
சொல்லிவிட்டு அந்த கருணையான டாக்டர்
போய்விட்டார்.

டாக்டர் சென்றபின் பத்மா,தன் கணவர்
வைத்தியநாதனிடம் அந்த அதிசயத்தைச் சொன்னார்.

நான் முதல் நாள் நினைவிழந்ததும் மகா பெரியவா
தனக்குக் காட்சி கொடுத்ததாகவும்,

"உனக்கு எல்லாம் சரியாகிவிடும்...நாளையிலிருந்து
காலையில் பல் தேய்த்தவுடன் ஒரு வில்வத்திலே
கொஞ்சம் விபூதி வைச்சு முதலில் சாப்பிடு.45 நாளில்
எல்லாம் சரியாகிவிடும்" என்று அருள் பாலித்ததாகவும்
பத்மா சொன்னார்.

மகான் சர்வ வல்லமை படைத்த வைத்தியர் ஆயிற்றே,
மறுநாளில் இருந்தே வில்வ வைத்தியத்தை
ஆரம்பித்தார் பத்மா. 45 நாட்களுக்கு இன்னும் இரு
தினங்களே மீதியிருந்தன.ஞாபகமறதியோ,
அஜாக்கிரதையோ வில்வம் பறித்துச் சாப்பிடாமலேயே
காப்பி சாப்பிட்டுவிட்டார்.

45 ம் நாள் வைத்தியநாதன்,தன் வேலைக்கு கிளம்பிக்
கொண்டு இருந்த சமயம் அவரது மனைவி பத்மா,
வயிற்றுக் குமட்டல் என்று வாந்தி எடுக்க அது ரத்தமாக
இருந்தது கண்டு,கணவர் ஆடிப்போய் ஆஸ்பத்திரிக்கு
மனைவியுடன் விரைந்தார்.

போகும்போதே மனதிற்குள் மகானிடம் முறையிட்டுக்
கொண்டே போனார்.

"மகாபிரபோ,தங்களது கட்டளைப்படி செய்து வந்த 
வைத்திய முறையில் இரண்டே நாள் தடைபட்டது
உண்மைதான்.ஆனால் அது என் நம்பிக்கையுன்மையாலோ
அசிரத்தையாலோ ஏற்படவில்லை என்பது உன் திரு
உள்ளம் அறியும்.தங்களின் அருளுக்காகவே
காத்துக்கொண்டு இருக்கிறேன்."

டி.பி.யாக இருக்குமோ என்று வைத்தியநாதன்
சந்தேகப்பட்டார்.

"உங்கள் மனைவிக்கு வெறும் பலஹீனம் மட்டும்தான்.
டி.பி.எல்லாம் இல்லை. வீட்டுக்குப் போங்கள்"
என்று பரிசோதித்த டாக்டர் சொல்லிவிட்டார்.

மனைவியை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு,கணவர்
தன் காரியாலயத்திற்குக் கிளம்பினார்.

மகானிடம் காலையில் முறையிட்டதை அவர் மறந்தே
போய்விட்டார். ஆனால் என்ன நடந்தது? 

அவரது மனைவி புதிய தெம்புடன் அவரை வரவேற்றது
மட்டுமில்லாமல் ஒரு அதிசயமான செய்தியையும்
சொன்னாள்.

"மத்தியானம் பக்கத்து வீட்டு மாமி இங்கே வந்தாள்.
நேற்று சென்னையில் அவரது பிள்ளையின் 
கல்யாணம் நடந்ததாம். நடந்தவுடன் பிள்ளையை 
இளையாத்தங்குடியில் முகாமிட்டிருக்கும் மகா
பெரியவாளைத் தரிசிக்க போனாளாம். தரிசனம்
முடிந்தவுடன் அந்த மாமி மகானிடம் சொன்ன
விஷயம் இது.....

"நான் டெல்லியிலிருந்து வரேன். எங்காத்துக்குப்
பக்கத்திலே பத்மான்னு என் சிநேகிதி ஒருத்தி
 இருக்கா.. அவளுக்கு உடம்புக்கு ஒன்று போனா 
ஒண்ணு வந்துட்டே  இருக்கு.பெரியவா அனுக்கிரகம்
பண்ணி அவளுக்கு பிரசாதம் கொடுக்கணுமின்னு
வேண்டியிருக்கா.

"உன் பிரண்டா? பெரிய உபகாரியா? அடிக்கடி வாந்தி
எடுக்கிறாளாக்கும்...உம்..எல்லாம் சரியாகிவிடும்"
என்று சொன்ன மகான், ஒரு இலையில் சுற்றி
பிரசாதம் கொடுத்ததாகவும், அதைப் பிரிக்காமல்
அப்படியே அந்த மாமி என்னண்டே கொண்டு வந்து
கொடுத்தா.

"அதில் பெரியவா என்ன பிரசாதம் கொடுத்திருப்பார்ன்னு
உங்களால் சொல்ல முடியுமா?" என்று வைத்தியநாதனின்
மனைவி அவரிடம் ஆனந்தம் பொங்க கேட்டார்.அவரால்
'சட்'டென்று யூகிக்கவே முடியவில்லை.

அந்த மகான் பிரசாதமாக அனுப்பியிருந்தது,
விபூதியா,குங்குமமா,கல்கண்டா,திராட்சையா?
இதில் ஏதும் இல்லை.

தான் பத்மாவின் கனவில் தோன்றி அருளினாலும்
அது நிஜமே என்று மெய்ப்பிப்பது போல்,பிரசாதமாக
இரண்டு வில்வ இலைகளை,இலையில் மடித்துக்
கொடுத்து அனுப்பி இருந்தார்.அதாவது வில்வம்
சாப்பிடாத, அந்த இரண்டு நாட்களுக்கான வில்வ
இலைகள் இரண்டு.

பத்மா அதற்குப் பின் எந்தவிதமான உபாதையின்றி
வழக்கமான உணவை உட்கொண்டார் என்பதைச்
சொல்லத் தேவையில்லை.

எப்படிப்பட்ட இடர்வரினும், மகாபெரியவாளே
சரணாகதி என்றடைந்துவிட்டால்...போதும்...எல்லாமே 
நல்லபடியாக முடியும் என்பது  உண்மைதானே?

Monday, May 30, 2016

"அவனாலே உன்னை என்னடா பண்ண முடியும்?"

தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து.
ட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு தடவை பிரதோஷம் மாமா,மகானின் முன்
நிற்கிறார்.முகத்தில் சோகம் அப்பி இருந்தது.
பார்வையினாலேயே கவனித்து விட்ட மகான்....

"என்ன விஷயம்?
ஏதோ விசாரம் இருக்காப்போல இருக்கே...."என்றார்.

"ஒண்ணுமில்லே...என்னான்னு சொல்ல முடியல்லே..
நான் ஒரு இரண்டும் கெட்டானா இருக்கேன்...
பெரியவாளையும் பார்த்துண்டே இருக்கணும்.
அதேசமயம் உத்தியோகத்தையும்  கவனிக்கணும்.
எனக்கு இது சௌகர்யமாபடலை. லௌகீகத்தில்
மாட்டிண்டு விழிக்கிறேன்.. எதை விடறது...
எத்தை வச்சுக்கிறது.புரியவில்லையே.." என்று
மாமா அங்கலாய்க்கிறார்.

"லௌகீகக் கடமைகள் ஒண்ணு இருக்கு....
அதை முடிச்சுட்டு தான் கடவுளை நினைக்கணும்.
பகவத்கீதையே என்ன சொல்லியிருக்கு...
முதலில் கடமையைச் செய்...பிறகு கடவுளை நினை..
அதானே, நீதான் எப்பவுமே என்னையே நினைச்சுண்டு
இருக்கியே..உனக்கென்ன கஷ்டம்...?"

"ஒரு ஆபீசர் இருக்கான்...எனக்கு மேலதிகாரி..."

"ஏன் உன்னை அவன் ரொம்பப் படுத்தறானா?"

"என்னாலே அதையெல்லாம் தாங்கிக்கவே முடியல்லே..
அதைத்தான் சொல்ல வந்தேன்.

"அவனாலே உன்னை என்னடா பண்ண முடியும்?"

என்று பெரியவா அழுத்தம் திருத்தமா கேட்டதற்கு
பிரதோஷம் மாமாவுக்கு அப்போது அர்த்தம் 
விளங்கவில்லை.

அடுத்த பிரதோஷத்திற்கு மாமா வரும்போது,அந்த ஆபீசர்
டிரான்ஸ்பர் ஆகிவிட்டார் என்கிற நல்ல செய்தியோடு வந்தார்.

"எனக்காக மகாப் பிரபு இந்த நல்ல காரியத்தை
செய்திருக்கிறேள்.

"நான் என்னடா பண்ணினேன்?"

"இப்போ ஒரு நல்ல ஆபீசர் வந்திருக்கிறார்...
எனக்கு மிகவும் அனுசரணையாக இருக்கார்.."

மகான் பலமாகச் சிரித்தபடி...

"உனக்கு அனுசரணையாக இருந்தா நல்லவன்...
இல்லாட்டி கெட்டவனாக்கும்.."
இது ஆனந்த சிரிப்பு.

"பெரியவா அனுக்கிரகத்திலே அவரை அங்கிருந்து
மாத்திட்டேள்" என்று பிரதோஷம் மாமா மீண்டும்
ஒரு முறை சொல்கிறார்.

"நான் எங்கேடா மாத்தினேன்?" என்ற கேள்வியைக்
கேட்டுவிட்டு, ஆனந்தமாகச் சிரித்தார் மகான்.

அவரவர்கள் மனதில் உணரும்படியாக மட்டும் பல
காரியங்களைப் பெரியவா செய்திருக்கிறார்
என்பதே உண்மை.

பிரதோஷம் மாமா அடிக்கடி சொல்லுவார்.

"பெரியவாளை எல்லோரும் கொண்டாட வேண்டும்.
அகில உலகமும் இந்த மகானை உணர வேண்டும்.
ஆதிசங்கரர் பகவத்பாதாவின் மறு அவதாரம் என்பதை
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று
பரவசம் பொங்கும் குரலில் எடுத்துரைப்பார்...
அவரது மனதை அவ்வளவு தூரம் பூரணமாக பெரியவா
ஆட்கொண்டிருந்தார் என்பதன் வெளிப்பாடுதான் இது.

Sunday, May 29, 2016

"எங்கேடா உப்பு?" (ஒரு சிறு பதிவு)


கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

சேலத்தில் ஒரு ஆடிட்டர் தன் குடும்பத்துடன்
மகானிடம் ஐக்கியமாகி விட்டவர்.சுருக்கமாகச்
சொன்னால் காஞ்சி மகான் தான் அவருக்கு எல்லாமே.

பெரியவா ஜெயந்திக்கு மட்டுமல்ல,சாதுர்மாஸ்யத்திற்கும்
தாராளமா செலவு செய்யக்கூடியவர். தேவையான எல்லா
சாமான்களையும் ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு போய்,
பெரியவா முன் அடுக்கி வைத்துவிடும் பழக்கம் அவருக்கு.

ஒரு தடவை சாதுர்மாஸ்ய விழாவிற்காக வழக்கம் போல்
எல்லா சாமான்களையும் வேனில் ஏற்றிக்கொண்டு போய்,
அதை பெரியவா முன் சமர்ப்பித்துவிட்டு நின்றார்.
உடன் வந்தவர்கள் எல்லோருமே நிற்கிறார்கள்.மகானின்
மனம் குளிரும்படி எல்லா சாமான்களையும் கொண்டு
வந்த திருப்தி ஆடிட்டருக்கு.

"ஆடிட்டர் வேணுகோபால்" என்றவுடன் அவரைப்
பார்த்து புன்முறுவல்.தொடர்ந்து வந்திருந்த சாமான்கள்
அவ்வளவையும் நிதானமாகப் பார்த்தார்.பிறகு சொன்னார்..

"என்னடா முக்கியமான ஐயிட்டத்தையே விட்டுட்டே"
ஆடிட்டருக்கு பகீரென்றது.ஒவ்வொன்றையும் பார்த்துப்
பார்த்து சேகரித்ததல்லவா?

எல்லோரும் சாமான்களைப் பார்த்தார்கள்.

எல்லாம் சரியாகத்தானே இருந்தது.

என்னவென்று அவரிடம் கேட்கப் பயம்.தாங்களாகவே
தெரிந்து கொள்வார்கள் என்று அவர் நினைத்தது
போலும் இருந்தது.

"என்ன தெரியல்லியா? முக்கியமான ஐயிட்டம் என்னன்னு
தெரியல்லியா?" அனைவரும் மௌனமாக இருந்தனர்.

"எங்கேடா உப்பு?" என்று பெரியவா கேட்டதும்தான்
அதிர்ச்சியோடு அவர்கள் சாமான்களின் குவியலைப்
பார்த்தனர். அதில் உப்பே இல்லை.

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top