Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Thursday, March 31, 2016

அனந்தப்பள்ளி அன்னதானம்....

 "ஆமாம்அது என்ன பெரியவா ஈஸ்வரனின் பூர்ணாவதாரம் என்றீர்கள்?”என்று கேட்க அடுத்த கதை வந்தது!......
--
இந்த கதையை சொல்லறத்துக்கு முன்னே மஹாபாரதக்கதை ஒண்ணை நினைவு படுத்தினா நல்லா இருக்கும்!
மஹா கோபியான துர்வாசர் தன் சிஷ்யர்கள் சிலருடன் திருதராஷ்ட்ரன் அரண்மனைக்கு விஜயம் செய்தார்திருதராஷ்ட்ரன் முறை படி அவரை வரவேற்றான்தன் மகன் துரியோதனை அழைத்து "அப்பாஇவரை நன்றாக கவனித்துக்கொள்இவர் ஆசீர்வாதம் செய்துவிட்டால் எப்பவுமே உனக்குத்தான் வெற்றி” என்றான்.
துரியோதனுக்கு இது பிடிக்கவில்லைஇருந்தாலும் அவரை உபசரித்தான்.ஆனால் துர்வாசர் மகிழ்ந்ததாக தோன்றவில்லை.

தன் மாமா சகுனியிடம் இப்படி தெருவில் போகிறவர்களையும் காட்டுவாசிகளையும் உபசரிக்கும் நிலைக்கு வந்துவிட்டேனே என்று துரியோதன் புலம்பினான்சகுனி "டேய் கவலைப்படாதேஇதையே நமக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ளலாம்நான் சொல்கிறபடி செய்துர்வாசரை வழி அனுப்பும் போது நைச்சியமாக பேசி அவரை காட்டில் வசிக்கும் பாண்டவர்களிடம் அனுப்பிவிடுஅவருடைய ஆசீர்வாதங்கள் பலிக்குமோ என்னவோஅவருடைய சாபம் ஒரு வழியாக்கிவிடும்இங்கேயே ராஜோபசாரங்களால் திருப்தி அடையாதவர் அங்கே காட்டில் பாண்டவர்கள் செய்யக்கூடிய சிறு உபசாரத்தால் எப்படி திருப்தி அடைவார்சாபம் கொடுப்பார்நமக்கு நல்லது!” என்றான்.

துரியோதனன் அதே போல துர்வாசர் கிளம்பும் போது அவரை நமஸ்கரித்து, “ஸ்வாமிஎனக்கு கிடைத்த இதே பாக்கியம் என் சகோதரர்களுக்கும் கிடைக்க வேண்டும்காட்டில் வசிக்கும் பாண்டவர்களிடம் சென்று அவர்களது உபசாரத்தையும் தாங்கள் ஏற்க வேண்டும் ” என்று வேண்டிக்கொண்டான்துர்வாசருக்கும் பாண்டவர்களை காண வேண்டும் என்று தோன்றியதால் அவரும் பாண்டவர்களைத் தேடிக்கிளம்பினார்.காட்டில் அவர்களை ஒரு நடுப்பகல் தாண்டிய நேரத்தில் கண்டுபிடித்தார்.பாண்டவர்கள் அவரை வரவேற்று உபசரித்தனர்பக்கத்தில் நதியில் நீராடி வருகிறோம்உணவு தயாராகட்டும் என்று சொல்லி அனைவரும் நீராடச்சென்றனர்பாண்டவர்கள் திகைத்தனர்சூரியன் கொடுத்த பாத்திரத்தில் இருந்து தினசரி உணவு எடுத்து இருக்கும் அனைவருக்கும் பரிமாறிவிட்டு கழுவி வைத்துவிட்டால் அடுத்த நாள்தான் உணவு கிடைக்கும்
 
ஆபத்து வந்தால்தானே நாம் கடவுளை நினைக்கிறோம்த்ரௌபதி க்ருஷ்ணனை வேண்டினாள்கண்ணாஇது என்ன சோதனைஎல்லாருக்கும் உணவிட்டுவிட்டு பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டேனேஇப்போது திடீரென்றூ உணவு தயாரிக்க என்ன செய்வேன்எங்கே போவேன்முனிவர் வேறு மஹா கோபிஷ்ட்டராயிற்றேநீதான் காப்பாற்ற வேண்டும்!
உடனே அங்கே க்ருஷ்ணன் வந்து சேர்ந்தான்.

இப்போதுதான் உன்னை நினைத்தேன்ஒரு விஷயம்!
உன் விஷயம் எல்லாம் அப்புறம் ஆகட்டும்இப்போது எனக்கு மஹா பசி.உணவிடு!
ஹாகண்ணா நீயுமா என்னை சோதிப்பாய்?
என்ன சோதனைஅதெல்லாம் ஒன்றுமில்லைசாப்பாடு போடு.
அதைத்தான் சொல்கிறேன்உணவு பாத்திரம் காலி.
பரவாயில்லை இருப்பதை சாப்பிடுகிறேன்.
பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டேனே!
பரவாயில்லை அதை இங்கே கொண்டு வா!

பாத்திரத்தில் ஒரு மூலையில் ஒரே ஒரு பருக்கை சாதமும் கீரையும் ஒட்டிக்கொண்டு இருந்ததுத்ரௌபதி தலை குனிந்தாள்!
க்ருஷ்ணன் பருக்கையை எடுத்து உண்டான்தண்ணீர் குடித்தான் ஏதோ பெரிய விருந்து சாப்பிடது போல ஏப்பம் விட்டான்சரி சரிநான் வருகிறேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டான்!

நீராடி கடன் முடித்து கரையேறிய துர்வாசர் மற்றும் அவரது சிஷ்யர்களுக்கு திடீரென்று வயிறு நிரம்பிய உணர்வுஇன்னும் ஒரு பருக்கைக்கூட உள்ளே போக முடியாது என்ற நிலைஇப்போது பாண்டவர்கள் உணவிட்டால் அதை எப்படி சாப்பிடுவதுபேசாமல் அவர்கள் கிளம்பி வேறு திசையில் போய்விட்டனர்!
--
ஆந்திராவில் மதனப்பள்ளி என்றொரு ஊர்அக்கம் பக்கம் எல்லாம் மலைவாசிகள்குறவர்கள் வசிக்கும் கிராமங்கள் ஏறத்தாழ 30-40 இருந்தன.அங்கே மஹா பெரியவா கேம்ப்உள்ளூர்வாசிகள் அன்னக்கொடி கட்டி அன்னதானம் செய்து கொண்டு இருந்தனர்அன்னக்கொடி கட்டிவிட்டால் வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அன்னதானம் செய்தே தீர வேண்டும்திடீரென்று ஒரு நாள் இந்த மலைவாசிகளிடம் ஒரு சலசலப்பு.டவுனில் அன்னதானம் செய்கிறார்களாமேநாமும் போய் விருந்து சாப்பிட்டு வரலாம்காலையில் கிளம்பி ஆங்காங்கே மற்றவர்களையும் கூட்டிக்கொண்டு மதனப்பள்ளியை நோக்கி நடக்கலாயினர்கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி சுமார் 200- 250 பேர் அன்னதான கூடத்தை நோக்கிப் போய் கொண்டு இருந்தனர்ஆனால் அங்கேயோ அன்றைய உணவுப்பறிமாறல் முடிந்துவிட்டதுவழக்கமாக இவ்வளவு பேர் என்று ஒரு கணக்கில்தானே சமைப்பார்கள்இந்த நேரத்தில் இத்தனை மலைவாசிகள் உணவுக்கு வருவதாக தகவல் உணவு கூடத்துக்கு போயிற்றுஅங்கே பொறுப்பில் இருந்தவர்கள் கையை பிசைந்தனர்துளிக்கூட மீதி இல்லையே!பாத்திரங்களைக்கூட கழுவி கவிழ்த்தாயிற்றுபுதிதாக சமைக்கலாம் என்றால் முகாம் முடியும் தறுவாயாக இருந்ததால் ஸ்டோரும் காலிஎன்ன செய்வதுமஹா பெரியவா திருவடிகளே சரணம்!

பிற்பகல் தரிசனம் கொடுத்துக்கொண்டு இருந்த பெரியவா திடீரென்று கார்யஸ்தரை அழைத்தார். “டேய்எனக்கு ரொம்ப பசிக்கறதேடாஏதாவது செய்யேன்!” கார்யஸ்தர் திகைத்தார்பெரியவா இப்பத்தானே பிக்ஷை பண்ணாஅதுக்குள்ள பசிக்கிறதாஎன்ன விந்தை இது?
"என்னடா யோசிக்கறேஎனக்கு இப்ப ரொம்ப பசிடா!"
"சாப்பாட்டுக்கடை முடிஞ்சுடுத்தே பெரிவாஇருந்தது எல்லாத்தையும் பறிமாறியாச்சுமீதி ஒண்ணுமே இல்லையே!"
"சரி சரிநீ ஒண்ணும் பண்ண மாட்டேகிடக்கட்டும்."

தரிசனத்துக்கு வந்திருந்தவர்களை ஒரு நோட்டம் விட்டார்பெரும்பாலும் காலையே தரிசனம் செய்தவர்கள்அதனால் புதிதாக அவர்கள் கையில் ஒன்றுமில்லைஒருவர் மட்டும் கையில் சிறு பொட்டலம் வத்து இருந்தார்.அவரை கிட்டே வரும்படி சைகை செய்தார்அவரும் கிட்டே வந்து தன்னிடமிருந்த பொட்டலத்தை மூங்கில் தட்டில் வைத்து நமஸ்கரித்தார்.பெரியவா பொட்டலத்தை பிரிந்தார்உள்ளே கல்கண்டு இருந்ததுஅதில் ஒன்றை எடுத்தார்அதையும் கீழே வைத்து கையால் தட்ட அது சுக்கு நூறாகியதுஅதில் ஒரு சின்ன துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார்கமண்டலத்தில் இருந்த நீரை ஒரு உத்தரணி அளவு வாயில் விட்டுக்கொண்டார்அடுத்து ஒரு பெரிய ஏப்பம் விட்டார்!

அப்பாடாஇப்பத்தான் பசி அடங்கித்து என்றார்கல்கண்டு கொண்டு வந்தவரைப்பார்த்து நீ இன்னிக்கு மகத்தான தொண்டு செஞ்சிருக்கேஒரு இருநூறு பேருக்கு அன்னதானம் பண்ணிட்டேஎன்றார்!

அன்னதான மண்டபத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது மலை வாசிகள் கூட்டம்ஆச்சுஇதோ இந்த மூலை திரும்பினால் மண்டபம் இருக்கு இடம் வந்துவிடும்.
திடீரென்று அவர்கள் எல்லாருக்கும் வயிறு நிரம்பிய உணர்வுஇன்னும் ஒரு பருக்கைக்கூட உள்ளே போக முடியாது என்ற நிலைஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்இப்ப சாப்பிட முடியாது போலிருக்கேஆமாம் இன்னொரு நாள் வந்து பார்த்துக்கொள்ளலாம்கூட்டம் அப்படியே ஊரை சுற்றி வேடிக்கை பார்த்துவிட்டு கிராமத்துக்கு திரும்ப கிளம்பிவிட்டது!

Thursday, March 10, 2016

பெரியவா

நீ நூறு வயசு இருப்பே, நாலு நக்ஷத்ரம் கொறையும். - மாதர் கற்புடை மங்கைக்கோர் மழை ...
முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சார்யார். மெட்ராஸ் ல அஷ்ட லக்ஷ்மி கோவில் கட்டினவர். ஸ்ரீவைஷ்ணவர். பெரியவா மேலே அஸாத்ய பக்தி. அவர் டைரி ல எழுதி வெச்சு இருக்கார். அவர் இருக்கறச்சே நடந்த விஷயம். அவர் காலத்துக்கு அப்புறம், அவர் க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒருத்தர், அவரோட டைரி ஜெராக்ஸ் பண்ணிண்டு வந்து கொடுத்தார். அதுல ஒரு நிகழ்ச்சி. ஆச்சிரியமா இருந்தது.
வித்வத் ஸதஸ் நடந்தது. பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் வந்திருக்கா. பண்டிதாள் எல்லாம் வந்திருக்கா. அதிலே ஆந்திரால இருந்தும் நிறைய பேர். அதிலே ராஜமுந்திரி ல இருந்து ஒரு வித்வான் வந்திருக்கார்.
அந்த வித்வான்க்கு கால் கிடையாது. அவர் சம்சாரம் அழைச்சிண்டு வந்திருக்கா. அவரை கூடைல தூக்கி தலைல வெச்சி, கூட்டிண்டு வந்திருக்கா.
இது எக்ஷிபிஷன் மாதிரி எல்லோருக்கும். நளாயினி ன்னு கதை எல்லாம் வேணா கேக்கலாம். இந்த காலத்திலேயும் இருக்கும் போல இருக்கே. வித்வத் சதஸ் இவா தான் அட்ராக்ஷன் .
பெரியவாளுக்கும் ஆச்சிரியமா இருந்தது. கார்த்தால சதஸ் க்கு இவர் வரும்போது அந்த அம்மா கூடைல வெச்சு தூக்கிண்டு வர வேண்டியது. அப்புறம் முடிஞ்சாப்புறம் கூடைல வெச்சு தூக்கிண்டு போக வேண்டியது. இப்படியே பண்ணிண்டு இருக்கா.
சதஸ் முடிஞ்சது. அவாளை கூப்டு அப்டின்னா.
அந்த அம்மா வந்தா.
பெரியவா அவ கிட்டே சொன்னா.
நளாயினி ன்னு கதை எல்லாம் தான் சொல்லுவா. இந்த காலத்திலேயும், இந்த இருபதாம் நூற்றாண்டிலேயும் கால் இல்லாத புருஷனை கல்யாணம் பண்ணிண்டு, குடித்தனம் பண்ணினது மட்டும் இல்லே. அவர் இங்கே போகணும், அங்கே போகணும் ன்னா, தூக்கி தலைல வெச்சுண்டு வர்றா. எப்பேர்ப்பட்ட பதிவ்ரதை. இந்த காலத்திலேயே இருக்கேன்னா, அந்த காலத்திலே ஏன் இருந்திருக்க முடியாது? நீ வந்தது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ரொம்ப சந்தோஷம்.
நிறைய சந்தோஷங்களை தெரிவித்த பின் மேலும் தொடர்ந்தார் பிரபு.
ஒன் வாயால ரெண்டு வார்த்தை என்னைப் பத்தி ஏதான சொல்லு. ஒன் வாயால கேக்கணும் போல இருக்கு.
நான் எப்பேர்ப்பட்டவன்?
இவர் இப்படி கேட்டவுடன் அந்த அம்மா சொன்னாள்.
ஒன்னை பத்தி நான் என்ன சொல்லறதுக்கு இருக்கு? நீ தான் ஈஸ்வரன். பெரிய அவதாரம். ஒன்னால தான் வேதமும் தர்மமும் இருக்கு.
ஹாங் ஹாங் என்று கேட்டுக்கொண்டிருந்தார் பெரியவா.
இதெல்லாம் என்ன? எல்லாரும் தான் இதை சொல்லிண்டு இருக்காளே, தெரிஞ்ச கதை, வேறே எதுவும் புதுசா சொல்லு என்றார்.
அந்த அம்மா சொன்னார்.
நீ நூறு வயசு இருப்பே, போ என்றாள் அவள், ஆசிர்வாதம் செய்வது போல.
தொடர்ந்தாள் அவள்,
நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்.
இதை சொன்ன ஒடனே பெரியவா முழிச்சிண்டுட்டா. இதுக்கு மேலே விட்டா இன்னும் எல்லா அவதார ரகசியம் எல்லாம் வெளிலே வரும். பிரசாதம் கொடுத்தா. அனுப்பிச்சு வெச்சா.
இதை முக்கூர் டைரில எழுதி இருக்கார்.
ஆச்சிரியம். நடந்தது என்ன?
1994 ஜனவரி 8 சித்தி ஆனா, பெரியவா. மே 1994 ல நூறு வயசு பூர்த்தி ஆகி, நூற்றி ஒன்று பிறக்க போறது.
அந்த பதிவிரதை சொன்னது என்ன?
நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே - நாலு அனுஷம் நக்ஷத்ரம் கொறஞ்சுது.
ஜனவரி 8, அனுஷம், அன்னியோட அவதார பூர்த்தி.
அப்புறம் தான் தோணித்து.
இன்னும் ஒரு நாலு மாசம் இருந்திருக்கக் கூடாதா, நூறு வயசு பூர்த்தி. செஞ்சுரி போட்டிருக்கலாமே?
பதிவிரதை வாக்கியம். அது தப்பா ஆச்சுன்னா?
பதிவிரதை வாக்கியம் தப்பு ஆகக் கூடாதே!
ஆச்சிரியம். பெரியவா சரித்ரம் தோண்டத் தோண்ட இப்படி பல விஷயங்கள்..
.
நன்றி - ஸ்ரீ கணேச சர்மா, 'தெய்வத்தின் குரல்' உபன்யாசத்தில்.
இதோ தெய்வத்தின் குரல்.
வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை
மாதர் கற்புடை மங்கைக்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே.
என்று சொல்லியிருக்கிறது. இதிலே ‘நீதி மன்னர் நெறி’ என் ஜூரிஸ்டிக்ஷனில் [அதிகார எல்லைக்குள்] இல்லாத விஷயம். அதனால் அதைப் பற்றி நான் கவலையோ, ஸந்தோஷமோ படுவதற்குப் பொறுப்பாளி இல்லை.
ஆனால் வேதியரை வேதம் ஓதப் பண்ணுவதும், மாதர்களை கற்பு நெறி தவறக்கூடிய ‘சான்ஸ்’ களுக்குக் காட்டிக் கொடுக்காமல், காமம் புகுமுன்பே பதியை ஈச்வரனாக பாவிக்கக் கொடுத்து, அப்புறம் அவன் ஒருத்தனையன்றி மனஸ் கொஞ்சங் கூடச் சலிக்காத பாதிவ்ரயத்தை ஏற்படுத்தித் தருவதும் என் பொறுப்புதான். இந்த இரண்டுக்கும் என்னாலானதைச் செய்ய வேண்டும் என்றுதான் ஓயாமல் நினைத்துக் கொண்டு எதையாவது திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.
Goal ரொம்பவும் எட்டத்தில்தான் இருக்கிறது. என் பிரயத்தனத்தைவிட ஜாஸ்தி வேகத்தோடு அது விலகி விலகிப் போய்க் கொண்டேயிருக்கிறது. அதற்காக இந்த ரேஸில் நான் ஓய்ந்து விடக்கூடாது. அல்லது இப்போது வந்திருக்கிற நாகரிகப் போக்குகள் தான் சரி என்று ‘ஆமாம் பூசாரி’ யாகத் தலையாட்டி விடவும் கூடாது. ‘போனது போனது தான்; சீர் செய்து சாத்தியப்படாது. இப்போது ஏற்பட்டிருக்கிற கலிப் பிரவாஹத்தைத் தடுத்து மாற்றுவது நடக்காத காரியம்’ என்று விட்டு விடுவதற்காக என்னை இங்கே [பீடத்தில்] உட்கார்த்தி வைத்திருக்கவில்லை.
அநாதி காலமாக இந்த தேசத்தில் உயர்ந்த நிலையில் இருந்து வந்திருப்பதும், இரண்டாயிரம் வருஷமாக இந்த மடம் பரிபாலித்து வந்திருப்பதுமான வேத அபிவிருத்தியையும் ஸ்திரீதர்மங்களையும் என் காலத்தில் நான் வாயை மூடிக்கொண்டு வாரிக்கொடுத்துவிட்டு ‘ஜகத்குரு’ பட்டம் சூட்டிக்கொண்டு, ஸாக்ஷாத் பகவத்பாதாளின் பெயரை வைத்துக் கொண்டிருந்தால் அதைவிடப் பெரிய தோஷம் இல்லை.
பகவான் [கீதையில்] சொன்ன மாதிரி ஜயாபஜயம் அவன் கையில் இருக்கிறது என்று விட்டுவிட்டு, நான் பாட்டுக்கு முன் வைத்த காலைப் பின் வைக்காமல், என் பிரயத்தனத்தை விடாமல் பண்ணிக் கொண்டேதான் போக வேண்டும்.
ரிஸல்ட் என்னுடைய ‘ஸின்ஸரிடி’யையும், அந்தரங்க சுத்தத்தையும், தபஸையும் பொறுத்து அமையும். கணிசமான பலன் இதுவரைக்கும் ஏற்படவில்லை என்றால் என் ஸின்ஸிரிடி போதவில்லை, என் மனஸ் சுத்தமாகவில்லை, என் தபஸ் குறைச்சல் என்றுதான் அர்த்தம். லோகம் என்னை எத்தனை ஸ்தோத்திரம் பண்ணினாலும் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது.
Thanks to Sri.Karthi Nagarathinam and Shri Halasya Sundaram Iyer

Wednesday, March 9, 2016

மஹா சிவராத்திரியை முன்னிட்டு இரு சம்பவங்கள்.

ஸ்ரீமடம் எசயனூரில் முகாம். வந்திருந்த பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டும், சிலரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டும் இருந்தார்கள் ஸ்ரீ பெரியவா. பிற்பகல் மணி இரண்டு ஆகிவிட்டது. சுட்டெரிக்கும் வெயில். காலையில் உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு அடி கூட நகரவில்லை.
அப்போது அந்த கிராமத்திலிருந்து இரண்டு பேர் வந்தார்கள் - சிப்பாய், வெங்கடேசன் என்று பெயர். தினமும் தரிசனத்துக்கு வருவதால் ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு பரிச்சயமாகியிருந்தார்கள். இருவரும் நேரே ஸ்ரீ பெரியவாளிடம் போனார்கள். 'இப்போ மணி என்ன தெரியுமா? பொழுது விடிஞ்சதலிருந்து ஒரு வாய் தண்ணி கூட குடிக்காம இருந்த இடத்த விட்டு அசையாம உட்கார்ந்திருக்கியே, எதுக்கு பட்டினி கெடக்கே? போய் சாப்டு' என்றார்கள்.
சுற்றி இருந்த தொண்டர்கள் திகைத்துப் போனார்கள். எவர் முன்னால் ராஜாக்களும், கோடீஸ்வரர்களும், அரசு அதிகாரிகளும், அவ்வளவு ஏன், பிரதம மந்திரியும், ஜனாதிபதியும் தலை வணங்கி நிற்கிறார்களோ, அந்த மஹானை, இரு கிராம வாசிகள் 'நீ, போ' என்று ஏகவசனத்தில் பேசுகிறார்களே? கடவுளே?
ஸ்ரீ பெரியவா மெல்லச் சிரித்துக் கொண்டு சொன்னார்கள் 'நான் சந்யாசம் வாங்கிக்கறதுக்கு முன்னாடி அப்பா, அம்மா, பெரியவர்கள் தான் என்னை வா, போ என்பார்கள். இந்த இரண்டு குடியானவர்களுக்கும் என்னிடம் ரொம்ப வாத்சல்யம். பக்தி. நான் சாப்பிடலையேன்னு கவலை. அதுதான் ரொம்ப பாசத்தோட உத்தரவு போடறா, எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?.
உடனே அந்த இடத்திலிருந்து எழுந்து விட்டார்கள். தொடர்ந்து நீராடல், நித்ய கர்மா, இத்யாதி. பிக்ஷைக்கு தயாரான போது மணி நான்கு!
************************
நெய்வேலி மகாலிங்கம். 'கண்ணப்ப நாயனார்' என்று ஸ்ரீ பெரியவாளாலேயே புகழப் பட்டவர். ஸ்ரீ சரணரிடம் உரத்த குரலில் தான் பேசுவார். களங்கமில்லாமல் மனதில் தோன்றியதை அப்படியே கொட்டி விடுவார். அருகிலிருந்து கேட்பவர்களுக்கு அவர் மீது வெறுப்புக் கூட வந்துவிடும், 'என்ன இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறாரே' என்று. ஆனால் ஸ்ரீ ஸ்வாமிகளோ ஆடாமல், அசையாமல் அவர் சொல்வதை ஆனந்தமாக கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஒரு நாள் மகாலிங்கம் ஸ்ரீ பெரியவாளிடம் சொன்னார் 'அப்பா, நீ வெயில், மழைல ஊர் ஊரா அலையறே, கொலப் பட்டினி இருக்கே, ஆனா உன்ன பாக்க வரவங்க எல்லாரும் வயிறு முட்ட சாப்டுட்டு காரு, ட்ரைன், பஸ்சுன்னு வாகனங்கள்ல சொகுசா வராங்க. 'பெரியவா, பெரியவா' ன்னு சொன்னவுடனே நீயும் அவங்களோட பக்தியை மெச்சி ஆசிர்வாதம் பண்றே, ஆனா இவங்க யாரும் உன்னப் பத்தி கவலைப் படறதே இல்ல. இந்தா பிஸ்கட், மருந்து, டானிக் எல்லாம் கொண்டு வந்திருக்கேன். வேளாவேளைக்கு சாப்பிடு. I am the only son of my father. அதனால, என் வீட்டுக்கு வந்து அங்கேயே இரு'.
ஸ்ரீ பெரியவா மெல்லச் சிரித்த வண்ணம் அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருப்பார்கள். 'இப்படியெல்லாம் பேசக் கூடாது' என்று ஒரு முறை கூட தடுத்ததில்லை.
காளஹஸ்தி குடுமி நாதருக்கு பசிக்குமே என்று கவலைப் பட்டு மாமிசத்தை உண்ணக் கொடுத்த திண்ணனுக்கும், பிஸ்கட் கொண்டு வந்த மகாலிங்கத்திற்கும் வித்யாசமில்லை. இரண்டு மனங்களும் அன்பு மயமாகவே இருந்தன. இரண்டு பக்தர்களுக்குமிடையே பல நூற்றாண்டுகள் இடைவெளி இருந்தது. ஆனால், காலகாலன் மாறுவதில்லை. காளஹஸ்தியில் கண்ணப்பனுக்காக கற்சிலையாகவும் இருப்பார், நெய்வேலி மகாலிங்கத்திற்காக காஞ்சியில் காவி தரித்து உலாவிக் கொண்டும் இருப்பார் !
இவர்களெல்லோரும் அறுபத்தி நாலாவது நாயன்மார்களாக மனதில் தோன்றியது இந்த அறுபத்தி நாலாவது எபிசோடை எழுத உத்தேசித்து புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் போது. அதனால் எழுதிவிட்டேன். (ஸ்ரீ பிரதோஷம் வெங்கட்ராம அய்யரையும், ஸ்ரீ முசிறி தீக்ஷிதரையும் அறுபத்தி நான்காவது நாயன்மார்களாகவே அழைத்திருக்கிறார்கள் ஸ்ரீ பெரியவா).

ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர





Source: Shri. Krishnamurthy Krishnaiyer

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top