Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Wednesday, December 31, 2014

"வெள்ளிக் கிண்ணம் எங்கே?"

வலையில் படித்த கட்டுரை.

பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டது திரு நடராஜசாஸ்த்ரிகள் குடும்பம்.

அவர் தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில்டிரஸ்டியாக இருந்த சமயம். பெரியவா தஞ்சாவூரில்முகாம். பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜாமாலையை அணிவிக்க வேண்டும்

என்று கொள்ளை ஆசை! பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்துரொம்ப அழகான குண்டு குண்டு பன்னீர் ரோஜாக்களை
பொறுக்கி எடுத்து கட்டச்சொல்லி, பெரியவாளை தர்சனம்
பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு போனார். ஆனால்,இவர் போய் சேருவதற்குள் தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார்.

நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப வருத்தம்! மாலையோடுவீடு திரும்பினார். அவருடைய மனைவி”எல்லாமே பெரியவாதானே? இந்த மாலையைஅம்பாளுக்கே போட்டுடுங்கோ. பெரியவாளும் அம்பாளும்வேறவேறயா என்ன?” என்றாள்.

“இல்லே, இல்லே, அம்பாளும் பெரியவாளும் வேறவேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற பெரியவாளுக்குத்தான்! ஆமா. இதுஅவருக்கு மட்டுந்தான்!” என்று
கண்டிப்பாக சொல்லிவிட்டு, அதைபூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார்.

மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும்,பெரியவா மேலவீதி சங்கரமடத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம்வந்து, நடராஜ சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில்
தர்சனம் பண்ண வருவதாக தெருவே திமிலோகப்பட்டது! சாஸ்த்ரிகள் வீட்டிலும்ஒரே பரபரப்பு!

“பெரியவா வரா! பெரியவா வரா! தர்சனம் பண்ணிக்கோங்கோ!”மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில்சொல்லிக் கொண்டேபோனார்.உடனே வீடுகளுக்குள் இருந்தவர்கள்நண்டு சிண்டுவிலிருந்து தாத்தா, பாட்டி வரை அவசரஅவசரமாக பூர்ணகும்பம், குத்துவிளக்கு, புஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்!

பெரியவாளுடைய வேகம் அப்படி இருக்கும்! குள்ள உருவமாக இருந்தாலும், அவர் என்னவோசாதாரணமாக நடப்பது போல் இருக்கும். ஆனால், கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால்பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும். அந்தவேகம், உண்மையான மஹான்களுக்கே உரித்தான லக்ஷணம்!

பெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டு,சற்றும் எதிர்பாராமல், “டக்”கென்று சாஸ்த்ரிகள் வீட்டுக்குள் நுழைந்து,
ரொம்ப ஸ்வாதீனமாகபூஜை ரூமுக்குள் போய், முன்தினம்
“பெரியவாளுக்குத்தான்!” என்று முத்ரை குத்தப்பட்டு,ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையைஅப்படி லாவகமாக, யானை தும்பிக்கையால் தூக்குவதுபோல், அருட்கரத்தால் தூக்கி, தானே தன் தலையில் சூடிக்கொண்டார்!

சாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரைதாரையாக நீர் வழிய, விக்கித்து நின்றனர்!ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்! இப்படி ஒருபரமகருணையா? என்று சொல்லமுடியாத ஆனந்தம்!திக்கு முக்காடினார்கள்.

எல்லாரும் நமஸ்கரித்ததும், விடுவிடென்று வாசல்பக்கம்நடந்தார். சற்று நின்று திரும்பி,“எங்கே வெள்ளிக்கிண்ணம்?”
என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார்.

அவ்வளவுதான்! ஆடிப் போய்விட்டார் சாஸ்த்ரிகள்!நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக் கிண்ணம்குடுக்கணும் என்று சொல்லி, ஒருபுது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார்.

அவர்கள் நேற்று பேசியதைஏதோ பக்கத்திலிருந்து கேட்டதுபோல்அல்லவா’வெள்ளிக்கிண்ணம்
எங்கே?’ என்று கேட்கிறார்! ஓடிப் போய் பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டுவந்து சமர்ப்பித்தார்.

பகவான் ஸர்வவ்யாபி! என்பதைஅன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக கண்டார்கள், உணர்ந்தார்கள்!

Source: Shri Varagooran Narayanan

Monday, December 29, 2014

பெரியவாளின் நகைச்சுவை.

 

ஒரு நாள் மடத்தில் உள்ளவர்களிடம்," மகா விஷ்ணுவும்
கொசுவும் ஒண்ணு, உனக்குத் தெரியுமா?" என்றார் பெரியவா.
வழக்கம்போல் தானே அந்தப் புதிரையும் விடுவிக்கிறார்.

"விஷ்ணுவின் கையில் சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கு,கொசுவும்
சக்கரமாய் சுற்றிக்கொண்டுதான் இருக்கு. கெட்டவர்கள்
விஷ்ணுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கிக் கொள்வார்கள்.
கண் வலிக்காரர்கள் கொசுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கி
விடுவார்கள். ச்ருதியிடம் விளையாடுபவர் விஷ்ணு.
[ச்ருதி=வேதம்] ச்ருதி முனையில் ஙொய் என்று கத்திக்கொண்டு
விளையாடும் கொசு [ச்ருதி=காது]!"

இந்த சிலேடை சொன்னதுக்குக் காரணம் மடத்தோடு
அவர்கள் இருந்த முகாமில் கொசுத்தொல்லை தாங்க முடியாது.
"அனந்தசயனம் பண்ணும் பெருமாள்தான் கொசுன்னு
நினைச்சுண்டேன்னா, பகவத் ஸ்மரணையோடு தூங்கலாம்!"
என்று எல்லோரையும் சமாதானம் செய்வாராம். இப்படி
எந்தக் கஷ்டத்தையும் நகைச்சுவை ததும்ப சரி செய்துவிடும்
அழகையும் பெரியவாளிடம் அனுபவிக்க முடியும்.

ஒரு நீண்ட உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. பெரியவாளும்
கேட்டார். ஒரு வழியாக உபன்யாசம் முடிந்தது.உடனே பெரியவா
"சாக்கு கிடைச்சுதுன்னு நன்னா ரொம்ப நேரம் சொன்னயா?"
என்றார்: "நீ ஒக்காந்துண்டிருந்தது ஒரு சாக்குமேலே...
அந்த சாக்கைச் சொன்னேன்!" என்று தமாஷ் பண்ணினாராம்.

[எஸ்.கணேச சர்மா எழுதிய புத்தகத்தில் இருந்து
ஒரு பகுதி டைப் செய்யப்பட்டது]

Source: Shri Varagooran Narayanan

Saturday, December 27, 2014

"நம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்"'

 

நமக்கெல்லாம் சன்யாசி என்றால் எப்பொழுதும் பூஜை, உபன்யாஸம் என்று மிகவும் கடுமையாக இருப்பார்கள் என்ற எண்ணம் உணடு. ஆனால் மஹா பெரியவாளோ சிறந்த நகைச்சுவையாளர். இதோ ஒரு சின்ன உதாரணம்.

ஒருமுறை ஸ்வாமிகள் மஹாரஷ்ராவில் ஒரு கிராமத்தின் சாலையோரம் முகாமிட்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக நான்கு பேர்கள் ஒரு யானையின் மீது ஏறிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள். ஸ்வாமிகள் அவர்களைப்பார்த்ததும் மடத்தின் சிப்பந்தியைக் கூப்பிட்டு அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். அவர்களும் யானையைவிட்டு இறங்கிவந்து ஸ்வாமிகளை சேவித்துவிட்டு கைகட்டி நின்றார்கள்.

ஸ்வாமிகள் அவர்களைப் பார்த்து" யார் நீங்கள்? யானையின்மீது ஏறிக்கொண்டு எங்கு செல்கிறீர்கள்?"என்று வினவினார். அவர்களும் பவ்யமாக "ஸ்வாமிகளே நாங்கள் ஒருகாலத்தில் செல்வந்தராக இருந்தோம். எங்கள் தகப்பனார் எல்லாவற்றையும் தானம் தருமம் செய்து பின்னர் எஞ்சிய யானையை எங்களுக்கு அளித்து அதன் மூலம் பிழைத்துக்கொள்ளச் சொன்னார். நாங்களும் அதன் மீது ஏறிக்கொண்டு ஊர் ஊராகச் செல்வோம்.பக்திப்பாடல்கள் பாடுவோம்,புராணக் கதைகளைச் சொல்லுவோம். எங்களுக்கும் பொருள் கிடைக்கும் யானைக்கும் தீனி கிடைக்கும் இப்படி எங்கள் ஜீவன்ம் செல்லுகிறது என்றார்கள்.

அதற்கு ஆசார்ய ஸ்வாமிகள் புன்சிரிப்புடன் கூறினார்" இங்கேயும் இதான் நடக்கிறது. இவா என்னை யானை மாதிரி ஊர் ஊராக அழைத்து கொண்டு செல்கிறார்கள். நானும் அங்கே அங்கே போய் உபன்யாஸம் செய்கிறேன் ஸ்லோகங்களைப் பாடுகிறேன். போற இடத்தில இவாளுக்கும் சாப்பாடு பணம் எல்லாம் கிடைக்கிறது. எனக்கும் பூஜை செய்ய இடம் பக்தர்கள் எல்லாம் கிடைக்கிறது. நம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்"' என்றார் மாஹாஸ்வாமிகள்.

கூடியிருந்த பக்தர்கள் ஸ்வாமியின் நகைச்சுவை உணர்ச்சியையும் பக்தர்களை தனக்கு சாமானமாக பாவிக்கும் உயர்ந்த உள்ளத்தையும் கண்டு மெய்சிலிர்த்தார்கள்

"நம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்"'<br /><br />நமக்கெல்லாம் சன்யாசி என்றால் எப்பொழுதும் பூஜை, உபன்யாஸம் என்று மிகவும் கடுமையாக இருப்பார்கள் என்ற எண்ணம் உணடு. ஆனால் மஹா பெரியவாளோ சிறந்த நகைச்சுவையாளர். இதோ ஒரு சின்ன உதாரணம்.<br /><br />ஒருமுறை ஸ்வாமிகள் மஹாரஷ்ராவில் ஒரு கிராமத்தின் சாலையோரம் முகாமிட்டிருந்தார்கள். அப்போது அந்த வழியாக நான்கு பேர்கள் ஒரு யானையின் மீது ஏறிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள். ஸ்வாமிகள் அவர்களைப்பார்த்ததும் மடத்தின் சிப்பந்தியைக் கூப்பிட்டு அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். அவர்களும் யானையைவிட்டு இறங்கிவந்து ஸ்வாமிகளை சேவித்துவிட்டு கைகட்டி நின்றார்கள்.<br /><br /> ஸ்வாமிகள் அவர்களைப் பார்த்து" யார் நீங்கள்? யானையின்மீது ஏறிக்கொண்டு எங்கு செல்கிறீர்கள்?"என்று வினவினார். அவர்களும் பவ்யமாக "ஸ்வாமிகளே நாங்கள் ஒருகாலத்தில் செல்வந்தராக இருந்தோம். எங்கள் தகப்பனார் எல்லாவற்றையும் தானம் தருமம் செய்து பின்னர் எஞ்சிய யானையை எங்களுக்கு அளித்து அதன் மூலம் பிழைத்துக்கொள்ளச் சொன்னார். நாங்களும் அதன் மீது ஏறிக்கொண்டு ஊர் ஊராகச் செல்வோம்.பக்திப்பாடல்கள் பாடுவோம்,புராணக் கதைகளைச் சொல்லுவோம். எங்களுக்கும் பொருள் கிடைக்கும் யானைக்கும் தீனி கிடைக்கும் இப்படி எங்கள் ஜீவன்ம் செல்லுகிறது என்றார்கள்.<br /><br /> அதற்கு ஆசார்ய ஸ்வாமிகள் புன்சிரிப்புடன் கூறினார்" இங்கேயும் இதான் நடக்கிறது. இவா என்னை யானை மாதிரி ஊர் ஊராக அழைத்து கொண்டு செல்கிறார்கள். நானும் அங்கே அங்கே போய் உபன்யாஸம் செய்கிறேன் ஸ்லோகங்களைப் பாடுகிறேன். போற இடத்தில இவாளுக்கும் சாப்பாடு பணம் எல்லாம் கிடைக்கிறது. எனக்கும் பூஜை செய்ய இடம் பக்தர்கள் எல்லாம் கிடைக்கிறது. நம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்"' என்றார் மாஹாஸ்வாமிகள்.<br /><br /> கூடியிருந்த பக்தர்கள் ஸ்வாமியின் நகைச்சுவை உணர்ச்சியையும் பக்தர்களை தனக்கு சாமானமாக பாவிக்கும் உயர்ந்த உள்ளத்தையும் கண்டு மெய்சிலிர்த்தார்கள்

Source: Shri Varagooran Narayanan

Thursday, December 25, 2014

"சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் ..................... இப்படித்தான்! (பெரியவாளுக்கே வைத்யமா?!)

மெட்ராஸ் சம்ஸ்க்ருத கல்லூரியில் முகாம்.

பெரியவாளுக்கு நெஞ்சு வலி. ரொம்ப தவித்தார்.

ஆயுர்வேத மருந்து சாப்பிட்டும், வலி குறையவில்லை
.
மானேஜருக்கு ரொம்ப கவலையாகிவிட்டது. ரொம்ப தயங்கி தயங்கி பெரியவாளிடம் சொன்னார் " ஆழ்வார்பேட்டைல டாக்டர் வைத்யநாதனுக்கு சொல்லி அனுப்பறேன்.

பெரியவா உத்தரவு குடுத்தா.......... ”நேக்கு என்னமோ அவர் வந்து பாத்தா தேவலைன்னு படறது........" அதிசயம்! உத்தரவாயிற்று!

டாக்டர் வைத்யனாதையர் வந்து பட்டுத் துணி போட்டு, நாடித்துடிப்பு பார்த்தார். சரியா இருந்தது. ரத்த அழுத்தம் பார்த்தார். ஏகமா ஏறி இருந்தது. " B P எக்கச்சக்கமா எகிறியிருக்கு. ஒடனே மருந்து சாப்பிடணும் பெரியவா"

"ஆட்டும்...ஆட்டும். ஒரு அரைமணி கழிச்சு வந்து மறுபடி டெஸ்ட் பண்ணு"

அரைமணி கழித்து டெஸ்ட் பண்ணினால், ஒரேயடியா கீழே போயிருந்தது. நமுட்டாக சிரித்துக் கொண்டே....... " அப்போ டெஸ்ட் பண்ணிட்டு B P ஜாஸ்தின்னு சொன்னே, இப்போ என்னடான்னா..... ரொம்ப கம்மி..ங்கறே. B P ஜாஸ்தியானா என்னாகும்? கம்மியானா என்னாகும்?"

"B P ஜாஸ்தியானா ஹெமரேஜ் ஆகி உசிருக்கே ஆபத்து! கொறைஞ்சு போனா, மயக்கம் போட்டு கீழே விழுந்துடுவா. அதுவும் ஆபத்து."

பெரியவாளான குழந்தை கேட்டது " ஆனா, நேக்கு அப்பிடி ஒண்ணும் ஆகலியே? ஹெமரேஜும் வரல்லே..... மயக்கமும் வரலியே?"

டாக்டர், மண்டையை குடைந்தார் " அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு! ரத்த அழுத்தம் மேல போறதும், கீழ இறங்கறதும் சாதாரணமா நடக்க கூடிய காரியமில்லை.

பெரியவா சரீரம், பெரியவாளோட ஆக்ஞைக்கு கட்டுப்பட்டு நடக்கறதுன்னு தோணறது......."

சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் ..................... இப்படித்தான்!

"சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் ..................... இப்படித்தான்!<br /><br />(பெரியவாளுக்கே வைத்யமா?!)<br /><br />மெட்ராஸ் சம்ஸ்க்ருத கல்லூரியில் முகாம்.<br /><br /> பெரியவாளுக்கு நெஞ்சு வலி. ரொம்ப தவித்தார்.<br /><br /> ஆயுர்வேத மருந்து சாப்பிட்டும், வலி குறையவில்லை<br />. <br />மானேஜருக்கு ரொம்ப கவலையாகிவிட்டது. ரொம்ப தயங்கி தயங்கி பெரியவாளிடம் சொன்னார் " ஆழ்வார்பேட்டைல டாக்டர் வைத்யநாதனுக்கு சொல்லி அனுப்பறேன்.<br /><br />பெரியவா உத்தரவு குடுத்தா.......... ”நேக்கு என்னமோ அவர் வந்து பாத்தா தேவலைன்னு படறது........" அதிசயம்! உத்தரவாயிற்று!<br /><br />டாக்டர் வைத்யனாதையர் வந்து பட்டுத் துணி போட்டு, நாடித்துடிப்பு பார்த்தார். சரியா இருந்தது. ரத்த அழுத்தம் பார்த்தார். ஏகமா ஏறி இருந்தது. " B P எக்கச்சக்கமா எகிறியிருக்கு. ஒடனே மருந்து சாப்பிடணும் பெரியவா"<br /><br />"ஆட்டும்...ஆட்டும். ஒரு அரைமணி கழிச்சு வந்து மறுபடி டெஸ்ட் பண்ணு"<br /><br />அரைமணி கழித்து டெஸ்ட் பண்ணினால், ஒரேயடியா கீழே போயிருந்தது. நமுட்டாக சிரித்துக் கொண்டே....... " அப்போ டெஸ்ட் பண்ணிட்டு B P ஜாஸ்தின்னு சொன்னே, இப்போ என்னடான்னா..... ரொம்ப கம்மி..ங்கறே. B P ஜாஸ்தியானா என்னாகும்? கம்மியானா என்னாகும்?"<br /><br />"B P ஜாஸ்தியானா ஹெமரேஜ் ஆகி உசிருக்கே ஆபத்து! கொறைஞ்சு போனா, மயக்கம் போட்டு கீழே விழுந்துடுவா. அதுவும் ஆபத்து."<br /><br />பெரியவாளான குழந்தை கேட்டது " ஆனா, நேக்கு அப்பிடி ஒண்ணும் ஆகலியே? ஹெமரேஜும் வரல்லே..... மயக்கமும் வரலியே?"<br /><br />டாக்டர், மண்டையை குடைந்தார் " அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு! ரத்த அழுத்தம் மேல போறதும், கீழ இறங்கறதும் சாதாரணமா நடக்க கூடிய காரியமில்லை.<br /><br />  பெரியவா சரீரம், பெரியவாளோட ஆக்ஞைக்கு   கட்டுப்பட்டு நடக்கறதுன்னு தோணறது......."<br /><br />சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால் ..................... இப்படித்தான்!

Source: Shri Varagooran Narayanan

Tuesday, December 23, 2014

பெரியவா நிகழ்த்திய விளையாட்டு : (மௌன விரதத்தால் வந்த வினை)

மஹா பெரியவா தினமும் விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து ஒரு மணி ஜபத்தை முடித்துக் கொண்டு ஸ்நானம், பூஜையை செய்வார்கள். ஸ்ரீ பாலு தினமும் விடியற்காலையில் மடியாக, ஸ்நானத்திற்க்கு வேண்டிய ஜலத்தை கிணற்றிலிருந்து இரண்டு பெரிய குடங்களில் கொண்டுவந்து வைப்பார். அதற்குள், ஸ்ரீ வேதபுரியோ ஸ்ரீ ஏகாம்பரமோ பெரியவா கொட்டகைக்கு வேண்டிய ஜலத்தை சில மரக்குடங்களில் ஜன்னல் வழியாக கொடுப்போம். பெரியவா தனது அறையைத் தானே சுத்தம் செய்து ஜலம் தெளித்துவிட்டு ஒரு மணி ஜபத்திற்கு ஆசனம் போட்டுக் கொண்டு உட்காருவார்கள்.

சிஷ்யர்கள் பஞ்சாங்கம் படித்து த்தி, வார, யோக, நக்ஷத்திரங்கள் கரணங்களைச் சொல்லுவோம். அவர்களும் ஒரு மணி ஜபம் முடித்துவிட்டு ஸ்நானத்திற்குத் தயார் செய்துகொள்வார்கள்.

ஒரு நாள் பெரியவா மெளனமாக தனது காரியங்களைச் செய்துகோண்டு ஒரு மணி ஜபமும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பெரியவா, ஜபம் முடிந்துக்கொண்டு உள்ளே இருந்து மரக்குடங்களை ஜன்னல் வழியாக வெளியில் தூக்கிப் போட்டுக்கொண்டும், தனது அறையை சுத்தம் செய்துகொண்டும் இருந்தார்கள்.

அன்று பஞ்சாங்கம் படிக்கவில்லை. பெரியவாளே முதல் நாளின் திதி, வார, நக்ஷத்திர, யோக, கரணங்களை கணக்கில் வைத்துக்கொண்டு அன்று ஜப சங்கல்பம் செய்து கொண்டார்கள். ஜபம் முடிந்தவுடன் பெரியவாளுக்கு கரணங்களில் சந்தேகம் வரவே, தான் செய்தது சரிதானா என்று தெரிந்துகொள்ள வேண்டி, மெளனமாதலால், ஜன்னல் அந்தப்பக்கம் ஸ்ரீ வேதபுரியிடம் மேடையில் தனது தலையை முட்டி கரணம் போடுவதுபோல் கேட்டார்கள்.

ஸ்ரீ வேதபுரியோ, அதைத் தவறாகப் புரிந்துகொண்டு “தெரியுமே” என்றார். பெரியவா கையைக் காட்டி, “சொல்” என்பதுபோல் ஜாடை செய்தார்கள். இவரோ, “தன்னை கரணம் போடத் தெரியுமான்னு கேட்கின்றார்” என்று நினைத்து, “தெரியும்” என்று சொல்லி, அந்த சின்ன அறையில் குட்டி கரணமும் போட்டுவிட்டார். அவர் உடல் பட்டு, ஸ்ரீ பாலு கொண்டு வந்த மடி ஜலம் கொட்டிவிட்டது.

பெரியவாளோ ஜன்னலருகில் இவரைக் காணவில்லை என்பதால், தனது அறையை சுத்தம் செய்து விட்டு, சிறிது நேரம் கழித்து, மறுபடியும் ஜாடையாக கேட்க, இவரும் ”இப்போதான போட்டேன்” என்றார். தனது வஸ்திரங்களை நனைத்துக் கொண்டு ஈரத்தோடு இப்பத்தான் போட்டேன் என்றார். குடம் கவிழ்ந்து ஜலம் கொட்டிய சப்தம் கேட்டு சிஷ்யர்கள் வந்து பார்த்தால் இந்த கூத்து. பெரியவாளிடம் என்ன ஆயிற்று என்று கேட்க, முறுபடியும் பெரியவா தனது காதை தொட்டுக் காண்பித்து, பிறகு கையை பொத்திக் கொண்டு சங்கல்பம் செய்வது போல் ஜாடை காண்பித்தார்

. பின்னர், ஸ்ரீ வேதபுரியே பஞ்சாங்கத்தை படித்து அன்றைய யோக கரணத்தை சொன்னார். பின்னர் ஸ்ரீ பாலு வேறு மடி ஜலம் கொண்டு வந்தார். இதுவும் உம்மாச்சி தாத்தாவால் நடத்தபட்ட ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி !!!

பெரியவா  நிகழ்த்திய  விளையாட்டு :<br /><br />(மௌன விரதத்தால் வந்த வினை)<br /><br /> <br /><br />மஹா பெரியவா தினமும் விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து ஒரு மணி ஜபத்தை முடித்துக் கொண்டு ஸ்நானம், பூஜையை செய்வார்கள். ஸ்ரீ பாலு தினமும் விடியற்காலையில் மடியாக, ஸ்நானத்திற்க்கு வேண்டிய ஜலத்தை கிணற்றிலிருந்து இரண்டு பெரிய குடங்களில் கொண்டுவந்து வைப்பார். அதற்குள், ஸ்ரீ வேதபுரியோ ஸ்ரீ ஏகாம்பரமோ பெரியவா கொட்டகைக்கு வேண்டிய ஜலத்தை சில மரக்குடங்களில் ஜன்னல் வழியாக கொடுப்போம். பெரியவா தனது அறையைத் தானே சுத்தம் செய்து ஜலம் தெளித்துவிட்டு ஒரு மணி ஜபத்திற்கு ஆசனம் போட்டுக் கொண்டு உட்காருவார்கள்.<br /><br />சிஷ்யர்கள் பஞ்சாங்கம் படித்து த்தி, வார, யோக, நக்ஷத்திரங்கள் கரணங்களைச் சொல்லுவோம். அவர்களும் ஒரு மணி ஜபம் முடித்துவிட்டு ஸ்நானத்திற்குத் தயார் செய்துகொள்வார்கள்.<br /><br />ஒரு நாள் பெரியவா மெளனமாக தனது காரியங்களைச் செய்துகோண்டு ஒரு மணி ஜபமும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பெரியவா, ஜபம் முடிந்துக்கொண்டு உள்ளே இருந்து மரக்குடங்களை ஜன்னல் வழியாக வெளியில் தூக்கிப் போட்டுக்கொண்டும், தனது அறையை சுத்தம் செய்துகொண்டும் இருந்தார்கள்.<br /><br />அன்று பஞ்சாங்கம் படிக்கவில்லை. பெரியவாளே முதல் நாளின் திதி, வார, நக்ஷத்திர, யோக, கரணங்களை கணக்கில் வைத்துக்கொண்டு அன்று ஜப சங்கல்பம் செய்து கொண்டார்கள். ஜபம் முடிந்தவுடன் பெரியவாளுக்கு கரணங்களில் சந்தேகம் வரவே, தான் செய்தது சரிதானா என்று தெரிந்துகொள்ள வேண்டி, மெளனமாதலால், ஜன்னல் அந்தப்பக்கம் ஸ்ரீ வேதபுரியிடம் மேடையில் தனது தலையை முட்டி கரணம் போடுவதுபோல் கேட்டார்கள்.<br /><br /> ஸ்ரீ வேதபுரியோ, அதைத் தவறாகப் புரிந்துகொண்டு “தெரியுமே” என்றார். பெரியவா கையைக் காட்டி, “சொல்” என்பதுபோல் ஜாடை செய்தார்கள். இவரோ, “தன்னை கரணம் போடத் தெரியுமான்னு கேட்கின்றார்” என்று நினைத்து, “தெரியும்” என்று சொல்லி, அந்த சின்ன அறையில் குட்டி கரணமும் போட்டுவிட்டார். அவர் உடல் பட்டு, ஸ்ரீ பாலு கொண்டு வந்த மடி ஜலம் கொட்டிவிட்டது.<br /><br />பெரியவாளோ ஜன்னலருகில் இவரைக் காணவில்லை என்பதால், தனது அறையை சுத்தம் செய்து விட்டு, சிறிது நேரம் கழித்து, மறுபடியும் ஜாடையாக கேட்க, இவரும் ”இப்போதான போட்டேன்” என்றார். தனது வஸ்திரங்களை நனைத்துக் கொண்டு ஈரத்தோடு இப்பத்தான் போட்டேன் என்றார். குடம் கவிழ்ந்து ஜலம் கொட்டிய சப்தம் கேட்டு சிஷ்யர்கள் வந்து பார்த்தால் இந்த கூத்து. பெரியவாளிடம் என்ன ஆயிற்று என்று கேட்க, முறுபடியும் பெரியவா தனது காதை தொட்டுக் காண்பித்து, பிறகு கையை பொத்திக் கொண்டு சங்கல்பம் செய்வது போல் ஜாடை காண்பித்தார்<br /><br />. பின்னர், ஸ்ரீ வேதபுரியே பஞ்சாங்கத்தை படித்து அன்றைய யோக கரணத்தை சொன்னார். பின்னர் ஸ்ரீ பாலு வேறு மடி ஜலம் கொண்டு வந்தார். இதுவும் உம்மாச்சி தாத்தாவால் நடத்தபட்ட ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி !!!

Source: Shri Varagooran Narayanan

Sunday, December 21, 2014

"பெரியவாளின் வீணை வாசிப்பு"

சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார் பெரியவா. முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும்.

பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார். சென்னையில் இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர்.

பெரியவா வழக்கம்போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர்கள் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார். வந்திருந்த பொதுமக்களும் பிரபல வீணை வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள்.

வித்வான் வாசிக்கஆரம்பித்தார். சுமார் 15 நிமிஷங்கள் வாசித்தார். கேட்டவர்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர். வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட்டார். திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச் சொனார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

அப்புறம் நான்அதை வாசிக்கலாமா என்று பெரியவா கேட்டார். எல்லாருக்கும் திகைப்பு! பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன?

வீணையில் ஸ்ருதி கூட்டி பின்மீண்டும் வித்வானிடம் காட்டினார். இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான்அது மறந்துபோய்விட்டது. அந்த பெரியவர் என்னவென்று சொன்னார்) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு.

சரியா இருக்கு!

பின் பெரியவா வீணை வாசிக்கஆரம்பித்தார். சில நிமிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான் அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்று போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். க்ஷமிக்கணும் க்ஷமிக்கணும் என்று கதறினார்.

அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். கண்ணீரோ ஆறாக ஓடியது. " தப்பு பண்ணிட்டேன் க்ஷமிக்கணும்" என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார்.

வாசித்து முடித்தபின் பெரியவா வீணையை திருப்பிக் கொடுத்தார். "வித்யாகர்வம் ஏற்படக்கூடாது கவனமாக இரு" என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு திரையை போட்டுக்கொண்டார்.

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வித்வான் அழுது கொண்டே வெளியேறினார். கூட வந்த குலபதிக்கு ஒன்றும் புரியவில்லை.

என்னடா ஆச்சு? ஏன் இப்படி அழறே? ஏதோ பெரிய தப்பு செஞ்சா மாதிரி விழுந்து விழுந்து நமஸ்காரம் செஞ்சியே? என்ன ஆச்சு?

ராவணன் சிவபெருமானை சந்தித்து வரங்கள் வாங்கி வருகிறான்.

எதிரில் நாரதர் வந்தார்.

என்னப்பா ரொம்ப சந்தோஷமா வரியே என்ன விஷயம்?

நான் சிவபெருமான்கிட்டே நிறைய வரங்கள் வாங்கி வந்துட்டேன்!

அட அசடே!அவர் பாட்டுக்கு ஏதாவது கொடுத்துட்டேன்னு சொல்லுவார். எதுக்கும் அது வேலை செய்யறதான்னு பாத்துக்க!

என்ன சொல்லறீங்க?வேலை செய்யாமலும் இருக்குமான்னா?

எதுக்கு சந்தேகம்? செஞ்சு பாத்துடு.உனக்கு நிறைய பலம் இருக்கும்ன்னு சொன்னாரா?

ஆமா. சரி,இந்த கைலாசத்தையே தூக்கி பாத்துடலாம்!

கைலாசத்தை ஒன்பது தலை, 18 கைகள் கொண்டு தூக்க அது கொஞ்சம் அசைஞ்சதாம். பார்வதி திடுக்கிட்டுப் போய் சிவனை கட்டிண்டாளாம்!சிவன் சிரிச்சாராம்.

பார்வதி கோபிச்சுக்கொண்டு,ஓய் உமக்குஸ்த்ரீயின் குணம் எப்படி தெரிய போறது? ஒரு பெண்ணா பிறந்து அதை அனுபவியும் ன்னு சொல்ல சிவனும் சரின்னுட்டார். அதனால அவரே சீதையாக பிறந்தார். அதனால்தான் ராவணனுக்கு சீதை மேலே ஒரு ஈர்ப்பு வந்தது. இல்லைன்னா ஜகன்மாதா மீது கவர்ந்து போகணும்ன்னு அப்படி ஒரு எண்ணம் வருமோ?

(இங்கே பெரியவரை திருப்பி கதைக்கு இழுக்க வேண்டி இருந்தது!)

மலை கொஞ்சம்அசைஞ்சதும் பெருமான கால் கட்டை விரலால கொஞ்சம் அழுத்தினார். மலை கீழே உக்கார்ந்து கொண்டது. ஒன்பது தலை 18 கைகள் கீழே மாட்டிக்கொண்டன.

ராவணன் செய்வதுஅறியாமல் திகைச்சு போனான்.

நாரதர் "அட அசடே! சோதனை பண்ணுன்னா இப்படியா கைலாசத்து மேலேயே சோதனை செய்வாய்? " என்றார்.

நாரதரே! தப்பிக்க ஏதாவது வழிசொல்லும்.

அட உனக்குத்தெரியாததா? சிவன் ஆசுதோஷி. சாம கானம் இசைச்சா உனக்கு வேண்டியதை செய்வார்.

நான்தான் மாட்டிக் கொண்டேனே?

பரவாயில்லை, இன்னும் ஒரு தலை இரண்டு கைகள் வெளியேதானே இருக்கு. வீணை இல்லையே?

இதோ நான்தரேன் என்று தன் வீணையை நாரதர் கொடுக்கிறார்.

ராவணனும் ஸாமகானம் இசைத்து சிவ பெருமானை சந்தோஷப் படுத்த அவரும் அவனை விடுவிக்கிறார்.

அது சரி,இந்தக்கதை இங்கே ஏன் வந்தது???

வீணை வித்வான் வாசித்த பாட்டு இந்த கதையைதான் சொன்னது.
இதில் ராவணனின் ஸாமகானம் வந்தபோது அவருக்கு அந்தவரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து யாருக்கு இது தெரியப்போகிறது என்று நினைத்து வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார்.

பெரியவா வீணையைவாங்கி வாசித்ததுஅதே பாடலைத்தான். மாற்றிய வரிகளின்இடத்தில் எவை வர வேண்டுமோ அவற்றையே சரியாக வாசித்துக் காட்டினார். இதை புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன செய்வார்?

"யாருக்குத்தெரிய போறதுன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்னு தோணாம போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன்" என்று நண்பரிடம் சொல்லி அழுதார் வித்வான்

"பெரியவாளின் வீணை வாசிப்பு"<br /><br />இது ஒரு மறுபதிவு<br /><br />சதாராவில் முகாம். ஒரு அரச மரத்தின் கீழ் இருப்பு. அதன் வேரில் தலையை வைத்து படுத்துக்கொள்வார் பெரியவா. முன்னால் ஒரு திரை இருக்கும். தரிசனம் கொடுக்கும் நேரம் அதை திறப்பார்கள். மற்ற நேரம் மூடி இருக்கும்.<br /><br />பிரபல வீணை வித்வான் ஒருவர். பெரியவாளை தரிசித்து தன் திறமையையும் காட்ட விருப்பம் கொண்டார். சென்னையில்  இருந்த குலபதி ஜோஷி என்பவரை பிடித்தார். இருவரும் சதாரா சென்றனர்.<br /><br />பெரியவா வழக்கம்போல தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். இவர்கள் கொஞ்சம் தாமதித்து நமஸ்காரம் செய்து விட்டு உத்தரவு பெற்று வீணையை உறையில் இருந்து வெளியே எடுத்தார். வந்திருந்த பொதுமக்களும் பிரபல வீணை வித்வானின் கச்சேரியை கேட்க ஆர்வத்துடன் தயாரானார்கள்.<br /><br />வித்வான் வாசிக்கஆரம்பித்தார். சுமார் 15 நிமிஷங்கள் வாசித்தார். கேட்டவர்களும் ஆஹா அருமையாக வாசிக்கிறார் என்று ரசித்தனர். வாசித்து முடித்ததும் வீணையை உறையில் இட்டார். திடீரென்று பெரியவா அதை மீண்டும் வெளியே எடுக்கச் சொனார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.<br /><br />அப்புறம் நான்அதை வாசிக்கலாமா என்று பெரியவா கேட்டார். எல்லாருக்கும் திகைப்பு! பெரியவாக்கு வீணை வாசிக்கத்தெரியுமா என்ன?<br /><br />வீணையில் ஸ்ருதி கூட்டி பின்மீண்டும் வித்வானிடம் காட்டினார். இன்ன ராகத்துக்கு (எனக்குத்தான்அது மறந்துபோய்விட்டது. அந்த பெரியவர் என்னவென்று சொன்னார்) ஸ்ருதி கூட்டி இருக்கேன், சரியா இருக்கான்னு பாரு.<br /><br />சரியா இருக்கு!<br /><br />பின் பெரியவா வீணை வாசிக்கஆரம்பித்தார். சில நிமிடங்கள் போனதும் வீணை வித்வான் முகம் மாறியது. வீணை வித்வான் அழ ஆரம்பித்தார். கன்னத்தில் பட பட என்று போட்டுக்கொண்டார். விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். க்ஷமிக்கணும் க்ஷமிக்கணும் என்று கதறினார்.<br /><br />அடுத்த பத்து நிமிடங்களில் ஒரு ஐம்பது முறையாவது நமஸ்காரம் செய்திருப்பார். கண்ணீரோ ஆறாக ஓடியது. " தப்பு பண்ணிட்டேன் க்ஷமிக்கணும்" என்பதையே திருப்பி திருப்பிச் சொல்லிகொண்டு இருந்தார்.<br /><br />வாசித்து முடித்தபின் பெரியவா வீணையை திருப்பிக் கொடுத்தார். "வித்யாகர்வம் ஏற்படக்கூடாது கவனமாக இரு" என்று சொல்லி ஆசீர்வாதம் செய்துவிட்டு திரையை போட்டுக்கொண்டார்.<br /><br />யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வித்வான் அழுது கொண்டே வெளியேறினார். கூட வந்த குலபதிக்கு ஒன்றும் புரியவில்லை.<br /><br />என்னடா ஆச்சு? ஏன் இப்படி அழறே? ஏதோ பெரிய தப்பு செஞ்சா மாதிரி விழுந்து விழுந்து நமஸ்காரம் செஞ்சியே? என்ன ஆச்சு?<br /><br />ராவணன் சிவபெருமானை சந்தித்து வரங்கள் வாங்கி வருகிறான்.<br /><br />எதிரில் நாரதர் வந்தார்.<br /><br />என்னப்பா ரொம்ப சந்தோஷமா வரியே என்ன விஷயம்?<br /><br />நான் சிவபெருமான்கிட்டே நிறைய வரங்கள் வாங்கி வந்துட்டேன்!<br /><br />அட அசடே!அவர் பாட்டுக்கு ஏதாவது கொடுத்துட்டேன்னு சொல்லுவார். எதுக்கும் அது வேலை செய்யறதான்னு பாத்துக்க!<br /><br />என்ன சொல்லறீங்க?வேலை செய்யாமலும் இருக்குமான்னா?<br /><br />எதுக்கு சந்தேகம்? செஞ்சு பாத்துடு.உனக்கு நிறைய பலம் இருக்கும்ன்னு சொன்னாரா?<br /><br />ஆமா. சரி,இந்த கைலாசத்தையே தூக்கி பாத்துடலாம்!<br /><br />கைலாசத்தை ஒன்பது தலை, 18 கைகள் கொண்டு தூக்க அது கொஞ்சம் அசைஞ்சதாம்.  பார்வதி திடுக்கிட்டுப் போய் சிவனை கட்டிண்டாளாம்!சிவன் சிரிச்சாராம்.<br /><br />பார்வதி கோபிச்சுக்கொண்டு,ஓய் உமக்குஸ்த்ரீயின் குணம் எப்படி தெரிய போறது? ஒரு பெண்ணா பிறந்து அதை அனுபவியும் ன்னு சொல்ல சிவனும் சரின்னுட்டார். அதனால அவரே சீதையாக பிறந்தார். அதனால்தான் ராவணனுக்கு சீதை மேலே ஒரு ஈர்ப்பு வந்தது. இல்லைன்னா ஜகன்மாதா மீது கவர்ந்து போகணும்ன்னு அப்படி ஒரு எண்ணம் வருமோ?<br /><br />(இங்கே பெரியவரை திருப்பி கதைக்கு இழுக்க வேண்டி இருந்தது!)<br /><br />மலை கொஞ்சம்அசைஞ்சதும் பெருமான கால் கட்டை விரலால கொஞ்சம் அழுத்தினார். மலை கீழே உக்கார்ந்து கொண்டது. ஒன்பது தலை 18 கைகள் கீழே மாட்டிக்கொண்டன.<br /><br />ராவணன் செய்வதுஅறியாமல் திகைச்சு போனான்.<br /><br />நாரதர் "அட அசடே! சோதனை பண்ணுன்னா இப்படியா கைலாசத்து மேலேயே சோதனை செய்வாய்? " என்றார்.<br /><br />நாரதரே! தப்பிக்க ஏதாவது வழிசொல்லும்.<br /><br />அட உனக்குத்தெரியாததா? சிவன் ஆசுதோஷி. சாம கானம் இசைச்சா உனக்கு வேண்டியதை செய்வார்.<br /><br />நான்தான் மாட்டிக் கொண்டேனே?<br /><br />பரவாயில்லை, இன்னும் ஒரு தலை இரண்டு கைகள் வெளியேதானே இருக்கு.  வீணை இல்லையே?<br /><br />இதோ நான்தரேன் என்று தன் வீணையை நாரதர் கொடுக்கிறார்.<br /><br />ராவணனும் ஸாமகானம் இசைத்து சிவ பெருமானை சந்தோஷப் படுத்த அவரும் அவனை விடுவிக்கிறார்.<br /><br />அது சரி,இந்தக்கதை இங்கே ஏன் வந்தது???<br /><br />வீணை வித்வான் வாசித்த பாட்டு இந்த கதையைதான் சொன்னது.<br />இதில் ராவணனின் ஸாமகானம் வந்தபோது அவருக்கு அந்தவரிகள் நினைவுக்கு வரவில்லை. யோசித்து யாருக்கு இது தெரியப்போகிறது என்று நினைத்து வேறு எதையோ அதன் இடத்தில் வாசித்து நிறைவு செய்துவிட்டார்.<br /><br />பெரியவா வீணையைவாங்கி வாசித்ததுஅதே பாடலைத்தான்.  மாற்றிய வரிகளின்இடத்தில் எவை வர வேண்டுமோ அவற்றையே சரியாக வாசித்துக் காட்டினார். இதை புரிந்து கொண்டார் என்று அறிந்த வீணை வித்வான் வேறு என்ன செய்வார்?<br /><br />"யாருக்குத்தெரிய போறதுன்னு நினைச்சேனே! பெரியவா ஸர்வக்ஞர் அவருக்கு தெரியும்ன்னு தோணாம போச்சே! பெரிய அபசாரம் செய்துவிட்டேன்" என்று நண்பரிடம் சொல்லி அழுதார் வித்வான்

Source: Shri. Varagooran Narayanan

Friday, December 19, 2014

Experiences with Maha Periyava: Don’t squeeze life out of the poor

Some dignitaries in society commit their follies and acts of cruelty in privacy. The common folk cannot question or lay their errors bare to the public. But Maha Periyava was not frightened of anyone. Since he had no expectation from anyone, he would reprimand such people openly. He would transform some others with his intense look that could pierce through their very being and shake them out of their misconduct.

One day Maha Periyava was seated in the palanquin. As usual, the place was full of devotees. It was a rare sight to see Periyava talking to everyone and giving all his blessings with a smile. A devotee, let us call him Sama, came up in the queue. At once Periyava closed the door of the palanquin. Sama was disappointed and the others as well. It was because of Sama that everyone was denied darshan. He might have done something wrong. He alone could have been punished. Why punish the others also?

Just then the relatives of one of Maha Periyava's attendants came for darshan. Since the attendant always served Periyava in close proximity, he took the liberty to open the door of the palanquin and conveyed the news of the arrival of his relatives. But Periyava closed the door again. Half an hour passed. Then Periyava opened the door of the palanquin and continued to give darshan. Once again Sama's turn came up in the queue. Periyava's eyes flashed fury. He picked up a towel-like ochre cloth and winding it around his neck, squeezed it. He turned away and began to speak as if he were talking to someone, somewhere else.

"This is how this man squeezes the very life out of others for the interest on the money he lends. The poor borrow money on interest. This man wrenches interest upon the capital, and interest on the interest! How many poor people suffer in his hands, do you know? When one is comfortably placed in life, it is utterly unrighteous to torture the poor. What kind of justice is this, taking such high interests on loans? This is why in some religions it is said that consuming intoxicating liquor and lending money on interest is considered very sinful. If such sin is piled up repeatedly, then coming here for forgiveness is not going to appeal the case for consideration". Periyava snapped the door close.

Sama learnt his lesson. He began to sob in remorse. Ar ardent devotee who was a close attendant, intervened with a prayer.

"Everyone cannot to be the very embodiment of righteousness like Periyava. Now and then people err. Periyava must not be angry".

Periyava called Sama and told him to sit near the palanquin.

"Stop this habit of running around like a dog in chase to collect your dues from people to whom you have lent money on interest. Deposit what you have in the bank. What you get by way of that interest is sufficient. You need not run around or worry. Make sure your next birth is a good one. Spend your time in japa, puja, meditation and visits to the temple".

Sama fell down full length and prostrated to Periyava. "I am cured of my ignorance", he said in a choked voice.

Sri Maha Periyava, the very epitome of mercy smiled, radiant in divine wisdom.

Source: In the Presence of the Divine

Wednesday, December 17, 2014

"Periyava pointed His dhandam towards my leg..."

Let me start posting my experience in 2006. I had a major accident and fractured both legs. Both the main bones ( Tibia) small bone ( febula) and left knee and right ankle were fractured. Main bones are broken into two. To add to the complications the left main bones were broken completely earlier also (92) and were crafted. ( This accident happened when the road bike racers - 3 people - hit and rode over me- The doctor showed the tyre imprints on my pant and legs).

Fortunately I was taken to the nearest big hospital, operated upon by inserting long nails on both legs withing an hour. First week I was on bed and the doctors tried to make me move but i could not. First week i was very brave and confident. But after a week when i realised that i can't move, i lost all the hopes. The doctors tried to get me up but the pain was severe and i could not move up.

At that moment i lost all hope and started cursing God and cried to Periyava that we followed Him but were completely let down. I am a law abiding citizen, never hurt any one, followed rules sincerely but am completely let down both by the system and Periyava himself. My wife was the only person with me at that time and was given medicines to sleep.

Within 15 mts i saw or dreamt or dont know what it was. I am standing in a place that looked like Sivasthaanam. Periyava was coming ( aged 80 as i saw Him first) with 2 attendants. He looked at me. I was standing with tears in eyes. Periyava pointed His dhandam towards my leg, asked His attendants to give me prasadam (handful of copper coins) and said that all is well now. He asked the attendant to give me a notice and asked me to do that dharma karyam ( which we do now).

Then He told the attendant to go give prasadam to my brother also who was standing near by. I woke up and my body trembled and my wife asked " enna aacchu " (What happened)? I sat up, asked the doctor to bring walker, got down holding the walker on my own and started walking. On the 120 day of accident i was back to office. I dont know what the experience was? The science i read says that it may be a hallucination due the pain killing medicines.

But my brother met with another accident next week and escaped with a small injury in the sundu viral (thumb).Then we understood why He gave prasadm to my brother. Now i know that it was Periyava himself and not any hallucination!

*****
Narrated by Shri Sankar Narayanan three years back.

Source: Shri Panchanathan Suresh

Monday, December 15, 2014

ஆசார்ய சுவாமிகளான ஸ்ரீமத் மஹா பெரியவாள் அருளின கதை...

1910 இல் காஞ்சி மஹா ஸ்வாமிகள் கும்பகோணத்தில் முகாமிட்டிருக்கையில், அங்கு ஒரு செட்டியார் தம்பதியினர் நித்யமா மகாமக குலத்தில் நீராடி மடத்துக்கு வந்து பெரியவாள சேவிச்சுட்டு அப்டியே திருக்குடந்தையில் எழுந்தருளி இருக்கும் மங்களாம்பிகை (மந்தர பீடேச்வரி) சமேத ஆதிகும்பேசரை சேவிப்பது வழக்கம். அந்த திவ்ய தம்பதியினர் சிவனடியார்களுக்கு திருவமுது கண்டருளப்பண்ணிய பின்பே அவர்கள் அமுது செய்வதாக ஒரு உறுதி பூண்டிருந்தனர். அரனடியார்களை இல்லத்திற்கு அழைத்து வந்து, அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை அவர்களிடமே கேட்டு அதையே தளிகை செய்து அவர்களை திருவமுது கண்டருளப் பண்ணுவார்கள். ஒருநாள் காலை நல்ல மழை நேரம், அரனடியவர்கள் யாரும் அந்த வழி வராதமையால், அந்த செட்டியார் ஐயா, ஆச்சியிடம், மகாமக குளத்திற்குச் சென்று யாரேனும் அடியார் எழுந்தருளி உள்ளாரா என்று பார்த்து அழைத்து வருவதாகக் கூறி புறப்பட்டார். இறைவன் திருவருளால் அன்று குளக்கரையில் ஒரு சிவனடியார் வீற்றிருந்தார். செட்டியாரும் அவர் அருகில் சென்று தண்டன் சமர்பித்து, அடியவரை தனது இல்லத்திற்கு எழுந்தருளி திருவமுது செய்தருள வேண்டுமாய் பிராத்தித்தார். அடியவரும் செட்டியாரின் வேண்டுதலுக்கு தலை சாய்த்தவராய் அவருடன் புறப்பட்டார்.
அடியவர் வருகையை எதிர் பார்த்திருந்த ஆச்சியும், அவருக்கு தண்டன் சமர்பித்து, அவருக்கு என்ன கறியமுது பிடிக்கும் என்று கேட்டார். அரனடியாருக்கோ மிகுந்த பசி, ஆதலால், இல்லத்தில் இருக்கும் கீரை வகைகளை சமைத்தாலே போதும் என்று கூறினார். உடனே செட்டியார் ஒரு கூடையை எடுத்துக் கொண்டு இல்லத்திற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் உள்ள கீரைகளை ஆய புறப்பட்டார், அடியவரும் தானும் உதவி செய்தாள் சீக்கிரம் தளிகை ஆகும் என்பதால் செட்டியாருடன் அவரும் சென்றார். அவர்கள் இருவரும் கீரை பறிப்பதை ஆச்சி வேடிக்கை பார்த்த வண்ணம் தளிகைக்கு தேவையான சாமான்களை சேகரித்தார்.
பின்பு அவர்கள் பறித்து வந்த கீரையை தனித்தனியே தளிகை செய்ய ஆரம்பித்தார், இதனைக் கண்ட சிவனடியாருக்கு குழப்பமாய் இருந்தது. தளிகை தயாரானதும், சிவனடியார் பறித்து வந்த கீரையை இல்லத்தில் இருக்கும் மூர்த்திக்கு திருவமுது செய்ய எடுத்து வைத்துவிட்டு, தன் மணாளன் பறித்து வந்த கீரையை சிவனடியாருக்கு திருவமுது செய்விக்க எடுத்து வந்தார். இதனைக் கண்ட சிவனடியாருக்கு பெருமை தாங்கவில்லை, தனக்கு அந்த ஆச்சி அவ்வளவு மரியாதை குடுத்திருக்கிறார் என்று தனக்குள் நினைதுக்க் கொண்டார். இருப்பினும் இது பற்றி அம்மையாரிடம் சாப்பிடும் போது கேட்டுடனும் என்றும் நினைத்தார். திருவமுது செய்கையில் அவர் எண்ணிய படியே ஆச்சியிடம், கீரைகளை ஏன் தனியாக தளிகை செய்தீர்கள் என்று கேட்டார். அதற்கு ஆச்சி தந்த பதிலோ அவருக்கு மிகுந்த நாணத்தை அளித்து விட்டது.
ஆச்சி...கூறிய பதில்.....
சுவாமி, நீங்களும் எனது சுவாமியும் கீரைகளை பறிக்கும் போது....எனது மணாளரோ சிவ நாமத்தை உச்சரித்த படியே பறித்தார். ஆகையால் அவர் பறிக்கும் போதே அந்தக் கீரைகள் ஈஸ்வரார்பணம் ஆகி விட்டது, அதனால் அந்த கீரை நிர்மால்ய பிரசாதம் அதனை மறு முறை அம்சை பண்ணுவது முறை அல்ல என்பதால், தாங்கள் பறித்த கீரையை இறைவனுக்கும், எனது சுவாமி பறித்த கீரையை தங்களுக்கும் அர்பணித்தேன் என்றார்.
இத்தகைய தலை சிறந்த தொண்டினை இடை விடாது செய்து வந்த அந்த திவ்ய தம்பதியினருக்கு இறைவன் திரு அருள் செய்யும் திரு நாள் வந்தது. அன்று மாசி மாத மஹா சிவராத்ரி, செட்டியார் தம்பதியினர் இருவரும் திருக் குடந்தை, திருக் கோயிலுக்கு முதல் ஜாம பூஜைக்குச் சென்றிருந்தனர், இரண்டாம் ஜாம பூஜை முடித்துக் கொண்டு இல்லம் திரும்பினர், இல்லத்திற்குள் நுழைந்ததும், ஆச்சி தனக்கு தலை சுற்றுவது போல் இருக்கிறது என்று செட்டியாரிடம் சொல்லிக் கொண்டு திருக்கோயில் பிரசாதங்களை பூஜை அறையில் வைத்து தண்டன் சமர்பித்த வாரே மூன்றாம் ஜாம பூஜை வேளையில் இறைவன் திருவடியில் கலந்தார். ஆச்சி தன்னை அழைப்பது போல் தோன்ற, செட்டியாரும் பூஜை அறைக்கு வந்து ஆச்சி திருநாடு எழுந்தருளியதைக் கண்டு அவரும் ஆச்சியின் பெயரை சொல்லிக்கொண்டே இறைவனின் திருவடியில் கலந்தார்.
இந்த கதையை ஸ்ரீமத் மஹா பெரியவாள் சொல்றச்ச கேட்டுண்டு இருந்தவா கண்களிலெல்லாம் கண்ணீர் வந்துடுச்சாம்.....அதிதி போஜனம் சிறந்த மோக்ஷ சாதனம் என்று ஸ்ரீமத் மஹா பெரியவாள் கதை சொல்லி முடிச்சார்.

 

Source: Shri Krishnamoorthi Balasubaramanian

Saturday, December 13, 2014

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவாளும் இடி மின்னலும். ஒரு அனுபவம் பாடமாகிறது.

அன்று குரு வாரமாக இருந்ததால், காஞ்சிபுரம் மஹாபெரியவாள் சன்னதி சென்று தரிசித்து வரலாம் என்று காலையில் கிளம்பினோம். ஆடி மாதமாக உள்ளது காஞ்சி காமாக்ஷிக்கு ஒரு புடவை சாத்தி வரலாம் என்று என் மனைவி கூறினாள்.
சரி என்று அதையும் எடுத்துக்கொண்டு கிளம்பினோம். காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு சென்றவுடன் அங்குள்ள சிப்பந்திகளிடம் அம்மனுக்குப் புடவை சாத்த வேண்டும் என்று கூறினேன்.
அவர்கள் என்ன புடவை… பட்டுப்புடவையா? என்று கேட்டனர். நாங்கள் இல்லை காட்டன் புடவை என்றோம்.
உடனே முகம் சுளித்துக்கொண்டு அதெல்லாம் இப்ப சாத்த முடியாது. அப்புறம் பார்க்கலாம் என்று கூறினார்கள். உடனே அலுவலகத்திற்கு சென்று விபரத்தை கூறியவுடன், அவர்களும் சரி.. சரி.. உள்ளே போங்கோ பார்க்கலாம் என்று அலட்சியமாக கூறினார்கள்.
அங்கு உள்ளே உள்ள கேட் சிப்பந்திகள் நீங்கள் யார் சொல்லி வந்தீர்கள்.. யாரேனும் தெரிந்தவர்கள் சொன்னால் உள்ளே விடுகிறோம் என்றவுடன் மனது மிகவும் சங்கடமாக இருந்தது.
அங்கு அம்பாளுக்கு அபிஷேகம் நடந்து கொண்டு இருந்தது. கண்கொள்ளாக் காட்சி மனதில் இருந்த கணம் குறைந்தது.
அப்பொழுது அம்பாள் சன்னதி முகப்பை சற்று கவனிக்க தோன்றியது.
அங்கு உள்ள நீலக் கலர் போர்டில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் எவ்வளவு அபத்தமாக உள்ளது. ஒன்றுக்கொன்று கோர்வையில்லாமலும், அர்த்தம் அனர்த்தமாகவும் உள்ளது. இதை ஏன் யாரும் கவனிக்காமலும் சரி செய்யாமலும் இருக்கிறார்கள் என்று தோன்றியது.
அந்த நாளில் “சுக்கு மிளகு திப்பிலி” என்பதை “சுக்குமி-ளகுதி-ப்பிலி” என்று பிரித்து வேடிக்கையாகக் கூறுவார்கள். அது போல உள்ளதே. இதை பெரியவாளும் ஏன் கவனிக்காமல் இருக்கிறார். ஒன்றும் புரியவில்லை. அதற்குள் அலங்காரம் முடிந்து தீபாராதனை செய்தார்கள்.
அலங்காரம் செய்த பெரியவர் எங்களை அழைத்தார். அம்பாள் சன்னதிக்கு அழைத்துச் சென்று நாங்கள் கொடுத்த புடவையை அம்பாளுக்கு சாத்தி தீபாராதனை செய்து பிரசாதம் கொடுத்தார்.
பிறகு மடத்திற்கு சென்று அங்கு சந்திரமௌலீஸ்வரர் பூஜையை தரிசித்தோம். பூஜை நடந்து கொண்டு இருக்கும் பொழுது, அதை அமைதியாக தரிசிக்காமல் ஒரு நபர் ஏனோதானோ என்று ராகம் தாளம் இல்லாமல் உரத்தக் குரலில் பாடிக்கொண்டு இருந்தார்.
பெரியவர் பூஜை செய்கிறாளே.. நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று இல்லாமல் அவரது கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும் வகையில் அது அமைந்து இருந்தது. “செல்போன் பேசாதீர்கள்” என்று போர்டு போடுவது போல, “இங்கு அமைதி காக்கவும்” என்று போர்டு போடலாமே என்று எனக்குத் தோன்றியது. இதை நிர்வாகம் அல்லவா செய்ய வேண்டும்!
மறுபுறம் ஜெயேந்திரர் தனது அறையில் அமைதியாக பக்தர்களுக்கு பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார். அங்கு இருவர் நல்ல ராகத்துடன் பாடிக் கொண்டு இருந்தனர். அதை அவர் ரசித்துக் கொண்டும் இருந்தார். இதுபோல தனியாக இருக்கும் சமயத்தில் பாடினால் அதை அவரும் ரசிப்பார் நாமும் ரசிக்க முடியும்.
“பூஜை வேலையில் கரடி பூந்தது போல” என்று ஒரு பழமொழி. அதுபோல பூஜை செய்யும் வேலையில் அவர்களது மௌனத்தை நாம் கலைக்காமல் பூஜையை ரசிப்பது சிறந்தது என்று ஏன் அங்கு கூற மறுக்கிறார்கள்… அது நமக்கேத் தெரிய வேண்டும் என்பதாலா?
பிறகு மஹாபெரியவர் பிருந்தாவனத்தில் மௌனமாக என்னுடைய குறை நிறைகளைக் கூறிக்கொண்டு இருக்கும் சமயம், ஒரு அன்பர், “மஹா பெரியவா நான் சீனு வந்து இருக்கேன். ரொம்ப இடிஞ்சு போய் வந்து இருக்கேன். நீங்கதான் பார்த்து நல்ல வழி காண்பிக்கணும் என்று உரத்த குரலில் கூறிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து பூஜை நடக்கும் இடத்துக்கு சென்றுவிட்டார். அப்பொழுது அங்கு யாரும் இல்லை.
அட சற்று முன்புதான் நானும் இதுபோல சொன்னேன். அதே மாதிரி இவரும் கூறுகிறாரே என்று மனதில் நினைத்துக்கொண்டு சன்னிதானத்தை பார்த்தேன். அங்கு அருகில் ஒரு நபர் நான்கு வரியில் ஒரு பாடலை பாடினார்.
அதில் “பழம் ஒன்று எந்தனுக்குத் தா” என்ற வாசகம் இருந்தது. உடன் சன்னிதானத்தைப் பார்த்தேன்.
சன்னிதானத்தில் அப்பொழுது ஒரு பழம் கூட இல்லை. உடன் எழுந்து எதிரில் உள்ள கடைக்கு சென்று ஒரு ஆப்பிள் பழம் வாங்கி வந்து அங்கு பூஜை செய்பவரிடம் கொடுத்து இதை பெரியவா சன்னிதியில் சேர்த்துவிடுங்கோ என்றேன்.
கொஞ்ச நேரத்தில் ஒரு 50-60 பேர் அங்கு வந்து தரிசித்து சென்றனர். அவர்களுக்கு தீர்த்தமும் புஷம், வில்வம் இவைகளை அங்கு பூஜை செய்பவர் கொடுத்து வந்தார்.
பிறகு முன்பு கோரிக்கை கொடுத்த சீனு பூஜையை தரிசித்துவிட்டு, மீண்டும் இங்கு வந்தார். அப்பொழுது அங்கு பூஜை செய்பவர் நீங்கதானே சீனு என்று கேட்டார்.
அவரும் ஆமாம் என்று கூறினார். இதற்கு முன்பு நாம் இவரைப் பார்க்கவில்லையே என்று யோசித்தார்.
நான் அவர் சன்னிதானத்தில் வைக்கச் சொன்ன ஆப்பிளை எடுத்து, அவருக்கு பிரசாதமாக கொடுத்தார்.
ஆகா… பெரியவா இருந்த காலத்திலே இதுபோல பல அதிசயங்கள் நம் கண்முன் பார்த்து இருக்கோம். இப்பவும் நம்முடைய குறைகளைக் கேட்டு பிரசாதம் கொடுக்கிறார் என்று நினைக்கும் பொழுது உடம்பு சிலிர்த்து மௌனமானேன்.
அவர் கூறிய சமயத்தில் அங்கு எந்த பழமும் இல்லை, என்று தெரிந்து ஒருவரை பாட்டு மூலமாக வெளிப்படுத்தி நம்மை வாங்கி வரச் சொல்லி அவருக்கு அருளாசி வழங்கி இருக்கிறார் என்றால் இன்னும் அவர் நம்முடன்தான் இருக்கிறார் என்பதற்கு இதைவிட சான்று வேறு ஒன்றும் இல்லை.
பிறகு வீட்டிற்கு வந்துவிட்டேன். அன்று இரவு நல்ல மின்னல் இடி முழக்கம். அதில் ஒரு மின்னலும் இடி முழக்கமும் என் வீட்டின் ஜன்னலை பதம் பார்த்துவிட்டது. அதில் உள்ள கண்ணாடி உடைத்து நொறுங்கிவிட்டது.
மஹாபெரியவா ஏதோ எங்கள் குடும்பத்திற்கு வர இருந்த மின்னல் இடி போல உள்ள தாக்கத்தை எப்படி ஜன்னல் கண்ணாடி மூலம் வாங்கி நிவர்த்தி செய்தார். அதன் அர்த்தம் என்ன என்று எங்களுக்கு புரியாவிட்டாலும் ஏதோ வரவேண்டிய பாதிப்பை தடுத்து நிறுத்தி இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
காலையில் பூஜை செய்யும் போது மானசீகமாக அவரை நினைத்துப் பிரார்த்தித்து கண்கலங்கி ஒரு நமஸ்காரம் செய்தேன். எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் அவருக்கு எப்பொழுதும் அளவுகடந்த பாசமும், பரிவும் உண்டு என்பதை வார்த்தையால் சொன்னால் முடியாது. அதனால், இதை என் அனுபவ பாடமாக எழுதுகிறேன்.

Source: Shri Krishnamoorthi Balasubaramanian

Thursday, December 11, 2014

ஆசார்ய சுவாமிகளான ஸ்ரீமத் மஹா பெரியவாள் அருளின கதை...

1910 இல் காஞ்சி மஹா ஸ்வாமிகள் கும்பகோணத்தில் முகாமிட்டிருக்கையில், அங்கு ஒரு செட்டியார் தம்பதியினர் நித்யமா மகாமக குலத்தில் நீராடி மடத்துக்கு வந்து பெரியவாள சேவிச்சுட்டு அப்டியே திருக்குடந்தையில் எழுந்தருளி இருக்கும் மங்களாம்பிகை (மந்தர பீடேச்வரி) சமேத ஆதிகும்பேசரை சேவிப்பது வழக்கம். அந்த திவ்ய தம்பதியினர் சிவனடியார்களுக்கு திருவமுது கண்டருளப்பண்ணிய பின்பே அவர்கள் அமுது செய்வதாக ஒரு உறுதி பூண்டிருந்தனர். அரனடியார்களை இல்லத்திற்கு அழைத்து வந்து, அவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை அவர்களிடமே கேட்டு அதையே தளிகை செய்து அவர்களை திருவமுது கண்டருளப் பண்ணுவார்கள். ஒருநாள் காலை நல்ல மழை நேரம், அரனடியவர்கள் யாரும் அந்த வழி வராதமையால், அந்த செட்டியார் ஐயா, ஆச்சியிடம், மகாமக குளத்திற்குச் சென்று யாரேனும் அடியார் எழுந்தருளி உள்ளாரா என்று பார்த்து அழைத்து வருவதாகக் கூறி புறப்பட்டார். இறைவன் திருவருளால் அன்று குளக்கரையில் ஒரு சிவனடியார் வீற்றிருந்தார். செட்டியாரும் அவர் அருகில் சென்று தண்டன் சமர்பித்து, அடியவரை தனது இல்லத்திற்கு எழுந்தருளி திருவமுது செய்தருள வேண்டுமாய் பிராத்தித்தார். அடியவரும் செட்டியாரின் வேண்டுதலுக்கு தலை சாய்த்தவராய் அவருடன் புறப்பட்டார்.
அடியவர் வருகையை எதிர் பார்த்திருந்த ஆச்சியும், அவருக்கு தண்டன் சமர்பித்து, அவருக்கு என்ன கறியமுது பிடிக்கும் என்று கேட்டார். அரனடியாருக்கோ மிகுந்த பசி, ஆதலால், இல்லத்தில் இருக்கும் கீரை வகைகளை சமைத்தாலே போதும் என்று கூறினார். உடனே செட்டியார் ஒரு கூடையை எடுத்துக் கொண்டு இல்லத்திற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் உள்ள கீரைகளை ஆய புறப்பட்டார், அடியவரும் தானும் உதவி செய்தாள் சீக்கிரம் தளிகை ஆகும் என்பதால் செட்டியாருடன் அவரும் சென்றார். அவர்கள் இருவரும் கீரை பறிப்பதை ஆச்சி வேடிக்கை பார்த்த வண்ணம் தளிகைக்கு தேவையான சாமான்களை சேகரித்தார்.
பின்பு அவர்கள் பறித்து வந்த கீரையை தனித்தனியே தளிகை செய்ய ஆரம்பித்தார், இதனைக் கண்ட சிவனடியாருக்கு குழப்பமாய் இருந்தது. தளிகை தயாரானதும், சிவனடியார் பறித்து வந்த கீரையை இல்லத்தில் இருக்கும் மூர்த்திக்கு திருவமுது செய்ய எடுத்து வைத்துவிட்டு, தன் மணாளன் பறித்து வந்த கீரையை சிவனடியாருக்கு திருவமுது செய்விக்க எடுத்து வந்தார். இதனைக் கண்ட சிவனடியாருக்கு பெருமை தாங்கவில்லை, தனக்கு அந்த ஆச்சி அவ்வளவு மரியாதை குடுத்திருக்கிறார் என்று தனக்குள் நினைதுக்க் கொண்டார். இருப்பினும் இது பற்றி அம்மையாரிடம் சாப்பிடும் போது கேட்டுடனும் என்றும் நினைத்தார். திருவமுது செய்கையில் அவர் எண்ணிய படியே ஆச்சியிடம், கீரைகளை ஏன் தனியாக தளிகை செய்தீர்கள் என்று கேட்டார். அதற்கு ஆச்சி தந்த பதிலோ அவருக்கு மிகுந்த நாணத்தை அளித்து விட்டது.
ஆச்சி...கூறிய பதில்.....
சுவாமி, நீங்களும் எனது சுவாமியும் கீரைகளை பறிக்கும் போது....எனது மணாளரோ சிவ நாமத்தை உச்சரித்த படியே பறித்தார். ஆகையால் அவர் பறிக்கும் போதே அந்தக் கீரைகள் ஈஸ்வரார்பணம் ஆகி விட்டது, அதனால் அந்த கீரை நிர்மால்ய பிரசாதம் அதனை மறு முறை அம்சை பண்ணுவது முறை அல்ல என்பதால், தாங்கள் பறித்த கீரையை இறைவனுக்கும், எனது சுவாமி பறித்த கீரையை தங்களுக்கும் அர்பணித்தேன் என்றார்.
இத்தகைய தலை சிறந்த தொண்டினை இடை விடாது செய்து வந்த அந்த திவ்ய தம்பதியினருக்கு இறைவன் திரு அருள் செய்யும் திரு நாள் வந்தது. அன்று மாசி மாத மஹா சிவராத்ரி, செட்டியார் தம்பதியினர் இருவரும் திருக் குடந்தை, திருக் கோயிலுக்கு முதல் ஜாம பூஜைக்குச் சென்றிருந்தனர், இரண்டாம் ஜாம பூஜை முடித்துக் கொண்டு இல்லம் திரும்பினர், இல்லத்திற்குள் நுழைந்ததும், ஆச்சி தனக்கு தலை சுற்றுவது போல் இருக்கிறது என்று செட்டியாரிடம் சொல்லிக் கொண்டு திருக்கோயில் பிரசாதங்களை பூஜை அறையில் வைத்து தண்டன் சமர்பித்த வாரே மூன்றாம் ஜாம பூஜை வேளையில் இறைவன் திருவடியில் கலந்தார். ஆச்சி தன்னை அழைப்பது போல் தோன்ற, செட்டியாரும் பூஜை அறைக்கு வந்து ஆச்சி திருநாடு எழுந்தருளியதைக் கண்டு அவரும் ஆச்சியின் பெயரை சொல்லிக்கொண்டே இறைவனின் திருவடியில் கலந்தார்.
இந்த கதையை ஸ்ரீமத் மஹா பெரியவாள் சொல்றச்ச கேட்டுண்டு இருந்தவா கண்களிலெல்லாம் கண்ணீர் வந்துடுச்சாம்.....அதிதி போஜனம் சிறந்த மோக்ஷ சாதனம் என்று ஸ்ரீமத் மஹா பெரியவாள் கதை சொல்லி முடிச்சார்.

Source: Shri. Krishnamoorthi Balasubaramanian

Tuesday, December 9, 2014

Kanchi Chandrasekhara and Sringeri Chandrasekhara

author:....... Raa. Ganapathi
source:....... 'KaruNaikkadalil Sila AlaigaL,
publisher:.... Divya Vidya Padhippaham (Jun. 2005 Edition)
type:......... book, Tamil

(An essay published in the Kalki Deepavali Malar, 1992).

Pages 82-85

All though for Sri Kanchi Maha PeriyavargaL a hundred years of age will be completed a year and a
half from now, that is, in the Vaisaka (Vaikasi) Anusham day coming in 1994, we matched sRuti
for his shatAbdi festivities right from the time when he became ninety-nine.

On this occasion, let us become double puNyashAlis by remembering in anjali, another
mahA periyavargaL who in vAstavam completed a hundred years on the holy day when the
ekAdashI tithi and the magha nakShatra came together in the Ashvina (aippasi)
month, four days before the current Deepavali.

It is a surprising similarity that the tuRavaRa tirunAmam (holy name of asceticism) of that
Maha PeriyavargaL was also 'Chandrasekhara'. Sri Chandrasekhara Bharathi SwamigaL was that Maha
Periyavar who performed the same divya paNi (divine work) for forty-two years in the Sringeri
Sri Sankara MaTham, during the same time when in Kanchi Sri Sankara MaTham, PeriyavargaL Sri
Chandrasekarendra Sarasvati SwamigaL's rule of jnAnam was exercised.

Changing the proverb 'as Surya Chandra' and becoming 'eka kAla dvi chandras', both of them
remained as adhipatis of two great Guru PiThams for the forty-two years from 1912 to 1954,
and spread jnAnam, bhakti, and shAstra dharmas by giving wonderful upadesha of them.
Since that upadesha with both of them was a lively example of their own life and living
besides being their vAimozhi (word of mouth), that vAimozhi remained as one that had
mantra shakti. And both of them received the adoration as Maha Purushas, Deiva Purushas.

Committing pApam and getting shApam that resulted in his waning and waxing, Chandra
bowed to Paramesha, seeking pardon. The Aiyan in his limitless compassion took him in his hands and
wore him on his mudi (hair) and became Chandrasekhara. That tiruppeyar (holy name)
also became the name for the two Acharya Murtis who took on their head the responsibility of showing
guidance towards goodness for the world that was getting more and more immersed in pApam and
seeking no pardon for that!

Among the names of the Guru Parampara in the two PiThams, the Chandrasekhara nAmam was the
only common name for both. Maha PeriyavAL is the seventh among the Chandrasekharas of the Kanchi
PiTham. That another Maha Periyavar was the third--or fourth--among the Chandrasekharas of the
Sringeri PiTham. Since in Kanchi for the pIThAdhipatis from the 61st to the 67th, the names
'Mahadeva' and 'Chandrasekhara' alternated, there was no visheSham in Maha PeriyavAL as the
68th pIThAdhipati becoming Chandrasekhara. The visheSham was that, after his ascension
to the PiTham, the sage who ascended to the Sringeri PiTham five years later obtained for himself
the Chandrasekhara tirunAmam that was earlier taken by the pIThAdhipati seventeen
generations before and four hundred and fifty years ago!

Another similarity too! Of the ten titles for ascetics called dasha nAma in the Sankara
tradition, the sages of Kanchi PiTham hold the title (Indra) Sarasvati. In Sringeri they hold many
titles that include Bharati, Tirtha and Aranya. Among these, the title Bharati held by that another
Maha Periyavar remained as a name for Sarasvati! Chandrasekhara Bharati in what is known as Sharada
PiTham in Sringeri, and Chandrasekara Sarasvati in what is known as Sharada MaTham in Kanchi had
both risen in their blessing stances.

Like the Chandra that showers as cool and pleasing moonlight changing the heat and eye-scorching
light of Surya, these two Chandras showered for the world making the jnAna advaita jvAla
pleasing to the people! It was their tapo kAnti (radiance of penance) that changed it all to
the Chandrika that gives tApa shAnti (peace from afflictions), and comforted, consoled and
saved the Adiyars (devotees) from danger.

Both can be termed as 'matchless'. By that very saying doesn't it became that they are parasparam
oppAnavar (mutually comparable for similarities)? Both of them realized in anubhavam the
advaita jnAnam; possessed sharpness of knowledge that made the pundits wonder; at the same
time capable of simplifying the parama tattvas and giving upadesha to the
pAmara (grass roots) in a way that attracted them; were niRai kudams (full vessels)
that never made noise but remained calm; exercised inner love for the entire uyirkkulam
(family of beings); dhIras who relentlessly followed the rigours of dharma shastras and
swimmed against the tide of kAlam (the time) that took an alankolam (a show of
indiscipline); satya sannyAsa shIlas who endured the jAjvalyam (splendour, radiance)
of jagadgurutvam (the status of being Jagadgurus) as necessary traps, never letting it dim
their own light--thus in many aMsas both of them matched eath other--as anyonya
sadRukSha as they say. Subtle humour, in the saulabhyaM (ease) of conversing with anyone
with open heart, subtly making fun of the other and at the same time making fun of the self
too--even in these things both of them have remained similar!

A kind of similarity even in how if Kannadam was the mother tongue of the Kanchi MaTha Thalaivar in
Tamilnadu, Telegu was the mother tongue of the Sringeri MaTha Thalaivar in Kannada Nadu!

From Periva forum

Sunday, December 7, 2014

நந்தனார் கதை-பெரியவா

பெரிய புராணத்தில் வருகிற நந்தனார் கதையில் அந்த வேதியர் பாத்திரமே கிடையாது.

(தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி)

நந்தனார் கதை தெரிந்த எல்லோரும் அவர் ஒரு ஈவிரக்கமில்லாத பிராம்மணர் பண்ணையாரிடம் படாதபாடுபட்டவர் என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் வாஸ்தவத்தில் அறுபத்து மூவர் சரித்திரங்களுக்கு அதாரிட்டியான பெரிய புராணத்தில் வருகிற நந்தனார் கதையில் அந்த வேதியர் பாத்திரமே கிடையாது.

பெரிய புராணத்தில் திருநாளைப் போவார் நாயனார் புராணம் என்ற தலைப்பில் வருகிற நந்தனாருடைய கதையைப் பார்த்தாலே தெரியும். அவர் எந்தப் பண்ணையாரிடமும் சேவகம் பண்ணியவரில்லை. தத்தம் குலாச்சாரப்படி தொழில் செய்யும் எல்லா ஜாதிக்காரர்களுக்குமே அந்தக் காலத்தில் ராஜமான்யமாக நிலம் சாசனம் செய்யப்பட்டிருக்கும்.

நன்றாக எல்லை கட்டிய அந்த நிலத்துக்குத் துடவை என்று பெயர். அப்படிப்பட்ட பறைத் துடவையை நந்தனாரும் பெற்றுத் தம்முடைய சொந்த நிலத்தில் பயிரிட்டு வந்ததாகத்தான் பெரிய புராணத்தில் வருகிறது. இவரோ பிறந்ததிலிருந்து மறந்தும் சிவ சிந்தனை தவிர வேறே இல்லாதவர் என்று சேக்கிழார் சொல்லியிருக்கிறார். க்ஷேத்திரம் க்ஷேத்திரமாகப் போய்க்கொண்டே அவர் சிவத்தொண்டு செய்துவந்ததாகத்தான் மூல நூலான பெரிய புராணத்திலிருக்கிறதே தவிர ஒரு கொடுங்கோல் பிராம்மணரிடம் அடிமைப்பட்டு ஒரே இடத்தில் கட்டிப் போட்டாற்போலக் கிடந்தாரென்று இல்லை.

கொடுங்கோல் பிராம்மணர்களை சிருஷ்டி பண்ணியதும் ஒரு பிராம்மணர்தான். போன நூற்றாண்டில் இருந்த கோபாலகிருஷ்ண பாரதி என்கிற பெரியவர். நம்முடைய மதிப்பு மரியாதைக்குரிய பெரியவர். சிவ பக்தியில் ஊறியவர். கேட்கிற எவருடைய நெஞ்சத்தையும் அந்த பக்தியில் கரைக்கும்படியான உசந்த பாட்டுகள் கவனம் செய்தவர். கடைசிவரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து மஹா சிவராத்திரி புண்யகாலத்தில் சுவாமியோடு கலந்து விட்டவர். அவர் ஏழை எளியவர்களிடம் ரொம்பவும் இளகின சுபாவத்துடன் இருந்திருக்கிறார். அதோடு நல்ல நாடக உணர்ச்சி, உணர்ச்சியைப் பாராட்டித் தரும் சாமர்த்தியம் எல்லாமும் படைத்தவராக இருந்திருக்கிறார்.

அவர் நாளில் அந்தச் சீமையில் மிராஸ் பண்ணும் பிராம்மணர்களில் ஒருத்தர் இரண்டு பேர் உழவு செய்யும் ஆள்காரர்களை ரொம்பவும் கொடுமைப்படுத்தியதையும், அப்படியும் அந்த எளிய ஜனங்கள் எதிர்த்துச் சண்டை போடாமல், இப்படித்தான் நம் ஜன்மா என்று சகித்துக்கொண்டு இருந்து வந்ததையும் அவர் பார்த்தார். ஏற்கெனவே அவருக்கு எந்த ஜாதியரானாலும் பக்திச் செல்வத்தைக் குறைவறப் பெற்று ஈச்வரனுடனேயே இரண்டறக் கலக்கும் உன்னத நிலைவரை போய்விட முடியும் என்று காட்டும் திருநாளைப்போவார் சரித்திரத்தில் தனியான ஈடுபாடு இருந்திருக்கிறது.

அந்த நினைப்பும் அவர் நேரில் கண்ட நிலவரமும் அவருடைய நாடகத் திறமையில் ஒன்றாகச் சேர்ந்து வேதியர் பாத்திரத்தை சிருஷ்டிக்கப் பண்ணிவிட்டது. பறைத் துடவை பெற்றிருந்த நந்தனாரை அந்த வேதியரின் கூலியாளாக ஆக்கி அவரிடம் கொடுமைப்படுவதாகக் கதையை அழகாக ஜோடித்து மேலே மேலே சீன்களைக் கற்பனைப் பண்ணி நந்தன் சரித்திரக் கீர்த்தனையாகப் பாட வைத்து விட்டது.

அப்புறம் கதாகாலஷேபக்காரர்கள், காந்தீய தேசாபிமானிகள் எல்லோரும் அதை விசேஷமாக பிராபல்யப்படுத்தியதில் மூலமான பெரிய புராணத்துத் திருநாளைப்போவார் கதையே எடுபட்டுப்போய் இதுதான் நந்தனார் கதை என்றே ஆகியிருக்கிறது. இதை பார்ப்பவன், கொடுங்கோல் என்று வசைமாரி பாடுகிறவர்கள். இதோ பாருங்கள், ஒரு ஐயரே கொடுக்கும் ப்ரூஃப் என்று காட்டுவதில் கொண்டுவிட்டிருக்கிறது.

அந்தக் காலத்தில் மகா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை தமிழறிஞர்களில் முக்கியமான ஸ்தானம் வகித்தவர். அவர் பிராம்மணரில்லை. ஆனாலும் குறுகிய ஜாதி நோக்கில் பார்க்காமல் நடுநிலையாகப் பார்த்தார். பார்த்து, என்னதான் கல்பனா சக்தி. எளிய ஜனங்களிடம் அநுதாபம் இருந்தாலும் இப்படி ஒரு மூலக் கதையை மாற்றியிருப்பது சரியில்லை எனறு முடிவு பண்ணிவிட்டார். விஷயம் தெரியாமல் அவரிடமே சிறப்புப் பாயிரம் வாங்கவேண்டுமென்று கோபால கிருஷ்ண பாரதி போனார்.

வீடுதேடி வந்த பிராம்மணரிடம் தப்பெடுக்க வேண்டாமென்று நினைத்து, நீங்கள் இதை முக்கியமாக சங்கீத நாடக பாணியில் அமைத்திருக்கிறீர்கள். எனக்கோ சங்கீதம் பிடிக்காது. தமிழ்ப் புலமை, சிவ பக்தி ஆகியவற்றோடு நல்ல சங்கீத வித்வத்துவம் உள்ள எவரிடமாவது நீங்கள் பாயிரம் வாங்குவதுதான் பொருத்தம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஆனாலும் தம்மிடம் தமிழ் கற்றுக் கொண்டிருந்த உ.வே. சுவாமிநாதையர் போன்றவர்களிடம் மனசில் இருந்ததைச் சொன்னார். அதனால்தான் இப்போது உங்களுக்கு நான் இந்தக் கதை சொல்ல முடிகிறது.

அப்போதைக்கு பாரதி திரும்பிப் போனாலும் மறுபடியும் வந்தார். பண்டித, பாமர ரஞ்ஜகமாக நீங்கள் எழுதியிருக்கிற இந்த நூல் தானே பிரசித்தி அடையும். என் பாயிரம் அவசியமேயில்லை என்று சொல்லிப் பிள்ளை அவரை அப்போதும் திருப்பியனுப்பி விட்டார்.

இப்படி பாரதி பல தடவை நடையாக நடந்து பிறகு ஒரு தடவை நடுமத்தியான வேளையில் வந்தார். அப்போது வீட்டுக்குள்ளே பிள்ளை சிரம பரிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறாரென்று தெரிந்தது. அவர் எழுந்திருந்து வருகிறபோது வரட்டும் என்று வாசல் திண்ணையில் பாரதி உட்கார்ந்து விட்டார். உட்கார்ந்தவர் தன்னையறியாமல் நந்தன் சரித்திர கீர்த்தனைகள் பாட ஆரம்பித்தார்.

உள்ளே அரைத் தூக்கமாயிருந்த பிள்ளையின் காதில் பக்தி பாவம், ராக பாவம் இரண்டும் பூர்ணமாக இருந்த அந்தப் பாட்டுக்கள் விழுந்ததால் அவரும் அதில் ஆகர்ஷணமாகிவிட்டார். அந்தப் பாட்டுகளில் இலக்கணப் பிழைகள் வழு என்பது இருப்பதாகவும் ஏற்கெனவே அவருக்கு இரண்டாவது குறை. இப்போது, பாடியவருடைய பக்திப் பிரவாகத்தில் அந்த வழுவெல்லாங்கூட அடித்துக்கொண்டு போய்விட்டாற்போலத் தோன்றிற்று. அந்த பிரவாகத்தைத் தடைப்படுத்த வேண்டாமென்றே, அவர் தொடர்ந்து தூங்குகிற மாதிரி இருந்து கேட்டுக் கொண்டிருந்தார். வருகலாமோ? என்ற பாட்டுக்கு பாரதி வந்தார்.

ஏற்கெனவே அந்த வார்த்தையை இலக்கண சுத்தமில்லை என்று பிள்ளை கண்டித்திருக்கிறார். வருகை, போகை என்று உண்டு. வருதல், போதல் என்றும் உண்டு. அவை இலக்கண சுத்தமான பிரயோகங்கள். இரண்டுமில்லாமல் இதென்ன வருகல்?ஆரம்ப வார்த்தையே சரியாயில்லையே. வரலாமோ? என்றாலே சரியாயிருக்குமே என்று சொல்லியிருக்கிறாராம்.

ஆனால் இப்போது நந்தனார் தூரத்திலிருந்து சிதம்பரம் கோவிலை தரிசனம் பண்ணி, ஒரு பக்கம் பக்தியிலே தாபமான தாபம். இன்னொரு பக்கம் தன்னுடைய பிறவியை நினைத்துத் தயக்கமான தயக்கத்தோடு கண்ணுக்குத் தெரியாத நடராஜாவை மனக் கண்ணால் பிடித்து நிறுத்தி வைத்து, கண்ணுக்குத் தெரியும் அந்த சந்நிதானத்துக்குத் தானும் வரலாமா, வரலாமா என்று என்றைக்கோ உருகி உருகிக் கேட்டதை, அதே தாபத்தோடு பாரதி உருக்கமாகப் பாடிக் கேட்டவுடன் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளைக்கு இலக்கணப்பிழை, திருமுறையை மாற்றிய பிழை எல்லாம் மறந்து போய்விட்டதாம்.

இப்பேர்ப்பட்ட பக்த சிகாமணி நாம் திரும்பத் திரும்ப விரட்டியடித்தும் பாயிரத்துக்காக வருகலாமோ? என்று நம்மிடமே கேட்பதுபோல் பண்ணி விட்டோமே என்று ரொம்பவும் பச்சாத்தாபப்பட்டுக் கொண்டு வாசலுக்கு ஒடி வந்தாராம். வருகலாமோ அவரையும் வரவழைத்து விட்டது. அவரிடமிருந்து பாயிரத்தையும் வரவழைத்துவிட்டது.

Source: Shri Varagooran Narayanan

Friday, December 5, 2014

கலவையில் ஒரு நாள் பேரொளி பிறந்து
காஞ்சியில் பெரியவராய் குருவெனச் சிறந்தது.

கலவையில் தான் அவருக்கு சன்னியாசம்!
சன்னியாசம் என்பதே மறுஜென்மம் தானே!

“கலவையில் பிறந்த பேரொளி"

ஆசிரியர் : நெமிலி எழில்மணி

டெலிபோன் மணி மிக ரம்மியமாக ஒலித்தது. பேசியவர், தமிழக அரசவை கலைஞர் பத்மஸ்ரீ இசைமணி டாக்டர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன் அவர்கள்.

"எழில்மணி! காஞ்சி பரமாச்சாரியார் பற்றியும் ஸ்ரீ சங்கராசார்யார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை பற்றியும் H.M.V நிறுவனத்தார் நான்கு பாடல்கள் அடங்கிய இ.பி இசைத்தட்டு எடுக்க போகிறார்கள். கலைமாமணி திரு. எஸ்.டி சுந்தரம், கலைமாமணி டாக்டர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம், கவிஞர் நெல்லை அருள்மணி ஆகியோர் ஒவ்வொரு பாடலை எழுதுகின்றனர். நீங்களும் ஒரு பாடலை எழுதிக்கொண்டு வாருங்கள். நாளைக்கு ரிஹர்சல். அடுத்த வாரத்தில் ரிகார்டிங்".

என் மனம் குதூகலித்தது. ஒ! இது பேரின்பம்! என்ன பேறு !

கனவிலும் நினைவிலும் கண்கண்ட தெய்வமாக விளங்கும் அந்த காஞ்சி மாமுனிவரைப் பற்றி பாடல் எழுதுவது எவ்வளவு பெரிய பாக்கியம். நான் அனுதினம் வணங்கும் அன்னை பாலா திரிபுரசுந்தரியின் கருணையாகத்தான் இருக்கவேண்டும். கலவைக்கு பரமாச்சார்யாள் அடிக்கடி சென்று வருவதை கேள்விப்பட்டுள்ளேன்.

எனவே அவர் அங்கேதான் பிறந்திருக்க வேண்டும் என்று அனுமானம் செய்துக்கொண்டேன்.

என் மகிழ்ச்சியின் தாக்குதலால் யாரிடமும் ஏதும் கேட்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. பல்லவி பிறந்து விட்டது.

கலவையில் ஒரு நாள் பேரொளி பிறந்து
காஞ்சியில் பெரியவராய் குருவெனச் சிறந்தது.

பெரியவாளின் பெருங்கருணையால் அனு பல்லவியும் சரணங்களும் மடை திறந்த ஆறுபோல் வந்தன.

உலகினை உய்விக்க அருள்மழை பொழிந்தது
உள்ளத்திலே அன்பும் பயிரினை விளைத்தது
- கலவையில்

அன்புடன் ஞானஒளி கலவையானது - அங்கே
புனிதமும் பொறுமையுமே கலவையானது
பண்புடன் பக்தியங்கே கலவையானது - நமக்கு
இன்பநிலை வழங்கிடவே உலவுகின்றது
- கலவையில்

உருகவைக்கும் நெஞ்சை அன்புப்பார்வை - நம்மை
ஒளிரவைக்கும் செம்மைச் காவிப்போர்வை
பெருகவைக்கும் கண்ணீர் பேச்செதற்கு? - அவரைப்
பணியாமல் இருப்பவர்க்கு மூச்செதற்கு?
- கலவையில்

இசையமைப்பாளர் அமரர் டி.பி ராமசந்திரன் பக்திபூர்வமாக இசையமைக்க, காஞ்சி பெரியவர்களால் "கம்பீரகானமணி" என்று பட்டம் சூட்டப்பெற்ற சீர்காழி அவர்கள் உள்ளம் உருக பாட, பாடல் பதிவாகியது.

அதன்பின் ஒருநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் காஞ்சி பெரியவாளை பற்றி கட்டுரை ஒன்று வந்தது, ஆர்வமுடன் படித்த ஆரம்பித்த எனக்கு மாபெரும் அதிர்ச்சி!

துக்கத்தால் தொண்டை அடைத்துக் கொண்டது.

கண்ணீர் கட்டுகடங்காமல் பெருகியது!

ஆம்! கட்டுரை தொடக்கத்திலேயே காஞ்சி பரமாச்சார்யாள் விழுப்புரத்தில் பிறந்தவரென்று காணபட்டது.

துடித்து போய்விட்டேன்! ஓ! எத்தனை பெரிய தவறு செய்துவிட்டோம்.

பெரியவாள் பிறந்த இடம் கலவையில்லையா?

பெரியவாள் பிறந்த இடம் கலவையில்லையா ??

பெரியவாள் பிறந்த இடம் கலவையில்லையா ??

ஆயிரம் தடவை இந்த கேள்விகள் என் நெஞ்சைத் தாக்கின.

"கலவையில் பிறந்ததாக" எழுதிவிட்ட என் அறியாமையை யார் மன்னிப்பார்கள்?

என்னிடத்தில் நம்பிக்கை வைத்துப் பாடலை பதிவு செய்த சீர்காழி அவர்கள் இதனை எப்படி தாங்குவார்கள்?

சரி! என்ன செலவானாலும் பரவாயில்லை! பல்லவியை மாற்றி வேறு பாடல் முயற்சி செய்திட வேண்டும் என்ற வெறியிலே திரு சீர்காழியார் அவர்களை சந்தித்தேன்.

"வாங்க! வாங்க!! உங்களைத்தான் நெனைச்சிகிட்டிருந்தேன். கரெக்டா வந்துடீங்களே! பெரியவா இசைத்தட்டான "சந்திரசேகரேந்திர ஜெயேந்திர விஜயம்" சீக்கிரமே வந்திடும். ஒரிஜினல் "டேப்" கல்கத்தாவுக்கு அனுப்பி இருக்காங்க! அநேகமாக அடுத்த மாதமே கூட வந்துவிடலாம்" என்று கூறினாரே பார்க்கலாம். எனக்கு அழுகையே வந்துவிடும்போல இருந்தது.

மெதுவாக நான் செய்த தவற்றினை கூறினேன், ஒரு கணம் சீர்காழி துணுக்குற்றார். மறுகணம் சுதாரித்து கொண்டு "இல்லை எழில்மணி! அது தப்பான பாடலாக எனக்குத் தோன்றவில்லை. அப்படியிருந்தால் பெரியவாள் கருணையாலே அந்த ரிகார்டிங் தடைப்பட்டிருக்கும். எதற்கும் அந்த கட்டுரையை நன்றாக படியுங்கள்" என்றார்.

"ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் இயற்பெயர் சுவாமிநாதன்! பிறந்தது விழுப்புரம். அன்னையின் பெயர் மஹாலக்ஷ்மி அம்மையார். தந்தையார் பெயர் சுப்பிரமணிய சாஸ்த்ரிகள் திண்டிவனத்தில்தான் சுவாமிகள் படிப்பு. 1907 - ம் ஆண்டின் ஆரம்பத்தில் 12 வயதான சுவாமிநாதனும் , அவரது அன்னையாரும், அன்னையாரின் சகோதரியும் கலவைக்கு பயணமானார்கள். காரணம் அந்த சகோதரியின் பிள்ளைக்குத்தான் காஞ்சி ஆசார்யாளாக - காமகோடி பீடாதிபதி ஆகியுள்ளார் என்பதும், அவரது குருவானவர் கலவையில் சமாதி ஆனார் என்பதும் ஆகும். இருந்த ஒரு மகனும் சங்கராச்சாரியார் ஆகிவிட்டதால் பாசத்தால் துடிக்கும் தமது சகோதரியை ஆறுதல் படுத்தத்தான் சுவாமிநாதன், தாயாரான மஹாலக்ஷ்மி அம்மையார் பயணப்பட்டது.இடையில் காஞ்சிபுரத்தில், மடத்தில் தங்கினார். அப்போது கலவையினின்று வந்த ஒரு வண்டியில் சங்கர மடத்தை சார்ந்த மேஸ்திரியும் சிலரும் தம்முடன் சுவாமிநாதனை ஏற்றிகொண்டனர். வேறொரு வண்டியில் மகாலட்சுமி அம்மையாரும், அவரது சகோதரியும் மற்றவர்களும் கலவைக்கு பயணப்பட்டனர். வண்டியில் செல்லும்போது சுவாமிநாதனிடம் மெல்ல பேச்சு கொடுத்தார் மேஸ்திரி.

"காஞ்சி அசார்யாளாக ஆகியுள்ள சுவாமிநாதனின் ஒன்று விட்ட சகோதரர் எதிர்பாராமல் ஜுரத்தின் காரணமாக இறைவனடி சேர்ந்தமையால் உடனே திண்டிவனம் சென்று சுவாமிநாதனை அழைத்து வர உத்தரவாகியுள்ளது என்றும், எதிர்பாராமல் காஞ்சிபுரத்திலேயே சுவாமிநாதனை பார்கைக் கூடியதாகிவிட்டது என்றும், அடுத்த அசார்யாளாகபீடமேறப் போகிறவர் சுவாமிநாதன் தான்" எனவும் கூற, சுவாமிநாதன் அதிர்ச்சிக்குள்ளானார். ஆறுதல் கூறவந்த தமது அன்னையாருக்கு இப்போது ஆறுதல் அளிக்க வேண்டிய நிலையாகியுள்ளதே, என நினைத்தார். சுவாமிநாதனின் தந்தையாருக்கு தந்தி கொடுக்கப்பட்டது. கலவையில் "ஸ்ரீ சந்திர சேகரேந்திர சுவாமிகளாக 68-வது காஞ்சி காமகோடி பீடாதிபதியாக அமைவதற்கு" சுவாமிநாதனுக்கு சன்யாசம் தரப்பட்டது. அவர் 1907-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதியன்று "காஞ்சி காமகோடி பீடாதிபதி" யானார்கள்.

இந்த விவரங்களை கேட்டதும் சீர்காழி அவர்கள் மகிழ்ச்சியால் துள்ளினார்கள்!

"ஆஹா! என்னே பெரியவாள் கருணை! கலவையில் தான் அவருக்கு சன்னியாசம்! சன்னியாசம் என்பதே மறுஜென்மம் தானே! தவிர தீட்சை பெறுவதே பேரொளி பெறுவதாகும். ஆகவே "கலவையில் ஒரு நாள் பேரொளி பிறந்தது காஞ்சியில் பெரியவராய் குருவேனச் சிறந்தது" என்ற வரிகள் உண்மையான வரிகள்தான். நீங்களும் கலங்கி என்னையும் கலக்கிவிட்டீர்களே என அன்புடன் கடிந்து கொண்டார்கள்.

நான் தயக்கமாக இருந்ததை பார்த்து "எதற்கு வீண் குழப்பம்! இசைத்தட்டு வந்தவுடன் பெரியவாள் பாதங்களில்தானே வைக்கப்போகிறோம். அவர் ஆசீர்வதித்து விட்டால் உங்களுக்கு சந்தோஷம் தானே" என்று எனக்கு தைரியம் சொல்லி அனுப்பினார்.

அதேபோல் இசைத்தட்டு வெளி வந்ததும் என்னை காஞ்சிபுரம் வரச் சொல்லியிருந்தார். விடிகின்ற காலை நேரம். அமைதி தவழும் காஞ்சி மடத்தில் இருந்தேன்.சரியாக 8 மணிக்கெல்லாம் சீர்காழி அவர்கள் வந்து விட்டார். தேனம்பாக்கத்தில் தான் காஞ்சி பெரியவாள் அருள் மழை பொழிவதாக அறிந்த நாங்கள், தேனம்பாக்கம் சென்றோம்.

தேனம்பாக்கம் கோவிலிலே திரண்ட கூட்டம். கிணற்றுக்கு இந்தப் பக்கம் பக்தர்கள் பெரியவாளைப் பார்க்கும் ஆவலில் மிகவும் பரபரப்பாக காணப்பட்டார்கள்.

கிணற்றுக்கு அந்த பக்கம் உள்ளஅறையில் பெரியவர் பூஜை செய்து கொண்டிருப்பதாக கூறினார்கள்.

பெரியவர் எப்போது தரிசனம் தருவார்? அதற்கு சரியான பதில் யாருக்கும் தெரியாது!

தரிசனம் தந்து விடுவார் என்ற ஆவல் மட்டும் அனைவருக்கும் இருந்தது. நாங்களும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து கொண்டோம். எங்கும் "ஹர ஹர சங்கரா - ஜெய ஜெய சங்கரா" என்ற மெலிதான கோஷம்.

அப்போது சீர்காழியின் அருகிலிருந்த சிலர் அவரை பாடுமாறு கேட்கவும், திடுக்கிட்டார் அவர்.

"என்னங்க நீங்க! பெரியவா பூஜை பண்ணிண்டிருக்கார். பூஜை நடக்கிறதே! பாடினா இடைஞ்சலாகாதோ" என்று அன்புடன் கடிந்து கொண்டார். ஒரு பத்து நிமிடம் கழிந்தது. அப்போது கதவு திறப்பது போன்ற ஒரு சத்தம். அனைவரும் நிசப்தமாகி பெரியவாளை தரிசிக்க கை கட்டி வாய் பொத்தித் தயாரானார்கள். கதவை திறந்து வந்தவர் பெரியவர் அல்ல. அவருக்கு பணிவிடைகளை உள்ளே செய்து கொண்டிருந்த அன்பர் ஒருவர் தான்.

அவர் மெல்ல வந்து கிணற்றின் இந்தப் பக்கம் அங்கேயும் இங்கேயும் கண்கள் அலைபாய நின்றார்.

"இங்கே சீர்காழி கோவிந்தராஜன் வந்திருக்காரா?" உடனே அதிர்ச்சிக்குள்ளானார் சீர்காழி அவர்கள்.

"இதோ இருக்கிறேன்" என்று பரபரப்புடன் கூறினார்.

"நீங்கதானா! உங்களை பெரியவா பாடச் சொன்னார்" என்று கூறி உள்ளே சென்று கதவை தாளிட்டுக் கொண்டாரே பார்க்கலாம்!

மெய்சிலிர்த்து விட்டார் சீர்காழி! என்னே இது பெருங்கருணை! இது என்னே தெய்வீகத் தொடர்பு!

"பாடலாமா" என்று பத்து நிமிடங்களுக்கு முன் சந்தேகம்!

"பாடேன் " என்று பெரியவாளின் உத்தரவு! என்னே இது அற்புதம்!

உடனே "ஹிமாத்ரிசுதே பாஹிமாம்" என்ற பாடலை கம்பீரமாக பாடினார்.

தொடர்ந்து "ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஜெயேந்திர விஜயம்" என்ற தலைப்புடன் கொண்ட இசைத்தட்டில் உள்ள பாடல்களை பாட ஆரம்பித்தார். மென்மையான காற்று அருகிலிருந்த மரங்களில் இருந்து வீசி மகிழ வைத்தது.

புள்ளினங்களின் ஒலி அவரது இசைக்கு சுருதி கூட்டின. எப்படிப்பட்ட தெய்வீகமான அனுபவம்!

"காமாட்சித்தாய் மடியில் சீராட்சி புரிந்து வரும்
காமகோடி தரிசனம் காணகாணப் புண்ணியம்"

என்ற பாடலை பாடி முடித்தார்.

தொடர்ந்து "கலவையில் ஒரு நாள் பேரொளி பிறந்து" என்ற பாடலை பாடினார்.

அப்பாடலின் சரணத்தில் வரும்
"உருகவைக்கும் நெஞ்சை அன்புப்பார்வை - நம்மை
ஒளிரவைக்கும் செம்மைச் காவிப்போர்வை"

என்ற வரிகளை பாடிவிட்டு

"பெருகவைக்கும் கண்ணீர் பேச்செதற்கு" என்றும் தொடங்கும்போது மீண்டும் கதவு திறந்தது. பணிவிடை செய்யும் அந்த அன்பர்தான் போலும் என அசுவாரஸ்யமாக இருந்த அனைவர் முகத்திலும் ஆனந்த அதிர்ச்சி.

ஆம்! செம்மைக்காவிப் போர்வையும், சிந்தும் அன்புப் பார்வையும் விளங்க நடமாடும் சிவப்பழமாய் பெரியவர் காட்சி அளித்தார்.காளிக்கு பாதம் வரை எலுமிச்சைக் கனி மாலை சுற்றியிருப்பார்களே, அது போன்ற எலுமிச்சைக் கனி மாலையை சுற்றிகொண்டிருந்தார்.

"பெருக வைக்கும் கண்ணீர், பெருக வைக்கும் கண்ணீர" என்ற சீர்காழி பாடலை பாட முடியாது தொண்டை அடைக்க கண்ணீர் விட ஆரம்பித்தார். அங்கு வந்த அத்தனை பேர் விழிகளிலும் உணர்ச்சி பிரவாகமாக கண்ணீர் பெருகியது. ஒரு பெண்மணி கதறவே ஆரம்பித்துவிட்டார். கண்ணீர் வழியாக அங்கு வந்தவர்கள் வினை கரைய ஆரம்பித்தது. பெரியவாளும் லேசாக விழிகளை துடைத்துக் கொண்டார். தொடர்ந்து பாடுமாறு சீர்காழி அவர்களை நோக்கி சைகை செய்தார். மிகவும் கஷ்டப்பட்டு தமது உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு சீர்காழி அவர்கள்

"பெருகவைக்கும் கண்ணீர் பேச்செதற்கு? - அவரைப்
பணியாமல் இருப்பவர்க்கு மூச்செதற்கு?"

என்று பாடி முடித்தார் . தொடர்ந்து இசைத்தட்டில் வந்துள்ள மற்ற இரு பாடல்களையும் (பாரதம் முழுவதும் பாதங்கள் பதிந்ததால் - உளுந்தூர்ப்பேட்டை சண்முகம்,) (மெய்ஞான குருதேவன் வந்தான் - கலைமாமணி எஸ்.டி சுந்தரம்) பாடி முடித்தார். அதன்பின் "நாள் என் செய்யும்-" என்ற சுந்தர் அலங்காரமும். திருப்புகழும் பாடி நிறைவு செய்தார்.

உடனே இசைத்தட்டுடன் உள்ள பழத்தட்டு பெரியவாள் இருந்த இடத்துக்கு அனுப்பப்பட்டது. உடனே சீர்காழியை பார்த்துவிட்டு புன்னகையுடன் இசைத்தட்டு தடவிக் கொடுத்து ஆசீர்வதித்தார்.

சீர்காழி அவர்கள் கூடவந்திருந்த என்னையும், கவிஞர் உளுந்தூர்ப்பேட்டைசண்முகத்தையும் எச்.எம் வி மேனேஜர் திரு மங்கபதியினையும் பற்றி பெரியவாளிடம் கூறினார். அன்புப் பார்வையும் காவிப் போர்வையும் திகழ புன்னகை பூக்கும் அந்த தெய்வத்தை கண்டவுடன் எனது ஏக்கம் பறந்தது. எனது பாடல், சரியான பாடலே என்ற திருப்தியும் பிறந்தது. எல்லாரையும் அசீர்வதித்த பெரியவாள் மீண்டும் உள்ளே சென்று விட்டார். அதன்பிறகு ஒரு மணி நேரம் காத்திருந்தோம், மீண்டும் தரிசனம் செய்ய. ஆனால் தரிசனமாகவில்லை.

என்னே இது ஆச்சரியம். அன்று மாலை மயிலை கற்பகாம்பாள் கோயிலில் இந்த இசைத்தட்டு வெளியீட்டு விழாவுக்கு எச்.எம் வி ஏற்பாடு செய்திருந்தது. இங்கே காலையில் பெரியவாளே ரிலீஸ் செய்கிறார். எப்படிப்பட்ட பெரும்பாக்கியம்.

மாலையில் கற்பகத்தின் சன்னதியில்விழா நடைபெறுகிறது.

காலையில் காமாட்சி செல்வர் முன்னாலே வெளியீடு நடைபெறுகிறது.

நிறைந்த மனதோடு வெளியே வந்தபோது எனது அன்புக்குரிய பெரியவர் ஒருவர் தென்பட்டார். அவரிடம் வந்த விவரத்தைக் கூறிவிட்டு ஒரு சந்தேகத்தையும் எழுப்பினேன்.

"நாங்கள் சாதாரணமான மானுடர்கள், சந்தோஷம் வந்தால் குதிப்போம்; துக்கம் வந்தால் துடிப்போம். உணர்சிகளுக்கு ஆட்பட்டவர்கள் நாங்கள். நாங்கள் பெரியவாளை கண்டதும் உணர்ச்சி வசப்பட்டு அழுது விட்டோம். ஆனால் உணர்சிகளை கடந்த பெரியவாளும் சிறிது கலங்கி லேசாக கண்களை துடைத்து கொண்டார், பெரியவர் உணர்ச்சி வசப்படுவாரா?" என்று கேட்டேன்.

அதற்கு அவர் தந்த பதில் என்னை ஆனந்தப் பரவசத்திற்கு உள்ளாக்கியது.

அந்த பெரியவர் கூறுகிறார்,

"நீங்க நம்ம பெரியவாளைப் பத்தி எழுதின பாட்டுன்னு நினைச்சேள். பெரியவாளைப் பார்த்ததும் அழுதுட்டேள்.

பெரியவா என்ன நெனச்சி இருப்பார் தெரியுமா? அவரோட குருநாதர் கலவையில் தானே சமாதி அடைந்தார். அதனால்தானே குரு பூஜைக்கு போய் வந்து கொண்டிருக்கிறார். தன்னோடு குருநாதர் பாட்டாச்சேன்னு குருவை நினைச்சு கண்ணீர் விட்டிருப்பார்! கலவையில் நிறைந்த பேரொளி தானே அவரது குருநாதர்."

எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஒரு கல்லில் இருகனிகள் என்பது இதுதானா!

எச்.எம் வி மேனேஜர் அவர்கள் , "சீர்காழி அவர்கள் இப்பாடல் இசைத்தட்டு மூலம் வரும் ராயல்டி தொகையை காஞ்சி சங்கர மடத்துக்கு அளிக்க முடிவு செய்துள்ளார்" என்று கூறிய செய்தியும் தேனாக இனித்தது.

கலவையில் பிறந்த பேரொளியின் கருணை மழையில் நனைந்து அமைதியோடு அனைவரும் எந்தக் குறையும் ஏக்கமும் இன்றி வீடு திரும்பினோம்.

Source: Shri Varagooran Narayanan.

Thursday, December 4, 2014

குரு வாரத்தில் குருவை பற்றி.......

ஒருசமயம், காஞ்சிப் பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழு கொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத் தொடங்கினர்.

“தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித அசைவும் இல்லை. மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை” என்பதை அறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர்.

உற்றுப் பார்த்த பெரியவர், “அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே” என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார்.

பெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின் மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் கொண்டு வரும் படி பணித்தார். பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு, பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார்.

பெற்றோரிடம், “கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை) மாயூரநாதர் கோயிலுக்கு தூக்கிண்டு போயி தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போடுங்கோ…. இப்பவே கிளம்புங்கோ…” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அந்த தம்பதியும் மயிலாடுதுறை புறப்பட்டனர்.

அவர்கள் வரும் முன்பே, மாயூரநாதர் கோயிலில் கூட்டம் சேர ஆரம்பித்தது. உணர்ச்சியற்ற அந்த குழந்தையைப் பற்றித் தான் ஒரே பேச்சாக இருந்தது.

குழந்தையுடன் வந்த பெற்றோர், மாயூரநாதர் கோயிலில் விநாயகரை தரிசித்து விட்டு, பிரகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதி முன், குழந்தையைப் படுக்க வைத்து வழிபட்டனர். ஒரு மணி நேரம் ஆன பின்பும், குழந்தையிடம் ஒரு அசைவும் தென்படவில்லை. மக்கள் சலசலக்க ஆரம்பித்தனர். சிலர், அந்த பெற்றோரின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

அப்போது, திடீரென ஒரு வெள்ளை பூனைக்குட்டி கூட்டத்திற்கு நடுவில் ஓடி வந்தது. குழந்தையின் அருகில் நெருங்கியது. பூனையால் ஆபத்து நேர்ந்திடாமல் தாய் கவனித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதத்தில், பூனை குழந்தையின் நெற்றியை நாவால் நக்கியது. தலை முதல் பாதம் வரை முகர்ந்து விட்டு ஓடி விட்டது.

பிறந்ததில் இருந்து அசையாத அக்குழந்தை, தட்சிணாமூர்த்தி சந்நிதியை நோக்கி திரும்பிப் படுத்தது. அதன் இதழில் புன்னகை அரும்பியது.

“க்ளுக்’ என்ற மழலை ஒலியும் எழுந்தது. இதைக் கண்ட பெற்றோர், “ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர’ என்றபடி குழந்தையை தூக்கினர். அவர்களைப் பார்த்துச் சிரித்தது.

இந்த அற்புதம் கண்டவர்கள் காஞ்சி மகானின் தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர்.

முற்பிறவியில் பூனையைக் கொன்றவர்களுக்கு, பூனை சாபத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் போவது அல்லது ஊனமான குழந்தை பிறப்பது போன்ற தோஷம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். அதே பூனை இனத்தைக் கொண்டே, இந்த குழந்தையின் தோஷத்தைப் போக்கி, தலைவிதியை மாற்றி அமைத்த பெரியவரின் மகிமையை என்னவென்பது?

காஞ்சி மகான் தான் ஜீவனோடு வாழ்ந்த காலத்தில் அனுதினமும் தன்னை நாடி ஓடிவந்த எத்தனையோ பக்தர்களின் குறைகளை தீர்த்துவைத்திருக்கிறார். ஊழ்வினைகளால் ஏற்படும் - மிக மிகப் பெரிய டாக்டர்களால் கூட தீர்த்துவைக்க முடியாத நோய்களையும் பாதிப்புக்களையும் கூட தனது அருட்பார்வையால் போக்கியிருக்கிறார். அது தொடர்பான நிகழ்வுகளை படிக்க படிக்க, சிலிர்பூட்டுபவை. அவர் இன்னும் ஒரு நூறு வருடம் நம்மோடு இருந்திருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர!

Source: Shri. Mannargudi Sitaraman Srinivasan

Wednesday, December 3, 2014

அனைவருக்கும் தெரிந்த ராமாயணத்தை உதாரணக் கதையோடு சொல்லி, ஸ்ரீராமரை நம் நெஞ்சில் அமர்த்தி, ஒரு தர்மபட்டாபிஷேகமே நடத்துகிறார் ஸ்ரீமஹா ஸ்வாமிகள். எங்கே... மகா பெரியவா சொல்வதைக் கேட்போமா?

நன்றி-பால ஹனுமான்.

'ராமன் என்றாலே, ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே ஆனந்தமாகவே இருந்தான்.

சுக- துக்கங்களில் சலனமடையாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர் களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி, வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.

ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந்நாராயணனே ஸ்ரீராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், 'இது என் அபிப்பிராயம்’ என்று சொல்லவே மாட்டார். 'ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது’ என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ஸ்ரீராமனாக வேஷம் போட்டுக்கொண்டு வாழ்ந்தான்.

'ராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்த ஸ்ரீராமனுக்கு சீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம்?’ என்று கேலி செய்து கேட்டவர் களும், எழுதியவர்களும் இருக்கிறார்கள். இவர்கள், ஸ்ரீராமன் இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான்; மனுஷ்யர்களைப் போலவே வாழ்ந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்...

ஒரு நாடகம் நடக்கிறது. அதில் லவ- குசர்களை வால்மீகி, ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ஸ்ரீராமராக வேஷம் போட்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ- குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து, 'இந்தக் குழந்தைகள் யார்?’ என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே தெரியவில்லை என்று நாடகம் பார்க்கிறவர்கள் கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, 'இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள்; நீங்கள்தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார்!’ என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும்?

வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாததாக, தெரியாததாகத்தான் நடிக்கவேண்டும். ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது இப்படித்தான் மனுஷ்ய வேஷம் போட்டுக்கொண்டு, தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.

வேதப் பொருளான பரமாத்மா, தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி, கௌசல்யாதேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைத்தான் கட்டிக்கொடுத்தாள். 'ராகவா... நீ எந்த தர்மத்தை தைரியத்தோடு, நியமத்தோடு அனுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும்’ என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள். தனது என்ற விருப்பு- வெறுப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதேபோல் தைரியம் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விடக்கூடாது. ஸ்ரீராமனை சாக்ஷ£த் லக்ஷ்மணனே பரிகசித்தான்.

'அண்ணா! நீ தர்மம், தர்மம் என்று எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்யத்தை உனக்கு நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா’ என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமனோ, யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும், அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், 'ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.

சாக்ஷ£த் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு 'ராம ராம’ என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் ஸித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.'
ஆஹா... எத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறார் மகா பெரியவா?

Monday, December 1, 2014

Experiences with Maha Periyava: Card remedy

An elderly gentleman had a paralytic stroke and lost all sensations on the right side of his body.His response to medical treatment was minimal.But he could not regain his speech and suffered from some loss of memory. His wife came to Maha Periyava for darshan and made a tearful prayer.

Periyava should be gracious. My husband must recover completely!''.

Periyava was silent for a moment.

“Will you do anything to help him recover''.

The expense does not matter.

''I did not mean that. You will not take my words lightly??

''I will not''.

''Buy two packs of playing cards and put them where he can see them throughout the day. Slowly he will recover his memory and also regain his speech''.

The lady was amazed and also at the same time found the prescription rather strange. 'How did Periyava know that her husband was addicted to playing cards? Would her husband recover if he were to look at a pack of playing cards the whole day?

The lady did just has Periyava had suggested. In a few days the gentleman recovered his memory completely. He began to play cards with his grand children. When his grandson blundered he chided him, ''You must drop a spade now. Not hearts!'' The gentleman had regained his speech also!!

What a sort of remedy did Periyava suggest? Home remedy or Card remedy? Anyway he holds the trump in his hand!

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top