Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Saturday, November 28, 2015

பெரியவாளின் பெரும் கருணை ....!!!

(!பழங்களில் [பழம்+கள்] உள்ள 'கள்ளை' ஒழித்து, பழத்தை மட்டும் தன் குழந்தைகளுக்கு ஊட்டினார்.-பெரியவா)
சிவாஸ்தானத்தில் பெரியவா தங்கியிருந்தபோது, காட்டுப்புத்தூரை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் தர்சனம் பண்ண வந்தார். அவர் கொண்டு வந்த காணிக்கை என்ன தெரியுமா? ரெண்டு ரஸ்தாளி வாழைப்பழத்தார்கள். ஒவ்வொன்றிலும் பத்து,பன்னெண்டு சீப்புகள் இருக்கும். ஒரு தாரையே ரெண்டு பேர் சுமக்க வேண்டியிருந்தது. அத்தனை பெரிய பழங்கள்! சீப்பு...... கனம் என்பதால் மட்டும் இல்லை, பெரியவாளுக்கு சமர்ப்பிக்கும்போது, பழங்கள் நசுங்காமல் இருக்கவே ரெண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர்.

அன்போடு தன்னைக் காண வந்த பக்தருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டு, சிஷ்யரைக் கூப்பிட்டார்.

"டேய்! அந்த ரெண்டு தார்களையும் ஜாக்ரதையா எடுத்து உள்ள வை ! பழத்த பாத்தியோ ! எவ்வளவு மொழு மொழுன்னு இருக்கு!........ஒரு பழம் சாப்ட்டாலே போறும் போலருக்கு. சாப்பாடே தேவையில்லே!....நாலு நாளைக்கு ஒங்களுக்கெல்லாம் கவலையே இல்லே!"

ம்ஹும் ! இது வெறும் சிஷ்யாளோட கல்பனை. ஏனென்றால் பெரியவா இந்த மாதிரி உத்தரவிடவில்லை..........மாறாக,

"டேய்! இந்தா.......இந்த ரெண்டு தாரையும் கொண்டு போய், வாசல்ல ஒரு பெரிய புளியமரம் இருக்கோல்லியோ?........அதோட கெளைல [கிளை] கைக்கு எட்டறா...ப்ல கட்டி தொங்க விடுங்கோடா !" என்று சொன்னார்.

அந்யாயம்! அக்ரமம்!...பெரியவா இப்பிடி எல்லாம் எங்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது! நாங்கள் இதை பலமாக கண்டிக்கிறோம்......என்றெல்லாம் வாயால் சொல்லவே முடியாது என்பது மட்டுமில்லை...........மனசால் கூட நினைக்க முடியாது.

சிவாஸ்தானம்-தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாடுபவர்கள். பொறுப்பில்லாத ஆண் 'குடி' மக்கள் நன்றாக குடித்து விட்டு, பசியோடு வீட்டுக்கு போய் அங்குள்ள பெண்கள், குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள். இது அன்றாடம் வாடிக்கையாக நடப்பது! நம்முடைய கருணைக் கடலுக்கு இது தெரியாதா? ஏழை பங்காளன் இல்லையா?

வாழைத்தார் கட்டின அன்று இரவு அவ்வழியாக குடித்துவிட்டு வீட்டுக்கு போனவர்கள், வாழைதாரிலிருந்து பழத்தை பிய்த்து சாப்பிட்டுவிட்டு போனார்கள். பெரியவா 'ப்ளான்' படி, பசி வெகுவாக அடங்கியதால், வீட்டில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அடியிலிருந்து தப்பித்தனர். [பெரியவாளுக்கு தெரியாத சூக்ஷ்மமா?]

மறுநாள், நிரந்தர உத்தரவு வந்தது............."மடத்துக்கு வர்றவா குடுக்கற பழத்தையெல்லாம் புளியமரத்ல தொங்க விடுங்கோ !" அதிலிருந்து புளிய மரத்தில் தினமும் வாழைப்பழம் !!

சுமார் பதினைந்து நாட்களுக்குப்பின், அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர் வந்தார்........."ஸாமி, இப்போ ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. 'தண்ணி' போடறதையே நிறுத்திட்டாங்க ஸாமி! குடிசைல பொம்பளைங்க, கொளந்தைங்க எல்லாம் இப்போ சந்தோஷமா இருக்காங்க ஸாமி!..." வணங்கினார்.

மாற்றத்துக்கு காரணம்............வாழைப்பழமா? இல்லை. ஞானப்பழமாக பூமியில் உதித்த பெரியவாளின் பெரும் கருணை மட்டுமே இது!

பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்த பெரியவா, பழங்களில் [பழம்+கள்] உள்ள 'கள்ளை' ஒழித்து, பழத்தை மட்டும் தன் குழந்தைகளுக்கு ஊட்டினார்.

Thursday, November 26, 2015

உப்புமா பற்றி -இன்று இரண்டு சம்பவங்கள் ஒரே பதிவில் பெரியவாளின் நகைச்சுவையும்,விளக்கமும்

சம்பவம்-ஒன்று.-ரா.கணபதி.இரண்டு-ஸ்ரீமடம் பாலு

சமய குருவை [பெரியவர்] சமையல் துறையில் கொஞ்சூண்டு
ருசிக்கலாம்.[ரா.கணபதி எழுதியது]
'உப்புமா' என்ற பெயர் அந்த உணவகைக்கு ஏன் வந்தது என்று அந்த
விநோத வித்தகர் கேள்வி எழுப்புகிறார். எவராலும் 'கன்வின்ஸிங்'காக காரணம் சொல்ல இயலவில்லை.
அவரே சொல்கிறார், "அது uppuma இல்லே,ubbuma!
ப [pa]- காரத்தை,ப [ba] காராமாச் சொல்லணும்.
ஒடச்ச மாவையோ,ரவையையோ வென்னீர்ல கொட்டின ஒடனேயே
அது வாணலி பூரா உப்பிடறதோல்லியொ? சாதம் வடிக்கறச்சேயும் அரிசி உப்பறது.ஆனா அதுக்கு ரொம்ப நாழி ஆறது.நொய்யும், ரவையுமோ சட்னு பாத்திரம் பூரா உப்பிடறது.அதனால்தான் 'உப்புகிற மாவு'ங்கிற அர்த்தத்துல அந்தப் பேர் ஏற்பட்டிருக்கு."பச்சை மாவும் பவள வாயும்.


--------------------------------------------------------------------------------------------------------


சம்பவம்-இரண்டு ஸ்ரீமடம் பாலு.



இரவு வேளை.
விஷய ஞானமுள்ள அடியார் ஒருவர் வந்து பெரியவாள் முன் உட்கார்ந்தார்.

“ஆகாரம் பண்ணியாச்சா?”

” ஆச்சு”

“என்ன சாப்பிட்டே?”

உப்புமா

ஒரு நிமிட இடைவெளிக்குப் பின் பெரியவாள் சொன்னார்கள். “உனக்கு ஒரு கதை தெரியுமோ?உப்புமாக் கதை”

“தெரியாது”

“கேளு. ஒரு பக்தன் ஸ்ரீரங்கத்துக்கு; போனான். பெருமாளை சேவித்தான். ஒரு சத்திரத்தில் ராத்திரி சாப்பிடப் போனான். உப்புமா போட்டார்கள். ப்புமா சரியாக வேகவில்லை.சின்னச் சின்னதாய் நிறைய கல் வேறே இருந்தது. பல்லில் அகப்பட்டு, வாயெல்லாம் புன்ணாகி , சிவப்பாகி விட்டது. நிறைய மிளகாய் தாளித்துப் போட்டிருந்ததால், காரம் தாங்கவில்லை. கண்களில் நீர் வழிந்து, சிவந்து போச்சு. அப்போ, ரொம்ப சிரமத்திலே ஒரு பாட்டுப் பாடினான். உனக்குத் தெரியுமோ?”

“தெரியாது”

“என்ன அப்படிச் சொல்றே? பச்சை மால் மலை போல் மேனி…..”

“இது எனக்குத் தெரியும்.”

“இவன் கொஞ்சம் மாற்றிப்பாடினான் . பச்சை மா (வேகாத மாவு) , மணி போல் மலை (உப்புமாவில் மணி மணியாகக் கற்கள்) , பவள வாய் (சாப்பிட்டவனுக்கு, வாய் புண்ணாகிச் சிவந்தது), செங்கண் ( காரம் தாங்காமல் கண்ணீர் வழிந்ததில், கண்களும் சிவந்து விட்டன), அச்சுதா….”

அருகிலிருந்தவர்களுடன் பெரியவாளும் சேர்ந்து கொண்டு குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள்

Tuesday, November 24, 2015

பிரதமை திதியை பெருமைப்படுத்திய பெரியவா

(அஷ்டமி,நவமி,பிரதமை)
கட்டிரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
அனுராத [அனுஷம்] நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில்
அதிர்ஷ்டம் இதற்க்குத்தான். ஏனெனில் வேதத்திலேயே
அனுராதாவை உயர்த்தி வைத்திருக்கிறது.எந்தக்
காரியத்துக்கும் வேத வித்துகளிடமிருந்து உத்தரவு
வாங்கிக்கொள்ள வேண்டுமென்பது சாஸ்திரம்.
அதனை அனுக்ஞை என்பர். இதற்கு உள்ள மந்திரத்தில்
அனுராதாவுக்கு ஆஹூதி அளித்து [வேள்வி செய்து]
மித்ரனின் [நண்பன்] அருளால் நூறாண்டுகள் இருக்க
வேண்டுமென்று வேண்டப்படுகிறது.வேத,வேள்வி
தழைக்கப் பிறந்தவரின் திருநட்சத்திரத்தின் சிறப்பும்
எப்படி இருக்கிறது பாருங்கள்!.

பெரியவா பிறந்த திதி பிரதமை.பதினைந்து திதிகளில்
அஷ்டமி,நவமி,பிரதமை மூன்றும் தள்ளத் தக்கவை.
எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டோம்.

இதற்காக இந்த மூன்று திதிகளும் இறைவனிடம் சென்று
அழுதனவாம்."நீதான் எல்லா திதிகளும் என்று மந்திரம்
இருந்தாலும்,எங்களை எல்லோரும் தள்ளிவிடுகிறார்களே!
நாங்கள் என்ன தவறு செய்தோம்" என்று கேட்டனவாம்.

உடனே ஸ்வாமி,"அப்படியா? கவலையை விடுங்கள்...
மற்ற திதிகளைவிட உங்கள் மூவரையும் சிறப்பாகக்
கொண்டாடும்படி நான் செய்து விடுகிறேன்!" என்று ஆறுதல்
தந்தார்.அதன்படி நவமியில் ராமனாகவும்,அஷ்டமியில்
கிருஷ்ணனாகவும்,பிரதமையில் பரமாசார்யாளாகவும்
அவதாரம் பண்ணி,அந்த நாட்களை வீட்டுக்கு வீடு
குதூகலமாகக் கொண்டாட வைத்தார்.

அதிலும் இந்த பிரதமைக்கு 'போனஸ்' என்னவென்றால்,
மாதத்தில் இரண்டு அஷ்டமி,இரண்டு நவமி,இரண்டு பிரதமை
வருகிறது.அஷ்டமியில் ஒன்றை மட்டும் உயர்த்தினார்.
ஒன்றை விட்டுவிட்டார்.நவமியிலும் அவ்வாறே செய்தார்.

ஆனால்,பிரதமையில் இரண்டையுமே பெருமைப்படுத்தியிருக்கிறார்.

கிருஷ்ணபட்சப் பிரதமையில் பெரியவா பிறந்தார்.சுக்லப்பட்சப்
பிரதமையில் மறுபிறவி எடுத்தார்.அதாவது சந்நியாசம் பூண்டார்.
ஆகவே இரண்டு பிரதமைகளும் கொண்டாடப்படுகின்றன.
ஒரு வேளை பிரதமையை அதிகமாக அழ விட்டுவிட்டோமே
என்று பச்சாதாப்பட்டு இப்படி செய்தார் போலும்.

[கிருஷ்ணாவதாரத்துக்கு பின் பெரியவா திரு அவதாரம் யுகங்கள்
கடந்து விட்டதல்லவா]

Sunday, November 22, 2015

இன்று-பெரியவா ரெசிபி-2 குழம்பு +வேப்பம்பூ பச்சடி

"நீங்க எல்லாரும்...பெரிய ஞானிகள்! 
அகங்காரத்தை மறந்தேவிட்டவர்கள் நானும்கூட....
இன்னும் முயற்சி பண்ணிண்டிருக்கேன்...."

(இன்று-பெரியவா ரெசிபி-2  குழம்பு +வேப்பம்பூ பச்சடி)
கட்டுரையாளர்.;ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை
தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.


பெரியவாளைச் சுற்றிலும் அடியார்கள் கூட்டம்.
ஒருபுறம் ஆண்கள்;இன்னொரு புறம்,பெண்கள்.

அன்றைய தினம் பெரியவாள்,இலேசான'
விஷயங்களைப் பேசி,அடியார்களை சிரிப்பு
வெள்ளத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று, ஆண்கள் பக்கம் திரும்பி,"உங்களில்
யாருக்கு சமையல் செய்யத் தெரியும் என்று கேட்டார்கள்
அடுக்களைப் பக்கம் எட்டிப் பார்த்திராதவர்கள்
உள்பட,எல்லோரும், 'எனக்குத் தெரியுமே!' என்று
ஒரு குரலாகச் சொன்னார்கள்.

"குழம்பு எப்படிச் செய்வே?" என்று அடுத்த கேள்வி.

முதலில் நின்றவர், ஆரம்பித்தார்; "புளியைக்
கரைத்து, மிளகாய்ப் பொடியும் உப்பும் போட்டு,
நன்றாகக் கொதி வந்ததும் இறக்கணும்."

அடுத்தவர்; முதலில்,கடுகு-மிளகாய் தாளித்துக்
கொள்ளணும்.புளி-உப்பு-மிளகாய்ப்பொடி சேர்த்து,
வெந்த பருப்பைப் போட்டு ஒரு கொதி வந்ததும்,
கறிவேப்பிலை-கொத்தமல்லித் தழை போடணும்..."

இன்னொருவர்;"புளி-மிளகாய் இரண்டையும்
அம்மியீல் அறைத்து உப்பு போட்டு, வெந்த பருப்பைச்
சேர்த்து,பெருங்காயம் துளியூண்டு போட்டு
வேக வைக்கணும்..."

.....இப்படியெல்லாம், அதி அற்புதமான முறைகளை
ஒவ்வொருவராகச் சொல்லி முடித்தார்கள்.

பின்,பெரியவாள் முறை வந்தது.

"நீங்க எல்லாரும்...பெரிய ஞானிகள்!
அகங்காரத்தை மறந்தேவிட்டவர்கள் நானும்கூட....
இன்னும் முயற்சி பண்ணிண்டிருக்கேன்...."

பெரியவாள் என்ன சொல்கிறார்கள்?

"ஜனங்கள் குழம்பிப் போவதற்குக் காரணம்,
தான் என்ற நினைவுதான். நீங்கள் எல்லோரும்
தான் என்ற நினைவே இல்லாதவர்கள்!.
புளி-மிளகாய்-உப்பு-பெருங்காயம் மட்டும் நினைவில்
இருக்கு; தான் என்ற எண்ணமே வரவில்லை.
ஞானிகள் நிலை இதுதானே.

(குழம்புக்கு தான் சேர்க்காததை-புரிந்து கொண்டனர்)

கயிலால மலையின் அடிவாரத்துக் கற்சிலைகளாக
நின்றார்கள் அடியார்கள்."வேப்பம்பூ பச்சடி ப்படிச் செய்கிறீர்கள்?"
என்று பெரியவாள் கேட்டார்கள்.

நாங்கள், அசட்டுப் பிசட்டென்று என்னென்வோ சொன்னோம்.

பெரியவாள் சொன்னார்கள்.

"இந்த மூன்று சாமான் மட்டும் போதாது. தேன், நெய்
சேர்க்கணும்.பக்குவமாகச் செய்தால், பச்சடி சுவையாக
இருக்கும். இப்படிச் செய்யப்பட்ட பச்சடியை,மற்றவர்களுக்குக்
கொடுக்கணும்,.அவர்கள் வசியமாகி விடுவார்கள்!

"முதல்லே, அம்பாளுக்கு நைவேத்யம். அம்பாள் வசியமாகி
விடுவாள்! அடுத்து, அகத்துக்காரருக்கு, பின்னர் மனைவி
என்ன சொன்னாலும், "சரி.....சரி..." என்று தலையாட்டுவார்!
அப்புறம், வீட்டில் வேலை செய்கிறவர்களுக்குக் கொடுக்கணும்.
முணுமுணுக்காமல் வேலை செய்வார்கள்!"

பிறகு, உக்கிராணத்தில் சொல்லி,வேப்பம்பூ பச்சடி செய்துகொண்டு
வரச் செய்து,எங்களுக்கெல்லாம் கொடுத்தார்கள்.

"இது எதற்குத் தெரியுமா?"

ஒருத்தி சொன்னாள்; நாங்களெல்லோரும் பெரியவா
ஆக்ஞைப்படி நடக்கணும்-என்பதற்காக...."

"அது சரி...இது,திரிபுரசுந்தரி பிரஸாதம். நீங்க எல்லாரும்
அம்பாளின் பக்தைகளா எப்போதும் இருக்கணும்...."

எங்கள் கையில் இருந்தது,ஒரு ஸ்பூன் வேப்பம்பூ
பச்சடியாகப் படவில்லை;அமுதக் கடலாகவே தோன்றியது.

Friday, November 20, 2015

ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!-

““ஆமா……இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…
(பெரியவாளின் ஞாபக சக்தி)

(நெட்டில் படித்த ஒரு ஸ்வாரஸ்ய தகவல்)

ஒருநாள் காலை தர்சனத்துக்கு ஒரு வயஸான தம்பதி வந்திருந்தனர். பெரியவா ஒரு வாதா மரத்தின் கீழ் அமர்ந்து தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். தம்பதிகள் பழங்களை சமர்ப்பித்துவிட்டு நமஸ்கரித்தனர்.

“இதே மாதிரி வாதா மரம் ஒங்காத்து வாசல்ல இருந்ததே!……இன்னும் இருக்கோ?….”

“ஆமா…இன்னும் இருக்கு! பெரியவா பாத்து இருவது வர்ஷத்துக்கு மேலேயே இருக்கும்….இப்போ நன்னா பெருஸா வளந்திருக்கு; நெறைய காய்க்கறது; தெருப் பசங்க கல்லை விட்டெறிஞ்சு வாதம் பழத்தை பொறுக்கித் திங்கறதுகள்..”

“கூடத்ல ஒரு பத்தாயம் இருந்துதே!….அதுல கரையான் அரிச்சு ரிப்பேர் பண்றா..போல ஆயிருந்துதே!..”

“ஆமா….அத அப்போவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதுலதான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வெக்கறோம்….”

“ஒரு சே…ப்பு பசுமாடு கன்னு போடாம இருந்துதே!…..”

“அது ஆறு கன்னு போட்டுது பெரியவா…..இப்போ, சமீபத்லதான் தவறிப் போச்சு. எல்லாக் கன்னும் நன்னா இருக்கு…நல்ல வம்சம்….”

“ஐயங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே! திருநக்ஷத்ரம் எம்பதுக்கு மேலே இருக்குமோ இப்போ?….”

“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வர்ஷம் முன்னாடி, வைகுண்டம் போய்ட்டார் பெரியவா….”

“எட்டுக்குடி முருகனுக்கு தைப்பூசம் காவடி எடுக்கற வழக்கமாச்சே! ஒங்க புத்ராள் யாராவுது வந்து காவடி எடுக்கறாளா?…”

“பெரியவா க்ருபைல எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்துண்டிருக்கு..”

“வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள்,பம்மல் சம்மந்த முதலியார் நாவல்கள், மதனகாமராஜன், விக்ரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நெறைய இருந்துதே! இருக்கா? யாராவுது படிக்கறாளா?….”

“எல்லாப் புஸ்தகமும் இருக்கு…ஆனா யாரும் படிக்கறதில்லே பெரியவா…..”

“ராமாயண பாராயணம் பண்ணிண்டிருந்தியே! நடக்கறதா..?”

“கண் செரியாத் தெரியறதில்லே, அதுனால ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”

கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! பாட்டி சொன்னாள்….”எத்தனையோ வர்ஷத்துக்கு முன்னாடி பெரியவா எங்க க்ராமத்துக்கு வந்தப்போ, எங்காத்துக்கு வந்து, கொஞ்ச நேரம் இருந்திருப்பேள் …..ஆனா, எப்டி இத்தனை நுணுக்கமா எல்லாத்தையும் பாத்து, இத்தனை வர்ஷத்துக்கப்புறம் கூட எதையுமே மறக்காம, அவ்வளவு ஞாபகமாக் கேக்கறேளே!…பெரியவா கேட்டதுல பாதி விஷயங்கள், அந்தாத்துல இருக்கற நேக்கே நெனைவுல இல்லே!……”

பெரியவா படாரென்று ஒரு பெரிய விஷயத்தை போட்டுடைத்தார்……..

“ஆமா……இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…

” ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!

குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள். நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்

Tuesday, November 10, 2015

Happy Diwali to all Mahaperiava devotees.
Video Courtesy: Mr G Sivaraman


Sunday, November 8, 2015

காஞ்சி காமாட்சி விஸ்வரூப தரிசனம்: கோயிலில் நடந்த அதிசய சம்பவம்!
பிப்ரவரி 27,2013-தினமலரில் வெளியான கட்டுரை.

Temple images
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பிரம்மோற்ஸவம் நடந்து வருகிறது. விழாவின் கடைசிநாளன்று, அம்பாள் விஸ்வரூப காட்சி தருவாள். இதையொட்டி, அக்கோயிலில் நடந்த அதிசய சம்பவம் ஒன்றைக் கேளுங்கள்.

காஞ்சி மகாப்பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்த போது, ஒரு பெண் பெரியவரிடம் வந்து, சுவாமி! என் மகளுக்கு திருமணம். ஆனால், திருமாங்கல்யம் வாங்கக்கூட வசதியில்லை, என்று சொல்லி அழுதார்.பெரியவர் அந்தப் பெண்ணிடம்,நீ போய் காமாட்சியம்மனை தரிசனம் செய்துவிட்டு இங்கே வா, என்றார்.அந்தப் பெண்ணும் கோயிலுக்குச் சென்று அம்பாளைத் தரிசித்து விட்டு, பிரகார வலம் வரும்போது, கீழே ஒரு திருமாங்கல்யம் கிடப்பதைக் கண்டார். மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக் கொண்டு மடத்திற்கு வந்து பெரியவரிடம் காட்டி, அது தனக்கு கிடைத்த விதம் பற்றி சொன்னார்.பெரியவர், அதை என் முன்னால் வைத்துவிடு, உனக்கு வேறு மாங்கல்யம் தருகிறேன், என்றார்.

அந்த சமயத்தில் ஒரு பக்தர் வந்தார். அவர் இரண்டு திருமாங்கல்யங்களை பெரியவர் முன் வைத்தார்.பெரியவா! என் மகளுக்கு திருமணம். திருமாங்கல்யத்தை உங்களிடம் கொடுத்து ஆசி பெற வந்தேன், என்றார்.அது சரி! உன் மகளுக்கு ஒரு மாங்கல்யம் தானே தேவை. இன்னொன்று எதற்கு? என்றார்.அது இங்கு வரும் ஏழை பக்தர்களில் யாராவது ஒருவருக்கு உங்கள் மூலமாக கொடுக்க! என்றார் பக்தர்.அப்படியா! என்ற பெரியவர், கூடுதலாக இருந்த மாங்கல்யத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்து, உன் மகள் கல்யாணத்தை சிறப்பாக நடத்து, என்றார்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்குள் இன்னொரு பெண் ஓடி வந்தார். சுவாமி! நான் காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். என் மாங்கல்யம் எங்கோ தவறி விழுந்து விட்டது. ஐயோ! கோயிலுக்கு வந்த இடத்தில் இப்படி ஆகி விட்டதே! தாங்கள் தான் என்னை சுமங்கலியாக இருக்க வாழ்த்த வேண்டும்! என்று அழுதார்.அழாதே! இதோ! நீ தொலைத்தது இந்த திருமாங்கல்யம் தானா சொல்! என்று ஏழைப்பெண்மணி தன்னிடம் ஒப்படைத்ததைக் காட்டினார். இதுதான்! என்று ஆனந்தமாக வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டார் அந்தப் பெண்.

மூன்று பேருக்கு ஒரே நேரத்தில் மாங்கல்ய பாக்கியம் அருளியவள் காஞ்சி காமாட்சி.
 குருவருளும், திருவருளும் ஒரு சேர கிடைக்கும் இடம் காஞ்சி என்றால் அது மிகையல்ல

Friday, November 6, 2015

மானத்தைக் காத்த மஹா பெரியவா

(வலையில் படித்த தகவல்)
கர்நாடகா மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் பெரியவா யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். ராமதுர்க என்ற கிராமத்தில் உள்ள ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

எல்லோரும் ஆனந்தமாக நதியில் ஸ்நானம் பண்ணினார்கள். பெரியவா கரையில் அமர்ந்து ஜபம், அனுஷ்டானங்களை பண்ண தொடங்கினார்.

எல்லாம் முடிந்ததும் அருகில் இருந்த ரெண்டு சிஷ்யர்களை கூப்பிட்டு, ” ரெண்டு பேரும் ஒங்களோட மேல் துண்டை கீழ போடுங்கோடா !” என்றார். யாருக்கும் ஏன்? என்று புரியவில்லை. மிக மிக புதுமையான உத்தரவு! போட்டார்கள்.

பெரியவா சுற்றி அங்கே இங்கே பார்த்தார்……….மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரே ஒரு குட்டிப்பையன் நின்று கொண்டு பெரியவாளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“இந்தாடா……….கொழந்தே! இங்க வா” சைகை பண்ணி அழைத்தார். வந்தான். நதி மேற்கிலிருந்து கிழக்காக இரு கரைகளையும் ஒட்டி அசாத்தியமாக சுழித்து சுழித்து ஓடிக் கொண்டிருந்தது. பெரியவா அந்த குட்டிப்பையனிடம் கன்னடத்தில்,

” இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே…….அந்த யங்குஸ்தர்கடே கொடப்பா! ” [இந்த ரெண்டு வஸ்த்ரங்களையும் அதோ ஆத்தோரம் தெரியற பொண்ணுகிட்ட குடு] என்று சொன்னார்.

அந்த பையனும் எதிர் கரைக்கு நீந்தி போய், நீருக்குள் மூழ்கி, தலையை மட்டும் வெளியில் வைத்துக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் ரெண்டு வஸ்த்ரங்களையும் குடுத்தான். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அந்த பெண் அதே நிலையில் அமர்ந்திருந்திருக்கிறாள். பாவம்!

ஆற்றின் சுழிக்கும் வேகத்தில், அவளுடைய வஸ்த்ரங்கள் போயே போய்விட்டன ! எப்படி வெளியே வருவாள் ? வீட்டுக்கு எப்படிப் போவாள்? படிப்பறிவு சற்றும் இல்லையானாலும், பண்பாடு போகவில்லையே அந்த கிராமத்துப் பெண்களுக்கு!

“இந்த சனங்கல்லாம் எப்பத்தான் இந்த எடத்தை விட்டு எழுந்து போவாங்களோ!” என்று மடத்தினரைப் பார்த்து அவள் நொந்து போயிருக்கக்கூடும். யாத்ரையில் வந்தவர்கள் பார்வை நூறடிக்கப்பால் போகவில்லை. அவசியமும் ஏற்படவில்லை

. அவளுடைய இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு தெரியாமல் யாருக்கு தெரியும்? அந்தர்யாமியில்லையா? த்ரௌபதி “கோவிந்தா” என்று அலறியதும், எங்கோ த்வாரகையில் இருந்தாலும், அவளுடைய அந்தர்யாமியாகவும் இருப்பவன் அவன்தானே! ஓடி வந்து அவள் மானத்தை காப்பாத்தவில்லையா? இந்த பெண் மனஸில் போட்ட ஓலம் கேட்டு, தானே முன்வந்து, அவள் மானத்தை காத்தார். அவள் மேல் துண்டுகளை சுற்றிக் கொண்டு, வெளிய வந்து அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வீட்டை நோக்கி போனாள்.


Source: Shri. வரகூரான் நாராயணன்

Wednesday, November 4, 2015

பெரியவரும் ஆங்கிலமும்

கட்டுரையாளர்- கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மொழி ஆராய்ச்சியில் எடுத்தாலும் அப்படித்தான் பெரியவா
பேசும் ஆங்கிலம் மிகவும் கடினமாக உயர்ந்ததாக இருக்கும்.
அகராதியைப் புரட்டாமல் அர்த்தம் தெரியாது.நூறு வருடத்துக்கு
முன்பே அவர் கான்வென்டில் படித்தவர்.ஆகவே அற்புதமாக
ஆங்கிலத்தில் உரையாடுவார்.

ஒரு முறை விமான நிலையத்தைக் காண, பெரியவா மீனம்பாக்கம்
சென்றார். எல்லா இடங்களையும் பார்வையிட்டபின் இன்ஜினீயரிங்
செக் ஷன் வந்தது. அங்குள்ளவற்றை ஒருவர் விவரிக்கப்
பிரயத்தனப்பட்டார். அவருக்கு தமிழில் சரளமாகப் பேச வரவில்லை

ஆனால் பெரியவாளுக்குத் தமிழில் சொல்லாவிட்டால் புரியாதே
என்று நினைத்தார். தெரிந்தவரை சொல்லிக் கொண்டிருந்தவரைப்
பெரியவா, "பிளேன் மேலே பறக்கும்போது காதைத் துளைக்கும்படியா
ஒரு சத்தம் வரதே அது கேட்டுண்டேதான் இருக்குமா? என்று கேட்க

"ஒரு குறிப்பிட்ட லெவல் வரைதான் கேட்கும். அதற்கு மேலே
போயிட்டா விமானச் சத்தம் கேட்காது!" என்றார். அந்தப் பொறியாளர்.

"ஓ! அதைத்தானே Stratosphere-னு சொல்லுவா!" என்று பெரியவர்
சொல்ல...பொறியாளருக்குத் தூக்கிவாரிப்போட்டது.

'இத்தனை நேரம் தமிழ் வார்த்தைகளையே தேடிக் கொண்டிருந்தேனே..
இவருக்கு போயா ஆங்கிலம் தெரியாது என்று நினைத்தேன்!'
என்று வெட்கினார்.

இப்படித்தான் அடிக்கடி உத்தியோகம் மாறுகிற ஒருவர் வந்தார்.
"இப்போ எதில் இருக்கே?" என்று கேட்கிறார் பெரியவர்.

அவருக்குப் புரியணுமேன்னு நினைச்சு மிகவும் கஷ்டப்பட்டு,
"அந்தக் கணக்கு போடற யந்திரத்துக்கு பேப்பர் தரும் வேலை!"
என்றார்

. "Computer Stationery-தானே நீ சொன்னது?" என்று
பெரியவர் அவர் சங்கடத்தைத் தவிர்க்கிறார்.எந்த மொழியை
எடுத்துக்கொண்டாலும் அதில் ஆழங்கால் கண்டவராயிற்றே

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top