Kanchi mahaperiava

Kanchi mahaperiava
mahaperiava

Welcome to My Blog.....

JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!! I welcome all of you to this blogspot which is dedicated in entireity to my JAGAT GURU. I pray to my Kanchi Mahan to shower the blessings for the successful creation of this blogspot. I am in the process of collecting all the available information, speeches, audios, videos, books from the ocean of WEB. I would like to extend my sincere gratitude to all the Original uploaders who provided the resources for me to gather and put the same in my blogspot. Please note that this site is regulary updated and request you to visit on regular basis to update on the happenings. I will leave you here...with Periavaa. JAYA JAYA SHANKARA!! HARA HARA SHANKARA!!

PLEASE LISTEN TO THE NEWLY UPLOADED SONGS ON SHRI MAHAPERIAVAA BY SHRI UDAYALUR KALYANA RAMAN

Friday, February 28, 2014

"வேப்பம்பூ பச்சடி எப்படிச் செய்கிறீர்கள்?"

கட்டுரையாளர்.;ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை
தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

நன்றி;வானதி பதிப்பகம்.
தமிழ் வருஷப் பிறப்பு புண்னிய தினத்தில் பெரியவாளைத்
தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.

புதுக்கோட்டையிலிருந்து சென்றிருந்த நாங்கள்
வேப்பம்பூ-புளி-வெல்லம் சமர்ப்பித்தோம்.

"வேப்பம்பூ பச்சடி எப்படிச் செய்கிறீர்கள்?"

என்று பெரியவாள் கேட்டார்கள்.

நாங்கள், அசட்டுப் பிசட்டென்று என்னென்வோ சொன்னோம்.

பெரியவாள் சொன்னார்கள்.

"இந்த மூன்று சாமான் மட்டும் போதாது. தேன், நெய்

சேர்க்கணும்.பக்குவமாகச் செய்தால், பச்சடி சுவையாக

இருக்கும். இப்படிச் செய்யப்பட்ட பச்சடியை,மற்றவர்களுக்குக்

கொடுக்கணும்,.அவர்கள் வசியமாகி விடுவார்கள்!

"முதல்லே, அம்பாளுக்கு நைவேத்யம். அம்பாள் வசியமாகி
விடுவாள்! அடுத்து, அகத்துக்காரருக்கு, பின்னர் மனைவி

என்ன சொன்னாலும், "சரி.....சரி..." என்று தலையாட்டுவார்!

அப்புறம், வீட்டில் வேலை செய்கிறவர்களுக்குக் கொடுக்கணும்.

முணுமுணுக்காமல் வேலை செய்வார்கள்!"

பிறகு, உக்கிராணத்தில் சொல்லி,வேப்பம்பூ பச்சடி செய்துகொண்டு

வரச் செய்து,எங்களுக்கெல்லாம் கொடுத்தார்கள்.

"இது எதற்குத் தெரியுமா?"

ஒருத்தி சொன்னாள்; நாங்களெல்லோரும் பெரியவா

ஆக்ஞைப்படி நடக்கணும்-என்பதற்காக...."

"அது சரி...இது,திரிபுரசுந்தரி பிரஸாதம். நீங்க எல்லாரும்

அம்பாளின் பக்தைகளா எப்போதும் இருக்கணும்...."

எங்கள் கையில் இருந்தது,ஒரு ஸ்பூன் வேப்பம்பூ

பச்சடியாகப் படவில்லை;அமுதக் கடலாகவே தோன்றியது.

Wednesday, February 26, 2014

"நீங்க எல்லாரும்...பெரிய ஞானிகள்! அகங்காரத்தை மறந்தேவிட்டவர்கள் நானும்கூட.... இன்னும் முயற்சி பண்ணிண்டிருக்கேன்...."

 

கட்டுரையாளர்.;ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை
தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

நன்றி;வானதி பதிப்பகம்.
பெரியவாளைச் சுற்றிலும் அடியார்கள் கூட்டம்.

ஒருபுறம் ஆண்கள்;இன்னொரு புறம்,பெண்கள்.

அன்றைய தினம் பெரியவாள்,இலேசான'
விஷயங்களைப் பேசி,அடியார்களை சிரிப்பு
வெள்ளத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று, ஆண்கள் பக்கம் திரும்பி,"உங்களில்
யாருக்கு சமையல் செய்யத் தெரியும் என்று கேட்டார்கள்

அடுக்களைப் பக்கம் எட்டிப் பார்த்திராதவர்கள்

உள்பட,எல்லோரும், 'எனக்குத் தெரியுமே!' என்று

ஒரு குரலாகச் சொன்னார்கள்.

"குழம்பு எப்படிச் செய்வே?" என்று அடுத்த கேள்வி.

முதலில் நின்றவர், ஆரம்பித்தார்; "புளியைக்

கரைத்து, மிளகாய்ப் பொடியும் உப்பும் போட்டு,

நன்றாகக் கொதி வந்ததும் இறக்கணும்."

அடுத்தவர்; முதலில்,கடுகு-மிளகாய் தாளித்துக்

கொள்ளணும்.புளி-உப்பு-மிளகாய்ப்பொடி சேர்த்து,

வெந்த பருப்பைப் போட்டு ஒரு கொதி வந்ததும்,

கறிவேப்பிலை-கொத்தமல்லித் தழை போடணும்..."

இன்னொருவர்;"புளி-மிளகாய் இரண்டையும்

அம்மியீல் அறைத்து உப்பு போட்டு, வெந்த பருப்பைச்

சேர்த்து,பெருங்காயம் துளியூண்டு போட்டு
வேக வைக்கணும்..."

.....இப்படியெல்லாம், அதி அற்புதமான முறைகளை

ஒவ்வொருவராகச் சொல்லி முடித்தார்கள்.

பின்,பெரியவாள் முறை வந்தது.

"நீங்க எல்லாரும்...பெரிய ஞானிகள்!
அகங்காரத்தை மறந்தேவிட்டவர்கள் நானும்கூட....
இன்னும் முயற்சி பண்ணிண்டிருக்கேன்...."

பெரியவாள் என்ன சொல்கிறார்கள்?

"ஜனங்கள் குழம்பிப் போவதற்குக் காரணம்,
தான் என்ற நினைவுதான். நீங்கள் எல்லோரும்
தான் என்ற நினைவே இல்லாதவர்கள்!.

புளி-மிளகாய்-உப்பு-பெருங்காயம் மட்டும் நினைவில்

இருக்கு; தான் என்ற எண்ணமே வரவில்லை.
ஞானிகள் நிலை இதுதானே.

(குழம்புக்கு தான் சேர்க்காததை-புரிந்து கொண்டனர்)

கயிலால மலையின் அடிவாரத்துக் கற்சிலைகளாக
நின்றார்கள் அடியார்கள்.

Monday, February 24, 2014

திருத்தணி முருகன் கோவிலுக்கு பெரியவா தன் சீடர்களுடன் வந்திருந்தார். பல்லக்கை வெகுதூரம் சுமந்து வந்ததால் பணியாளர்கள் பசியில் களைத்து போயிருந்தனர்.
மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. அவர்கள் சாப்பிடுவதற்குத் தகுந்த இடம் ஏதுமில்லை. தன்னைச் சுமந்து வந்தவர்கள் பசியில் வாடியது கண்டு பெரியவா மிகவும் வருந்தினார். அப்போது பலராமராவ் என்பவர், மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தார். அவர் கோயில் சரக்குமாஸ்டராகப் பணியாற்றுபவர். பெரியவா மீது மதிப்பு கொண்டவர். கடுமையான காய்ச்சலுடன் களைப்பாக மலையில் இருந்து இறங்கிய அவரை ஒருவர் பெரியவாளிடம் அழைத்துச் சென்றார்.
பெரியவாவைக் கண்ட பலராமராவ் பரவசப்பட்டார். சாக்ஷ்டாங்கமாக வணங்கி எழுந்தார். சுவாமிகள் அவரிடம்,’நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.,’ என்றார். கண்கள் கலங்கியபடியே ,’’சுவாமி தங்களுக்கு இந்த ஏழை உதவுவதா? அப்படி ஒரு பாக்கியமா? என்ன செய்ய வேண்டும்? என்று உத்தரவு போடுங்கள்,’’ உணர்ச்சிவசப்பட்டு கேட்டார். ‘’எனது பல்லக்கைத் தூக்கி வந்தவர்களின் பசி போக்க வழி செய்ய வேண்டும்.ஓட்டல்கள் அடைக்கப்பட்டுவிட்டன. மலைக்குப் போய் ஏதாவது உணவு தயாரிக்கவேண்டும்,’’என்று அன்போடு சொன்னார்.
”சுவாமி! நீங்கள் சொல்லும் பணியை நான் அவசியம் செய்யவேண்டும். ஆனால் இப்போது காய்ச்சலால் அவதிப்படுகிறேன். இத்துடன் ஏறி உணவு தயாரிக்க காலதாமதமாகுமே,’’என்று வருந்தினார்.
பெரியவா அவரிடம் உனக்கு ஜுரம், உடல்வலி எல்லாம் போய்விடும். தைரியமாக மலையேறிச் செல். உன் முதலாளி அனுமதியுடன் சீடர்களுக்கு உணவு தயாரித்து வை,’’ என்றார்.
பெரியவா பேச்சைக் கேட்ட பலராமராவ், தன் காய்ச்சலையும் மறந்து மலையேறி சூடாக வெண்பொங்கல், சாம்பார், சட்னியை சிறிது நேரத்தில் தயாரித்து முடித்தார். பின்னர் சன்னதிக்கு வந்து பார்த்தார். பெரியவா சன்னதியில் முருகப் பெருமானைத் தரிசித்துக் கொண்டிருந்தார்.
பெரியவாவைக் கண்ட பலராமராவுக்கு கண்ணீர் பெருகியது.
‘’சுவாமி! நான் உங்களிடம் உத்தரவு பெற்று மலையேறும் போதே, என்னை வாட்டிய காய்ச்சலும், உடல்வலியும் அறவே ஓடிப்போய் விட்ட்து. அது மட்டுமல்ல! என்னோடு இந்நேரம் வரை தாங்களும் உடனிருந்து சமையல் பணியும் செய்தது போல உணர்ந்தேன்,’’ என்றார்.
பின்னர், பெரியவாவோடு மலைக்கு வந்திருந்த பணியாளர்களுக்கு சூடான வெண்பொங்கலைப் பரிமாறினார். பணியாட்களும் விருப்பத்தோடு சாப்பிட்டு பசியாறினர்.
உம்மாச்சி தாத்தா வைத்தீஸ்வரனாச்சே !!!

Source: Shri Well-bred Kannan

Saturday, February 22, 2014

Sri Maha Periyava - Maheswara Avatar - Part 3 ! Smt.Rajalakshmi Vittal maami's experiences ! My sister-in-law‘s (husband’s sister) family was, and still is, devoted to Sri Maha Swami. They would do bikshavandan regularly and moved closely with Him. I too had a desire to do bikshai to Sri Periyava and mentioned it to her. She said, you are so devoted to Him, your wish will certainly be fulfilled. As I told you earlier, this was during the time when I was immersed in the family responsibilities and had little time to visit Him, and could not even think of doing bhikshai to Him. Then, one day, I had a dream. A sage accompanied by a middle aged woman clad in white sari in Telugu style walked into the room. I immediately identified the sage as Sri Maha Periyava, but, took a little longer, as they came closer, to recognize the woman. It was Aryaambaa, mother of Sri Adhi Sankara ! In the dream, I told Him of my wish to do bhikshai to Him. He then said, why are you so anxious about it, a bowl of rice with butter milk would do. I woke up abruptly. It took a few minutes to shake off the hang over and then I thought about the dream. It became clear to me that Maha Periyava is none other than Sri Adhi Sankara, who is Lord Mahadev Himself. This was the first instance when He revealed to me that He was Maheswara avatar. I started doing bhikshai to Him only after we moved to Bangalore in the mid 70s and it continued till Maha Swami attained siddhi in Jan 1994. Then, I asked Sri Mathur Swamigal who incidentally is the son of my sister-in-law in Poorvaashrama, what should I do. He instructed me to start doing Maha Periyava Jayanthi. We performed the first jayanthi in 1995 in Chennai and it continues to this day. May He bless you all. Ram Ram. Sri Maha Periyava Thiruvadigal Saranam. Jaya Jaya Sankara, Hara Hara Sankara. for all other details, see part 1 of the serial. please read and share.

Thursday, February 20, 2014

"Etch the essence of Gayathri in your mind during Japam!"


I took my daughter to have darshan of Mahaperiaval. Though He was laid up with high temperature He gave me darshan, and enquired about the health of my daughter. I burst into a tempest of tears for His mercy, compassion, kindness and divine blessings.
He then instructed me to perform Sahasra Aavrti (1000) Gayatri Japa, every Sunday and avoid discussing politics which would invariably involve turning the mind away from things spiritual. He said that my performance of Gayatri Japa alone would repay my indebtedness. For some months afterwards I obeyed His command with implicit faith and earnestness and switched over doing Gayatri Japa every day instead of only on Sundays!
In another incident I went to Satara in Maharashtra, where the Paramacharya was camping. Around 3.00 AM in the wee hours of the morning the Paramacharya sent for me and asked me to recite Dhyana Sloka of the sacred Gayatri, which I did it trembling within myself!
For nearly 30 minutes, the great Sage gave a rich annotation, and instructed me to etch it in my mind while performing the japa! I however confessed that being too small, mired in profound ignorance it would be difficult for me to capture the picture of sacred Gayatri, as it was expounded, but I enthroned the lotus feet of Mahaperiaval in the inner recesses of my heart while doing the Japa.
He displayed His benign and divine smile. It was an epochal event in my life. He aroused and awakened my sensibility and sensitivity to the glory and greatness of sacred Gayatri!
*****

Tuesday, February 18, 2014

மகா பெரியவா கண்ணை மூடி ஜபத்தில் ஆழ்ந்தார் என்றால் ஒரு மணி நேரம் ஜபம் செய்வார். கடிகாரத்தை எல்லாம் பார்ப்பது கிடையாது. ஜபத்தில் இருந்து அவர் விழிக்கும்போது சரியாக ஒரு மணி நேரம் கழிந்திருக்கும்'' - எனச் சிலாகிப்புடன் துவங்குகிறார் பாலு. இவர், காஞ்சி முனிவரின் நிழலாகவே இருந்து பணிவிடைகள் செய்தவர். மிக அற்புதமான நிகழ்வுகளை அவர் பகிர்ந்துகொண்ட போது, மகாபெரியவாளின் கருணையை எண்ணி கண்கள் பனித்தன நமக்கு.
''ஒருமுறை, அப்போ துணை ஜனாதிபதியா இருந்த பி.டி.ஜாட்டி, பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார். அந்த நேரம் பெரியவா ஜபத்தில் இருந்தார். சரி... ஜனாதிபதி தரிசிச்சுட்டு உடனே கிளம்பிடுவாருன்னு எதிர்பார்த்தோம். ஆனால், அவருக்கு பெரியவாளுடன் நிறைய பேச வேண்டியிருந்தது போலும். பெருமாள் கோயிலில் காத்திருந்தார். இந்த விஷயத்தை மெள்ள தயக்கத்துடன் பெரியவாளிடம் சொன்னோம்.
அவரும்... துணை ஜனாதிபதியை சந்திர மௌலீஸ்வரர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், என்ன விசேஷம் தெரியுமா? அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தும் தனது ஜபத்தையும் அவர் விட்டுவிடவில்லை!'' என்ற ஆச்சரியத்துடன் விவரித்த பாலு, மேலும் தொடர்ந்தார்:
''தான் ஏகாதசி, துவாதசி என்று உபவாசம் இருப்பார். ஆனால் பிறத்தியார் வயிறு வாடினால் பொறுத்துக்க மாட்டார். கள்ளுக் கடையில் குடித்து விட்டு வெறும் வயிற்றோடு போவார்களே...அவர்களுக் காகவும் மனம் இரங்கியதுண்டு. இந்த நிலையில் வீட்டுக்குப் போனால் அவர்களுக்குச் சாப்பாடு கிடைக்குமா?! பெரியவா என்ன செய்வார் தெரியுமா? தன்னைப் பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் வாழைத் தார்களை வழியில் இருக்கும் புளிய மரத்தில் கட்டி தொங்கவிடச் சொல்வார். நல்ல விலை உயர்ந்த ரஸ்தாளி பழங்களாக இருக்கும். 'வயிறு காலியா இருக்கற மனுஷாளும் சாப்பிடட்டும்... பட்சிகளும் சாப்பிடட்டும்’ என்பார். ஆமாம்... அவரின் கருணை பேதம் பார்க்காத கருணை!
ஜோஷி என்றொரு பக்தர் உண்டு. தினமும் இரண்டு டின் தயிர் அனுப்புவார். அதேமாதிரி வெல்ல மண்டி நடேசய்யர் மூட்டை மூட்டையா வெல்லம் அனுப்புவார். அவற்றைக் கொண்டு... கோடை காலத்தில் தாகத்துடன் வர்றவங்களுக்கு நீர் மோரும், பானகமும் கொடுக்கச் சொல்லுவார். சில நேரங்களில் வாழைப் பழமும் கொடுப்பது உண்டு.
அப்போது, மடத்தில் பல்லக்கு தூக்கும் 'பெத்த போகி’ கன்னையன்னு ஒருத்தர்; வயதாகிட்டதால உடம்புல தெம்பு குறைஞ்சுடுச்சு. அவர் பெரியவாகிட்ட வந்து, மடத்துக்கு வெளியே இளநீர் கடை வைத்து பிழைச்சுக்கிறேன்னு அனுமதி கேட்டார். பெரியவாளும் சரின்னுட்டார்.
மறுநாளில் இருந்து நீர்மோர், பானகம் எல்லாம் கட். எங்களுக்கெல்லாம் திகைப்பு. பெரியவா ஏன் இப்படிச் சொல்றார்னு புரியவில்லை. வாய்விட்டுக் கேட்டுவிட்டோம். அவர் என்ன சொன்னார் தெரியுமா? 'கன்னையன் கடை போட்டு அவன் வியாபாரம் முடியட்டும். அதன்பிறகு நீர்மோர், பானகம் எல்லாம் கொடுக்கலாம். இல்லேன்னா அவனுக்கு எப்படி வியாபாரம் ஆகும்? அவன் பிழைப்புக்கு என்ன செய்வான்?’ என்றார். அதுதான் மகாபெரியவா!''

clip_image001

Source: Shri.Mannargudi Sitaraman Srinivasan

Sunday, February 16, 2014

மலைபோன்ற பிரச்சனைகள் பனி போல விலகின

 

அம்பத்தூரில் வசித்த கம்பெனி தொழிலாளி ஒருவர். அவர் மனைவி ஒரு நோயாளி. அவருக்குப் பிறந்த பிள்ளைகளோ பொறுப்பு இல்லாமல் தறுதலையாக அலைந்தார்கள்.
இப்படி சிரமங்களையே சந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அவர்களின் பக்தர்.
"கருணைக் கடலாக இருக்கும் காஞ்சி மஹானிடம் ஒரு தடவை சென்று தரிசித்து, அவரது ஆசியைப் பெற்றுக்கொண்டு வா... உன் சிரமங்கள் எல்லாம் காற்றோடு போய்விடும்" ... என்று யோசனை சொன்னார்.
அப்போதிலிருந்து அவரது மனதில் "காஞ்சி மஹானைப் பார்க்க வேண்டும்" என்கிற எண்ணம் வேர் விட ஆரம்பித்தது.
தொழில் சம்பந்தமாக அவர் வெளியூர் செல்லும்போது, காஞ்சி வழியாகப் போகும் சந்தர்ப்பம் வரவே, காஞ்சியில் இறங்கி யாரிடமோ வழிகேட்டு வரும்போதுதான் அவரது மனதில் அந்த எண்ணம் தோன்றியது.
’உலகோர் போற்றிப் புகழும் நிலையில் பக்தர்கள் கூட்டம்தரிசனத்துக்காக நிற்க, பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும் இந்த சாமியாரைத் தான் எப்படிப் பார்ப்பது’ என்கிற எண்ணத்துடன் இவர் அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்று கொண்டு இருந்தார்.
இவர் எதிர்பார்த்த மாதிரி ஆடம்பரங்களோ.... ஆரவாரமோ ஏதும் அங்கு தென்படவில்லை.
"அந்த சாமியார் வேறு எங்கோ போய்விட்டார் போலிருக்கிறது" என்று இவர் நினைத்துக் கொண்டார். தனக்கு விடிவுகாலம் பிறக்க அவரிடம் ஆசி பெறலாம் என்று வந்த அவரது கடுகளவு ஆசையும் மறையத் தொடங்கியது.
யாரிடம் போய்க்கேட்பது? ஆள் அரவமே இல்லையே என்று அவரது கண்கள் தேடியபோது, ஒரு வயதானவர் மட்டும் அவரது கண்களில் தென்பட்டார்.
அம்பத்தூர்க்காரர் அவரிடம் கேட்டார்.
"இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே... அவர் எங்கே போயிருக்கார்?"
"அவரையா பார்க்க வந்தேள்? யார் சொல்லி அனுப்பினா?"
இந்தக் கேள்வியும் அவரது அமைதியான முகபாவமும் வந்தவரின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தின.
அதனால் அந்த அம்பத்தூர்க்காரர், தனது குடும்ப சூழ்நிலையையும் தற்போது ஏற்பட்டுள்ள வறுமையான சூழ்நிலையையும் சொல்லி, தன் நண்பர் ஒருவர் இங்கே இருக்கும் சாமியாரைப் பார்த்து ஆசிகள் வாங்கச் சொன்னார் என்றார்.
"அந்த சாமியார்கிட்டே சிரமங்களைச் சொன்னா தீர்வு கிடைக்குமா என்ன?" கேள்வி பிறந்தது, அம்பத்தூர்காரருக்கு.
வந்தவரோ, 'இந்த வயதானவர் தன்னிடம் ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார்' என்று நினைத்தார்.
வயதானவர் மீண்டும் தொடர்ந்தார்.
"சிரமம்.. சிரமம்னு சொல்றியே.. அதை ஏன் நீ படறதா நினைக்கிறே.. அந்தப் பாரம் உன்னோடது இல்லையின்னு நீ நினைச்சிட்டா மனம் லேசாயிடுமே..."
இது எப்படி சாத்தியம் என்று அம்பத்தூர்காரருக்கு மனதில் சந்தேகம்.
"அது எப்படி சுவாமி? நான்தானே அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்க வேண்டிருக்கு.. என் கஷ்டங்களை வேறு யார் சுமப்பா?"
வயதானவர் சிரித்தபடியே சொன்னார்.
"இப்போ ஊருக்குப் போறோம்னு வையுங்க.. உங்களோட பெட்டி, மூட்டை முடிச்சு எல்லா பாரத்தையும் சுமந்துண்டு போய்த்தானே ஆகணும்?
அப்போ நாம் என்ன பண்றோம்? யாராவது கூலியாள் கிட்டே குடுத்து சுமக்கச் சொல்றோம் இல்லையா?
அது போலத்தான் நாம படற சிரமங்களை நம்மது இல்லே, பகவான் பார்த்துப்பான்னு ...... பூரண சரணாகதி அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது.."
இதைக் கேட்ட அம்பத்தூர்காரருக்கு கொஞ்சம் மனத்தெளிவு ஏற்பட்டது போல் இருந்தது.
அவர் வயதானவரைப் பார்த்து,
"பெரியவரே, இப்ப எனக்கு கொஞ்சம் மனசு லேசானது போல இருக்கு. என் பாரம் உன்னோடதுன்னு பகவான்கிட்டே சொல்லிடறது நல்லதுதான்.. நீங்கள் சொல்ற மாதிரி இந்த சாமியார் கிட்ட வந்து என் பாரங்களை இறக்கி வெச்சுட்டுப் போகலாமுன்னு வந்தா, இங்கே அவரைப் பார்க்க முடியல்லே..
எனக்கு உடனே மெட்ராஸ் போயாகணும்... காத்திருந்து அவரைப் பார்க்க முடியாது. எனக்கு இன்னமும் நல்ல காலம் வரலே போலத் தோணுது.
ஆனா உங்களாண்டை பேசினதுனாலே மனசுக்குக் கொஞ்சம் இதமாக இருக்கு... ஆமா நீங்க யாரு? இதே ஊரா?" என்று கேட்டார்.
வயதான பெரியவர் முகத்தில் சிரிப்பு.
"என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா" என்று சொன்னதும் அம்பத்தூர்காரருக்கு இன்ப அதிர்ச்சி.
வியப்போடு அந்த எளிமையின் உருவத்தைப் பார்த்தவண்ணம் ஒன்றுமே தோன்றாமல்... மலைத்துப்போய் நின்றார்.
அதுவரை அந்த மனித தெய்வத்திடம் அஞ்ஞானமாகப் பேசிக் கொண்டிருந்தவர் சற்றே திரும்பிப் பார்க்க, அந்தத் தவமுனிவரைத் தரிஸிக்க ஒரு பெருங்கூட்டமே காத்திருந்தது.
இத்தனை நேரம் ஒரு மாபெரும் மஹானிடம் சர்வ சாதாரணமாகப் பேசி, அவரிடம் யோசனைகள் பெற்றதை எண்ணி அந்தப் பக்தர் வியந்தார்.
"நமஸ்காரம் பண்ணிக்கிறேன்" என்ற பக்தரை, சட்டையை கழற்றும்படி சொன்னார் மஹான்.
தான் பூணூல் அணியாததால் சட்டையைக் கழற்ற அந்தப்பக்தர் [அம்பத்தூர்க்காரர்] யோசிக்க, மடத்து சிப்பந்தி ஒருவரிடம் சொல்லி அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய் பூணூல் அணிவிக்கச் செய்து ஆசிர்வதித்தார் மஹான்.
யாருக்குமே கிட்டாத மாபெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது.தொடர்ந்து அவரது இன்னல்கள் யாவும் பனிபோல் விலகின

Source: Shri Varagooran Narayanan

Friday, February 14, 2014

" எந்தப் பொருளையும் வீணாக்கக்கூடாது என்பதில் பெரியவர் கொண்டிருந்த அக்கறையை இந்த சம்பவம் எடுத்துக் காட்டியது."

 

மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அவர் முகாமிட்டிருந்தார். சுவாமிகளைத் தரிசிக்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். பெரியவர் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த இடத்தில் தரையில் சில வெற்றிலைகள் கிடந்தன. அதைப் பார்த்த சுவாமிகள் சிஷ்யனை அழைத்து, அதனை எடுத்து வைக்கும் படி சொன்னார். தரையில் கிடக்கும் வெற்றிலையை ஏன் எடுக்கச் சொல்கிறார் என்ற குழம்பிய சிஷ்யர் வெற்றிலையை எடுத்து பத்திரப்படுத்தி வைத்தார். அந்த சமயத்தில், எப்படியாவது பெரியவரை தரிசித்து ஆசிர்வாதம் பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் முண்டியடித்து கூட்டத்தின் நடுவே கர்ப்பிணி பெண் ஒருவர் வந்து கொண்டிருந்தார். கூட்டநெரிசலில் சிக்கி முன்னேறிய அந்தப் பெண்ணுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. அவளது நிலையைப் புரிந்துகொண்ட பெரியவர் சிஷ்யரை அழைத்து, அந்த வெற்றிலைகளை அந்தப் பெண்ணுக்கு கொடுக்கச் சொன்னார்.
அந்தப் பெண் வெற்றிலையை வாயில் போட்டுக் கொண்டதும் அவளின் தலைசுற்றல் தீர்ந்து போனது. அப்பெண் வேறு யாருமல்ல. அமரர் ரசிகமணி டி.கே.சி. பரம்பரையைச் சேர்ந்தவர். அவரது பெயர் ஞானஒளி.
“”உடலை உறுத்தும் நோயை
உள்ளன்போடு போக்கும் தெய்வம்!
சாந்த சொரூபமான
சந்திரசேகரேந்திர சரஸ்வதியாக
அருள் தரும் தெய்வம்!
தாயாகி தந்தையுமாகி
எனை தாங்குகின்ற தெய்வம்!
துன்பம் துயர் போக்கும் நண்பனாகி
துணை நின்ற தெய்வம்!”
என்று பெரியவர் மீது ஒரு அருமையான கவிதையும் பாடிச் சென்றார். எந்தப் பொருளையும் வீணாக்கக்கூடாது என்பதில் பெரியவர் கொண்டிருந்த அக்கறையை இந்த சம்பவம் எடுத்துக் காட்டியது."

clip_image001

Source: Smt. Chandra Subramaniam

Wednesday, February 12, 2014

"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன"

 

பெரியவாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துகொண்டிருந்தார்கள்.
எதிரே, ஒரு பெரிய மரம். தடினமான குரங்கு ஒன்று வந்து மரத்தில் ஏறியது. பின், இருபது - முப்பது குரங்குகள் அந்த லீடர் குரங்கை தொடர்ந்து மரத்தில் ஏறின.
பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில் போட சொன்னார்கள்.
லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படி போட்டதோ தெரியவில்லை! ஆனால், மற்ற குரங்குகள் ஒவ்வொன்றாக வந்து பழத்தை எடுத்துகொண்டு மேலே சென்றன. லீடர் குரங்கு மட்டும் ஒரு பழத்தை கூட தொடவில்லை!
பெரியவாள் சொன்னார்கள்:
"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன.
"காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை இருக்கும். அந்த லீடர் யானையை follow பண்ணித்தான் மற்ற யானைகள் செல்லும்.
"ஒரு கட்டெறும்பு செத்துபோனால், மற்ற கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.
"ஒரு காக்கை இறந்து போனால், மற்ற காக்கைகள் மரத்தில் உட்கார்ந்துகொண்டு துக்கமாய் கதறும்.
"ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதில்லை!"
கவனமாக கேட்டுகொண்டிருந்த பக்தர்கள், ஒரே குரலாக, "பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம்" என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.
"சரி, காலையில் இரண்டு நிமிஷம், சாயங்காலம் இரண்டு நிமிஷம், எனக்காக ஒதுக்குங்கள். இருபத்திநான்கு மணி நேரத்தில், நாலு நிமிஷம் தான் கேட்கிறேன்.
"காலையில், இரண்டு நிமிஷம் "ராம, ராம" என்று சொலுங்கோ; சாயங்காலம் இரண்டு நிமிஷம் "சிவ, சிவ" ன்னு சொலுங்கோ..."
"அப்படியே செய்கிறோம்" என்று சுமார் நூறு பேர்கள் தெரிவித்து கொண்டார்கள்.
அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த தொண்டர்களிடம், "பத்து பன்னிரண்டு பேர்களாவது , சொன்ன சொல்லை காப்பாத்துவா" என்றார்கள்.
அந்த, யாரோ பத்து பன்னிரண்டு புண்ணியாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான்., ஆழமான கருத்துடன், அரைமணி lecture!
குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு, காக்கை - நமக்கு நல்ல வழிகாட்டிகள்; "ஆச்சார்யர்கள்".
அவர்களை (அவைகளை) யாவது follow பண்ணலாம் தானே?

clip_image002

Source: Shri. Mannargudi Sitaraman Srinivasan

Monday, February 10, 2014

" ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக் கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தால்தான் மகாபெரியவரின் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது"

 

அன்றாட பூஜைகளை முடித்தபின் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் அளித்துவிட்டு, பிட்சைக்குச் செல்வது காஞ்சிமகானின் தினசரி வழக்கம். பிட்சையில் கிடைக்கும் உணவையே அவர் உண்பார்.
ஒருசமயம், வழக்கம்போல் பூஜைகளை முடித்த பின்னர், பிட்சைக்குச் செல்லாமல் மடத்திலேயே இருந்துவிட்டார் மகான். பிட்சைக்குச் செல்லாததால், அவர் உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. பலரும் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டார். இது மறுநாளும் தொடர்ந்தது. அன்றும் மகான் உணவருந்தவில்லை. மூன்றாம் நாளும் மகாசுவாமிகள் பிட்சைக்குச் செல்லவில்லை. எனவே, மடத்தில் உள்ளோருக்கு பயம் தொற்றிக் கொண்டது.
மடத்தில் உள்ளோர் ஏதாவது தவறு செய்துவிட்டால், அவர்களை தண்டிப்பதற்கு பதில் மகான், தம்மையே இப்படி வருத்திக்கொள்வது வழக்கம் என்பதால் அவர்களின் அச்சம் அதிகரித்தது. அதனால், எல்லோரும் சேர்ந்து சுவாமிகள் முன் சென்று நின்றார்கள். எங்களில் யார் என்ன பிழை செய்திருந்தாலும் தயவு செய்து மன்னித்து, உணவு ஏற்கவேண்டும்...! எனப் பணிந்து வேண்டினர்.
மகா பெரியவர் சிரித்துக் கொண்டே, நீங்கள் யாரும் எந்தத் தவறும் செய்யவில்லை. உங்கள் மேல் எனக்குக் கோபமும் இல்லை. என்னைத் திருத்திக் கொள்ளவே நான் இப்படி உண்ணாவிரதம் இருந்தேன். கொஞ்ச நாட்களுக்கு முன் பிட்சையில் கிடைத்த உணவில் வெகு சுவையாக கீரை சமைத்து ருசியாக இருந்ததால், அதனை மீண்டும் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எழுந்தது. பூஜைகளை முடித்ததுமே, இன்றைய பிட்சையில் கீரை இருக்குமா? என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
மூன்று நாட்களாக அந்த எண்ணம் மனதில் நின்றதால்தான், வயிற்றைப் பட்டினி போட்டு அந்த ஆசையை விரட்டினேன். ஒரு சன்னியாசிக்கு இது மாதிரியான ஆசைகள் வரக்கூடாது என்றார். ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக் கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தால்தான் மகாபெரியவரின் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.

clip_image002

Source: Shri Mannargudi Sitaraman Srinivasan

Saturday, February 8, 2014

"அருண்ஷோரியும் மகாஸ்வாமிகளும்" (மகா பெரியவருடன் சேர்ந்து தியானம் பண்ணுகிற மகத்தான அனுபவம் ) "சோ" எழுதின கட்டுரையில் ஒரு பகுதி.

 

புதன் அன்று வெளியான குமுதம் 15-01-2014 தேதியிட்டது.
தட்டச்சு-வரகூரான்.

ஒருமுறை நான்,ஆடிட்டர் குருமூர்த்தி,அருண்ஷோரி
இன்னும் சிலரும் காஞ்சிக்கு மஹா ஸ்வாமிகளைப்
பார்க்கப் போயிருந்தோம்.ஸ்வாமிகள் நாங்கள் போனபோது
ஒரு கோயிலில் உட்கார்ந்திருந்தார்.
அருண்ஷோரியின் மகனுக்கு உடலில் ஒரு பிரச்னை உண்டு.
அது அவருடைய மனதை வருத்தப்பட வைத்திருந்தது.
மஹா ஸ்வாமிகளை நாங்கள் பார்த்துவிட்டுத் திரும்பியதும்
என்னிடம் அருண்ஷோரி கேட்டார்.
"பையனோட பிரச்னை பற்றி ஸ்வாமிகள் கிட்டே கேட்கலாமா?"
"தாராளமாகக் கேட்கலாம்"
நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு போனதை அதற்குள்
கவனித்துவிட்ட ஸ்வாமிகள் எங்களை மறுபடியும் அழைத்தார்.
அருண்ஷோரியிடம் மெதுவாக விசாரித்தார். அவரும்
ஸ்வாமிகளிடம் மகனுடைய பிரச்னையைப் பற்றிச் சொன்னார்.
கேட்டூவிட்டு,அருண்ஷோரியை தனக்குப் பக்கத்தில் உட்காரச்
சொன்னார்.ஸ்வாமிகள்.பிரசாதம் கொடுத்தார்.
"இந்தக் கோயிலில் உட்கார்ந்து தியானம் பண்ணிக்கலாமா?"
கேட்டார்.அருண்ஷோரி.
"இங்கே தியானம் பண்ண என்னுடைய அனுமதி உங்களுக்குத்
தேவ்வையில்லை.நீங்க என்னுடைய பக்கத்தில் உட்கார்ந்து
தியானம் பண்ணுங்க. நானும் உங்களோடு தியானம் பண்றேன்"
என்று ஸ்வாமிகள் சொல்லிவிட்டு அருண்ஷோரியுடன்
தியானம் பண்ணினார்.
நாங்கள் வெளியே நின்று கொண்டிருந்தோம்.
"இந்த மாதிரியான மனம் நிம்மதியா இருக்கிற அனுபவம்
இதுவரை எனக்குக் கிடைச்சதில்லை" என்று நெகிழ்வுடன்
என்னிடம் சொன்னார் அருண்ஷோரி.
மகா பெரியவருடன் சேர்ந்து தியானம் பண்ணுகிற மகத்தான
அனுபவம் எல்லோருக்கும் லேசில் கிடைக்காது.
அருண்ஷோரிக்கு வாய்த்தது.
ஏனென்றால் அவர் அவ்வளவு நல்ல மனிதர்.

clip_image001

Thursday, February 6, 2014

வேலைக்கு போகிறவர்கள் (குறிப்பாக ஸ்திரீகள்) ஜெபிக்க சுலபமான மந்திரம்!

 

அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவர், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார். இந்நாளைய பெண்மணியாக இருந்தாலும், உள்ளுர பக்தி இருந்தது; சமய சடங்குகளையும் மந்திர தோத்திரங்களையும் முறையாக பெற்றுக்கொண்டு அனுஷ்டிக்க முடியவில்லையே என்ற தாபம் இருந்தது.
மனமுருக பெரியவாளிடம் பிராத்தித்து கொண்டார்: “நான் வேலைக்கு போகிறவள். எனக்கு ஓய்வு நேரம் குறைவு. அத்துடன், மடி, ஆசாரம் என்றெல்லாம் கண்டிப்புடன் இருக்க முடியாது. நீளமான ஸ்தோத்திரங்கள், பாராயணம் செய்யவும் இயலாது. அதனால், எதாவது சுலபமான மந்திர ஜெபம் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பெரியவாள் அனுக்ரகம் பண்ணனும்.”
உடனே, கருணாமூர்த்தியான பெரியவாள், அந்த பெண்மணியின் உள்ளுணர்வையும் சிரத்தையையும் புரிந்துக்கொண்டு , “சொல்லு…” என்றார்கள்.
‘ஹரிநாராயண துரிதநிவாரண பரமானந்த
சதாசிவ சங்கர’
உபதேசம் பெற்ற அம்மங்கையர்கரசி, மனமகிழ்ந்து, பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார். ‘ஆசார அனுஷ்டானமில்லாத உனக்கெல்லாம் மந்திர உபதேசம் என்ன வேண்டியிருக்கு?” என்ற கடிய சொற்களை எதிர்பார்த்து வந்தவருக்கு, கனிவான உபதேசத்தால் நெகிழ்ந்தே போனார்.
ஆனால், இந்த மந்திரம் அந்த பெண்மணிக்கு மட்டும் அளிக்கப்பட்ட உபதேசம் அல்ல; நம் அத்தனை பேருக்கும்தான்!

clip_image001

Tuesday, February 4, 2014

"Etch the essence of Gayathri in your mind during Japam!"

 

I took my daughter to have darshan of Mahaperiaval. Though He was laid up with high temperature He gave me darshan, and enquired about the health of my daughter. I burst into a tempest of tears for His mercy, compassion, kindness and divine blessings.
He then instructed me to perform Sahasra Aavrti (1000) Gayatri Japa, every Sunday and avoid discussing politics which would invariably involve turning the mind away from things spiritual. He said that my performance of Gayatri Japa alone would repay my indebtedness. For some months afterwards I obeyed His command with implicit faith and earnestness and switched over doing Gayatri Japa every day instead of only on Sundays!
In another incident I went to Satara in Maharashtra, where the Paramacharya was camping. Around 3.00 AM in the wee hours of the morning the Paramacharya sent for me and asked me to recite Dhyana Sloka of the sacred Gayatri, which I did it trembling within myself!
For nearly 30 minutes, the great Sage gave a rich annotation, and instructed me to etch it in my mind while performing the japa! I however confessed that being too small, mired in profound ignorance it would be difficult for me to capture the picture of sacred Gayatri, as it was expounded, but I enthroned the lotus feet of Mahaperiaval in the inner recesses of my heart while doing the Japa.
He displayed His benign and divine smile. It was an epochal event in my life. He aroused and awakened my sensibility and sensitivity to the glory and greatness of sacred Gayatri!
*****
Narrated exquisitely from the Heart by Shri CN Kuppuswamy, what an incomprehensible blessing for him! Let us all strive do the Gayathri Japam or recite any prayers this way! Shankara.
Source: Kamakoti.org

Sunday, February 2, 2014

 

மகா பெரியவா கண்ணை மூடி ஜபத்தில் ஆழ்ந்தார் என்றால் ஒரு மணி நேரம் ஜபம் செய்வார். கடிகாரத்தை எல்லாம் பார்ப்பது கிடையாது. ஜபத்தில் இருந்து அவர் விழிக்கும்போது சரியாக ஒரு
மணி நேரம் கழிந்திருக்கும்'' - எனச் சிலாகிப்புடன் துவங்குகிறார் பாலு. இவர், காஞ்சி முனிவரின் நிழலாகவே இருந்து பணிவிடைகள் செய்தவர். மிக அற்புதமான நிகழ்வுகளை அவர் பகிர்ந்துகொண்ட போது, மகாபெரியவாளின் கருணையை எண்ணி கண்கள் பனித்தன நமக்கு.
''ஒருமுறை, அப்போ துணை ஜனாதிபதியா இருந்த பி.டி.ஜாட்டி, பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார். அந்த நேரம் பெரியவா ஜபத்தில் இருந்தார். சரி... ஜனாதிபதி தரிசிச்சுட்டு உடனே கிளம்பிடுவாருன்னு எதிர்பார்த்தோம். ஆனால், அவருக்கு பெரியவாளுடன் நிறைய பேச வேண்டியிருந்தது போலும். பெருமாள் கோயிலில் காத்திருந்தார். இந்த விஷயத்தை மெள்ள தயக்கத்துடன் பெரியவாளிடம் சொன்னோம்.
அவரும்... துணை ஜனாதிபதியை சந்திர மௌலீஸ்வரர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், என்ன விசேஷம் தெரியுமா? அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தும் தனது ஜபத்தையும் அவர் விட்டுவிடவில்லை!'' என்ற ஆச்சரியத்துடன் விவரித்த பாலு, மேலும் தொடர்ந்தார்:
''தான் ஏகாதசி, துவாதசி என்று உபவாசம் இருப்பார். ஆனால் பிறத்தியார் வயிறு வாடினால் பொறுத்துக்க மாட்டார். கள்ளுக் கடையில் குடித்து விட்டு வெறும் வயிற்றோடு போவார்களே...அவர்களுக் காகவும் மனம் இரங்கியதுண்டு. இந்த நிலையில் வீட்டுக்குப் போனால் அவர்களுக்குச் சாப்பாடு கிடைக்குமா?! பெரியவா என்ன செய்வார் தெரியுமா? தன்னைப் பார்க்க வருபவர்கள் கொண்டு வரும் வாழைத் தார்களை வழியில் இருக்கும் புளிய மரத்தில் கட்டி தொங்கவிடச் சொல்வார். நல்ல விலை உயர்ந்த ரஸ்தாளி பழங்களாக இருக்கும். 'வயிறு காலியா இருக்கற மனுஷாளும் சாப்பிடட்டும்... பட்சிகளும் சாப்பிடட்டும்’ என்பார். ஆமாம்... அவரின் கருணை பேதம் பார்க்காத கருணை!
ஜோஷி என்றொரு பக்தர் உண்டு. தினமும் இரண்டு டின் தயிர் அனுப்புவார். அதேமாதிரி வெல்ல மண்டி நடேசய்யர் மூட்டை மூட்டையா வெல்லம் அனுப்புவார். அவற்றைக் கொண்டு... கோடை காலத்தில் தாகத்துடன் வர்றவங்களுக்கு நீர் மோரும், பானகமும் கொடுக்கச் சொல்லுவார். சில நேரங்களில் வாழைப் பழமும் கொடுப்பது உண்டு.
அப்போது, மடத்தில் பல்லக்கு தூக்கும் 'பெத்த போகி’ கன்னையன்னு ஒருத்தர்; வயதாகிட்டதால உடம்புல தெம்பு குறைஞ்சுடுச்சு. அவர் பெரியவாகிட்ட வந்து, மடத்துக்கு வெளியே இளநீர் கடை வைத்து பிழைச்சுக்கிறேன்னு அனுமதி கேட்டார். பெரியவாளும் சரின்னுட்டார்.
மறுநாளில் இருந்து நீர்மோர், பானகம் எல்லாம் கட். எங்களுக்கெல்லாம் திகைப்பு. பெரியவா ஏன் இப்படிச் சொல்றார்னு புரியவில்லை. வாய்விட்டுக் கேட்டுவிட்டோம். அவர் என்ன சொன்னார் தெரியுமா? 'கன்னையன் கடை போட்டு அவன் வியாபாரம் முடியட்டும். அதன்பிறகு நீர்மோர், பானகம் எல்லாம் கொடுக்கலாம். இல்லேன்னா அவனுக்கு எப்படி வியாபாரம் ஆகும்? அவன் பிழைப்புக்கு என்ன செய்வான்?’ என்றார். அதுதான் மகாபெரியவா!''

clip_image001

Source: Shri Mannargudi Sitaraman Srinivasan

Subscribe through Email

Enter your email address:

Delivered by FeedBurner

back to top